Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:06:24 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13325
#KOTW13325
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 22, 2014
ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைப்புப் பணிகள் 20 நாட்களில் நிறைவுறும்! -ஆணையர்
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3549 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நீண்ட இடைவெளிக்குப் பின் காயல்பட்டினத்தில் துவக்கப்பட்ட ஒருவழிப்பாதை - புதிய சாலை அமைப்புப் பணிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணங்காட்டி, தேர்தல் அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டது. காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமாரைத் தொடர்புகொண்டு - இது ஏற்கனவே ஒப்பந்தம் விடப்பட்ட பணி என்பதைத் தெளிவுபடுத்தியதையடுத்திய பின், பணியைத் தொடர அவர் இசைவளித்ததையடுத்து, மீண்டும் சாலை அமைப்புப் பணிகள் தொடர்கிறது.

தாயிம்பள்ளியருகில் துவங்கி, பெரிய நெசவுத் தெரு வழியாக கூலக்கடை பஜார் வரை (பேருந்து நிலையம் அருகில்) - பழைய சாலை கிளறியெடுக்கப்பட்டு, முதல் அடுக்கிற்கான மூலப்பொருட்கள் போடப்பட்டு, சாலை சமப்படுத்தப்பட்டுள்ளது.











தற்போது, தாயிம்பள்ளி மூப்பனார் ஓடையின் பழைய பாலம் தோண்டியகற்றப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.







இப்பணி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையும் என்றும், அதன் தொடர்ச்சியாக அடுத்த ஏழு நாட்களில் சாலை அமைப்புப் பணி முழுமை பெறும் என்றும் ஒப்பந்தக்காரர் மீராசா தெரிவித்தார்.

மொத்த சாலைப் பணிகளையும், அதிகபட்சம் 20 நாட்களுக்குள் நிறைவு செய்திட திட்டமிடப்பட்டுள்ளதாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்தார்.

ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைப்புப் பணி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohamed salih (chennai) [22 March 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33863

இது எல்லாம் சரி ..

எங்க நெய்னாதெரு ரோடு எப்போ போடுவியோனு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாஸ் //..

நாங்க கேட்டா சரியா சொல்ல மட்டேங்க்ரங்க .. நீங்க கட்டு சொன்னா எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்க பாஸ்..

mohamed salih K.K.S
Chennai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இந்த ஆணையர் பொறுப்பேற்ற முதல் உடனடி தீர்வு கிடைப்பதாக பயனடடைந்தோர் மக்கள் மத்தியில் பரவலாக பேச படுகிறது..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [22 March 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 33865

நகர்மன்ற ஆணையாளர் தினமும் காலையில் தனது இல்லத்தில் இருந்து பணிக்கு நகருக்குள் வரும்போதெல்லாம் நேரடியாக இச்சாலை பணி நடைபெறும் இடத்திற்கு வந்து ஆய்வுகள் செய்து விட்டு பிறகு தான் அவரின் நகர்மன்ற அலுவலகத்திற்கு செல்வதையே தினசரி வழக்கமாக கொண்டுள்ளார்..

நகரின் அணைத்து தரப்பு மக்களாலும் பாராட்டக்கூடிய ஒரு நல்ல ஆணையாளர் நம் நகருக்கு கிடைத்துள்ளார்..

நகர்மன்றத்தின் மூலம் ஆகவேண்டிய அணைத்து வகை விண்ணப்பங்களும் மூலையில் முடங்கி சேர்ந்து சிதறி கிடக்காமல் அது உடனே ஆய்வு செய்யப்பட்டு அதற்குரிய சம்பந்தப்பட்ட ஊழியரிடம் அனுப்பி ஓரிரு நாள் அல்லது குறைந்த பட்சம் வாரத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தீர்வுகள் வழங்கபட்டு வருவது தற்போதைய புதிய ஆணையர் திரு காந்தி ராஜன் அவர்களின் நடவடிக்கையாக உள்ளது..

இச்சாலை விசியம் மட்டுமல்ல குடிநீர் - தெரு விளக்கு - குடிநீர் வரி ,சொத்து வரி பெயர்மாற்றம் - புதிய குடிநீர் இணைப்பு - வீட்டு பிளான் அப்ரூவல் என அணைத்து வகையான வின்னபங்களுக்கும் இந்த ஆணையர் பொறுப்பேற்ற முதல் உடனடி தீர்வு கிடைப்பதாக பயனடடைந்தோர் மக்கள் மத்தியில் பரவலாக பேச படுகிறது..

நகராட்சி ஆணையர் அவர்களே..! மேலும் நகர் மக்கள் பலரின் நன் மதிப்பை பெற்று அதிக வாழ்த்துக்கள் பெற நான் வாழ்த்துக்கிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சாதனைச் சுவை!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [22 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33867

மாஷா அல்லாஹ் முதல் படத்திலேயே மினு.மினுப்பான புதிய சாலையைப் பார்த்து மெத்த மகிழ்வடைகிறேன்!

முற்றிலும் மாறுபட்ட தொற்றமளிப்பதுபோல் காட்சி தந்தாலும்,தெருமுனை கம்பீர காட்சியுடைய எங்கள் மகிமைமிகு "மெட்ரோ" வைப் பார்த்தவுடந்தான் முழுமையான தொற்றமும் தெரியவருகிறது!

இந்த ரோட்டு விஷியதிற்கு இவ்வளவு பில்டப்பா என்று எண்ண வேண்டாம்! இந்த ஒருவழிப்பாதையை கொண்டுவரப்பட்ட பாட்டால், நாங்கள் பெற்ற இன்னல்களையும்,எந்த அளவிற்கு நாங்கள் எள்ளி நகையாடப்பட்டோம் என்பதனையும், இழிவான வசைமொழிகளையும் அன்றாடம் அபிஷேகங்களாகப் பெற்றோம் என்பதனையும் அந்த அல்லாஹ் ஒருவனே அறிவான்!

ஏக இறையோனின் உதவியால் இச்சாதனையின் வெற்றியில் ஆணிவேராக உறுதியாகவும், வலிமையாகவும் இருந்த எங்களுக்கு, இந் நிகழ்வை இமியளவு என்னும்பொழுது கூட உண்மையான உள்ளப்பூறிப்புடைய உணர்வலைகளின் ரீங்காரம் ஓயாசயின்றி ஒலித்துக்கொண்டே இருக்கிறது எங்கள் இதயத்திற்குள! அந்த இதயதென்றலின் இதமான "கருத்துப்பதிவுகாற்று" தான் இங்கு வீசுகிறேதே யல்லாமல் வேறல்ல!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [22 March 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 33870

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது நகர் மன்ற ஆணையர் அவர்களின் இந்த நற் செய்தி நமக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது ....நிழற்படத்தில் நம் ஆணையர் அவர்கள் நேரிடையாக முன் நின்று செயல்படுவதை பார்க்கும் போது கண்டிப்பாகவே ...இவர் சொன்னதை செயல்லாற்றக்குடியவர்....என்பது நமக்கு தெளிவாகிறது....

சார் இத் திட்டம் எங்கள் ஊர் அனைத்து பொது மக்களின் எதிர்பார்ப்பு ....இந்த நல்லதோர் காரியத்தின் மூலம் தங்களின் தரம் எங்கள் ஊர் அனைத்து பொது மக்களின் மத்தியில் ( கூடும் ) உயரும் ......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் எங்கப்பா?
posted by Saalai Abdul Razzaq Lukman (Bangkok) [24 March 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 33898

தம்பி சாலிஹ் அவர்களுடைய ஆதங்கம் புரிகிறது. அதே போல், தம்பி முத்து இஸ்மாயீல் உடைய ஆர்வமும் நன்றாகவே படுகிறது.

பல மாதங்கள் கஷ்டப்பட்ட ஒருவழிச்சாலை, ஒரு வழியாக முடிவுக்கு வருகிறதே என்ற மன திருப்தி. ஆனால், இந்த நேரத்தில் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம். ரோடு போடுகிறார்கள் சரி. அந்த ரோடு தரமாக, ஒப்பந்த புள்ளியில் குறிப்பிட்டவாறு போடபடுகிறதா? என்று யாராவது கண்காணிக்கிறார்களா?

முன்னர், ஊரின் உள்ளே போடப்பட்ட சில சாலைகளை, அது போடப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் அந்த பணிகள் முறையாக கண்காணித்து, பல சோதனைகள் செய்து, அந்த சாலைகள் தரமானதாக அமைய உறுதுணையாக இருந்தனர்.

அந்த நடவடிக்கை காரணமாகவே, தரம் குறைந்து போடப்பட்டுக் கொண்டிருந்த (தம்பி சாலிஹ் அவர்கள் சொல்லும்) நைனார் தெரு சாலை இன்றுவரை முழுமை பெறாமல், பாதியிலே நிற்கிறது. இன்று அந்த சாலை விவகாரம் வழக்கில்/ மேல் அதிகாரிகளின் மேஜையில் இருக்கிறது என்று நினைக்கிறேன். மற்ற சாலைகளை முறையாக கண்காணித்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர், அதே நேரத்தில் போடப்பட்ட மருத்துவர் தெருவை சாலையை ஆய்வு செய்யவில்லை. அதற்கான காரணத்தை அவர்களே அறிவார்கள்.

மற்ற சாலைகளை விட இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும். அதன் அடிப்படையிலே, ஒப்பந்தப்புள்ளியிலும் அந்த சாலையின் specification குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த specification படி அந்த சாலை போடப்படுகிறதா? என்று ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் கள ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இத்தனை மாதங்கள் கஷ்டப்பட்ட சாலை, தரம் குறைந்ததாக இல்லாமல், முறையாக நடக்க நாம் அனைவரும், குறிப்பாக அந்த தெருவாசிகள் கண்காணிக்க வேண்டும்.

தரமானதாக சாலை அமையும் என்ற நம்பிக்கையில்,

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Salih (chennai) [24 March 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33914

சகோதரர் ரசாக் லுக்மான் அவர்களுக்கு,

/* முன்னர், ஊரின் உள்ளே போடப்பட்ட சில சாலைகளை, அது போடப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் அந்த பணிகள் முறையாக கண்காணித்து, பல சோதனைகள் செய்து, அந்த சாலைகள் தரமானதாக அமைய உறுதுணையாக இருந்தனர். */ (C & P)

சாலைப்பணிகள் உட்பட நகரில் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் நகரின் அனைத்து பணிகளையும் மக்கள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். இது நம் அனைவரின் மீதான கடமை. ஆனால் இந்த பொறுப்பை ஒரு குறிப்பிட்ட அமைப்பு தான் செய்ய வேண்டும் என எதிர்ப்பார்ப்பது நியாயமானதாக தெரியவில்லை.

இந்த சாலை குறித்த தொழில்நுட்ப விபரங்களை நகர்மன்றத் தலைவர் வெளியிட்டார். இது பொது தளத்தில் உள்ளது. எனவே - அந்த பகுதி மக்கள், அந்த பகுதி பொது நல அமைப்புகள், ஊரின் பிற பொது நல அமைப்புகள் (ஊழல் எதிர்ப்பு இயக்கம் உட்பட), தனி நபர்கள் என இதனை கண்காணிப்பது அனைவரின் பொறுப்பு.

/* தரம் குறைந்து போடப்பட்டுக் கொண்டிருந்த (தம்பி சாலிஹ் அவர்கள் சொல்லும்) நைனார் தெரு சாலை இன்றுவரை முழுமை பெறாமல், பாதியிலே நிற்கிறது. */ (C & P)

/* மற்ற சாலைகளை முறையாக கண்காணித்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர், அதே நேரத்தில் போடப்பட்ட மருத்துவர் தெருவை சாலையை ஆய்வு செய்யவில்லை. அதற்கான காரணத்தை அவர்களே அறிவார்கள். */ (C & P)

இந்த இரண்டு விமர்சனத்திற்கும் கீழ்க்காணும் விளக்கம் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

பொதுவாக தணிக்கைகள் செய்யப்படும் போது, அனைத்து கணக்குகளையும் தணிக்கை செய்யமாட்டார்கள். உதாரணமாக - நகராட்சியில், ஆணையர் - ரேண்டமாக 5 சதவீதம் ரசீதுகளை ஆய்வு செய்யவேண்டும் என விதிகள் கூறுகிறது. இந்த ரேண்டம் சோதனையில் தவறுகள் தெரிய வந்தால் அதன்மேல் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே - காயல்பட்டினம் சாலைகளை பொறுத்தவரை அனைத்து சாலைகள் குறித்தும் புகார்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.

ஊழல் எதிர்ப்பு இயக்கம் - கடந்த பிப்ரவரி மாதம் (2013), மூன்று சாலைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தது. அதே சமயத்தில் - அல் அமீன் சங்கம் தனிப்பட்ட முறையில் - சாலைகள் முறையாக போடப்படவில்லை என அப்போதைய ஆணையரிடம் புகார் தெரிவித்திருந்தது. ஊழல் எதிர்ப்பு இயக்கம் குறிப்பிட்ட தெருக்கள் - அப்பாபள்ளித் தெரு சாலை, ஆசாத் தெரு சாலை, நெய்னார் தெரு சாலை. இந்த சாலைகள் ரேண்டமாக தேர்வு செய்யப்படவில்லை. அந்த காலகட்டத்தில் நகராட்சியில் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 15 பணிகள் (சாலை, மழைநீர் வடிகால்) நடைபெற்றன. அவற்றில் இந்த மூன்று சாலைகளும் தேர்வு செய்யப்பட்ட காரணம் - இந்த பணிகளின் தரத்தை ஆரம்பத்திலேயே, எளிதாக, சிக்கனமான முறையில் சோதித்து விடலாம் என்பது தான்.

அதாவது - குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு சாலை தோண்டப்படிருக்கிறதா என உறுதி செய்துக்கொண்டால் போதுமானது. அப்படி தோண்டப்படவில்லை என்றால், அந்த ஆதாரத்தை கொண்டு ஆட்சியரிடம் புகாரை தெரிவிக்கலாம். ஆட்சியரும் புகாரினை தட்டிகழிக்க முடியாது. குறைந்தது அந்த அளவு ஆதாரம் இல்லாமல் எந்த புகார் கொடுத்தாலும், அது அனுமானமாக தான் இருக்கும்.

பிற சாலைகளைபற்றி புகார் தெரிவிக்கும்போது - நம் மனதில் அவை முறையாக போடப்பட வில்லை என்று தெரிந்த்திருந்தாலும், அவைகள் குறித்து சாலைகள் முழுமையாக போடப்பட்டப்பின் - அதற்கு என உள்ள தர பரிசோதனை நிறுவனங்களிடம் சுமார் 20,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி, சோதனை செய்ய சொல்லி - அந்த முடிவின் அடிப்படையில் புகாரினை தெரிவிக்க வேண்டும். 15 பணிகளையும் சோதிக்க தேவையான நிதி சுமார் 3 லட்சம். அந்த நிதியினை ஏற்பாடு செய்வது எளிதல்ல. காலமும் அதிகம் ஆகும்.

மற்றொரு வழி - ஒவ்வொரு தருணத்திலும் (மணல் கொட்டும்போது, கற்கள் கலக்கும்போது என) கண்காணிப்பது. இதற்கு ஆட்கள் பலமும் வேண்டும், அதற்கான தொழில் நுட்ப விபரமும், அறிவும் வேண்டும்.

அதே சமயத்தில் போடப்பட்ட இதர சாலைகள் கீழே:

பிலால்பள்ளி தெரு சாலை
மங்களவினாயகர் கோவில் தெரு சாலை
ஈக்கியப்பா தைக்கா தெரு முதல் கறுப்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) / கீழ நெய்னார் தெரு சாலை
கடையக்குடி (கொம்புத்துறை) சாலை
நியூ காலனி சாலை
பாஸ் நகர் சாலை
மங்களவாடி மயான சாலை தடுப்பு சுவர் கட்டி மேம்பாடு
குளம் சாஹிப் தம்பி தோட்டம் சாலை
வானியக்குடி எதிர் தெரு (அவன் செயல் காலனி)
ஓடக்கரை கிழக்கு தெரு சாலை
மஹ்லரா காலனி தெரு சாலை
மருத்துவர் தெரு

அவைகள் - ஒழுங்காகப்போடப்பட்டதா இல்லையா என இறைவனுக்கு தான் வெளிச்சம். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் - மேலே குறிப்பிடப்பட்ட காரணத்திற்கு 3 சாலைகள் குறித்து ஆதாரப்பூர்வமாக புகார் தெரிவிக்க முடியும் என்ற அடிப்படையில் அவை தேர்வு செய்யப்பட்டது. எஞ்சிய 12 தெருக்கள் குறித்து (மருத்துவர் தெரு உட்பட) எந்த புகாரும் - உடனடி ஆதாரம் இல்லாததால் - கொடுக்கப்படவில்லை. இது தான் உண்மை.

எதற்காக - புகார் கொடுக்கப்படாத 12 தெருக்களில் - மருத்துவர் தெரு மட்டும் இங்கு தங்களால் குறிப்பிடப்பட்டு சொல்லப்படுகிறது என தெரியவில்லை. அது நகர்மன்றத் தலைவரின் தாயார் வசிக்கும் சாலை என்பதால் என்று தாங்கள் கூற வருகிறார்களா? நான் தவறாக கணித்திருந்தால் மன்னிக்கவும். தெளிவான காரணங்களை தாங்கள் இந்த தெரு விசயத்தில் கூறாத வரை, வீண் வதந்திகளும், பொய்யான தகவல்களும் தான் பரவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினரின் பணிகள்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Bangkok) [26 March 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 33956

சகோதரர் சாலிஹ் அவர்களுக்கு,

ஊழல் இயக்கத்தினரின் கண்காணிப்பு பணியை பாராட்டியும், மருத்துவர் தெரு சாலை விஷயத்தில் என்னுடைய சந்தேகங்களுக்கு பதில் அளித்தமைக்கு நன்றி! அதே நேரத்தில் என்னுடைய கருத்தை முழுமையாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

சாலைப்பணிகள் உட்பட நகரில் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் நகரின் அனைத்து பணிகளையும் மக்கள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். இது நம் அனைவரின் மீதான கடமை. ஆனால் இந்த பொறுப்பை ஒரு குறிப்பிட்ட அமைப்பு தான் செய்ய வேண்டும் என எதிர்ப்பார்ப்பது நியாயமானதாக தெரியவில்லை. ......

ஊரின் பிற பொது நல அமைப்புகள் (ஊழல் எதிர்ப்பு இயக்கம் உட்பட), தனி நபர்கள் என இதனை கண்காணிப்பது அனைவரின் பொறுப்பு.(C & P)

ஆனால், என்னுடைய பதிவில் உள்ள "இத்தனை மாதங்கள் கஷ்டப்பட்ட சாலை, தரம் குறைந்ததாக இல்லாமல், முறையாக நடக்க நாம் அனைவரும், குறிப்பாக அந்த தெருவாசிகள் கண்காணிக்க வேண்டும்" (C & P) என்ற கருத்தை படிக்க மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இதில் அனைவரையும் குறிப்பாக அந்த தெருவாசிகளையும் குறிப்பிட்டுள்ளேன்.

"இந்த சாலை குறித்த தொழில்நுட்ப விபரங்களை நகர்மன்றத் தலைவர் வெளியிட்டார். இது பொது தளத்தில் உள்ளது". (C & P)

என்னுடைய பதிவிலும் "ஒப்பந்தப்புள்ளியிலும் அந்த சாலையின் specification குறிப்பிட்டு இருப்பார்கள்".(C & P) தலைவி அவர்கள், மக்கள் அனைவரும் அறியும் பொருட்டு பொது தளம் (internet) வெளியிட்டு உள்ளார். பாராட்டுக்குரியது.

ஆனால், எத்தனை பேர், பார்த்திருப்பார்கள்? அப்படியே பார்த்திருந்தாலும், எத்தனை பேருக்கு அந்த தொழில்நுட்ப விபரங்கள் தெரியும்?. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலருக்கு அந்த தொழில்நுட்ப ஞானம் இருக்கும் என்பதனால் தான் அதை குறிப்பிட்டேன்.

அதை தவிர, அந்த இயக்கத்தை குறை கூறும் எண்ணம் இல்லை. ஏற்கனவே போடப்பட்ட ஆசாத் தெரு மற்றும் அப்பா பள்ளி தெரு ஆகியவை, இந்த இயக்கத்தினர், அந்த சாலைகள் தரமானதாக அமைய உறுதுணையாக இருந்தனர் என்று பாராட்டி தான் கருத்து பதிந்து இருந்தேன்.

நைனார் தெரு சாலை, தரமானதாக போடவேண்டும் என்று போராடியது பாராட்டப்பட வேண்டிய செயல். அதே நேரத்தில், பணிகள் பாதியில் நின்றதனால், அந்த தெருவாசிகள், இந்த ஒன்றரை ஆண்டுகளாக படும் அவதியின் பிரதிபலிப்பு தான், தம்பி KKS முஹம்மத் சாலிஹ் அவர்களின் ஆதங்கம்.

குறிப்பாக மருத்துவர் தெருவில் அந்த இயக்கத்தினர், ஆய்வு செய்யாததற்கு, தாங்கள் குறிப்பிடும் காரணங்களை அறியும் முன், நீங்கள் ஒரு "அது நகர்மன்றத் தலைவரின் தாயார் வசிக்கும் சாலை என்பதால் என்று தாங்கள் கூற வருகிறார்களா? (C & P)

எனக்கு கிடைத்த தகவல் முழுமையானதாக இல்லை என்ற விபரம் உங்களின் விளக்கத்தில் தெரிந்து கொண்டேன். ஆனால், நீங்கள் குறிப்பிடும் முன் வரை, நான் அப்படி சந்தேகப்படவில்லை. உங்களின் பதிவிலிருந்து சந்தேகம் நீக்கப்பட்டுள்ளது.

தணிக்கை (கணக்கு) விஷயம் வேறு, போடப்படும் சாலையின் தரத்தை ஆய்வு செய்வது வேறு. "ஊழல் எதிர்ப்பு இயக்கம் குறிப்பிட்ட தெருக்கள் - அப்பாபள்ளித் தெரு சாலை, ஆசாத் தெரு சாலை, நெய்னார் தெரு சாலை. இந்த சாலைகள் ரேண்டமாக தேர்வு செய்யப்படவில்லை. இந்த மூன்று சாலைகளும் தேர்வு செய்யப்பட்ட காரணம் - இந்த பணிகளின் தரத்தை ஆரம்பத்திலேயே, எளிதாக, சிக்கனமான முறையில் சோதித்து விடலாம் என்பதுதான்.

அதாவது - குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு சாலை தோண்டப்படிருக்கிறதா என உறுதி செய்துக்கொண்டால் போதுமானது. அப்படி தோண்டப்படவில்லை என்றால், அந்த ஆதாரத்தை கொண்டு ஆட்சியரிடம் புகாரை தெரிவிக்கலாம். பிற சாலைகளைபற்றி புகார் தெரிவிக்கும்போது - நம் மனதில் அவை முறையாக போடப்படவில்லை என்று தெரிந்த்திருந்தாலும், அவைகள் குறித்து சாலைகள் முழுமையாக போடப்பட்டப்பின் - அதற்கு என உள்ள தர பரிசோதனை நிறுவனங்களிடம் சுமார் 20,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி, சோதனை செய்ய சொல்லி - ....(C&P)

என்னுடைய கேள்வி, இந்த 3 சாலைகள் மட்டும் தோண்டப்பட்ட நிலையிலேய சோதனை செய்யப்பட்டதையும், அதற்கு கட்டணங்கள் ஏதும் செலுத்தப்படவில்லை என்பதையும் உங்கள் விளக்கம் தெரிவிக்கிறது. ஆனால் மற்ற சாலைகளை சோதனை செய்யாததற்கு நீங்கள் கூறும் உங்களின் கருத்தில் முரண்படுகிறீர்கள்.

கடைசியாக, இந்த தலைப்பின் கருத்துகள் திசை மாறி போகிறது. நமக்கு இந்த சாலை, ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்ட தொழில்நுட்ப விபரங்கள் படி போடப்படுகிறதா? என்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, அந்த தெருவாசிகள், அந்த பகுதியின் 11 மற்றும் 13-ம் வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள், அனைத்து பொதுநல அமைப்பினர் ஆகியோரை சாரும்.

சாலை தரமானதாக அமைய விரும்பும்,

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved