Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:12:16 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12710
#KOTW12710
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 6, 2014
ஒரு வழிப்பாதையில் இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்கள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4219 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தாயிம்பள்ளி - பெரிய நெசவு தெரு - லெப்பை தம்பி சாலை மார்க்கத்தில் புதிய சாலை அமைக்கும் பணி டிசம்பர் 26 அன்று துவங்கின. சுமார் 35 லட்ச ரூபாய் மதிப்பிலான இப்பணிகள் நடக்கும் போதே இப்பாதையில் - தேவைப்படும் இடங்களில், இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்களை பதித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக காயல்பட்டணம்.காம் அவ்வேளையில் செய்தி வெளியிட்டிருந்தது.



இதற்கிடையில் - ஜனவரி 2 அன்று, பெரிய நெசவு தெருவை சார்ந்த செய்யத் அஹமத் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, நகர்மன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கங்கள் கோரி, சாலைப் பணிகளை மேற்கொள்ள ஒரு வார காலத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கிற்குத் தொடர்பான மனுவில், மனுதாரர் - குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர்தான் சாலைப்பணிகள் துவக்கப்பட வேண்டும் என்றும், இல்லை என்றால் மக்கள் பணம் வீண்விரயம் ஆகும் என்றும் கூறியிருந்தார்.

தோண்டப்பட்ட சாலையின் மணல், கற்கள் - நகராட்சி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள காட்சி...



இரண்டாம் குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதியான உள்ளூர் குடிநீர் விநியோக குழாய்கள் (INTERNAL WATER DISTRIBUTION SYSTEM) பதிப்பதற்குத் தேவையான குழாய்கள் - நேற்று (ஞாயிறு; ஜனவரி 5) - பெரிய நெசவுத் தெரு சாலையில் இறக்கப்பட்டுள்ளன.





நகரில் சுமார் 52 கிலோ மீட்டர் நீளத்திற்கு - வெவ்வேறு அளவிலான குடிநீர் விநியோகக் குழாய்கள், இரண்டாம் குடிநீர் திட்டம் மூலம் புதிதாக பதிக்கப்படவுள்ளன. இத்திட்டம் குறித்த முழு ஆவணங்களை - காயல்பட்டணம்.காம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது. அதில் - உள்ளூர் குடிநீர் விநியோக குழாய்கள் பதிப்பு பணியின் மதிப்பீடு ரூபாய் 6.7 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் - இப்பணி நடக்கும்போது சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய நிதியும் இதில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மக்கள் வரிப்பணம் வீண்!
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [06 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32310

நம் நீதித்துறையின் சாபக்கேடு. யார் கேட்டாலும் இடைக்கால தடை கொடுப்பது.

உங்கள் முந்தய செய்தியில் "ஒரு வழிப்பாதையில் - தேவைப்படும் இடங்களில், இக்குழாய்களை பதித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன." (C&P) இந்த தகவல் அந்த ஜமாஅத்தினருக்கு தெரியுமா? அல்லது அந்த பகுதி உறுப்பினர், இந்த தகவலை அவர்களிடம் தெரிவித்தாரா?

ஒருவழியாக, அந்தப் பகுதியில் பதிக்க குழாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5-ம் தேதி குழாய்கள் வந்துள்ளது. இதை முதலிலே செய்திருந்ததால், அந்த நபர் நீதிமன்றத்தை நாடி இருக்க மாட்டார். ஒப்பந்தக்காரருக்கும் நஷ்டம் ஏற்பட்டிருக்காது.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இது எந்த விதத்தில் நியாயம் ??
posted by Ahamed Mohideen (Chennai) [07 January 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 32314

நமதூரின் உட்தெருகலான அப்பாபள்ளி, ஆசாத் தெருக்கெல்லாம் 45 CM தோண்டி ரோடு போடுவார்களாம்.!!! நகரின் முக்கியமான பெரிய நெசவு தெருக்கு 20 CM தான் தோண்டி ரோடு போடுவார்களாம்.!!! இது எந்த விதத்தில் நியாயம் ??

பழைய சாலையை ஒன்றரை அடி (45 செ.மீ.) ஆழத்தில் தோண்டி அகற்றிவிட்டு, புதிய சாலை அமைக்கவேண்டும் என்று, நகராட்சி ஆணையாளர், தலைவர், துணைத்தலைவர் ஆகியோரிடம் ஏற்கனவே கேட்டுக்கொண்டோம். இது சம்பந்தமாக கோரிக்கை மனுவையும் வழங்கினோம்.

மனு வாங்கிய நேரத்தில் சரி என்று சொன்னவர்கள் இன்று அதற்கு மாறாக ஒப்பந்த புள்ளி கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்?

இது இவர்களுக்கு புதிது அல்ல.. ஏற்கனவே 26.12.2011 அன்று அதாவது கடைசியாக எங்கள் தெருவிற்கு வந்த நகர்மன்ற தலைவி அவர்கள் பல வாக்கு உறுதிகளை கொடுத்தார்கள். இரண்டு வருடம் முடிந்தும் எதுவுமே செய்யவில்லை.

"மின் வினியோகக் கம்பிகளை தேவையான அளவுக்கு உயரப்படுத்தி, பாதுகாப்பான வகையில் அமைப்பதாக காயல்பட்டினம் மின்வாரிய துணைப் பொறியாளர் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும், பள்ளி மாணவர்கள் பாதுகாப்பைப் பொருத்த வரை, பள்ளி துவங்கும் நேரம், இடைவேளை நேரம், முடியும் நேரங்களில்தான் இப்பிரச்சினை ஏற்படும் என்றும், அதனை சரிசெய்ய, பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவர்களைக் கொண்டு தினமும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதாக எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும்,

இப்பகுதியைச் சார்ந்த குழந்தைகள் விளையாடுவதற்கு நகராட்சிக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி, தனியொரு பூங்கா அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை பாதுகாப்பான வகையில் செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மேலும் தெரிவித்தார்.

“(http://www.kayalpatnam.com/shownews.asp?id=7776)

மழை காலங்களில் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு மழை நீர் தேங்கி நின்றபோது இவர்கள் வந்து பார்த்தால் தானே நாங்கள் பட்ட கஷ்டம் இவர்களுக்கு தெரியும். இதை பற்றி பேச (ஆணையாளர், தலைவர், துணைத்தலைவர்) தொடர்பு கொண்டால் நம் அழைப்புக்கு பதில் இல்லை...

ஆனால், கூலக்கடை பஜார் மழைநீர் வடிகால் பிரச்சினை! என்றால் நகர்மன்றத் தலைவர், அதிகாரிகள் நேரில் ஆய்வு!! உடனே செய்வார்கள்.

(http://www.kayalpatnam.com/shownews.asp?id=9557)

இதைதான் இஸ்லாம் நமக்கு கற்று தந்து உள்ளதா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அர்த்தமற்ற ஆதங்கம்!
posted by Salai S Nawas (Kayalpatnam) [07 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32316

நமதூரின் உட்தெருகலான அப்பாபள்ளி, ஆசாத் தெருக்கெல்லாம் 45 CM தோண்டி ரோடு போடுவார்களாம்.!!! நகரின் முக்கியமான பெரிய நெசவு தெருக்கு 20 CM தான் தோண்டி ரோடு போடுவார்களாம்.!!! இது எந்த விதத்தில் நியாயம் ?? (C&P)

===============================================

சாலைகள் பல காரணங்களுக்கு தோண்டி போடப்படுகிறது. ஏற்கனவே பலமுறை போடப்பட்ட சாலைகள், மீண்டும் போடப்படும்போது, தோண்டி போடப்படாததால், சாலையின் உயரம் அதிகமாகும். அதற்காக தோண்டுவார்கள் என்று அறிகிறேன்.

சாலை அமைப்பதில் ரோட்டைத் தோண்டுவது ஓர் அம்சம்தான். எனினும், தோண்டிய பாதையில் அடுக்குகளில் வரும் பொருட்களில் தன்மையே முக்கியம். சாலையை 45 சென்டி மீட்டருக்கு தோண்டி, அதன்பிறகு வரும் அடுக்கு 27.5 சென்டி மீட்டர்தான் என்றால் மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் தேங்காதா?

காயல்பட்டினத்தில் தோண்டி போடப்பட்ட / வேண்டிய மூன்று சாலைகளான அப்பாபள்ளி, ஆசாத், நெய்னார் தெருக்களுக்கான அடுக்குகளில் இடம்பெறும் பொருட்கள் அந்த சாலையின் போக்குவரத்தின் அளவைப் பொருத்தது. நாம் அறிந்த வரையில், அதிக போக்குவரத்து சாலைகளுக்கு தேவையான பொருட்கள் கொண்டு, ஒரு வழிப் பாதை அமைக்கப்படுகிறது.

எனவே - அந்த 3 சாலைகள் தோண்டப்பட்ட / வேண்டிய அளவையும், நிரப்பவேண்டிய பொருளையும், ஒரு வழிப்பாதையுடன் நேரடியாக ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தம் அல்ல.

மற்ற சாலைகளில் தோண்டப்பட்ட 45 செ.மீ. அளவுக்கு அடுக்குகளாக பொருட்கள் போடப்படுகிறது. இந்தச் சாலையில் தோண்டப்பட்ட 20 செ.மீ. அளவுக்கு பொருட்கள் போடப்படுகிறது.

===================================================

இது இவர்களுக்கு புதிது அல்ல.. ஏற்கனவே 26.12.2011 அன்று அதாவது கடைசியாக எங்கள் தெருவிற்கு வந்த நகர்மன்ற தலைவி அவர்கள் பல வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இரண்டு வருடம் முடிந்தும் எதுவுமே செய்யவில்லை. (C&P)

===================================================

சகோதரர் அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களே! இந்த ஆதங்கம் நியாயமானதுதானா என சற்று திறந்த மனதுடன் சிந்தனையில் கொள்ளுங்கள்!

தலைவி அப்போது பெரிய நெசவு தெருவுக்கு வந்தது - தெரு மக்களை ஒரு வழிப்பாதையை ஏற்று கொள்ள பணிவாக விண்ணப்பித்தார்கள். அந்த வேளையிலோ அல்லது அதற்கு பிறகோ, தெரு மக்களோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளோ, ஒரு வழிப்பாதையை ஏற்றுக்கொண்டாதாகக் கூறியிருந்தால், தலைவி கொடுத்த வாக்கை தவறிவிட்டார்கள் என்று நீங்கள் கூறுவதில் நியாயம் உள்ளது.

ஆனால்,

(மாற்று வழியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஆக்கிரமித்துள்ளார்...

வேறு வழி உள்ளது...

எங்கள் சாலை குறுகியது...

ஒப்பந்தபுள்ளிகள் முறையல்ல...

இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கு பைப்...)

என, ஒருவழிப்பாதைக்கு எதிராக இன்றளவும் பல்வேறு விதமான எதிர்ப்புகள் தெரு மக்கள் சார்பாக வைக்கப்பட்டு வரும்போது, தலைவியோ, நகர்மன்றமோ கொடுத்த வாக்குறுதியை மீறியதாக தாங்கள் கூறுவது சரியில்லையே?

என் பாணியில் சொல்வதானால், “அழுவதே! பண்டம் தாரேன்”ன்னு குழந்தைக்கு சொல்லியிருக்க, அழுதுகொண்டே “பண்டம் தாம்மா”ன்னு குழந்தை கேட்பது போல இல்லையா?

===========================================

"மின் வினியோகக் கம்பிகளை தேவையான அளவுக்கு உயரப்படுத்தி, பாதுகாப்பான வகையில் அமைப்பதாக காயல்பட்டினம் மின்வாரிய துணைப் பொறியாளர் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும், பள்ளி மாணவர்கள் பாதுகாப்பைப் பொருத்த வரை, பள்ளி துவங்கும் நேரம், இடைவேளை நேரம், முடியும் நேரங்களில்தான் இப்பிரச்சினை ஏற்படும் என்றும், அதனை சரிசெய்ய, பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவர்களைக் கொண்டு தினமும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதாக எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும்,

இப்பகுதியைச் சார்ந்த குழந்தைகள் விளையாடுவதற்கு நகராட்சிக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி, தனியொரு பூங்கா அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை பாதுகாப்பான வகையில் செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மேலும் தெரிவித்தார். “(http://www.kayalpatnam.com/shownews.asp?id=7776) (C&P)

===============================================



(1) இரண்டு ஆண்டுகளாக ஒரு வழிப்பாதை இயங்கிவருகிறது. பேருந்துகளும் சென்று வந்தன. இறைவனின் உதவியால் மின்கம்பங்களைக் கொண்டு எந்தப் பிரச்சனையும் இல்லை. போக்குவரத்து துவங்கிய பின் ஆபத்து உள்ளது என்றும் நீங்கள் நினைத்திருந்தால், உங்கள் வார்டு உறுப்பினரிடமோ, அலுவலர்களிடமோ, தலைவியிடமோ தெரிவித்திருக்க வேண்டுமே...? செய்தீர்களா??

(2) ஒரு வழிப்பாதையில் பள்ளிக்கூடம் விடப்படும் நேரத்தில் - இடைவேளை நேரத்தில், ஆசிரியர்கள் பாதுகாப்பாக பிள்ளைகளை வெளியில் அனுப்பவதை நாம் இன்றும் காண முடிகிறது. அதில் உங்களுக்கு திருப்தியில்லை என்றால், பள்ளிக்கூட நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டுமே...? செய்தீர்களா??

(3) தலைவியின் பூங்கா வாக்குறுதி - ஒரு வழிப்பாதை, உறுதியாகிவிட்டால் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும். ஒரு வழிப்பாதையை ஏற்றுக்கொண்டதால், இந்த பகுதி குழந்தைகள் விளையாட இடம் இல்லாமல் போவதால், அதற்கு பகரமாக பொது இடம் ஒன்றில் - பூங்கா அமைக்க தடை ஏதும் இருக்காது. ஆனால் இன்று வரை - ஏதாவது ஒரு வழியில் இப்பாதை தொடர எதிர்ப்பு தெரிவித்து விட்டு, பூங்கா வாக்குறுதி நிறைவேற்றவில்லை என கூறுவது அர்த்தமற்றது. ஒரு வழிப்பாதை அமைய இனி எங்களிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற நிலை வந்த பிறகு, பகுதி உறுப்பினர் மூலமோ, தலைவர் மூலமோ, தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்வதே நியாயம்.

இக்கருத்து, உங்கள் கருத்தைப் பார்த்ததன் அடிப்படையில் என் மனதில் தோன்றியதால் பதிவு செய்துள்ளேனே தவிர, எனக்கு எல்லா பகுதி மக்களும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...அர்த்தமுள்ள ஆதங்கமே!
posted by Ahamed Mohideen (chennai) [07 January 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32319

அர்த்தமற்ற ஆதங்கம்! என்று உங்கள் கருத்துக்களை பதிவு செய்த சாலையாரே!!

மழை காலத்தில் தண்ணீர் தேங்குவது இயல்பே! ஆனால், சாலையின் உயரம் கூடுவதனால் வீட்டுக்குள் எளிதாக தண்ணீர் வந்து விடும் என்பது உங்களுக்கு தெரியாதா?

என்னோட ஆதங்கமே மனு வாங்கிய நேரத்தில் சரி என்று சொன்னவர்கள் இன்று அதற்கு மாறாக ஒப்பந்த புள்ளி கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்?

மழை காலங்களில் மழை தேங்கிய இடங்களை பார்வையிட சென்ற இவர்களுக்கு எங்கள் தெருவில் தண்ணீர் தேங்கி வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு சேரும் சகதியுமாக கிடந்தது இவர்களுக்கு தெரியாதா? எது தேவை ? எது அவசர தேவை என்பது கூட தெரியாதவர்களா இவர்கள் ?

களிமண்ணையும் பாரங்கல்லையும் ரோட்டில் வந்து போட்டவர்கள் தானே இவர்கள், நான் போனில் முறையிட்ட போது எனக்கு தெரியாது engineer அல்லது உங்கள் கவுன்சிலரிடம் கேளுங்கள் என்று நழுவிய இவர்களிடமா நியாயம் வாக்கு உறுதிகள் பற்றி கேட்பது?

தெரு மக்களை ஒரு வழிப்பாதையை ஏற்று கொள்ள பணிவாக விண்ணப்பித்தார்கள் என்பது உண்மை.

அந்த வேளையிலோ அல்லது அதற்கு பிறகோ, தெரு மக்களோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளோ, ஒரு வழிப்பாதையை ஏற்றுக்கொண்டாதாகக் கூறியிருந்தால், தலைவி கொடுத்த வாக்கை தவறிவிட்டார்கள் என்று நீங்கள் கூறுவதில் நியாயம் உள்ளது.

அப்படி என்றால் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டினாள் செய்வார்கள் அல்லது செய்யாமாட்டார்கள் ?

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். அதற்காக நாங்கள் கூறும் காரணம் பொய்யாகாது.

அரசும் அதிகாரிகளும் மக்களுக்கு சேவை செய்வதற்கு அன்றி அவர்களின் அதிகாரத்தை வெளிபடுத்துவதற்கு இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Salai S Nawas (Kayalpatnam) [08 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32325

அப்படி என்றால் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டினாள் செய்வார்கள் அல்லது செய்யாமாட்டார்கள் ? (C&P)

=========================================================

இது நியாயம்தானா? பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்காத நிலையில், நீங்கள் கூறுவது போல பூங்கா வசதி செய்து கொடுக்க நகர்மன்றத்தில் தீர்மானம் இயற்றினால், எந்தக் காரணத்திற்காக இந்தத் தீர்மானம் என்ற கேள்வி எழாதா?

=========================================================

மழை காலத்தில் தண்ணீர் தேங்குவது இயல்பே! ஆனால், சாலையின் உயரம் கூடுவதனால் வீட்டுக்குள் எளிதாக தண்ணீர் வந்து விடும் என்பது உங்களுக்கு தெரியாதா? (C&P)

=========================================================

தங்கள் விருப்பப்படி, 45 செ.மீட்டருக்கு சாலையைத் தோண்டி, 40 செ.மீட்டருக்கு அடுக்கு வைத்தால் தண்ணீர் சாலையில் தேங்கி, அது பாதிப்புக்குள்ளாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, 20 செ.மீட்டருக்கு சாலையைத் தோண்டப்பட்டு, 27.5 சென்டி மீட்டருக்கு அடுக்கு வைக்க அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சாலையில் தண்ணீர் தேங்காது.

மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் பெரிய நெசவு தெருவின் அகலமாக 35 அடி முதல் 40 அடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 10 மீட்டர் முதல் 12 மீட்டர் வரை அத்தெருவின் அகலமாகும். அமைக்கப்படும் சாலையின் அகலமோ 4.3 மீட்டர். வீடுகள் துவங்குவதற்கு முன்னர் 5.7 மீட்டர் முதல் 7.7 மீட்டர் (சாலை இல்லாத) நடைபாதைப் பகுதி. ஓடும் மழைத்தண்ணீர் வீடுகளுக்கு வராமல், நிலத்தால் உரிஞ்சப்பட கண்டிப்பாக இது போதுமான பகுதியாகும்.

=========================================================

என்னோட ஆதங்கமே மனு வாங்கிய நேரத்தில் சரி என்று சொன்னவர்கள் இன்று அதற்கு மாறாக ஒப்பந்தப் புள்ளி கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்? (C&P) =========================================================

நாம் அறிந்த வரையில் தோண்டி சாலைப்போடவேண்டும் என்ற கோரிக்கைதான் இருந்தது. அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்களின் ஆதங்கம் 45 சென்டி மீட்டர் தோண்டவில்லை, 20 சென்ட் மீட்டர் தான் தோண்டப்பட்டுள்ளது என்றால், இது போன்ற சாலைகளில் 45 சென்டி மீட்டர் தோண்டுவதுதான் சரி, 20 சென்டி மீட்டர் தோண்டுவது சரியல்ல என்ற அளவுகோலுக்கு வரவேண்டும்.

ஏற்கனவே நான் சொன்னது போல, நான் அறிந்த வரையில், தோண்டப்படும் சாலையின் ஆழம் - சாலை அமைப்பதில் ஓர் அங்கம்தான். அதுவே முழுமையானது அல்ல.

=========================================================

மழை காலங்களில் மழை தேங்கிய இடங்களை பார்வையிட சென்ற இவர்களுக்கு எங்கள் தெருவில் தண்ணீர் தேங்கி வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு சேரும் சகதியுமாக கிடந்தது இவர்களுக்கு தெரியாதா? எது தேவை ? எது அவசர தேவை என்பது கூட தெரியாதவர்களா இவர்கள்? (C&P)

=========================================================

தற்போதைய நகர்மன்றத் தலைவரைப் பொருத்த வரை பொதுமக்களை சந்திப்பதை அவர் தவிர்ப்பதில்லை. இது பல மக்கள் கூற நானே கேட்டிருக்கிறேன். செய்திகள் வாயிலாக பார்த்தும் இருக்கிறேன். தான் பதவி ஏற்ற சில வாரங்களில் முதல் முறையாக அவர் சென்ற பகுதி பெரிய நெசவு தெரு பகுதிதான் - ஒரு வழிப்பாதை குறித்த தகவல் பரிமாற்றத்திற்காக.

மழைக் காலத்தில் பெரிய நெசவுத் தெரு சாலை பாதிப்பில் இருந்தது அனைவரும் அறிந்ததுதான். இதை மறுக்க முடியாது. நகர்மன்றத் தலைவி அவர்கள் பேருந்தில் திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினம் பயணம் செய்தபோது இதை அனுபவித்து, வருந்திப் பேசியதையும் நான் அறிவேன்.

மழைக் காலம் துவங்க சில தினங்களுக்கு முன்னர்தான் (அக்டோபர்) சாலையைப் புதுப்பிக்க ஒப்பந்தக்காரருக்கு பணி வழங்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சாலையைப் புதுப்பிக்க இரண்டு வழிகள்தான் இருந்தன.

(1) புதிய சாலை போட வேண்டும். ஆனால் மழைக்காலம் என்பதால் அதிகாரிகளுக்கு தயக்கம்.

(2) மழைக்காலம் முடியும் வரை தற்காலிகமாக கல் அல்லது மண் போட்டு பள்ளங்களை சமப்படுத்த வேண்டும்.

சாலையைப் புதுப்பிக்க ஒப்பந்தக்காரர் தேர்வான நிலையில் இவ்வாறு சாலையை நிரப்பினால், ஒப்பந்தக்காரரின் லாபத்திற்கு செய்யப்படுகிறது - போன்ற விமர்சனங்கள்.

இதுதான் நான் அறிய நடந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...அர்த்தமுள்ள ஆதங்கமே!
posted by Ahamed Mohideen (chennai) [08 January 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32328

விவாதத்திற்கு நான் வரவில்லை. பல விசயங்களை நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள்!!

நான் மழைகாலம் என்று சொன்னது கடந்த வருட மழைகாலம். தங்களின் விளக்கமோ .(???)

கூடங்குளத்திலும் போராட்டம் நடக்கிறது அதற்காக அரசு பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் செய்யவில்லையா?

தான் பதவி ஏற்ற சில வாரங்களில் முதல் முறையாக அவர் சென்ற பகுதி பெரிய நெசவு தெரு பகுதிதான் - என்றாலும் அதன் பின் தாங்கள் சொன்னது போல "பேருந்தில்" திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினம் பயணம் செய்வார்கள். ஆனால் போன் போட்டால் எடுக்கமாட்டார்கள். நேரில் வந்து பார்க்கமாட்டார்கள்.

நீங்கள் அறிந்தவரை என்பதனை நிறுத்திவிட்டு உண்மையை பேசுங்கள். தயவு செய்து அடுத்தவர்களுக்காக வாதிடுவதை நிறுத்துங்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Salai S Nawas (Kayalpatnam) [08 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32329

போன் போட்டால் எடுக்கமாட்டார்கள். நேரில் வந்து பார்க்கமாட்டார்கள். (C&P)

------------------------------------------------

இதே செய்திக்கான மற்றொரு கமெண்டில் (Comment Reference Number: 32319) நீங்களே 'போனில் பேசினேன், போனில் உறுப்பினர் அல்லது பொறியாளரிடம் விபரம் பெறச்சொன்னார்கள்” என்கிறீர்கள். ஒரு முடிவுக்கு வாருங்கள் - தலைவிக்கு போன் போட்டா எடுக்கமாட்டேன் என்கிறார்களா, எடுக்கிறார்களா?

====================================

நான் மழைகாலம் என்று சொன்னது கடந்த வருட மழைகாலம். தங்களின் விளக்கமோ .(???) (c&P)

--------------------------------------------------

அது சரி, பொதுப்படையாக எழுதிவிட்டு, அது போன வருஷம், அது அதுக்கு போன வருஷம் என்று சொன்னா எப்படி?

====================================

நீங்கள் அறிந்த வரை என்பதனை நிறுத்திவிட்டு உண்மையை பேசுங்கள். தயவு செய்து அடுத்தவர்களுக்காக வாதிடுவதை நிறுத்துங்கள்! (C&P)

---------------------------------------------------

பொது தளத்தில தவறான தகவலைத் தெரிவிக்கும்போது அதன் உண்மையை தெளிவு படுத்தவது அனைவரின் கடமை. எதையும் ஆதாரத்தோடு பேசுங்கோ.

45 சென்டி மீட்டர் தோண்டனும்...
வீட்டுக்கு தண்ணீர் வந்துடும்...
தலைவிக்கு கோரிக்கை கொடுத்தோம்...
என்று மனதில் தோன்றுவதை எல்லாம் எழுதிவிட்டு, உண்மைய பேசுங்க என்று அறிவுரையா? சபாஷ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...அர்த்தமுள்ள ஆதங்கமே!
posted by Ahamed Mohideen (Chennai) [09 January 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 32331

பொது தளத்தில தவறான தகவலைத் தெரிவிக்கும்போது அதன் உண்மையை தெளிவு படுத்தவது அனைவரின் கடமை. எதையும் ஆதாரத்தோடு பேசுங்கோ.

நான் ஆதாரத்தோடுதான் பேசுகிறேன்!! .

"நாம் அறிந்த வரையில் தோண்டி சாலைப்போடவேண்டும் என்ற கோரிக்கைதான் இருந்தது" என்றும் உண்மையை தெளிவு படுத்தவது அனைவரின் கடமை என்றும் கூறும் நீங்கள் உங்களால் இந்த உண்மையை தெளிவுபடுத்த முடியுமா?

45 சென்டி மீட்டர் தோண்டனும்...
வீட்டுக்கு தண்ணீர் வந்துடும்...
தலைவிக்கு கோரிக்கை கொடுத்தோம்...
என்று மனதில் தோன்றுவதை எல்லாம் சொல்வதற்கு நான் கவிஞன் இல்லை.!!

உங்கள் போனின் அழைப்பை அவர்கள் எடுப்பவராயின், கடந்த வெள்ளி கிழமை உங்களுக்கு வந்த அலைபிணை எல்லாம் எடுத்தீர்களா அல்லது இல்லையா? எங்கள் தெருவில் களிமண்ணையும் பாரங்கல்லையும் ரோட்டில் போட்டார்களா அல்லது இல்லையா? என்று கேட்டு விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்...

Moderator: பிற தளங்களை மேற்கோள் காட்டும் வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் சிறுமழை!  (7/1/2014) [Views - 2162; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved