Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:58:39 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13540
#KOTW13540
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 20, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவு கோரி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன் பரப்புரை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4567 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு கோரி, திமுகவின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், இம்மாதம் 17ஆம் நாள் வியாழக்கிழமையன்று காயல்பட்டினத்தில் பரப்புரையாற்றினார்.



அதிமுக ஆளும் தமிழக அரசின் அவலங்களைப் பட்டியலிட்டுப் பேசிய அவர், மத்தியில் நிலையான - மதச்சார்பற்ற ஆட்சி அமைந்திட ஜனநாயக முற்போக்குக் கூட்டணி, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டியது அவசியம் என்று கூறினார்.

திமுக காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமையில் நடைபெற்ற இப்பரப்புரை நிகழ்வில், அக்கட்சியின் நிர்வாகிகளான எஸ்.ஐ.காதர், எம்.என்.சொளுக்கு, ஆர்.எஸ்.கோபால் உள்ளிட்டோரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் உடனிருந்தனர்.





பரப்புரையை முடித்த பின், உதயசூரியனுக்கு வாக்கு கோரும் பிரசுரத்தை குழுவினர் வினியோகித்தனர்.







படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ


திமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Zackariya (Singapore) [20 April 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 34470

அட்மின் அவர்களே,

இவர் தான் ஜெயசீலன் என்று ஒரு அடையால குறியீடு காட்டி இருக்ககூடாத???அணைத்து படங்களையும் பார்த்து விட்டேன், என்னால் ஜெயசீலனை அடையலாம் காணமுடியவில்லை... அப்பப்ப தொகுதி பக்கம் வந்து இருந்து நியாபகம் இருந்து இருக்கும்... இவர் 2009 தேர்தலுக்கு வோட்டு கேட்டு வந்த பிறகு இப்போ தான் தொகுதிக்கு வந்து இருக்கிறார் என்று நினைக்கிறன்... கூடவே வெக்கமே இல்லதே நமது ஊர் கழக கண்மணிகள் வேற...

இவர்களுக்கு எல்லாம் இந்த தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும்...

ஜக்கரியா
சிங்கப்பூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by muzammil (Dubai) [20 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34478

இதில் யார் மிஸ்டர் ஜெயசீலன்? எதோ கேள்வி பட்ட பெயர் மாதிரி இருக்குது. இப்ப தெரிந்து விட்டது இவர்தான் நம்ம முன்னால் மந்திரி. !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [20 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34483

நயவஞ்சகர்கள்., ஆதரவு கேட்கவில்லை கட்சிகாரர்கள் வாக்களிக்க இருதவரையும் முந்தைய பாராளுமன்ற உறுப்பினரை ஊர்க்கு அழைத்துவந்தது அவமானம். இந்த ஜெயசீலன், MP பதவி ஏற்றதோடு சரி, நாசரேத் ஊர்க்குதான் பல நல்ல திட்டம் செய்தார். வாக்குகள் அதிகம் கொடுத்த இந்த நகருக்கு எதாவது செய்தது உண்டா? MP ஜெயசீலன் எந்த முகத்தை காட்டி இந்த நகருக்கு வாக்கு கேட்கிறார்?

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Rilwan (TX) [20 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34491

சகோதரரே .. ஜெயசீலன் ஒன்றுமே செய்யாமல் ஒட்டு கேட்கிறார் என சொல்கிறீர்கள் ... ஜெகனுடைய தந்தை ஒட்டு கேட்டு வந்தாரே ... அவர் அமைச்சராக கூட இருந்தார் .. அவர் ஊருக்கு என்ன செய்தார் ?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு!
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் (சிங்கப்பூர் ) [21 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34502

1999 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் 5 ஆண்டுகள் தொகுதி பக்கமே வராதவர். குறிப்பாக நமதூருக்கு ஏதும் செய்யாதவர். அவரின் சொந்த ஊரான நாசெரத் ரயில் நிலையத்தை பாருங்கள். வருவாய் ரீதியாக நமதூரை விட பின்தங்கியுள்ள நாசரேத் ரயில்வே ஸ்டேஷனையும் நமதூர் ரயில்வே ஸ்டேஷனையும் ஒப்பிட்டு பாருங்கள். இவரின் சாதனையை விளக்க.

2006 சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் அனிதா அண்ணாச்சி இரண்டாவது முறையாக (2001-ல் வெற்றி பெற்ற பின்) அப்போது, ஒரு தேர்தல் சுவரொட்டி பார்த்தேன். இன்றும் பசுமையாக இருக்கிறது. வாசகம் இது தான். அவரின் புகைப்படத்துடன், " நான் தான் உங்கள் முன்னாள் MP . தேர்தலில் நேரத்தில் பார்த்து இருப்பீர்கள். இப்போது மீண்டும் தேர்தலில் நிற்க வாக்கு கேட்டு வந்துள்ளேன். எனக்கு வாக்களிப்பீர்களா?"

இந்த திமுகவினர், அவரை ஏன் வாக்களிக்க அழைக்கின்றனர்? அவர் நமதூருக்கு செய்த நலத்திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கவா? 22-ம் தேதி வரை, இவர், ராதிகா செல்வி மற்றும் 'சித்த வைத்தியர்' ஜெயதுரை ஆகியோரை வாக்கு சேகரிக்க நமதூருக்கு கொண்டு வராதீர்கள். ஏனென்றால், இந்த மூவரும் நமதூருக்கு செய்த துரோகங்கள் அப்படி பட்டது.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved