Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:58:47 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13401
#KOTW13401
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 31, 2014
பீச் பாரடைஸ்! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3702 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையில், நகராட்சியின் முறையான எந்த அனுமதியும் பெறாமல் இயங்கும் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடற்கரை ‘அழகுபடுத்த’ப்படுவதற்கு முன்பு வரை, வேர்க்கடலை மட்டுமே சிலரால் விற்கப்பட்டு வந்தது. பின்னர் சுண்டல், பளிங்குக் குவளையில் தேனீர் என பலர் விற்பனை செய்யத் துவங்கினர். இவையனைத்தும், வீடுகளிலேயே ஆயத்தம் செய்து, சொந்தப் பாத்திரங்களில் கொண்டு வந்து, அலைந்து திரிந்து விற்கப்பட்டதால், பொதுமக்களுக்கு இடையூறோ, சட்டச் சிக்கல்களோ இருக்கவில்லை.

நாளடைவில், பளிங்குக் குவளைகள் மறைந்து, காகிதக் கோப்பைகளும். ப்ளாஸ்டிக் கோப்பைகளும் புழக்கத்தில் வந்தன. இதனால் கடற்கரையில் தேவையற்ற குப்பைகள் சேகரமாகத் துவங்கின.

கடந்த சில ஆண்டுகளாக கறிகஞ்சி, வடை பதார்த்தங்களை விற்கிறோம் என்ற பெயரில், கடற்கரையின் மாசற்ற மணற்பரப்பில் அடுப்பு வைத்து எரித்து, தற்போது மணற்பரப்பு முழுக்க அடுப்புக்கரிகள் படர, கடற்கரையின் வடபுற மணற்பகுதி கருநிறத்துடனும், அமர்வோரின் கீழாடைகளை நாசம் செய்வதாகவும் திகழ்ந்து வருகிறது.

பற்றாக்குறைக்கு, இம்மாதம் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில், கடற்கரை நுழைவாயிலின் இரு முனைகளிலும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் துணிக்கடை, பொம்மைச் சாமான்கள் கடை, கபாப் இறைச்சிக் கடை, சுண்டல், ஜாங்கிரி, பாப்கார்ன் என 6 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அக்கடைகளில் சூழ்ந்த வாடிக்கையாளர்கள் காரணமாக நுழைவாயில் வழியே பொதுமக்கள் கடந்து செல்ல மிகவும் அவதிப்பட்டனர்.







இன்று (மார்ச் 31 திங்கட்கிழமை) மாலையில் மீண்டும் துணிக்கடையும், பொம்மைக் கடையும் கடற்கரை நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்தது.





மக்கள் நெரிச்சலுக்கும், ஆண் - பெண் கலப்பிற்கும் அடிப்படையாகவுள்ள இந்தக் கடைகள் அமைப்பதற்கு நகராட்சி அனுமதி கொடுக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, மக்கள் பிரச்சினை எழுப்பினாலே தவிர - அனுமதியின்றி பரத்தப்படும் இதுபோன்ற கடைகள் மீது நகராட்சி நிர்வாகம் இதுவரை முறையான நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.

கடற்கரை நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சும்மா இருந்த சங்கை ஊத்தி கெடுத்தானாம் ஆண்டி.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [01 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34074

இந்த கடற்கரையை அழகு படுத்துகிறேன் என்று தமிழக சுற்றுலாத்துறை அறிவித்து நிதி ஒதிக்கி, அதை அன்றைய பேரூராட்சியும் அங்கீகரித்ததோ, அன்று ஆரம்பித்த முசீபத் இன்று வரை தொடர்கிறது. அன்று முதல் நமதூர் கலாச்சாரமும் சீரழிய தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை இங்கு வந்தால், நமதூரில் தான் இருக்கிறோமா? அல்லது மெரினா பீச்சுக்கு வந்துள்ளோமா? என்று சந்தேகம் கொள்ளும் நிலையில் தான் உள்ளது. மற்ற ஊரிலிருந்து வருபவர்களை நாம் சட்டப்படி தடுக்க முடியாது. இந்த கடைகள் இல்லாவிட்டால், வரும் கூட்டம் கொஞ்சம் குறையும்.

இப்படி திடீர் கடைகள் போடுவதனால், பலரின் பிழைப்பு ஓடுகிறதே, அதை ஏன் தடுக்க வேண்டும்? என்று சிலர் ஆதங்கப்படலாம். ஆனால் அங்கு எத்தனை அனாச்சாரங்கள் & அசிங்கங்கள், உள்ளூர் தறுதலைகள் மற்றும் மற்றவர்களால் ஏற்படுகிறது? அதை கண்டிக்க முடியாமல், கையாலாகத்தனத்தில் இருக்கிறோம்.

நம் கடற்கரையை பாதுகாக்க, 'கடற்கரை பயனாளிகள் சங்கம்' என்ற அமைப்பை துவக்கியவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்? என்று தெரியவில்லை. இந்த அவலம் தடுக்கப்பட வேண்டும். அந்த சங்கம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த லட்சியம் நிறைவேற, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம்.

நமது நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில், நகராட்சியின் அனுமதி இல்லாமல் அந்த கடைகள் போடப்பட்டிருந்தால், தலைவி உட்பட அனைத்து உறுப்பினர்களும், ஈவு, இறக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு வேண்டிய சிலர் கடை போட்டிருந்தாலும் அல்லது வேறு காரனங்களுக்காகவும், பாரா முகமாக இருந்தால், நமக்கு தான் நஷ்டம்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தவறுதான் பெண்கள் போடோ எதற்கு?
posted by ansari (abu dhabi) [01 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34082

இது தவறுதான் ஆனால் வறுமையில் உள்ளவர்கள் அவர்கள் இது முலம் பிழைப்பு நடத்தினால் ஏதும் நம்முடைய எந்த பாதிப்பும் உண்டாக்க போவது இல்லை /உயிரை கொள்ளும் ஒரு தொழிற் சாலை உள்ளது அதை ஒழிக்க அல்லது ஒடுக்க வழியை பார்போம் அதற்கு பின்னல் இதை பற்றி பேசலாம் /நம் ஊரின் பெண்கள் படம் போடா விட்டால் இந்த வெப் சைட் திருப்தி அடையாது என்பது பல வருடமாக நாம் பார்த்து வரும் விடயம் பல உலமாக்கள் மற்றும் பலர் சொல்லியும் அவர்கள் இந்த விஷயத்தில் கவனம் எடுப்பது இல்லை அல்லாஹ்விற்கு தான் காரணம் புரியும் /


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved