Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:13:09 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13072
#KOTW13072
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 20, 2014
ரயில்வே துறையிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பிப். 21இல் பெற்றுத் தரப்படும்! ரயில் மறியல் போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர் தெரிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2884 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ரயில்வே துறையிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பிப்ரவரி 21ஆம் நாளன்று பெற்றுத் தரப்படும் என ரயில் மறியல் போராட்டக் குழுவினருடன் வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நிகழ்வுகள் குறித்து, போராட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 23ஆம் நாளன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில் - நகரின் அனைத்து அரசியல் கட்சியிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள் சார்பில் இம்மாதம் 17ஆம் நாளன்று நடத்தப்பட்ட போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பொதுப் பிரசுரமும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், போராட்டக் குழுவினரை - திருச்செந்தூர் வட்டாட்சியர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்ததன் அடிப்படையில், இன்று மதியம் 03.30 மணிக்கு, போராட்ட ஒருங்கிணைப்பாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் தலைமையில், ரயில் மறியல் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் மாநில செயலாளர் காயல் மகபூப், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர கிளை மூத்த தலைவர் ஹாஜி வாவு சித்தீக், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ்,

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் காயல் முத்துவாப்பா, அதன் நிர்வாகி ஹாஜி ஏ.எஸ்.ஜமால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்.எஸ்.கோபால், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மகேஷ், பண்டாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பன்னீர் செல்வம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் நகர தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், நகர செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், சமத்துவ மக்கள் கட்சியின் நகர தலைவர் அப்துல் அஜீஸ், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோணி உட்பட, நகரின் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய போராட்டக் குழுவினர் - திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர்.

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய வட்டாட்சியர் நல்லசிவன், காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நிலுவைப்பணிகள் ஏற்கனவே ஒப்பந்தம் விடப்பட்டவையாதலால், வரும் ஜூன் மாதம் 3ஆவது வாரத்தில் அவை நிறைவேற்றி முடிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான உறுதிமொழியை தான் எழுத்துப்பூர்வமாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.



அதனை ஏற்றுக்கொள்ளாத போராட்டக் குழுவினர், ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு வட்டாட்சியர் அழைத்த காரணத்தால் - போராட்ட தேதியை பிப்ரவரி 18இலிருந்து 23க்கு மாற்றியமைத்து அறிவித்துள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரும் போராட்டத்திற்கு ஆயத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே அதிகாரிகள் யாரும் நடப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாதது ஏமாற்றமளிப்பதாகவும் கூறியதோடு, வட்டாட்சியர் உறுதிமொழி தர வேண்டியதில்லை என்றும், ரயில்வே துறை சார்பில் எழுத்துப்பூர்வ உறுதிமொழி முறையாக கிடைக்கப்பெற்றால், போராட்டக் குழுவினர் மீண்டும் அமர்ந்து கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம் என்றும் முடிவாகக் கூறினர்.



நிறைவில், நாளை (பிப்ரவரி 21ஆம் நாள்) மதியம் 03.00 மணிக்கு மீண்டும் ஒருமுறை வட்டாட்சியர் அலுவலகம் வருமாறும், அப்போது ரயில்வே துறையிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழியைப் பெற்றுத் தருவதாகவும் வட்டாட்சியர் கூற, அதற்கு போராட்டக் குழுவினர் இசைவு தெரிவித்தனர்.





பின்னர், வட்டாட்சியர் மூலமாக தென்னக ரயில்வே துறைக்கும், வட்டாட்சியருக்குத் தனியாகவும் இரண்டு கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்த பின் விடைபெற்றுச் சென்றனர்.




இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[செய்தி திருத்தப்பட்டது @ 08:21 / 21.02.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. 23 ஆம் தேதி அறிவித்த போராட்டத்தை செய்யலிலக்கும் நாடகமே இது...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [20 February 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 33272

நமது உரிமை போராட்டத்தை மழுங்க செய்யும் ராஜதந்திர தனமான சமாதான உடன்படிக்கை இது.

ரயில்வே துறையிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி கடிதம் யாரிடமிருந்து பெற்று தர உள்ளார்கள்...? ரயில்வே துறையில் பணி புரியும் சுகாதார பணியாளரிடமிருந்தா...! டெல்லியில் உள்ள ரயில்வே துறையின் தலைமை அதிகாரிகளிடமிருந்தா...!

சும்மா மக்களை திசை திருப்பி 23 ஆம் தேதி அறிவித்த போராட்டத்தை செய்யலிலக்கும் நாடகமே இது. .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஒற்றுமைக்கு கிடைக்கப் போகும் வெற்றி.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [21 February 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33274

இன்று நடைபெறும் கூட்டத்தில், வட்டாட்சியர் உறுதியளித்தபடி, ரயில்வே துறை அதிகாரிகள் எழுத்து மூலமாக வாக்குறுதி தருவார்கள் என்று நம்புவோம். ஏற்கனவே டெண்டர் விட்ட அளவின்படி தரவேண்டும்.

முதலில் விட்ட டெண்டர் தொகையை விட கண்டிப்பாக, இந்த முறை கூடுதலாகத்தான் இருக்கும். அதை காரணம் காட்டி அளவை (உயரம் / நீளம்) குறையக் கூடாது.

நமது கோரிக்கை நியாயமாக இருப்பதனாலும், நாம் நமது கோரிக்கையில் உறுதியாக இருப்பதனால் தான் இது அல்லாஹ் உதவியால் இது சாத்தியமாகிறது.

இதை போல், நமதூருக்கு இழைக்கப்படும் மற்ற அநீதிகளுக்கும் நாம் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெறுவோம்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஒற்றுமையும் அதன் ரகசியமும்.!
posted by s.s.md meerasahib (TVM) [21 February 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 33275

இந்த போராட்டத்துக்கும், அதை ஒட்டி நடக்குற பேச்சுவார்த்தைகளுக்கும் எல்லா கட்சி நண்பர்களும் தன் தனிப்பட்ட வேலைகளை நிறுத்தி வைத்து விட்டு ஊருக்கும், நம் மக்களுக்கும் பயன் படுகிற வகையில் ஒன்று கூடி இருப்பதை பார்த்து உள்ளப்பூரிப்படைகின்றன.

வட்டாச்சியரின் வாக்குறுதி உங்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியின் முதல் படி. அதே...... சமயம் வாக்குறுதியை முழுமையாக நம்பாமல் கடினமான டிமாண்டுடன் நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் மேலதிகாரிகளின் நேர்முக தொடர்பும் கொண்ட பின்னே....... நம்முடைய போராட்டத்தை கைவிடனும்.

மேலும் எனது ஒரு அவா......... இந்த அறிவித்த போராட்டம் குறித்த நாளில்..... குறித்த நேரத்தில் நடக்கணும் என்பதே. ஏனெனில் இந்த போராட்டம் மூலம்...... நமக்கு பல தீமைகளை உண்டாக்கும் ஆலைகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு படிப்பினை ஏற்ப்படுத்தும்.

"இதுதான் ஒற்றுமையின் ரகசியம்".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...THASILDAR MEETING
posted by J.A.JALEEL. (HONGKONG) [21 February 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 33276

WELL DONE.NOW WE ARE ON THE EDGE OF MERITORIOUS VICTORY VERY SOON. OUR ADVANCE FELICITATIONS & CONGRATULATIONS TO ALL. PLEASE REMEMBER OUR VICTORY ALWAYS DEPENTS UPON OUR UNITY. THANKS TO ALL.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Salai S Nawas (singapore) [21 February 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 33277

அப்படி உறுதிமொழி கொடுத்தாலும் கூட, நம்முடைய அதிருப்தியை காட்ட, மறியல் பண்ணாமல் கோஷம் மட்டும் போட்டு மீடியாகளின் கவனத்தை ஈர்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved