Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:54:12 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12452
#KOTW12452
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 30, 2013
அரசு சான்றிதழ் வழங்கும் அலுவலகத்தை நகரில் அமைப்பது தொடர்பான தீர்மானம் குறித்து நகர்மன்ற துணைத்தலைவர் தன்னிலை விளக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2695 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர சாதாரண கூட்டம், 27.09.2013 அன்று துவங்கி, 01.10.2013 தேதி வரை நான்கு அமர்வுகளாக நடத்தி முடிக்கப்பட்டது.

அக்கூட்டத்தில், அரசு சான்றிதழ் வழங்கும் அலுவலகத்தை - காயல்பட்டினத்தில் அமைப்பது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 68ஆவது கூட்டப் பொருளுக்கான தீர்மானம் குறித்து, காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் பின்வருமாறு தன்னிலை விளக்கமளித்துள்ளார்:-

நகராட்சித் துணைத்தலைவரின் தன்னிலை விளக்கம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

காயல்பட்டணத்தில், அரசு சான்றிதழ் வழங்கும் அலுவலகம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இந்த அலுவலகத்திற்குரிய இடம் மற்றும் பணியாளர் சம்பந்தமான தீர்மானம் நகர்மன்றக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்தபோது, நான் சில கருத்துக்களைக் கூறியது உண்மை.

நகர்மன்றத்தில் காலியாகவுள்ள பணியாளர்கள் இடம் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது. அதை நிரப்பிவிட்டு, இதைக் கவனியுங்கள் என்பதுதான் என்னுடைய பேச்சின் பொருளாகும். மேலும் இத்தீர்மானத்திற்கெதிராகக் கருத்துத்தெரிவிக்கும்படி எந்த உறுப்பினரின் ஆதரவையும் நான் கேட்கவில்லை.

இந்தத் தீர்மானம் நிறைவேறும் என்றும் எனக்குத் தெரியும். இந்த அலுவலகம் இந்த ஊருக்கு வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு நான் ஒன்றும் விபரம் தெரியாதவன் இல்லை.

செப்டம்பர் மாதக் கூட்டத்தில் பொருள் எண்: 68ல் உள்ள வாசகத்தில் இதற்குப் பணியாளரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க என்று ஒரு வரி வருகிறது. எனவேதான், ஏற்கனவே உள்ள காலியிடங்களைச் சுட்டிக்காட்ட (இத்தீர்மானம் நிறைவேறும் என்று தெரிந்தும்) ஒப்புக்காக எனது எதிர்ப்பைப் பதிவுசெய்தேன். இதற்கு மத்தியில், கம்ப்யூட்டர் மற்றும் அலுவலகம் போன்றவை மட்டுமே நகராட்சி ஏற்பாடு என்றும், பணியாளருக்கு சம்பளம் வழங்குவது வருவாய்த் துறை என்றும் இப்போது சிலர் கூறுகின்றனர்.

இவ்வாறு கூட்டத்தில் சொல்லப்படவில்லை. இத்தகவல் உண்மையக இருந்து, அப்போதே சொல்லப்பட்டிருக்குமேயானால், எனது அந்த எதிர்ப்பைக் கூட கூட்டத்தில் தெரிவித்திருக்கமாட்டேன்.

ஆக, நகராட்சியின் காலியான இடங்கள் நிரப்பப்படவேண்டும் என்பதே எனது எதிர்ப்பின் நோக்கம். இவ்வாறிருக்க, எதிர்ப்புக்கான காரணத்தையும் சேர்த்து செய்தி வெளியிட்டிருக்க வேண்டும்.

நகர்மன்றக் கூட்டப் பதிவேட்டிலும், வெறுமனே எதிர்ப்பு என்று பதியாமல் அதற்காக நான் கூறிய காரணத்தையும் சேர்த்தே பதிந்திருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நுற்றுக்கணக்கான தீர்மானங்களை எல்லோருடனும் சேர்ந்து நிறைவேற்ற உதவிய நான், இந்தத் தீர்மானம் கண்டிப்பாக நிறைவேறும் என்று தெரிந்திருந்தும், எனது எதிர்ப்பைப் பதிவு செய்வதனால், தனிப்பட்ட முறையில் எனக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது.

இந்த ஊருக்கெதிராக எப்போதும் எந்த நிலையிலும் சிந்திக்க மாட்டேன் என்பதை அல்லாஹ் அறிவான்.

இந்த விளக்க அறிக்கையை நமதூரின் எல்லா இணையதளங்களுக்கும் அனுப்பியுள்ளேன். அவர்கள் அனைவரும் இதை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வஸ்ஸலாம்.

இவண்,
மும்பை எஸ்.எம்.முகைதீன்,
துணைத்தலைவர்,
நகராட்சி, காயல்பட்டினம்.


இவ்வாறு, நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கை அமைந்துள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத்தின் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர கூட்டத்தின் 4 அமர்வுகளையும், காயல்பட்டணம்.காம் ஒளிப்பதிவு செய்து, இரண்டு செய்திகள் மூலம் முழுமையாக ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

அப்பதிவிலிருந்து. இச்செய்தி தொடர்பான 68ஆவது கூட்டப் பொருள் குறித்த விவாதமும், நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அடங்கிய - 06 நிமிடங்கள்; 54 வினாடிகள் அளவு கொண்ட பகுதி மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு, தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கீழ்க்காணும் படத்தைச் சொடுக்கி அதனைக் காணலாம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [01 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31751

நகரமன்றத்தில் காலியாக இருக்கும் இடத்திற்கு மண்ணின் சொந்தக்காரர்கள் படித்து வேலைதேடி கொண்டு இருக்கிறார்கள், அரசு வேலைவாய்ப்பு மையத்திலும் பதிந்தவண்ணன் இருந்துகொண்டு, அரசு அறிவிக்குக்கும் அத்துணை நுழைவு தேர்வுகளை எழுதிய வண்ணம் கலந்து இருந்து வருகிறார்கள். இவர்களின் ஆர்வம் நிறைவேற நமதூரில் நகரமன்றத்தில் தற்க்காலிக பணி வழங்க துணைதலைவர் சிபாரிசு செய்ய வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. விளக்கம் ஏற்புடையது அல்ல.
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [01 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31757

அரசு சான்றிதழ்களை பெற விண்ணப்பங்களை நமதூரிலேயே சமர்ப்பிக்க முயற்சி எடுத்த தலைவிக்கும், அதற்கு உந்துதலாக இருந்த 6-வது வார்டு உறுப்பினர் மம்மி ஹாஜி என்ற A.K. முஹம்மது முஹியத்தீன் அவர்களுக்கும், இந்த தீர்மானம் நிறைவேற முழு ஆதரவு அளித்த உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள்.

துணை தலைவர் உடைய விளக்கம் ஏற்புடையதாக இல்லை. உறுப்பினர்கள், குறிப்பாக தம்பி ஜஹாங்கிர் விளக்கமாக எடுத்துரைத்தும் துணை தலைவர் எதிர்த்தது சரி இல்லை. நகராட்சியில், பணியாளர் பற்றாக்குறை இருந்ததனால் எதிர்பதாக சொன்னாலும், இந்த திட்டத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் தான் பணியாளர்கள் நியமிக்கிறார்கள். ஊர் நலன் கருதி மற்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும்போது, நீங்களும் ஆதரித்து இருக்க வேண்டும்.

நகராட்சியில் பணியாளர் பற்றாக்குறை இருந்தால், அதை நிரப்ப, வரும் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வாருங்கள். பணியாளர்களை நியமிக்க, அதிகாரிகளை சந்தித்து முயற்சி எடுங்கள்.

சகோதரர் அப்துல் காதர் பதிந்தது போல், நமதூர் பட்டதாரிகள், படித்து வேலை தேடி கொண்டு இருக்கிறார்கள், அரசு வேலைவாய்ப்பு மையத்திலும் பதிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கலாம். குறைந்தபட்சம் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கலாம்.

நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி வரும் காலங்களிலும், இதே போல் ஊர் நலனுக்காக, தலைவி மற்றும் உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு, ஊருக்கு பல நலத்திட்டங்கள் கொண்டு வாருங்கள். மக்கள் மெச்சும் நகர்மன்ற அங்கத்தினராக திகழ வேண்டுகிறேன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அடடா! என்ன ஒரு பொறுப்பு உணர்வு! புல்லரிக்குது போங்க....!
posted by ராபியா மணாளன். (காயல்பட்டினம்.) [01 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31761

“மிட்டாய் வாங்கித் தராவிட்டால் சோறு திங்க மாட்டேன்ணு அடம் பிடிக்கும் குழந்தையைப்போல் நகராட்சியிலெ பணியிடங்களை நிரப்பாவிட்டால் ஒரு திட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டேன்” என வீம்பு பிடிக்கும் நம்ம துணைத்தலைவரின் பொறுப்பான பேச்சு?!

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [02 December 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31769

அஸ்ஸலாமு அலைக்கும்

>> இதற்கு மத்தியில், கம்ப்யூட்டர் மற்றும் அலுவலகம் போன்றவை மட்டுமே நகராட்சி ஏற்பாடு என்றும், பணியாளருக்கு சம்பளம் வழங்குவது வருவாய்த் துறை என்றும் இப்போது சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூட்டத்தில் சொல்லப்படவில்லை. இத்தகவல் உண்மையக இருந்து, அப்போதே சொல்லப்பட்டிருக்குமேயானால், எனது அந்த எதிர்ப்பைக் கூட கூட்டத்தில் தெரிவித்திருக்கமாட்டேன்<<<< C . P. >>>>>>>>>> <<<<<<<

நமது மரியாதைக்குரிய.துணை தனைவர் அவர்களின் தன்னிலை விளக்கம் .....முற்றிலுமே தவறானவையே .....அந்த வீடியோ கிளிப்பு ....இவரின் விளக்கத்துக்கும் ....துணை தலைவர் அவர்களின் நகர் மன்றதின் பேச்சுக்கும் சுத்தமாகவே சம்பந்தம் இருப்பதாகவே தெரிய வில்லை ....

ஏன் இப்படி நம் மரியாதைக்குரிய துணை தலைவர் அவர்கள் முன்னுக்கு ...பின்னான ,, முரணான தன்னிலை விளக்கம் தந்து ஊர் பொது மக்களை குழப்புகிறார் .....??

வீடியோ கிளிப்பின் அவசியத்தை இப்பவாது நம் ஊர் அனைத்து பொது மக்களும் புரிந்து கொண்டாள் சரி தான் .........மீடியா / வீடியோ கிளிப்பு / இணையதளம் .....தற்போதைய காலத்தில் இவைகள் உலகத்தோடு இணைந்து போக கூடியவைகளே ....அதை தடுப்பதில் நியாயமே இல்லை ....

நகர் மன்றத்தில் கூட்டம் நடக்கும் சமயம் ... இப்படி முரண்பாடான பேச்சுக்கள் வந்து ....பின்பு மாற வாய்ப்பு உண்டு .... அதனால் தான் நம் நகர் மன்ற தலைவி அவர்கள் இந்த வீடியோ கிளிப்பு அவசியம் தேவை என்று அடித்து சொன்னார்கள் .....எது உண்மை என்று வெளி உலகத்துக்கு நேரடியாக இப்போது தெரிய வரும் அல்லவா ....

நம் தலைவி அவர்களிடம் ....நமது உறுப்பினர் ஜனாப் .ஜஹான்கிர் அவர்களும் நிதானமாக ஒரு சில கேள்விகளை கேட்டார்கள் ....நம் தலைவி அவர்களின் விளக்கத்தை அறிந்து ....நம் ஊர் மக்களுக்கு இத்திட்டம் அவசியம் தேவையே என்பதாலும் ....பொது மக்களின் நலன் கருதி ஒப்புதல் அளித்ததும் ....மேலும் துணை தலைவர் அவர்களுக்கும் ...இவர் விளக்கம் கூறியும் கூட... துணை தலைவர் அவர்கள் பிடிவாதமாக நின்று ...ஊர் பொது மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் தானே உறுப்பினர்களின் வாக்கு எடுப்பின் போதும் கூட துணை தலைவர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள் ....என்ன பிரஸ்டேஜோ யாருக்குமே தெரியவில்லை ....

நிதானமான முறையில் நம் தலைவி அவர்கள் விளக்கமாக கூறுகிறார்கள் ....நம் ஊர் மக்கள் ஏன் ஆறுமுகநேரிக்கு போய் கஷ்டபடனும் ....இத்திட்டம் நம் ஊருக்கே வருவதால் நம் ஆண் ஆதரவு இல்லாத பெண்மணிகள் & வயதான ஆண் / பெண்மணிகள் நன்கு பயன் பெறுவார்களே என்ற நல்ல எண்ணம் .....

இத்திட்டம் நமது ஊருக்கு கொண்டு வர முழுமையாக ஒத்துழைப்பு அளித்த நம் தலைவி அவர்கள் & நம் நண்பரும் மரியாதைக்குரிய உறுப்பினர் .ஹாஜி மம்மின் அவர்களையும் & மற்ற சக உறுப்பினர்கள் யாவர்களையும் நம் பொது மக்கள் யாவர்களும் மனதார பாராட்டுவதோடு ....துவாவும் அவர்களின் ஹக்கில் செய்வார்கள் .....எம் நண்பர் ஹாஜி மம்மின் அவர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்து காரியங்களையும் தானே முன்னின்று செய்வது குறிப்பிடதக்கது.........

எம் நண்பர் P.S.A.K. அவர்கள் குறிப்பிட்டது போன்று நமது மரியாதைக்குரிய. துணை தலைவர் அவர்கள் நமது ஊர் பொது மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முயற்ச்சி செய்தால் பொது மக்களின் பாராட்டுக்கள் கிடைக்கும் .

நம் மன்ற மரியதைக்குரிய உறுப்பினர்களும் & நம் தலைவி அவர்களும் / நம் துணை தலைவர் அவர்களும் ஒற்றுமையாக ....ஒற்றாக கைகோர்த்து நின்று அனைத்து நல்ல காரியங்களையும் நம் ஊருக்கு செயல்லாக்கிளால் நம் நகர் மன்றத்தின் செயல் திட்டங்களால் நமது ஊர் மாஷா அல்லாஹ் ....நன்கு வளர்ச்சி பெற்று தமிழகத்திலேயே முதல்மை நகர் மன்றமாக தேர்வு பெற்று '' சான்றிதழ் '' தமிழக அரசால் பெறலாம் ....

அந்த பொற்காலம் '' எப்போது தான் நமக்கு ....இல்லை .... நம் நகர் மன்றத்துக்கு வருமோ ......... >> அந்த பொற் காலத்தை நாம் யாவர்களும் எதிர் நோக்கி காத்து உள்ளோம் <<<< வஸ்ஸலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [02 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31773

ஒப்புக்காக எனது எதிர்ப்பைப் பதிவுசெய்தேன். cp

இதுமுன் நடைபெற்ற கூட்டத்தின் போது உள்ள சில எதிர்ப்பகளை சும்மா ஒப்புக்காக தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தேன் என்று எடுத்து கொள்ளலாமா...! அல்லது - இனி நடக்கவிருக்கும் கூட்டத்தில் வைக்க உள்ள தீர்மானங்களில் உங்களின் சில எதிர்ப்பகளை சும்மா ஒப்புக்காக தனது எதிர்ப்பைப் இவர் பதிவு செய்கிறார் என்று கூட்டத்தின் பார்வையாளர்களும், ஆணையரும், அங்குள்ள அரசு ஊழியர்களும், இணையதள (மீடியா) செய்தியாளர்களும் எடுத்து கொள்ளலாமா...?

சும்மா ஒப்புக்காக....! சும்மா உப்புக்காக...! இது என்ன கேணிக்கை மைதான கூட்டமா...!

மேலே பதிந்து இருக்கும் சகோதரர் சொல்வது போலே... “மிட்டாய் வாங்கித் தராவிட்டால் சோறு திங்க மாட்டேன்ணு அடம் பிடிக்கும் குழந்தையைப்போல்... சின்ன பிள்ளை தனமாக அல்லவா இருக்கு.

இவ்வளவு தான்...! தாங்களின் துணை தலைவர் நடப்பு நகராட்சி அனுபவம் உள்ளது என நினைக்க முடிகின்றது...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved