Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:55:33 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13434
#KOTW13434
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 5, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: கருணாநிதிக்கு தன் குடும்பம் பற்றி மட்டுமே கவலை! அதிமுக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2642 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திமுக தலைவர் கருணாநிதிக்கு தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலை என்றும், இந்த நாடு, அதன் மக்கள் பற்றியெல்லாம் அவருக்கு அக்கறை இல்லை என்றும், காயல்பட்டினத்தில் இன்றிரவு நடைபெற்ற அதிமுக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியியில், வழக்குரைஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு திரட்டுமுகமாக, இன்று (ஏப்ரல் 05 சனிக்கிழமை) 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதிமுக கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சியின் நகர தலைவர் அப்துல் அஜீஸ், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் ஷம்சுத்தீன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.முகைதீன் தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஜெயலலிதா பேரவை தூத்துக்குடி மாவட்ட இணைச் செயலாளர் மு.இராமச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பி.ஆர்.மனோகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.



இக்கூட்டத்தில், திரைப்பட தயாரிப்பாளரும், அதிமுக பேச்சாளருமான இப்றாஹீம் ராவுத்தர், திரைப்பட இயக்குநர் லியாகத் அலி கான், அதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளரும் - தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.





சிறுபான்மையினருக்கு - குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஜெயலலிதா வழங்கிய திட்டங்களாக பலவற்றைப் பட்டியலிட்டுப் பேசிய அவர்கள், திமுக தலைவர் கருணாநிதி தானே சிறுபான்மையினருக்குப் பாதுகாவலன் என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு, மக்களை ஏமாற்றிப் பதவி சுகத்தை அனுபவித்து வருவதாகவும், அவருக்கு நாட்டு மக்களை விட தான் பெற்ற மக்கள் மீதுதான் அக்கறை என்றும், அதற்காகவே தன் வாழ்நாளை செலவழிப்பவர் என்றும் குற்றஞ்சாட்டிப் பேசினர்.

அம்மன் டி. நாராயணன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், நிர்வாகிகளான எஸ்.எம்.அப்துல் காதர், எஸ்.எம்.ஜின்னா, என்.அருணாச்சலகனி, காயல் மவ்லானா, எம்.சமுத்திரக் கனி, பி.அந்தோணி, என்.எம்.அகமது, கப்பல் சேக் சுலைமான், எஸ்.புரட்சி சங்கர், எஸ்.என்.முஹம்மத் அலீ, ஜி.சேகர், ஜெ.ஜின்னா, கே.பழனித்தேவர், நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், இ.எம்.சாமி உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.







கட்சியின் நகர அவைத்தலைவர் என்.பி.முத்து நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை, நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதர் தலைமையில் கட்சியினர் செய்திருந்தனர்.

அதிமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[செய்தி திருத்தப்பட்டது @ 22:49 / 05.04.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சேக் தாவூத்
posted by mohmed younus (kayalpatnam) [05 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34148

தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக் தாவூத் என்பவர் கலந்து கொண்டாரே! கட்சி கொடியோடு முதல் வரிசையில்தானே உட்காந்து இருந்தார்.... மறந்து விட்டீர்களோ!

Moderator: விடுபட்ட தகவல் இணைக்கப்பட்டது. நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Cnash (Makkah) [06 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34151

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எந்த அரசியல் கட்சி மேடையிலும் ஏறி பிரச்சாரம் பண்ண மாட்டோம் என்று கொள்கை கொண்டுள்ளோம் என்று சொல்லுவார்களே அது இந்த மேடைக்கு பொருந்தாதோ.

Moderator: அவர்கள் மேடை ஏறவில்லை. கூட்டத்தில் பார்வையாளர்களுடன் இருந்தனர். கூட்ட ஏற்பாட்டாளர்கள் தந்த விபரப்படி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rilwan (TX) [06 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34152

தேர்தலுக்கு பிறகு அம்மா மோடிக்கு ஆதரவு தெரிவிக்கப்போகிறார் என பெட் கட்டுகிறேன்.... அதிமுக அடிமைகள் போட்டிக்கு தயாரா?

ஒரே விசயம்தான்... இவர்கள் தலையில் என்ன தான் இருக்கிறதோ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...மக்கள் இல்லையே என்ற கவலை
posted by mackie noohuthambi (chennai) [06 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34157

குழந்தை இல்லாதவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் ஆதங்கத்தை சொல்வார்கள். "வேப்ப மரம் சுற்றி வந்தேன் அரச மரமும் பூத்ததம்மா" என்று ஒரு பெண் பாடுவதை கேட்டிருக்கிறீர்களா.

நமது நாட்டின் சாபக்கேடு நமக்கு வாய்க்கும் முதல்வர்களும் பிரதமர்களும் திருமணமாகாதவர்கள் அல்லது குழந்தை பேறு இல்லாதவர்கள். காமராஜர்,அண்ணா, எம்ஜியார்,ஜெயலலிதா.. மத்தியில் வாஜ்பாய், தற்போது பிரதமர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, ஜெயலலிதா, மம்தா, மாயாவதி... இப்படி நீண்டு கொண்டு போகிறது குடும்பம் என்று இல்லாத தலைவர்கள் பட்டியல். பாவம் கருணாநிதி மட்டும் பரமசிவன் போல், முருகனைப் போல் மனைவி துணைவி என்று ஒன்றுக்கு மேல்பட்ட பெண்கள் மக்களைப் பெற்ற மகராசிகள்...

பல் உள்ளவன்தான் பட்டாணிக் கடலை கடிக்க முடியும். கொண்டை உள்ளவள்தான் பூ சூடிக் கொள்ள முடியும். மனைவி மக்கள் பாசம் நேசம் இவற்றை அனுபவிக்க கொடுப்பினை வேண்டும்.

ஆனால் இறைவன் அவன் திருமறையில் சொல்வதுபோல் மக்களும் செல்வங்களும் இவ்வுலகின் அலங்காரங்கள் என்பது மட்டுமல்ல அவை உங்களுக்கு சோதனையும்தான்.கலைஞர் முத்தமிழ் அறிஞராக இருக்கலாம். குறளோவிய நாயகனாக இருக்கலாம். அரசியல் சாணக்கியனாக இருக்கலாம். முஸ்லிம்களின் நண்பனாக இருக்கலாம். நான் இறைவனை நம்பாவிட்டாலும் இறைவனை நம்புகிறவர்களை நம்புகிறேன் என்று வசனங்கள் பேசலாம். ஆனால் ஒரு முறை திரு குர்ஆனை திறந்து பார்த்து இந்த இறைவசனங்களை படித்து உணர்ந்து செயல்பட்டு இருந்தால் இந்த அவச் சொல்லுக்கு ஆளாகி இருக்க மாட்டார்.

இப்போதும் காலம் கடந்து விடவில்லை, இந்த 90 வயது இளைஞனிடம் கூட்டணி நண்பர்கள் இந்த திருமறை வசனங்களை ஓதி காட்டுங்கள்."எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பது இந்த குறளோவிய நாயகனுக்கு எளிதில் புரிந்து விடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...யார் அடிமைகள்.....
posted by M.I.மூசா நெய்னா (காயல்பட்டணம்) [07 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34168

கருத்துக்கள் எழுதும் போது சராசரி கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். அடிமைகள் என்ற சொற்றோடர்களை தவிர்ப்பது எல்லோருக்கும் நல்லது.

சமீப காலத்தில் கருனாநிதி, மோடி நல்லவர், வல்லவர், திறமையானவர், எனது நண்பர் என்று பாசிச கும்பலுக்கு நற்சான்றிதழ் கொடுத்தார். குஜராத்தில் முஸ்லிம் சமுதாய மக்களை மோடி கொன்று குவித்த போது மத்தியில் அதிகார, பொருளாதார சுகத்தை அனுபவிப்பதற்காக வாய்மூடி மௌனமாக இருந்தார். இப்போதும் கூட பாசிச கும்பலுக்கு ஆதரவு இல்லை என்று அறுதியிட்டு கூறவில்லை. கோயம்புத்தூரில் முஸ்லும் மக்கள் 19 பேரை காக்கை குருவி சுடுவதை போல் சுட்டு தனது முஸ்லிம் விரோத முகத்தை காட்டினார். அக்காலத்தில், முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி பெருமிதம் அடைந்தார். மேலும், அவர் முஸ்லிம்களுக்கு செய்த துரோகங்கள் பல பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் வந்துள்ளது. அதனை படித்து தெளிவுபட்டிருந்தால் நாம் படித்த படிப்புக்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கும். பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் முதுகில் குத்தியே உள்ளுக்குள் சந்தோஷமடைய கூடிய கருனாநிதிக்கு எதை பற்றியும் சிந்திக்காமல் தங்களது வாக்கை ஆண்டான்டு காலமாக அளிக்கிறீர்களே. இப்பொழுது சொல்லுங்கள் யார் அடிமைகள்?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by farook (ksa) [07 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34170

மோடி அல்ல, யாரும் நுழைய முடியாது. மீறி நுழைந்தால் ஒரு கோடியில் தான் நிற்க வேண்டும். மோடிகளுக்கு இங்கே வேலை இல்லை என்று பிஜேபி சங்கபரிவார் நிறைந்த கோவையில் குரல் கொடுத்தது யார் ?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved