Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:45:56 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12594
#KOTW12594
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 19, 2013
இந்தியாவை ஜெயலலிதா வழிநடத்தி செல்லும் சூழலை உருவாக்குவோம்: அதிமுக பொதுக்குழு தீர்மானம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4117 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்திற்கு போதிய நிதி அளிக்காமல், தமிழகத்தின் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று நடைபெற்றது.







நாட்டை வழி நடத்த வேண்டும்:

பொதுக்குழுவில் பேசிய பொதுச் செயலாளர் ஜெயலலிதா, "மத்தியில் சரியாக வழி நடத்த ஆளில்லாமல் இந்தியா தடுமாறுகிறது. 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நம் கட்சி நாட்டை வழிநடத்த முடியும். அது தான் நம் இலக்கு. செங்கோட்டையை அதிமுக அடைவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.

குட்டி கதை:





பேச்சின் இடையே, முதல்வர் ஜெயலலிதா, குட்டிக் கதை ஒன்றைக் கூறினார்.

உடல் சரியில்லாத ஒருவர் அபூர்வ மருந்து என்று நினைத்து ஒன்றை சாப்பிட்டு, அவருக்கு உடம்பு சரியாகி, பிறகு அது சாதாரண மருந்துதான், தன் நம்பிக்கைதான் தன்னை காப்பாற்றியது என்பதை அறிந்தாராம். அதே போல் நமக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வேண்டும் என தொண்டர்களுக்கு ஜெயலலிதா அறிவுறித்தினார்.

என்ஜின் டிரைவர்:





"புனித ஜார்ஜ் கோட்டையை வெற்றிகரமாக அடைந்த நமது கட்சியென்னும் ரயில் வண்டி, செங்கோட்டை விரைவு வண்டியாக மாற வேண்டும். இந்த வண்டியை பச்சைக் கொடி காட்டி துவக்கி வைக்க தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். உங்களை பாதுகாப்பாக செங்கோட்டையில் கொண்டு சேர்க்க என்ஜின் டிரைவராக நான் இருக்கிறேன். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அமைதி, வளம், முன்னேற்றம், இம்மூன்றும் தான் நாட்டை வழிநடத்த நாம் இவற்றை கொள்கைகளாக, தாரக மந்திரமாக கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது"என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசி முடித்தார்.

16 தீர்மானங்கள்:

கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம், இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க முடிவு எடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு, நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவதை இலக்காக கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முணுசாமி முன்மொழிந்த தீர்மானத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப்போட்டியிட்டு 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது கட்சியின் முடிவு என்றார்.

அவரைத் தொடர்ந்து வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளது. எனவே, முதல்வர் ஜெயலலிதா இந்தியாவை வழிநடத்திச் செல்லும் சூழலை உருவாக்க அதிமுக பாடுபட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இவ்விரு தீர்மானங்கள் உள்பட மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

(1) நாடும், இயக்கமும் இன்னும் மேன்மையுற வேண்டும் என்ற சிந்தனையை தனது அன்றாட பிரார்த்தனையாகக் கொண்டு, நாட்டு மக்களின் நலன்களுக்காக தன்னையே அர்ப்பணித்து அரும்பணியாற்றி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிறந்தநாள் வருவதை குறிப்பிட்டு, முதலமைச்சருக்கு இறைவன் முழு உடல் நலனையும், மன அமைதியையும் வழங்கி பாதுகாத்து வழிநடத்த எல்லாம் வல்ல இறைவனை பொதுக்குழு பிரார்த்திப்பதாகவும், 66-வது பிறந்தநாள் காணவிருக்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்லாண்டு வாழ வேண்டும் என கோரியும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(2) ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் அமோக வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கும், நிர்வாகத் திறமையும், மதிநுட்பமும், அயராத உழைப்பும், எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களுமே முழுமுதற் காரணம் என்று பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(3) வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் கழகத்தின் தேர்தல் கூட்டணி வியூகங்களை வகுக்கவும், தேர்தல் குறித்த அனைத்து முடிவுகளை எடுக்கவும், கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(4) நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த சில மாதங்களில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதால், கழக சட்ட திட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கழக அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியை தளர்த்தி, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு கழக அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(5) நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதை தனது மதி நுட்பத்தால் தடுத்து நிறுத்திய கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து, தீர்மானம் இயற்றப்பட்டது. தனது ஊழல் சாம்ராஜ்ஜியத்தை காப்பாற்றிக்கொள்ள கருணாநிதி செய்த துரோகமே, காவிரி நதிநீரில், தமிழகத்திற்கு உரிய பங்கினை, தமிழக விவசாயிகள் பெறமுடியாமல் போனதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

இதேபோல், கச்சத்தீவு இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டபோது, வாய்மூடி மவுனமாக இருந்து, கருணாநிதி துரோகம் இழைத்தார். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மாபாதக செயலைச் செய்தவர் கருணாநிதி. அராஜக ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டு, தனது கட்சிக்காரர்கள் செய்த நில ஆக்கிரமிப்புக்கு கருணாநிதி துணைபோனதால், தமிழக மக்கள் இன்னலுக்கு ஆளாயினர். தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீர்குலைத்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கடித்து, பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை, மின்குறை மாநிலமாக ஆக்கியவர் கருணாநிதி. மின்சார உற்பத்தியை பெருக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எடுத்ததன் காரணமாக, மின்வெட்டு சரிசெய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் செயற்கையான மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணமாக, காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சிகள் விளங்கின.

தமிழக அரசு நிர்வாகத்தில் ஒழுங்கின்மையை உருவாக்கி, தமிழ்நாட்டை கடனில் தள்ளியவர் கருணாநிதி. என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி எடுக்காமல் தனது மகளை மாநிலங்களவை உறுப்பினராக்கிட காங்கிரஸின் உறவை நாடிய சுயநலவாதி. ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிரும் - புதிருமாக இருந்த கட்சிகளிடம் ஆதரவு கேட்டு, கடிதம் எழுதி, பிழைப்புவாத அரசியல் நடத்தியவர். 2ஜி அலைக்கற்றை விற்பனை முறைகேட்டின் மூலம் பல லட்சம் கோடி ரூபாயை கருணாநிதி, அவரது குடும்பம், கட்சியைச் சேர்ந்தவர்கள் சுருட்டியதை நாடே பேசுகிறது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள அரசின் ராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்டபோது, உண்ணாவிரத கபடநாடகமாடியவர். இத்தகு சுயநலம் கொண்ட, இனப்படுகொலைக்கு துணைபோன கருணாநிதியை, 2014-லில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(6) இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் உச்சி மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானங்களை அலட்சியப்படுத்தி, கொழும்புவில் நடைபெற்ற காமன்வெல்த் உச்சி மாநாட்டில், இந்திய அரசு சார்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சரை பங்கேற்கச் செய்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

(7) தமிழக மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தும் வகையில், வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் வண்ணம், இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் 4 ஆண்டு தொழில்நுட்ப பட்டம் போன்று, இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இலங்கைவாழ் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் மத்திய அரசின் இந்த செயல்கள் அமைந்துள்ளன. தமிழக மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் மாபாதக செயலுக்கு பொதுக்குழுவில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

(8) அப்பாவி தமிழக மீனவர்களை கடத்திச் சென்று, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்வதையும், அவர்களுடைய படகுகளை கைப்பற்றுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் இலங்கை அரசை தட்டிக்கேட்காத மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.

(9) ஃபிடே உலக சதுரங்க வாகையர் போட்டியை இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் சிறப்புற நடத்தி காண்பித்ததோடு, சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(10) மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில், வகுப்புவாத வன்முறை தடுப்புச் சட்டத்தினை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, தமிழகத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் வெற்றி கண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தும், மத்திய அரசு வகுப்புவாத வன்முறை தடுப்புச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(11) எந்த நாட்டிலும் இல்லாத வளர்த்தித் திட்டமாக தமிழகத்தில் ஒரு கோடியே 85 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழை பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த ஏழை பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் திருமண உதவித்தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்- ஏழை தாய்மார்களின் நலன் காக்கும் வகையில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம் என சரித்திரம் பேசும் பல்வேறு சாதனைகளை இரண்டரை ஆண்டுகளில் நிகழ்த்தி காட்டிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(12) தமிழகத்துக்கு ஏற்கனவே மத்திய அரசு வழங்கி வந்த மண்ணெண்ணெய்யின் அளவை மத்திய அரசு குறைப்பது ஏழை எளிய மக்களை பெரிதும் பாதிக்கும் - தமிழகத்தின் மின்பற்றாக்குறையை சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரத்தை வழங்க வேண்டும் - மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மடிக்கணினி வழியாக ஏற்பட்டிருக்கும் கல்வி தொழில்நுட்ப புரட்சியை அங்கீகரித்து, சிறப்பு நிதி வழங்க வேண்டும் - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்- காவேரி நதிநீர் பங்கீட்டிற்கான நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட போராடி வெற்றி கண்டதன் அடிப்படையில் காவேரி நதிநீர் மேலாண்மை குழு, காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதங்கள் எழுதியதுடன், 2 முறைபிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும், இதுவரை மத்திய அரசிடமிருந்து சாதகமான நடவடிக்கை இல்லை - தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை வன்மையாகக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(13) தமிழகத்தில் அரசு நிர்வாகம் மேலும் சிறப்படையவும், காவல்துறை மக்களின் நண்பனாக பணியாற்றவும் வழிகாட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாவட்டடை மிகச்சிறப்பாக நடத்தி மக்கள் நலனுக்காக 312 வளர்ச்சித் திட்டங்களை வழங்கி சாதனை புரிந்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(14) புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் 1984-ம் ஆண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கப்பட்டு, அனைவரும் வியக்கும் வண்ணம் அற்புதமான உரைகளை நிகழ்த்தி நாட்டின் கவனத்தை ஈர்த்தவர் - 1989-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினராக முதல்முறையாக பொறுப்பேற்றார் - சட்டமன்ற பணிகளில் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருநிலைகளில் பணியாற்றிய பேரனுபவம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அமைந்துள்ளது - முதலமைச்சர் பணியிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் பணியிலும் தன்னலமற்று அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(15) முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நீண்ட நெடிய அனுபவம் காரணமாக தமிழகம் பல்வேறு துறைகளில் நாட்டிற்கே எடுத்துக்காட்டான மாநிலமாக விளங்குகிறது- தமிழக மக்களின் நலன்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர், இலங்கை தமிழர்களின் சமஉரிமைக்காகவும், நீதிக்காகவும் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிருக்கிறார் - நாட்டின் நலனுக்கு விரோதமான இந்திய-அமெரிக்க எரிசக்தி ஒப்பந்தம், எல்லையில் சீனாவின் ஊடுருவல், இலங்கை அரசின் அராஜக செயல்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காப்பாற்றுவதன் வழியாகவே ஒன்றுபட்ட இந்தியா வலிமையோடு திகழ முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர் - இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அனுபவம் மற்றும் சிந்தனை, தேசபக்தி, நீண்ட அரசியல் அனுபவம், பன்மொழி ஆற்றல், ஆளுமை திறன் கொண்டவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா - தொன்மை சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டிற்கு தலைமையேற்க காலம் கனிந்திருக்கிறது - இந்தியாவின் ஒளிமயமான எதிர்கால வாழ்விற்கு ஏற்ற ஆட்சியை வழங்கக்கூடிய திறமை உடைய ஒரே நம்பிக்கை நட்சத்திரம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பூரண நல்லாசியை பெற்றவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மட்டுமே - எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெறச்செய்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவே இந்திய தேசத்தை வழிநடத்திச் செல்ல தக்க சூழ்நிலையை உருவாக்க சபதம் மேற்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தகவல் மற்றும் புகைப்படங்கள்:
தி இந்து (தமிழ்)
மற்றும்
ஜெயா செய்திகள் இணையதளம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வெற்றி அ தி மு க வுக்கே...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [19 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32109

எது எப்படியோ...! தூத்துக்குடி தொகுதி வெற்றி அ தி மு க வுக்கே...! அது மட்டும் நான் உறுதியாக சொல்வேன்... இந்நகரின் மாவட்ட மக்கள் மத்தியில் முன்பை விட பல மாற்றங்கள் - தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [19 December 2013]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32110

நமக்கும் ஆசை தான், நம் முதல்வர் அம்மா அவர்கள் இந்திய பிரதமராக ஆகி, நாட்டை வலி இல்லாமல் வழி நடத்தனும் என்று.

ஆனால், சென்ற வாரம் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை சுற்றிக்காட்டி, வெளியிட்ட அறிக்கை நம்மை தலையை சொறிய வைக்கின்றது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில், அம்மாவின் ஆட்சியில், ஆதாரப்பூர்வமாக ஏடுகளில் வந்த கணக்குப்படி

கொலைகள் மட்டும் - 3,231
கொள்ளைகள் - 1,170
வழிப்பறி மோசடிகள் - 691
செயின் பறிப்புகள் - 652

கணக்கில் வராமல் எத்தனையோ..!! எத்தனையோ..!!

ஆக, சட்ட ஒழுங்கின் நிலைமை இந்த நிலைமையில் உள்ளது.

ஆட்சியில் அமர்ந்ததும், கொள்ளையர்கள் வெளி மாநிலத்திற்கு ஓடி விட்டார்கள், இனி நிம்மதி தான் என்று அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள். பிரதமர் ஆனால் எந்த நாட்டிற்கு கொள்ளையர்கள் ஒடுவார்களோ..!

பிரதமர் ஆகி, நாட்டை வழிநடத்தி இந்த கணக்குகளை பெருக்காமல் இருந்தால் நல்லது.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
posted by mackie noohuthambi (kayalpatnam) [20 December 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32117

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேரிருக்கும்"

என்று எம்ஜீயார் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது.அண்ணா மூன்றெழுத்து - எம் ஜி ஆர் மூன்றெழுத்து அந்த வரிசையில் அம்மா என்பதும் மூன்றெழுத்து. சிலருக்கு இப்படி fancy name fancy number இயற்கையாகவோ செயற்கையாகவோ அமைந்து விடுகிறது.

ஆனால் அந்த தலைவர்களிடம் இருந்த துணிவு மட்டும் அம்மாவுக்கு இருக்கிறதே தவிர பணிவு இருப்பதாக தெரியவில்லை. "நான்" என்று சொல்வதை "நாம்" என்று சொல்வதால் நாடெல்லாம் வாழும் அம்மா என்று அவர்கள் பணிவாக பேசினார்கள்.செயல்பட்டார்கள்.

இந்த நாட்டின் பிரதமராக புரட்சி தலைவி அவர்கள் முடி சூட வேண்டும் என்று இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்கள் ஆசைப்படுவதில் தவறில்லை.ஆனால் அம்மா மட்டுமே அதற்கு தகுதியானவர் என்று சொல்லும் போதுதான் "நான்" என்ற மமதை, கர்வம் மேலோங்கி நிற்பதுபோல் தெரிகிறது.

தேர்தல் என்ற சூறாவளி சுழன்று அடிக்கும்போது கீழே இருப்பவர்கள் மேலே செல்வதும் மேலே இருப்பவர்கள் கீழே செல்வதும் இயற்கை. வெற்றிபெறவேண்டும் என்ற வேட்கை இருக்கலாம். வெற்றிபெற்றே தீர்வோம் என்ற வெறி இருக்கக் கூடாது.

"பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா, அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை"...என்று அந்த பாடல் வரிகள் முடிகிறது.

PLEASE BE SMART..BUT SLOW AND STEADY WINS THE RACE. POLITICS IS A SORT OF GAMBLING.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Rilwan (Chennai) [20 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32121

தமிழகத்திற்கு தேவை Aam Aadhmi போன்ற மாற்றமே. ஆதிமுக, திமுகா போன்ற தொழில் முறை அரசியல் கட்சிகளுக்கு ஒட்டு போட்டால் இந்த மக்களை விட வேற மடையர்கள் இல்லை என்றே என்ன தோன்றும்.

உண்மையான மாற்றம் தேவை. ஒரு திருடனுக்கு பதிலாக இன்னொரு திருடனை தேர்ந்தெடுப்பது சரியான மாற்றமாக இருக்க முடியாது.

முன்புவரை இந்த திருடர்களுக்கு சரியான மாற்றம் மக்களுக்கு இல்லாமல் இருந்தது. இப்போது அந்த சந்தேகம் தேவை இல்லை.

அடிப்படையான ஒரு விஷயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசு சும்மா பணத்தை அச்சடிக்க முடியாது. அப்படி அச்சடிப்பதை இருந்தால் சர்வதேச பண சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு இருக்காது.. ஏன், இப்போதே அந்த நிலை தான்.

ஏன் இப்படி ஒரு நிலை? நாம் நினைக்கிறோம் அரசு எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்துவிடும் என. அப்படி அரசால் செய்து விட முடியுமா? ஒருவேளை இந்திய ரூபாய்க்கு பங்கம் வராமல் சிவகாசி அச்சகத்தில் அடித்தால் தான் உண்டு.

நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள்..

இலவச டிவி, இலவச ஆடு என இலவசம் கொடுப்பதை இருந்தால் அதற்கான பணம் அரசிற்கு தேவை. தமிழகத்தில் தங்க சுரங்கம் இல்லை. எண்ணை கிணறுகள் இல்லை.. பின்னே எங்கே இருந்து வரும்?

உங்களிடம் இருந்துதான்.. உங்களிடம் இருர்ந்து வரிப்பணம் என்ற முறையில் உங்களிடம் இருந்து பிரப்படுகிறது..

அரசிடம் இலவசம் வேண்டாம் என கூறுங்கள். அரசிடம் இலவசம் தர அதிகம் பணம் இருக்குமாயின் வரியை குறைக்க கேரி போராட்டம் நடத்துங்கள்.

இலவசம் கொடுக்கும் அரசுகளை தூக்கி எறியுங்கள்.

மக்களின் பிரச்சினைகளை புரிந்து தெளிவாக யோசிக்க தெரிந்த மனிதர்களை உங்கள் பிரதிநிதிகளாய் தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் எந்த கட்சியில் உறுப்பினராக இருந்தாலும் உங்கள் உறுப்பினர் அட்டையை எரித்து விடுங்கள். எந்த கட்சிக்கும் உங்களை அடகு வைக்காதீர்கள்.

உங்களை வைத்து இவர்கள் தொழில் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மொழி மதம் தேசியம் என்று உப்பு சப்பு இல்லாத விசயங்களை பேசி மக்களின் அன்றாட விசயங்களை புரிந்துகொள்ளாமல் வேதாந்தம் பேசும் அரசியல் கட்சிகளை புறக்கணியுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் அரசு ஒரு பிரச்சினையாக இல்லாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் சிந்தித்து செயல் பட வேண்டி இருக்கிறது.

சிந்திக்க தெரிந்த மனிதர்கள் தங்களை வைத்து வியாபாரம் செய்யும் கட்சிகளை புறக்கணிப்பார்கள் என்று நம்புவோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சுயமரியாதை ?
posted by Abdul Wahid S. (Kayalpattinam) [20 December 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 32130

பெரியாரின் வார்ப்புகள், அண்ணாவின் அன்புத் தம்பிகள், எம்.ஜி.ஆரின் இரத்தத்தின் இரத்தங்கள் ஏன் இந்த அம்மையாரின் முன்பு கூனிக் குறுகிப் போகிறார்கள்?

சுய மரியாதையை போதித்தவர் பெரியார். அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு அவர் படத்தை போட்டுகொண்டு சுமரியாதையே என்னவென்று தெரியாதவர்கள் இப்படியும் குனிவார்கள், பதவியை தக்க வைக்க இன்னும் குனிவார்கள்.

அதுக்கு மேல் பொதுமக்களாகிய நாம் குட்டக் குட்ட குனிந்து கொண்டே போகின்றோம். ஒரு சாக்கடையிலிருந்து (தி.மு.க.) எழுந்து இன்னொரு சாக்கடையில் (அ.தி.மு.க.) சாக்கடை என்று தெரிந்தும் விழுகின்றோம். நம்மைவிட டெல்லிக்காரர்கள் பலபடி மேல்.

ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த இலக்கு மகாராஷ்ட்ராவாம். தமிழகமாக இருக்கக் கூடாத என்ற ஏக்கம் மீண்டும் மீண்டும் சாக்கடையில் விழும் நம்மில் பலருக்கு இருப்பதில் வியப்பேதுமில்லை.

If A.D.M.K. is "One woman show" then D.M.K. is "One family Show". Both are corrupt and are two sides of the same coin. To put it in a nutshell, there are rotten offshoots of D.K.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [21 December 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 32132

எங்கள் ஓட்டு இரட்டை இலை சின்னத்திற்கு மட்டுமே. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு நானே ஓட்டு போடலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Cnash (Makkah ) [21 December 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 32139

ஆசை படுவதில் தவறேதுமில்லை ... கலைஞர் கூட ஒரு தடவை ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார் .. ஜெயா வின் பலம் என்ன்ன என்று கேட்டபோது ... அவரின் பலமும் பலவீனமும் அவரிடம் உள்ள அதீத நம்பிக்கை தான் (Over Confidence ) தான் என்று பதில் சொன்னார் ..

அந்த அதீத நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இந்த விஸ்வரூப தீர்மானம் .. நாட்டில் உள்ள முதலமைச்சர்களில் ஜெயாவும் ஒரு சிறந்த நிர்வாகி என்று அறியப்பட்டு இருப்பவர்.. ரிமோட் , மியுட், பிரதமர் ஆண்ட நாட்டை ஒரு போல்ட் பிரதமர் ஆள்வதானால் சந்தோசமே ... மதுரை வீரன் அழகிரி, ஆறு கொலை செய்த சிபு சோரன் போன்ற சிறப்பு மிக்கவர்கள் அலங்கரித்த அமைச்சரவையை இந்த அம்மா தலைமையேற்று நடத்துவது ஒன்றும் ஆச்சரியமானதில்லை ..

ஜியாஉதீன் காக்கா சொன்ன கொலை கொள்ளை கணக்கு எல்லாம் சரி தான் , இது எல்லாம் வழமையில் நாட்டில் சகஜமா நடக்கிறது தான் வருடாவருடம் கணக்கு ஏறி கொண்டு தான் போகும் இந்த இத்துப்போன சட்டங்கள் இருக்கும் வரை

...கருணாநிதி நல்லவர் போல் அறிக்கை விட்டிர்கிறார் .. உத்தமர் ஆட்சியில் செத்தவர் எத்தனை பேர் என்பதை அவர் சொல்ல மறந்தாலும் தமிழ் நாடு போலீஸ் வெப்சைட் லே இன்னும் இருக்க தான் செய்கிறது .. ஓவர் டைம் எடுத்து கொலை செய்து இருக்கிறார்கள் என்பதை அவர இந்த அறிக்கையில் மறைத்தாலும் நாம பார்க்க பரவசம் அடைவோம்.

கருணாநிதி கணக்குபடி கடந்த 2.5 ஆண்டில் 3231 கொலைகள். அதாவது சராசரி ஆண்டுக்கு 1292 ... இது இவர் ஆட்சியில் இருந்த 2007,2008,2009,2010,2011 எல்லா ஆண்டுகளின் இருந்ததைவிட ரொம்ப குறைவு ... ... இது இவர் கீழே இருந்த போலீஸ் தயாரித்த ரிப்போர்ட் தான் .. கீழே கொடுககபட்டிருக்கும் "போலீஸ்" ரிப்போர்ட் லிங்க் இல் .. பக்கம் 20 இல் ஒரு உண்மை ஊர் அறிய உள்ளது

http://www.tnpolice.gov.in/pdfs/sbnov...

எது எப்படியோ அம்மா ஆட்சி செய்தால் அவர்களின் பக்தர்களை போல் நமக்கும் சந்தோஷம் தான் .. ஆனால் செயற்குழு செட் போட்டிருக்கும் பார்லிமென்ட் பார்க்கும் போது பகீர் என்று உள்ளது ... ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் பார்லிமென்ட்டிலும் அசோக சின்னம் மாற்றப்பட்டு இலை இடம் பெயருமோ என்று ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...பேய் ஆளும் ஊரில்
posted by செய்து அலி (காயல்பட்டினம் ) [23 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32154

அம்மாடி எப்போ எப்போ அம்மா தமிழர்களின் முதுகின் மீது ஏறி தலைமீது எம்பி எட்டி தள்ளி டெல்லி உயரத்திற்கு சென்று செங்கோட்டைக்குள் குதித்து அங்கேயே நிரந்தர போனி பண்ணப்போகிறார்கள் .அம்மா பிரதமர். அப்பா பிரெசிடெண்ட் இரண்டு ராகு கேதுகளும் இங்கிருந்து தொலைந்தால் நிம்மதி நாம் பெற்ற இன்பம் இந்த நாடும் பெற்று எல்லாமே நாறட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved