Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:57:56 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13384
#KOTW13384
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 29, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: குதிரை மாறுமே தவிர கொள்கை மாறாது! திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனை ஆதரித்து, மமக நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரீ பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3361 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் கீழ் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் இம்மாதம் 10ஆம் நாளன்று வெளியிடப்பட்டது. அப்பட்டியலின் படி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.




அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில், நேற்று (மார்ச் 28 வெள்ளிக்கிழமை) 19.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மமக மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.ஜோஸப் நொலாஸ்கோ, மாவட்டச் செயலாளர் எச்.பீரப்பா உட்பட, மமக மற்றும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மமக நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், மமக மாவட்ட தலைவர் எஸ்.ஆஸாத், திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.





இக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்ஸாரீ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-



மமக அடிக்கடி அணி மாறுவதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. மமக பயணிக்கும் குதிரை மாறுமே தவிர அதன் கொள்கை ஒருபோதும் மாறாது. சமுதாய நலன் கருதி, முக்கியமான கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து, அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தோம். அதுகுறித்து சட்டசபையில் மமக உறுப்பினர்கள் 11 முறை பேசியும் உள்ளனர். இருந்தும் முதல்வர் ஜெயலலிதா அது விஷயத்தில் தொடர்ந்து மவுனமே காத்தார்.

நாட்டிலுள்ள முக்கிய ஊடகங்களின் முதலாளிகள் விலைபோய்விட்டதால், நாட்டில் மோடி அலை வீசுவதாக - பல மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஊடகங்கள் இல்லாத ஒன்றை பூதாகரமாக சித்தரிக்கத் துவங்கிவிட்டன. ஒவ்வொரு நாளும் மோடி நின்றது, நடந்தது என அனைத்தும் செய்தித்தாள்களின் பக்கங்களையும், தொலைக்காட்சிகளின் நேரங்களையும் ஆக்கிரமித்தன.

ஆனால், அது பொய்யான சித்தரிப்பு என்பது இன்று ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் மூலம் நாட்டுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தை மின்மிகை மாநிலமாகக் கூறுகிறார்கள். பல லட்சம் மக்கள் அங்கு புதிதாக மின் இணைப்பு பெற்றிட காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதற்குக் கொடுக்காமல் - மாநிலத்தில் உபரியாக மின் உற்பத்தியாவதாகக் கூறி பெரும்பகுதி மின்சாரத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக்கொண்டிருக்கிறார் மோடி.

நம் மாநிலங்களைப் போல அங்கு மக்களுக்குச் சொந்தமான நிலத்தில் கூட நினைத்தவுடன் கிணறு தோண்டவோ, நிலத்தடி நீரை நம் தேவைக்கு எடுக்கவோ முடியாது. இதன் விளைவாக. இந்தியாவிலேயே அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக குஜராத் பெயர் பெற்றுள்ளது.

மோடியைப் பாராட்டுபவர்கள் யார் என்பதை இனங்கண்டு கொண்டாலே அவர் யார் என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ள இயலும். அவரைப் பாராட்டுவோர் டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற பனமுதலைகள். சாதாரண மக்கள் அவர் மீது என்ன மனநிலையிலிருக்கிறார்கள் என்பது இன்று ஊடகங்களால் மறைக்கப்பட்ட நிலையிலும், அரவிந்த் கெஜ்ரிவால் அதை நாட்டு மக்களுக்குப் போட்டு உடைத்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டலாம். மோடி இந்த நாட்டில் ஒருவருக்குப் பயப்படுகிறார் என்றால் அது கெஜ்ரிவாலுக்குத்தான்.



இத்தனையையும் தாண்டி மோடி பிரதமரானால், இந்த நாட்டில் அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய சட்டம் அவர்களின் எண்ணங்களுக்கேற்ப திருத்தப்படும். மண்டல் கமிஷன் பரிந்துரைகள், சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு, முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் வாழ்வுரிமை உள்ளிட்டவை இல்லாமலாக்கப்படும்.

தலைவர்களின் தவறான அனுகுமுறை காரணமாக, இந்தத் தேர்தலுடன் மதிமுக, பாமக போன்ற சில கட்சிகள் காணாமல் போகும்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை பாஜக இன்று தனது பரப்புரைகளில் தூக்கிப் பிடிக்கிறது. வட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக ரத்த வெறி கலவரங்கள் நடைபெற்ற நேரத்தில், தமிழகத்திலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, “அது நடக்க விட மாட்டேன்” என்று முஸ்லிம்களுக்கு அரணாக நின்று திட்டவட்டமாக அறிவித்தவர் தேவர் அய்யா அவர்கள்.

சுவாமி விவேகானந்தர் - அவர் ஒரு பிராமணரல்ல என்பதற்காகவே - போற்றப்படத் தகுதியிருந்தும் பிராமணர்களால் ஒதுக்கப்பட்டார் என்பது இந்த நாட்டின் வரலாறு.

மொத்தத்தில் இந்த நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியே ஆட்சியமைக்க வேண்டும். அதற்கு, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் என்.பி.ஜெகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை லட்சக்கணக்கான வாக்குகள் வேறுபாட்டில் அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும் என உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அவர் பேசினார். மமக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் எம்.ஹஸன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் முரசு தமிழப்பன், தமுமுக மாநில வர்த்தகரணி செயலாளர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத் (எல்.கே.எஸ்.), மமக மாவட்ட துணைச் செயலாளர் முர்ஷித் முஹ்ஸின் உட்பட, மமக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



கூட்ட ஏற்பாடுகளை, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

முன்னதாக, காயல்பட்டினம் வருகை தந்த மமக மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரியை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் சால்வை அணிவித்து வரவேற்றார்.



முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்


ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Rilwan (TX) [31 March 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34052

இன்று மோடியை தோழுரிப்பது கேஜரிவால்தானே? திமுக தலைவர .... சாரி ... திமுக நிறுவன உரிமையாளர் கூட நல்லவர் வல்லவர் என்று சர்ட்டிபிகேட் கொடுத்தார்... சகோதரர் அன்சாரி இதை சிந்திப்பாரா ?

சகோதரர் அன்சாரிக்கு கோவை கலவரத்தின்போது ஏன் கருணாநிதி முஸ்லிம்களுக்கு எதிராய் செயல் பட்டார் என தெரியுமா ?

குஜராத் படுகொலைக்கு அப்புறமும் பிஜேபி அரசிலிருந்து வெளி வராமல் மவுனம் காத்தாரே திரு மு கருணாநிதி என்ற திமுக நிறுவனத்தின் மொத்த குத்தகை காரர் .. அது ஏன் என சகோதரர் அன்சாரிக்கு தெரியுமா ?

மக்கள வழி கெடுக்காதீர்கள் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved