Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:51:23 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12847
#KOTW12847
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 23, 2014
கழிவு நீர் கடலில் கலக்கும் ஓடை அடைப்பு! துணை வட்டாட்சியர் உத்தரவிட்ட பிறகும் குடிசை அகற்றப்படவில்லை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3168 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில், கழிவு நீர் கடலில் கலக்கும் ஓடை அடைக்கப்பட்டுள்ளதோடு, துணை வட்டாட்சியர் உத்தரவிட்ட பிறகும் அங்குள்ள குடிசை அகற்றப்படாமல் உள்ளது.

இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் - டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் பின்புறமாக அமைந்துள்ளது - கழிவு நீர் கடலில் கலக்கும் ஓடை. பொது ஓடையான இதில் மழை நீர், விவசாயக் கழிவு நீர், உப்பள கழிவு நீர் உள்ளிட்டவை கடலில் கலக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் இந்தப் பொது ஓடையில், பல்லாண்டு காலமாக இந்த தொழிற்சாலையின் கழிவு நீர் கடலில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால், கடல் செந்நிறமாகக் காட்சியளிப்பதும், மீன்களும் - கடல் வாழ் அரிய உயிரினங்களும் கூட்டங்கூட்டமாக செத்து ஒதுங்குவதும் வாடிக்கையாகிப் போனது.

ஆண்டு முழுவதும் தொழிற்சாலையில் சேரும் கழிவு நீர் இந்த ஓடையில் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, வடகிழக்குப் பருவமழையின்போது கடலில் திறந்து விடப்படுவதாக தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆய்வறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இந்தப் பொது ஓடையை சில கூலியாட்கள் சட்ட விரோதமாக அடைத்து வைத்து, அவ்விடத்தில் நாள் கூலிக்குப் பணியாற்றி வருவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், 24.12.2014 அன்று காலை 08.30 மணியளவில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அங்கத்தினர் (KEPA) ஓடையை நேரில் சென்று பார்த்தபோது, ஓடையில் பணியாட்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஏற்பாட்டில் அங்கு பணியாட்கள் ஓடையில் வேலை செய்வது விசாரித்து அறியப்பட்டது.











இதுகுறித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மண்டல அலுவலருக்கும், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் தொடர்புகொண்டு முறையிடப்பட்டது.

மீண்டும், அன்று மதியம் 03.30 மணியளவில், KEPA தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால் உள்ளிட்ட குழுவினர் பொது ஓடைக்கு நேரில் சென்று பார்த்தனர்.







தகவலின் பெயரில் அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த துணை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனிடம் KEPA சார்பில் விபரம் தெரிவிக்கப்பட்டது.

ஓடை அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும், பணியாட்கள் அங்கு பணியாற்றிய சுவடுகளையும் நேரில் பார்த்தறிந்த அவர், பணியாட்கள் ஓய்வெடுப்பதற்காக ஓடைக்கருகில் கட்டப்பட்டிருந்த குடிசையை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்தி விட்டு தகவல் தருமாறு காயல்பட்டினம் தென்பாக கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு உத்தரவிட்டதோடு, அக்குடிசைக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்த சாக்குப் பைகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றார்.











அடுத்த சில நாட்களில் குடிசை அகற்றப்பட்டுவிட்டதாக துணை வட்டாட்சியருக்கு, காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று (ஜனவரி 22ஆம் நாள்) காலை 08.00 மணியளவில் ஓடையருகே சென்று பார்த்தபோது, குடிசை அகற்றப்படாமல் அப்படியே இருந்தது. அத்துடன், கழிவு நீரோடையும் மணல் மூடைகளைக் கொண்டு வழமை போல அடைத்து வைக்கப்பட்டிருந்தன.









இதுகுறித்து, துணை வட்டாட்சியருக்கு தொலைபேசி வழியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாளன்று - டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் விதிமீறலைக் கண்டித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) சார்பில் முழு கடையடைப்பும், அன்று மாலையில் கண்டன ஆர்ப்பாட்டமும், பின்னர் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், இரவில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 10ஆம் நாளன்று - சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் பெருந்திரளாகச் சென்று – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளும் சமர்ப்பிக்கப்பட்டது. அது முதல் இன்றளவும் காயல்பட்டினம் கடற்பரப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணிபுரியும் இருவரும், ஓடைப் பணிகளை குத்தகை எடுத்துள்ளதாகக் கூறப்படும் - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். கடலில் நிறமாற்றம் எதுவுமில்லையெனினும், கழிவு நீர் கலக்கும் ஓடையில் தொடர்ந்து பணியாளர்கள் பணியாற்றி வருவது பல சந்தேகங்களை எழுப்புகிறது.


இவ்வாறு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
(செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்)
மற்றும்
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [23 January 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32657

சகோ. தமிழன் முத்து இஸ்மாயில் அவர்கள் இந்த விசயங்களை குறிப்பிடும் போதே சுறு.. சுறு.. என்று இருந்தது. என்ன கருமாந்திரத்தை செய்யப் போகின்றார்களோ என்று புரியவில்லை. நன்றிகள் காக்கா.

இன்னும் ஒரு புரியாத விசயம், நம் நகராட்சியில் வாழையடி வாழையாக தாத்தா, மகன், பேரன் என்று தொடர்ந்து வேலை பார்ப்பதன் மர்மம் என்ன.?

அரசாங்க உத்தியோகத்தில் டிரான்ஸ்பர் என்பதே கிடையாதா? கிராம நிர்வாக அலுவலகத்திலும் நகராட்சியிலும் வேளை பார்ப்பவர்கள் மாற்றப்படாமல் தொடர்ந்து பணியாற்றுவதன் மர்மம் என்ன?

தொடர்ந்து பல ஆண்டுகள் நம் நகராட்சியில் உறுப்பினராக இருந்த முன்னாள் உறுப்பினரின், வேலைகள் பல மர்மமாக இருக்கின்றன.

உடனடியாக ஊருக்கு வரும் தண்ணீர் அளவை அளக்கும், அளவு மீட்டரை நிறுவினால், ஒரு மர்மத்தின் முடிச்சு அவிழ்க்கப்படும்.

வேலை வெட்டிகளை விட்டுவிட்டு, நம் ஊருக்காக பாடுபடும் சகோதரர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை உண்டாக்கி வேலை வெட்டி இல்லாமால் சுத்துகிறார்கள் என்று கூறுபவர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பிறருக்காவது வழி விடுங்கள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [23 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32661

KEPA என்பது “கேட்ப்பாரற்ற அமைப்பாளிகளின் சங்கம்” என்று கேலியும்,கிண்டலும் செய்துகொண்டிருக்கும் ஒரு சில ஊர் பொருப்பானவர்களே, ஒருகணம் சற்று சிந்தியுங்கள்.

தான் செய்யாவிட்டாலும், பிறர் செய்வதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, நாம் நலம் வாழ நன்மைகள் செய்ய முனையும் மனிதாபிமானவர்களின் மனம்புண்படும் வார்த்தைகளை வீசியெறிந்து அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாய் மாறிவிடவேண்டாம்! ஜாக்கிரதை ஊர்பாவம் பொல்லாதது!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நேரம்
posted by Fazel Ismail (Singapore) [24 January 2014]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 32665

ஊர் நலனுக்காக பொது நல வேலைகளில் ஈடுபடும் சகோதரர்களுக்கு அல்லாஹ் நிறைந்த கூலியை கொடுப்பானாக .. ஆமீன் !

போட்டோக்களில் தேதி மற்றும் நேரம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by syed ahamed (சென்னை.) [24 January 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32669

குடிசை அகற்றப்பட்டுவிட்டதாக துணை வட்டாட்சியருக்கு பொய் தகவல் கொடுத்து நகர்மக்களை கிறுக்கனாக கேவலமா மதிக்கும் கிராம நிர்வாக அதிகாரியை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகம் முன் DCW வின் குடிசை அகற்றப்படும் வரை முற்றுகை போராட்டம் நடத்தப்பட வேண்டும்.

இந்த வயதிலும் பெரியவர்கள் அந்த ஓடையின் நிலவரத்தை நேரில் கண்டறிய தொலை தூர பயணம் மேற்கொண்டிருப்பது நம் நகரின் மேல் உள்ள அக்கறையை வெளிபடுத்துகிறது.

நகரில் இருக்கும் நம் மக்கள் இது விசியத்தில் இந்த அமைப்பிற்கு அவர்களின் முயற்சிக்கு கைகொடுக்க வேண்டும். இவர்கள் யாருக்காக போராடுகிறார்கள் என்று ஒரு நிமிடம் நாம் யோசித்தால் போதும் அதற்க்கான உண்மை விளங்கும்.

உங்களின் பணிகளை இதற்காக நேரம் ஒதுக்கி இந்த ஓடையை நேரில் காண சென்ற அணைத்து பெரியவர்கள், சகோதரர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் ரகுமத் செய்வானாக. ஆமின்.

நீங்கள் செல்லும் முன் நகரின் பல பொது நல அமைப்புக்களுக்கு தகவல் செய்தி அறிவித்து விட்டு சென்று இருக்கவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சதிகாரர்களை அடையாளம் காட்டுங்கள்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [24 January 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 32682

காயல்பட்டினத்தில், கழிவு நீர் கடலில் கலக்கும் ஓடை அடைக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்களுக்கு இணையதளங்களின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க முயற்சித்த KEPA அமைப்பினருக்கு பாராட்டுக்கள்.

அதேநேரத்தில், இந்தப் பொது ஓடையை சில கூலியாட்கள் சட்ட விரோதமாக அடைத்து வைத்து, அவ்விடத்தில் நாள் கூலிக்குப் பணியாற்றி வருவதை பற்றி சில விளக்கங்கள் அறிய விரும்புகிறேன்.

அப்படி ஓடையை அடைத்து வைத்து அதில் என்ன செய்கிறார்கள்? யாரின் உத்தரவின் (அரசு அல்ல) பேரில் அவ்வாறு செய்கின்றனர்? அப்படி ஓடையை அடைப்பதன் மூலம் இவர்களுக்கு என்ன பிரதி பலன்? இவ்வளவு எதிர்ப்பு இருந்தும், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஏற்பாட்டில் சட்ட விரோதமாக இதை துணிந்து செய்கின்றனர் என்றால், இவரின் பின்னால் இருக்கும் சதிகார சக்திகள் யார்?

இந்த விபரங்களை துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

நமதூருக்கு கேடு விளைவிக்க நினைக்கும் அந்த நகர்மன்ற முன்னாள் உறுப்பினரை நம் நகர மக்கள் எதிர்க்க வேண்டும். சில சுய ஆதாயங்களுக்காக, "எதிரியின் எதிரி நண்பன்" என்ற முறையில் அவரின் உதவியை நாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [25 January 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32696

சாளை அப்துல் ரஸ்ஸாக் காக்கா,

செய்திகள், புகைப்படங்களைப் பார்க்கும் போது எனக்கு உதிப்பது...

ஒரு ஆலை ஆரோக்கியமாக நடை பெறனும் என்றால், அதன் கழிவுகளை வெளியேற்றியே ஆகனும். (அதற்க்கு என்று சட்டதிட்டங்கள் உள்ளன - இதை அவர்களை பின்பற்றாததனால்தான் இவ்வளவு பிரச்சனைகளே).

காற்றின் வழியாக கழிவுகளை வெளியேற்றினாலும், கடலில் கலந்தாலும் கழுகுக் கண்களுடன், ஊருக்கும், நம் மக்களுக்கும் தீங்குகள் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், ஊருக்கு என்று நேந்து விடப்பட்ட அன்பு சொந்தங்கள் கண்காணித்து வருகிறார்கள்.

ஆக, நேரடியாக கடலுக்கு அனுப்புவதற்கு பதிலாக, பிளாக் பிளாக் ஆக கழிவுகளை தேக்கி வைத்து, சுற்று வட்டார ஒட்டு மொத்த நிலத்தடி நீரை மாசு படுத்தனும் என்று பிளான் பண்ணுகிறார்களோ என்று தோன்றுகிறது.

வல்ல ரஹ்மான் அனைத்தையும் அறிந்தவன். கொடிய தீங்குகளில் இருந்தும் நம்மை காப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved