Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:23:29 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13137
#KOTW13137
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 1, 2014
நகர்மன்ற வங்கி கணக்குகள் [பாகம் 1]: வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்திற்கு அடித்தளம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2604 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - தனது இணையதளம் www.kayalchairman.com இல் நகராட்சியின் ஆணையர் பெயரில் இயக்கப்படும் 13 வங்கி கணக்குகள் விபரத்தை வெளியிட்டுள்ளார்.

நகராட்சியின் பெயரில் வங்கி கணக்குகள் துவக்க நகர்மன்ற ஒப்புதல் பெறப்படுவதில்லை. எனவே தற்போது வெளியிடப்பட்டுள்ள வங்கி கணக்கு விபரங்களையும் தாண்டி - வேறு கணக்குகளும் பயன்பாட்டில் இருக்கலாம். வங்கி கணக்குகள் குறித்த முழு விபரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் இதற்கு முன்னர் சமூக ஆர்வலர்கள் சிலரால் கேட்கப்பட்டு நகராட்சியால் வழங்கப்படவில்லை. சமீபத்தில் - MEGA அமைப்பு ஏற்பாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான மனுக்களிலும் வங்கி விபரங்கள் கோரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நகர்மன்றத் தலைவர் பதவியேற்ற காலத்தில் இருந்து பலமுறை நகர்மன்ற வங்கி கணக்கு விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது. அந்த விபரங்கள் வழங்கப்படாததால், கடந்த (2013) மார்ச் மாதம் - நகர்மன்றத் தலைவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கணக்கு விபரங்களை - நகராட்சியின் பொது தகவல் அலுவலரிடம் கேட்டிருந்தார். அதற்கு பதில் வழங்கப்படாததால், கடந்த ஏப்ரல் மாதம் - நகராட்சியின் மேல் முறையீட்டு அதிகாரியிடம், நகர்மன்றத் தலைவர் முறையிட்டுள்ளார். அதற்கும் பதில் வழங்கப்படாத காரணத்தால் - சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு தகவல் ஆணையத்திடம் - இரண்டாவது மேல் முறையீட்டினை, கடந்த ஜூன் மாதம், நகர்மன்றத் தலைவர் செய்துள்ளார்.

அந்த மேல்முறையீட்டினை தொடர்ந்து - நகராட்சியின் பொது தகவல் அலுவலர், கடந்த ஆகஸ்ட் மாதம் நகர்மன்றத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் - நகராட்சியின் வங்கி கணக்கு விபரங்கள், நகராட்சியில் இல்லை என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் - நகர்மன்றத் தலைவர், பிற தகவல்கள் கோரி - திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டலத்திலும், காயல்பட்டினம் நகராட்சியிலும் செய்த விண்ணப்பங்களுக்கும் பதில் வழங்கப்படாததால், அவர் சென்னையில் செய்திருந்த இரண்டாவது மேல் முறையீடு கடந்த மாதம் விசாரணைக்கு வந்திருந்தது. தற்போது நகர்மன்றத் தலைவரால் வெளியிடப்பட்டுள்ள வங்கி கணக்கு விபரங்கள், அந்த விசாரணைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டதாக தெரிகிறது.



காயல்பட்டினம் நகராட்சியில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளவேண்டிய கண்காணிப்புகளில் - வங்கி கணக்குகளின் பங்களிப்பு முக்கியமானது. 2011 ஜனவரி இல் அப்போதைய நகர்மன்றத் துணைத் தலைவர் நகராட்சி வங்கி காசோலையை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவாகியது.

மேலும் - நகராட்சியில் அன்றாடும் வசூல் செய்யப்படும் பணம் - முறையாக வங்கியில் செலுத்தப்படுவதில்லை என்ற புகாரும், அந்த தொகை - தின வட்டிக்கு விடப்படுவதாகவும், அதற்காக - நகர்மன்ற புதிய பேருந்து நிலையம் பயன்படுத்தப்படுவதாகவும் - புகார்கள் பலமுறை எழுந்துள்ளது. சமீபத்தில் - சுமார் 2.5 லட்ச ரூபாய், முறையான காலகட்டத்தில் வங்கியில் செலுத்தப்படவில்லை என எழுந்த புகாரில், நகராட்சியின் இரு ஒப்பந்தப்புள்ளி ஊழியர்கள் பெயரும், நிரந்தர ஊழியர் ஒருவரால் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது போன்ற பல முறைக்கேடுகள் காலகாலமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வரும் சூழலில், நகர்மன்றத் தலைவர், நகராட்சியின் வங்கி கணக்கு விபரங்களை வெளியிட செய்துள்ள முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களை தணிக்கை செய்ய தனி துறையே உள்ளது. அவைகள் - குறிப்பிட்ட காலத்தில் தணிக்கைகளை செய்வதில்லை என்றும், அவைகள் எழுப்பும் தணிக்கை தடைகள் - காலம்கடந்து எழுப்பப்படுவதாகவும், இதனால் - தமிழகத்தில் உள்ள பல உள்ளாட்சி மன்றங்களின் ஒட்டுமொத்த தணிக்கை தடைகளின் (AUDIT OBJECTIONS) அளவு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாகவும் - உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணையில் உள்ளன.

வங்கி கணக்குகள் - பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்படுவதால், அது பொது மக்களின் தணிக்கைக்கு (PUBLIC AUDIT) உட்படுத்தப்படும் வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. மேலும் எதற்காக காசோலை வழங்கப்படுகிறது, யாருக்கு வழங்கப்படுகிறது, சரியான தொகை வழங்கப்படுகிறதா, எந்த பணிக்கு வழங்கப்படுகிறது போன்ற கேள்விகளை எழுப்ப - வெளியிடப்பட்டுள்ள விபரங்கள் வாய்ப்பளிக்கிறது.

எதிர்வரும் பாகங்களில் - தற்போது வெளியிடப்பட்டுள்ள நகர்மன்ற வங்கி கணக்குகளில் உள்ள சில விசயங்களை ஆய்வு செய்யலாம்.

[தொடரும் ...]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [01 March 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 33446

எல்லாம் சரிதான், நகரமன்ற எழுதார் கையாடல் செய்த வங்கி கணக்கு, குறையூட்டா பணத்தை வசூல் செய்த கணக்கு எங்கே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [02 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33475

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது நகர் மன்றம் தற்போது நல்லதோர் வெளிப்படையான நிர்வாகத்தின் முன்னேற்றதில் செல்கிறதை நினைக்கும் போது நம் அனைவர்களின் மனதில் மற்றற்ற மகிழ்ச்சியாகிறது ......

நம் நகர் மன்றத்தின் இந்த '' வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்திற்கு அடித்தளம் என்பது சரியானதோர் சொல் ..........

தொடரட்டும் நம் மரியாதைக்குரிய தலைவி அவர்களின் '' நகர் மன்றதின் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம்......... வாழ்த்துக்கள் ''

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (3/3/2014) [Views - 1910; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved