Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:16:45 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13280
#KOTW13280
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 18, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: 3 ஆண்டுகளாக முதல்வர் பொறுப்பிலிருக்கும் ஜெயலலிதா தமிழக நன்மைக்காக பிரதமரை சந்தித்து வாதாடியதுண்டா? தூத்துக்குடி செய்தியாளர் கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேள்வி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2585 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த தி.மு.க. தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது? என கேள்வி கேட்கும் ஜெயலலிதா அம்மையாரே, நீங்கள் முதல்வராக இருக்கும் இந்த மூன்றாண்டு காலத்தில் ஒருமுறையாவது தமிழகத்தின் நன்மைக்காக பிரதமரை சந்தித்து வாதாடியது உண்டா?”’ என, தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் என்.பி.ஜெகனை அறிமுகப்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்திருந்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளது. தி.மு.க.வுடன் நாங்கள் உறவு கொண்டிருப்பதற்குக் காரணம் சிறுபான்மையினரின் தனித்தன்மைகளைக் காப்பதில் தி.மு.க. எப்போதும் முன்னணியில் இருக்கிறது; சிறுபான்மையினருடைய உரிமைகளைக் காப்பதோடு மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கான பல்வேறு நன்மைகளையும் தந்தவர் கலைஞர் என்பதால்தான்.

பா.ஜ.க.வை பிரதிபலிக்கும் அ.தி.மு.க

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கியதோடு மட்டுமல்லாமல், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரையை ஏற்று மத்தியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நாங்கள் வலியுறுத்துவோம் என்பதை தங்களுடைய தேர்தல் அறிக்கையிலும் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது தி.முக.

பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதை மிகக் கடுமையாக எதிர்த்ததோடு அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டு வராமல், தனியார் சட்டங்களை காப்பாற்ற வேண்டும் என்பதையும் தி.மு.க. தனது கொள்கையாகக் கொண்டிருக்கிறது.

ஆனால், அ.இ.அ.தி.மு.க. இதற்கு நேர்மாற்றமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, அது பிரபல நாளிதழ்களில் 8 கால தலைப்பாக வெளிவந்தது.

இது பாரதீய ஜனதா கட்சியின் கொள்கை. பொது சிவில் சட்டம் மட்டுமின்றி, இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோல் கொண்டு வரப்பட வேண்டும் என்பதும் பா.ஜ.க.வின் லட்சியம். அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும் அதைத்தான் பிரதிபலிக்கிறது.

சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக நீதி. இதைத்தான் அரசியல் சட்டமும் சொல்கிறது. ஆனால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சமூக நீதி என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு சமவாய்ப்பு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆக, பா.ஜ.க.வின் கொள்கையை அ.தி.மு.க. அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது.

மதச்சார்பற்ற இந்தியா

பாரதீய ஜனதா கட்சியோடு நாங்கள் உறவுகொள்ள முடியாது. அவர்களோடு கூட்டுச் சேர்ந்தவர்களோடும் நாங்கள் தோழமை கொள்ள முடியாது. பா.ஜ.க.வையோ, அதன் தலைவர்களையோ நாங்கள் விவாதிக்கவில்லை. ஆனால், அவர்களின் கொள்கை எங்களுக்கு ஒத்து வராது.

மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டை இந்து ராஷ்ட்ராவாக மாற்றுவோம் என அவர்கள் சொல்கிறார்கள். தங்களுடைய பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. நரேந்திரமோடியை அறிவித்துள்ளது. நரேந்திர மோடி மதச்சார்பற்றவரா என்றால் இல்லை.

சிறுபான்மையின மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்க மத்திய அரசு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது. ஆனால், அதைப் பெற்று ஏழை சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்காமல் அதை அப்படியே திருப்பிவிடும் ஒரே மாநிலம் குஜராத்தான்.

மோடி ஒருபோதும் திருந்த மாட்டார். 67 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதக்கலவரங்கள் நடந்துள்ளன. இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் கலவரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், இந்தப் படுகொலைக்கு காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்டது. சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங்கிற்கு 10 ஆண்டு காலம் பிரதமர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால் 2002 குஜராத் கலவரத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். வருத்தம் தெரிவிப்பதற்குக் கூட மோடிக்கு மனம் வரவில்லை. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது என நீதிமன்றத்திலேயே குஜராத் அரசு தெரிவித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இக்கலவரத்தில் உயிரிழந்த முஸ்லிம்களை காரில் அடிபட்ட நாய்க்குட்டிகளோடு ஒப்பிட்டு நரேந்திர மோடி பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

கடந்த காலத்தில் பாரதீய ஜனதா கட்சியை விமர்சித்தவர்கள் இன்று அக்கட்சியோடு உறவு கொள்கிறார்களே என்று நினைக்கும்போது வேதனைதான் வருகிறது. சிறுபான்மையினர் குரலாக ஒலிப்பேன் என்ற ம.தி.மு.க.வின் வைகோ, திராவிட கட்சிகளோடும், தேசிய கட்சிகளோடும் கூட்டணி வைக்க மாட்டோம் என வீராப்பு பேசிய பா.ம.க.வின் டாக்டர் ராமதாஸ் போன்றோரெல்லாம் பா.ஜ.க. உறவுக்கு துடிப்பது ஏன்?

ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரை

தூத்துக்குடி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த தி.மு.க. தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது? என கேட்டுள்ளார்.

2004 தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதும் 40 எம்.பி.க்களும் கலைஞர் தலைமையில் ஒன்றாகக் கூடி, தமிழ்நாட்டின் தேவைகளை 300 திட்டங்களாக பட்டியலிட்டோம். அதில் ஒருசில திட்டங்களை தவிர அனைத்துமே நிறைவேற்றப்பட்டும் விட்டன. அப்படி நிறைவேற்றி முடிக்கப்படாத திட்டத்தில் ஒன்றுதான் சேதுசமுத்திர திட்டம். அந்தத் திட்டமும் பாதி வேலைகள் முடிக்கப்பட்டு கிடப்பில் கிடக்கிறது. இதற்குக் காரணம் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்பது தமிழக மக்களுக்குத் தெரியாத ஒன்றல்ல.

தமிழர்களின் 150 ஆண்டு கனவுத் திட்டமான - அண்ணாவாலும், எம்.ஜி.ஆர்., கலைஞராலும் வலியுறுத்தப்பட்ட அந்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு மதுரையில் நடைபெற்ற அதன் தொடக்க விழாவுக்கு நாங்கள் மட்டுமல்ல, வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்களும் கூட வந்திருந்தனர்.

எனவே, சேதுசமுத்திர திட்டத்தை முடக்கிப் போட்ட அ.தி.மு.க.விற்கு இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்துக் கொடுக்க வேண்டும்.

தி.மு.க. என்ன செய்கிறது என்று ஜெயலலிதா கேட்கிறாரே? அந்த அம்மையாரிடத்தில் நான் ஒன்று கேட்கிறேன். நீங்கள் முதல்வராகி இந்த மூன்றாண்டு காலத்தில் ஒரு முறையாவது மத்திய அரசிடம் சென்று தமிழ்நாட்டில் எந்த ஒரு திட்டத்திற்காவது வாதாடியதுண்டா?

முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு வழங்கிய விஷயத்தில் ஜெயலலிதா கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கிறார். இந்த இடஒதுக்கீடு விஷயத்தில் அவர் எதிரான கொள்கை உடையவராகவே இருந்தார். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு வழங்கியபோது அதை எதிர்த்து பகிரங்க அறிக்கை வெளியிட்டார்.

வானத்திற்கும், சூரியனுக்கும் உள்ள உறவைப் போல் இடஒதுக்கீட்டிற்கும் - தி.மு.க.விற்கும் உள்ள உறவு பிரிக்க முடியாத ஒன்று. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது தி.மு.க. என்பது மட்டுமல்ல, இந்த இடஒதுக்கீடு கிடைப்பதற்கு காரணமான லெப்பை, தக்னி, மாப்பிள்ளா, தூதேகுலா, செய்யது, ஷேக், அன்சர் என முஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான்.

எனவே, ஜெயலலிதா இந்த விஷயத்தில் என்ன பரப்புரை செய்தாலும் அதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.விற்குத் தகுந்த பாடத்தைக் கற்றுக் கொடுப்பார்கள். தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்வார்கள்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் என்.பி.ஜெகன், தி.மு.க.விற்கு உழைத்த குடும்பத்தைச் சார்ந்தவர். கலைஞரின் முரட்டு பக்தன் என்று பாராட்டப்படக்கூடிய தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் புதல்வர்.

தூத்துக்குடி தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் உள்ளன. நான் தம்பி ஜெகன் அவர்களிடத்தில் சொல்லிக்கொள்வேன். உங்கள் வாக்குகளை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து ஒன்றிலிருந்து எண்ணிக்கொள்ளுங்கள். அந்த அளவுக்கு எங்கள் சமூகம் வாக்களிக்கும்.


இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

கீதா இண்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ, எஸ்.டி.யு. மாநில பொதுச் செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், முஸ்லிம் மாணவர் பேரவை மாநிலச் செயலாளர் வி.ஏ. செய்யது பட்டாணி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர், செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹசன், பொருளாளர் சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Solukku.M.E.Syed Moosa (QATAR) [20 March 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 33826

பாப்ரி மஸ்ஜிதை உடைப்பதற்கு காரணம்மாக இருந்த காங்கிரசுக்கு 5 வருடம் முழுமையாக ஆட்சி செய்ய உதவியாக இருந்த திமுக விர்க்கு நமது ஒட்டு? கோயம்புத்தூரில் மதகலவரம் ஏற்படுத்தி அப்பாவி முஸ்லிம்களை இதுவரையில் வெளியில் வரவிடாமல் கேஸ் போட்ட திமுகவிற்கு நமது ஓட்டு? மோடியை 5 வருடம் ஆட்சி செய்ய காரணமாக இருந்த திமுகவிற்கு நமது ஓட்டு?குஜராத்தில் ஆட்சி கவில்லாமல் பாதுகாத்த சமுதாய காவளனுக்கு நமது சமுதாய ஓட்டு. காயல்பட்டினத்தில் 5 நபர்களை 1 வருடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் போட்ட உமர் கத்தாப் ஆட்சி நடத்திய கருணைஇல்லாதவனுக்கு நமது ஓட்டு.மறவாதீர் மானம் இல்லாதவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by farook (ksa) [20 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33827

சகோ . மூசா , பாப்ரி மசூதி உடைப்புக்கு காரணம இருந்த காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் எதிருப்பு திமுக பற்றி புட்டு புட்டு வைத்தீங்க... அது போல கொஞ்சம் முஸ்லிம் எதிர்ப்பு அதிமுக பற்றியும் (இன்று வரை மோடி பற்றி வாய் திறக்காத ஜெயா பற்றியும் ) புட்டு புட்டு வைத்து அதுக்கு ஒட்டு போடாதீங்க என்று சொன்னால் உங்களை பாராட்டலாம் .

அதுக்கு பதிலா ஆம் ஆத்மி அல்லது நோடா க்கு ஒட்டு போடுங்க என்று சொன்னா நியாமிருக்கு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாக்களிப்பீர் 'உதய சூரியன்' சின்னத்தில் .
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [20 March 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 33836

அம்மா அவர்கள் பிரதமரை சந்திக்கிற கதையெல்லாம் கிடக்கட்டும்.

தமிழ் நாட்டின் நன்மைக்காக என்றைக்காவது அம்மா அவர்கள் மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவரை முகம் கொடுத்து நேருக்கு நேர் சந்தித்து பேசி இருக்கிறாரா? முந்தைய ஆட்சியாளர் கொண்டுவந்த எத்துனை நல திட்டங்களை இவர் முடகிவைத்து மாநிலத்தின் பொது நிதியை பாழ்படுத்தினர் என்பதை தயவு செய்து நினைத்துபாருங்கள்.

இப்போதும்கூட மதுரவாயல் - சென்னை துறைமுகம் மேல்மட்ட சாலையை அம்மாவால் முடிந்தவரை தடுத்து நிறுத்தப்பார்க்கிறார். இதுபோன்றுதான் சேது சமுத்திர திட்டம். தலைமை செயலகம் மருத்துவமனையாக மாற்றியது. இப்படி இருந்தால் எப்படி விளங்கும்?

அது இது என்று சொல்லி மோடிக்கு மறைமுகமாக கதவை திறக்க வேண்டாம் .

இந்த தவறுகளையெல்லாம் களைந்திட வாக்களிப்பீர் 'உதய சூரியன்' சின்னத்தில் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved