Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:58:59 PM
வெள்ளி | 10 மே 2024 | துல்ஹஜ் 1744, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4312:2003:3806:3307:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:59Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:43
மறைவு18:28மறைவு20:50
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4505:1105:37
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13173
#KOTW13173
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 6, 2014
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து இடது சாரி கட்சிகள் விலகுகின்றன?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2826 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இடது சாரி கட்சிகளான - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அறிவித்திருந்தன. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இந்த கூட்டணியை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன.

இதற்கிடையே - பிப்ரவரி 24 அன்று அ.தி.மு.க. - 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டப்பின் - அந்த தொகுதிகளின் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

2009 ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது - இடது சாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்கள் போல, இத்தேர்தலிலும், அக்கட்சிகள் 6 இடங்கள் கோரியதாக தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் தலா ஒரு இடத்திற்கு மேல் தர, அ.தி.மு.க. சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் கூட்டணி தொடராது என செவ்வாய் இரவு, அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடம் கூறிவிட்டதாக தி ஹிந்து (ஆங்கில) நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரின் கருத்தை மேற்கோள்காட்டி, இந்த கூட்டணி இனி தொடர வாய்ப்பில்லை என அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எதிர்பார்த்த ஒன்று.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [06 March 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 33537

கம்யூனிஸ்ட்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். ஜெயலலிதாவும், மோடியும் இயற்கையான கூட்டணி. இருவருடைய கொள்கைகளும் ஒன்று.

தேர்தலுக்கு முன் கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி வைத்து விட்டு, தேர்தலுக்கு பின் தனது கொள்கைக்கு உடன்பாடான பா.ஜ.க உடன் சேர்ந்தால், மக்கள் தவறாக எண்ணுவார்களே என்று நினைத்து, இந்த கம்யூனிஸ்டுகளை கழட்டி விடும் உத்தி தான்.

2011 சட்டமன்ற தேர்தலில், ம.தி.மு.க-வை கழட்டி விட வேண்டும் என்று முடிவு பண்ணி, தொகுதி பேச்சுவார்த்தையில், அவமானபடுத்தி, வெளிவேற்றி விட்டதோ, அதே பாணியில் இப்போது கம்யூனிஸ்டுகளுக்கு அ.தி.மு.க செய்துள்ளது.

2006-2011 வரை ம.தி.மு.க எப்படி ஜெயலலிதாவுக்கு சிங்-சாங் அடித்ததோ, அதே போல் 2006 முதல் இன்று வரை இந்த கம்யூனிஸ்டுகள் ஜெயலலிதாவுக்கு வால் பிடித்தனர். ஜெயலலிதா, தற்போது தன் இயற்கையான நிறத்தை காட்டி விட்டார்.

இனி இவர்களுக்கு, வேறு கதி இல்லை. தலா 1 தொகுதி, அதுவும் அ.தி.மு.க வெற்றி பெற முடியாத தொகுதியாக இவர்களுக்கு கிடைக்கும்.

அதே போல், பா.ஜ.க உடன் தே.மு.தி.க, கூட்டணி வைத்தாலும், தேர்தலுக்கு பின், தே.மு.தி.க வை பா.ஜ.க, கழட்டி விடும்.

தற்போதைய, நிலவர படி, தி.மு.க- தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக செய்தி வந்துள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [06 March 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33540

அஸ்ஸலாமு அழைக்கும் ,

தோழர்களை விரட்டிய ஜெயா தமிழ் நாட்டிலும் இந்திய அளவிலும் தி . மு . க விற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி தன்னுடைய காவி மறைமுக கூட்டணியை மக்களுக்கு தெளிவாக பிரகடனம் செய்து .

தனக்கும் மோடி பிஜேபி க்கும் உள்ள தொடர்பை வெட்ட வெளிசம் போட்டு காடியுள்ளார் .

இதன் மூலம் மூன்றாவது அணி என்பதை தி . மு . க வுக்கு தாரை வார்த்துள்ளார் , தோழர்கள் மஞ்சள் துண்டுக்கு இன்னும் இரண்டு நாட்களில் மஞ்சள் துண்டு போட்டு சிவப்பு துண்டுகள் ஐக்கியம் ஆகிவிடும் .

அம்மாவின் இந்த முடிவு முஸ்லிம் சமுதாய மக்களுக்கு நல்ல தெளிவை கொடுத்துள்ளார் .

அவர் தான் பிஜேபி மோடி கூட்டணின் என்பதை நமக்கு ஆணித்தரமாக கூறியுள்ளார் .

அவருடைய வெளிப்படை தன்மைக்கு நம் சமுதாயமும் மத சார்பிமை ஆதரவாளர்களும் நன்றி கடன் பட்டு இருகிறோம்.

ஆ . இ . அ . தி . மு . க மற்றும் பிஜேபி கூட்டனிக்கு போடும் ஓட்டுகள் . கடைசியாக மோடிக்கு சாதகமாக அமையும் . நாளை பிஜேபி யும் , அ . தி . மு . க வும் தமிழகதில் கூட்டணி அறிவித்தால் அதிசயம் ஒன்றும் இல்லை .

பிஜேபி க்கு 2-5 கொடுதால் போதும் அ . தி . மு . க வுடன் கூட்டனிக்கு தயார் . அந்த சூழலில் ம . தி .மு . க மற்றும் விஜயகாந்து போன்ற கட்சிகளின் நிலையை நாம் பார்போம் .

ஆக மொத்ததில் தி . மு . க தமிழகதில் மகா கூட்டணி அமைத்து இந்திய அளவில் அதனை மாதிரியாக முன் உதாரண வழிகாடியாக இருக்கும் என்பதுதான் இந்த சூழ்நிலைகளின் வெளிப்பாடாக அமையும் .

தமிழகத்தில் பிஜேபி மற்று அம்மா மறைமுக கூட்டணியாக இருந்தாலும் தேர்தலில் தனி தனியாக நின்றால்தான் நமக்கு நல்லது .

சமுதாயம் மட்டும் நல்ல தெளிவாக இருக்கணும் முஸ்லிம் அமைப்புகளும் தலைவர்களும் இதட்கு உதவனும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...நம்பிக்கை துரோகம்
posted by mohudoom (al-hasa) [06 March 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33543

எல்லாம் ஜோசியம் படுத்தும் பாடு !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சூடுபடும் பூனைகள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [06 March 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33545

ஒவ்வொரு கூட்டத்திலும் அம்மா அவர்களின் ஆவேசப்பேச்சில் அடிமுதல் முடிவரை காங்ரசையும்,தி.மு.க வையும் தான் விமர்சிக்கிறார் இல்லை,இல்லை வன்மையாக கண்டிக்கிறார்!

பி ஜே பி. யோ அல்லது மதசர்ர்புடைய கட்சியின் ஆட்சியோ மத்தியில் அமைந்தால் அதிமுக அதை எதிர்க்கும் என்று ஒரு வார்த்தைகூடஇதுவரை சொல்லவே இல்லை செல்வி ஜெயலலிதாஅவர்கள். ஏன்.புனிதமிகு கட்சி பி ஜே பி. என்கிறாரா?

என்ன மர்மம்,என்ன மாயம்,என்ன மறைமுக ஒப்பந்தம் என்று ஒன்றும் அறியாத அப்பாவி முஸ்லிம்களா நாங்கள்!

நேற்று வைக்கோ சூடுபட்டு வெளியே வந்தார்,இன்று கம்னிஸ்ட்களை வெளியேற்றுகிறார்.பாண்டியரின் நிலையை பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது!அனுதினமும் அம்மாவை அபிசேகம் செய்யும் ஆத்மார்த்த அடிமயல்லவா!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்.
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [06 March 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33546

யார் எல்லாம் அ.தி.மு.க வின் கொள்கைப் பரப்பு செயலாளர் போல நடந்து வந்தார்களோ, அவர்களுக்கு இது தான் கதி.

நேற்று ஐயா வை.கோ..! இன்று ஐயா, தா. பாண்டியன்.!! நாளை யாரோ.!!!

யார் எல்லாம் அம்மையாரை வசை பாடி, நாவு கூசும் சொல்லால் அர்ச்சனை செய்தார்களோ அவர்களுக்கு இன்னோவோ காருடன் கூடிய பதவிகள்.

ஒன்றும் புரியவில்லை. புரியாத புதிருக்கு பெயர் தான் அம்மாவோ.!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [06 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33547

நாளை நாட்டை ஆள தேர்தலுக்கு பின் விவாதத்தை, கருத்து வேறுபாடுகளை தடுக்கவே - வலுவான உறுப்பினர் எண்ணிக்கை அவசியம்.

நாளைய பாரதம் அம்மா வழியில் நடந்தேற தமிழகம், புதுசேரி உள்ளிட்ட அனைத்து அ தி மு க கழக வேட்பாளர் வெற்றிக்கு துணை நிற்போம்.

ஜெய் ஜெயா ஹிந்த்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Cnash (Makkah) [06 March 2014]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 33549

உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது - அது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது ...

இது சூரியகாந்தி படத்தில் ஜெயலலிதாவை வைத்து படிக்கின்ற பாட்டு .. அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ முன்பு வைகோ விற்கும் இன்று தா பாண்டியனுக்கும் பொருந்தும் ..

அன்று வைகோவால் அவர் கட்சி அழிவின் விளிம்பிற்கு சென்றது இன்று தமிழக கம்யூனிஸ்ட் கட்சி அழிவின் ஆரம்பத்தில் உள்ளது .. பொதுவாகவே கம்யூனிஸ்ட் கார்கள் தன்மானம் உள்ளவர்கள், கொள்கை நிலைப்பாடு உள்ளவர்கள் .. ஒரு சில தாபா போன்ற போயஸ் கார்டன் தபால்காரர்களால் தான் நம்பக தன்மை அழிந்து விட்டது ..

பிடித்த மீனும் போய் இப்போ பொட்டி மீனையும் விட்டு விட்டு நிற்கும் கம்யூனிஸ்ட் களுக்கு அடைக்கலமாக அறிவாலயம் அமையுமா இல்லையா என்று பொறுத்திருந்து பார்ப்போம் .

அவர் ஒருவர் தான் இன்று புறங்கதவை திறந்து வைத்து இருக்கிறார் ..பதவியும் பணமும் படுத்தும் பாடு .. இன்னும் என்னென்ன கூத்துகளையெல்லாம் பார்க்க வேண்டி இருக்குமோ தேர்தல் முடியும் வரை ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [06 March 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33554

சுய மரியாதையை பேணுவார்கள் என்றால் கண்டிப்பாக வெளியேறியே ஆகணும்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [07 March 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 33571

மேற்கு வாங்க முதல்வர் செல்வி. மம்தாவின் ஆதரவு உறுதிமொழி தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மாவின் வாய்மொழி மந்திரமாம் அமைதி வளம் வளர்ச்சி, இடதுசாரிகளை உதறியது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...மண்குதிரை
posted by J.A.S.JALEEL. (HONGKONG) [07 March 2014]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 33573

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிஇடறி விழுந்த இடதுகள்.இனி யாரைத்தான் நம்புவதோ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இன்று காலையில் இதமழை!  (7/3/2014) [Views - 2403; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved