Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:47:20 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12423
#KOTW12423
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 27, 2013
மீண்டும் தமிழகத்தில் மின் வெட்டு படலம்! தமிழகத்தை இருளில் தள்ள மத்திய அரசு நிறுவனங்கள் சதி செய்வது போன்ற சந்தேகம் எழுந்துள்ளது என பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2964 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக - உற்பத்திக்கு அதிகமாக மின்சாரம் பயன்பாடு இருப்பதால், அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவிக்கு வந்தப்பிறகும் தொடர்ந்த இந்த சூழல், கடந்த சில மாதங்களாக பெரும் அளவில் குறைந்து, சீரான மின் விநியோகம் மாநிலம் முழுவதும் நிலவிவந்தது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சென்னை தவிர மாநிலத்தின் இதர பகுதிகளில் மீண்டும் நீண்ட நேரங்கள் மின் விநியோகம் தடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் சாமானிய மக்கள், தொழிற்சாலைகள் என பலரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து - தமிழக முதல்வர், நேற்று (நவம்பர் 26) தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் IAS, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே. சண்முகம் IAS, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் கு.ஞானதேசிகன் IAS, உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி IAS, வேளாண்மைத் துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா IAS, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் கே. பனிந்திர ரெட்டி IAS மற்றும் அரசு உயர் அலுவலகர்கள் கலந்துக்கொண்டனர்.



இதற்கிடையில் தமிழகத்தை இருளில் தள்ளுவதற்காக, மத்திய அரசு நிறுவனங்கள் சதி செய்வது போன்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும், எனவே, இதில் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைச் சீர்செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விபரம் வருமாறு:

தமிழகத்தில் இந்த மாதம் (நவம்பர்) இரண்டாவது வாரத்தில் இருந்து திடீரென கடும் மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்.

கடந்த 2011-இல் தமிழக முதல்வராக (நான்) பொறுப்பேற்ற போது, மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு இருந்தது. திமுக ஆட்சியின் செயல்படாத தன்மையால் இந்த நிலைமை ஏற்பட்டது. எனவே இந்தத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக புதிய அனல்மின் நிலையத் திட்டங்களை உருவாக்கியது, மாநில அரசுக்குச் சொந்தமான அனல்மின் நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்தியது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சாதகமான நடவடிக்கை இல்லை:

மேலும், மாநிலங்களுக்கு இடையிலான மின்கடத்தும் வழித்தடங்களை அதிகப்படுத்த வேண்டும் என தங்களுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறேன். இதன்மூலம், மிகையளவு மின்சாரத்தைக் கொண்டிருக்கும் மாநிலங்களிடம் இருந்து தமிழகத்துக்கு மின்சாரத்தை வாங்க முடியும். மத்திய மின் தொகுப்புகளில் இருந்து கூடுதலாக மின்சாரத்தை ஒதுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், இதற்கு மத்திய அரசு சாதகமான பதிலைத் தரவில்லை.

இந்நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஜூலையில் இருந்து நல்ல பலன்கள் கிடைத்தன. மத்திய அரசின் உதவியில்லாமலேயே மின்சாரத் தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டது. இதனால் கடந்த ஜூலையில் இருந்து நவம்பர் மாத மத்தியில் வரை மாநிலத்தில் மின்வெட்டே இல்லை.

இதுபற்றி சட்டப்பேரவையில் கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று, 4 ஆயிரம் மெகாவாட் தட்டுப்பாடு பூர்த்தி செய்யப்பட்டது எனப் பெருமிதப்பட்டேன். 2014 ஆம் ஆண்டில் இருந்து மின் மிகை மாநிலமாகத் தமிழகத்தை மாறுவதற்குத் தேவையான திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தேன்.

மின்சார விநியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதைக் கண்டு, மக்கள் மகிழ்ச்சி அடைந்து அரசைப் பாராட்டினர். இந்தநிலையில் மாநிலத்தில் மின்சார நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இதற்குக் காரணம், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள உற்பத்திக் குறைபாடாகும்.

மத்திய மின் உற்பத்தி நிலையங்கள்:

மத்திய அரசு மற்றும் அதன் பொதுத் துறை நிறுவனங்களான தேசிய அனல்மின் கழகம் (என்.டி.பி.சி.), பாரத மிகுமின் நிறுவனம் (பெல்), இந்தியன் ஆயில் நிறுவனம், இந்திய நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றில் இருந்து 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழகத்துக்கு அளிக்கப்படுகிறது. அதில் இப்போது எதிர்பாராத வகையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

வட சென்னை அனல்மின் நிலையத்தின் 600 மெகாவாட் திறனுடைய இரண்டு அலகுகளில் கடந்த 16 ஆம் தேதியன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்துக்கு உரிய காரணம் கூறப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட அலகுடன், மற்றொரு 600 மெகாவாட் திறனுடைய அலகினை பெல் நிறுவனம் தனியாக இயக்கி வருகிறது.

சென்னை அருகே வல்லூரில் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் மற்றும் தேசிய அனல்மின் கழகம் கூட்டு ஒப்பந்த முறையில் 500 மெகாவாட் திறனுடைய இரண்டு அலகுகளை இயக்கி வருகின்றன. இந்த இரு அலகுகளில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. ஆனால், கடந்த 14 ஆம் தேதி முதல் நிலக்கரி தட்டுப்பாட்டினால் ஒரு அலகில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

வல்லூரில் மட்டுமின்றி, தமிழ்நாடு மின்சார உற்பத்திக் கழகத்தின் அனைத்து அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம்தான் நிலக்கரியை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்தின் பங்கு 1,113 மெகா வாட் ஆகும். ஆனால், தற்போது 777 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது. என்.எல்.சி. அலகுகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 336 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கல்பாக்கம் மற்றும் கர்நாடகத்தின் கைகா அணுமின் நிலையங்களில் உற்பத்தி இல்லாததால் 241 மெகா வாட் மின்சாரம் கிடைக்கவில்லை. நாப்தா மூலமான மின் உற்பத்திக் திட்டத்துக்குப் போதிய மூலப் பொருளை இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்காததால் அந்த உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

சதி நடக்கிறதோ என சந்தேகம்:

இதனால் நவம்பர் மாத மத்தியில் இருந்து மீண்டும் மின்வெட்டு அமல்படுத்த வேண்டிய நிலை உருவாகிவிட்டது. தேசிய அனல்மின் கழகம் மற்றும் பெல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மின்உற்பத்தி நிலையங்கள் ஒரே நேரத்தில் இயல்பாக செயலிழந்து விட்டன என்பதை தமிழக மக்களால் சுலபமாக நம்ப முடியவில்லை.

மத்திய மின் உற்பத்தி நிலையங்களின் மோசமான செயல்பாடுகளால் மின்சார உற்பத்தியில் தொடர் பாதிப்பு ஏற்படுமானால் தமிழகத்தை இருளில் தள்ள சதி நடக்கிறதோ என்ற முடிவுக்கு மக்கள் வரக் கூடும்.

எனவே, மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் முழுத்திறனுடன் உற்பத்தியைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய ஆற்றல் மற்றும் நிலக்கரித் துறையினருக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் கடிதம் முழுமையாக ஆங்கிலத்தில் ...





தகவல்:
தினமணி
மற்றும்
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மீண்டும் திரும்பிப்பார்....
posted by M.S.ABDULAZEEZ (Hk (camp)) [27 November 2013]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 31701

அம்மி.. ஆட்டுக்கல்.. உரல்... ஓலை விசிறி..சிமிலி விளக்கு அரிக்கன் விளக்கு போன்ற நவீன கை வேலை பொருட்கள் வாடகைக்கு விடப்படும் முந்துங்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:.மூன்றாண்டு சாதனைகள் பேசும் மூவாயிரம் ஆண்டுகள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [27 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31706

கலைஞர் ஆட்சியில் இரண்டு மணி நேர மின்வெட்டைக்கூட பொறுக்காத மக்கள் அந்த ஆட்சி அகல பல காரணங்களில் பிரதான காரணமாக மின்வெட்டை முன் நிறுத்தினர்!

கலைஞரை கேட்டால் முந்தய ஆட்சியில் மின் உற்பத்தி செயல் திட்டம் போதுமான அளவு உற்பத்தியை தரவில்லை,மின் கலங்கள் போதிய அளவு நிறுவப்படவில்லை, இது அவர்களின் தவறான ஆட்சியின் விளைவுதான் என்றார்!

ஒரு நாளைக்கு பத்துமணி நேரம் மின்வெட்டாகும் அம்மாவை கேட்டால்,முந்திய ஆட்சியாளரும் ,தற்போது மத்திய அரசும் தான் மின்வெட்டு பாதிப்பு ஏற்பட காரணமானவர்கள் என்கிறார்!

தேர்தல் வாக்குறுதியில் அம்மாவின் வசனம்:
இன்னும் ஆறு மாதத்திற்குள் தமிழகம் மின்வெட்டில்லாமல், இது,நடுநிசியா? நண்பகலா? என்ற அளவிற்கு மின்மிகையுடன் இரவும் பகல் போல் பளிச்சென்று ஜொலிக்கும்,

முந்திய ஆட்சியாளர்களின் மின்வினியோக ஆட்சித்திறமை இல்லாததினால்தான் இந்தஅவதி, இனி நிம்மதிப் பெறப் போகிறீர்கள். மின்வெட்டின் வேதனையில் இருந்து, . என்று சபதம் ஏற்று அரியணையில் அமர்ந்த அம்மாவின் ஆட்சி மூன்றாண்டை நெருங்குகிறது.(மூங்கிலால் அமைந்த மேடை சற்று கோணலாக இருக்கிறது ஆகவே இம்மேடை சரியில்லை என்று ஆடத்தெரியாத கலை தொழில் கலைஞன் சொன்னானாம்,அது போல) ,

மத்திய அரசு பழிவாங்குகிறது மகாஜனங்களே நீங்களே கேளுங்க்குள் என்று கோரிக்கை விடுகிறார் மூன்றாண்டின் ஆட்சிப்பலனை மூவாயிரம் ஆண்டுகள் பேசுவார்கள் என்ற பொன்னெழுத்துக்கள் பதிந்த பிரமாண்டமான பேனரில் பட்டி, தொட்டி எங்கும் பூத்து குலுங்கும் புரட்சி தலைவி அம்மா அவர்கள்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...வருந்துகிறோம் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [27 November 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31707

மீண்டும் தமிழகத்தில் மின் வெட்டு படலம்! தமிழகத்தை இருளில் தள்ள மத்திய அரசு நிறுவனங்கள் சதி செய்வது போன்ற சந்தேகம் எழுந்துள்ளது என பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஆரம்பத்தில் முந்திய தி .மு . க . ஆட்சியை குறை கூறி , தேர்தல் நேரத்தில் இருந்த இரண்டு மணி நேர மின் வெட்டை காரணம் காட்டி மக்களிடம் ஒட்டு வாங்கி ஆட்சியை பிடித்த ஜெயா அவர்கள் , இன்று மத்திய அரசு நிறுவனங்கள் சதி செய்வதாக மத்திய அரசு மீது பழி போடா நினைக்கிறார் . இன்னும் யார் மீது எல்லாம் பழி போடா பாக்கி உள்ளதோ ?

என்று தான் நம் தமிழகம் வெளிச்சம் பெறுமோ ?

வல்ல நாயனை தவிர வேறு யாராலும் அதை அறிய முடியாது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [27 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31708

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது மரியாதைக்குரிய. தமிழக முதவர் செல்வி.அம்மா அவர்களின் .... ஆதங்கமும் ,,மன வேதனையும் ,, முற்றிலும் நியாயமான ,, கோரிக்கையே .......தமிழக மக்களின் மனசங்கடமான இச் சிக்கலில் இருந்து ...நம்மைI முழுமையான வெளிச்சத்துக்கு நம் பாரத பிரதமர் அவர்கள் கொண்டு வருவார்கள் என்று தமிழக மக்கள் நம்புகிறார்கள்

.....நம் பாரத பிரதமர் அவர்கள் 'இக் கோரிக்கையில்'' முழு ஆதரவு அளித்தால் தான் ....வரகூடிய பாராளுமன்ற MP தேர்தலில் நம் தமிழக மக்களில் முழுமையான ஆதரவு நிச்சயம் தமிழக காங்கிரசுக்கும் ....+ .... அவர்களில் ஆதரவு பெற்ற கூட்டணிக்கும். கிடைக்க வாய்ப்பு உண்டு ...என்றும் கூறலாம்.........

நம் மரியாதைக்குரிய தமிழக முதல்வர். அம்மா அவர்களின் கடிதத்தில் மன வேதனை கலந்த குமுறல் தெரிகிறது ...தமிழக மக்களின் நலனில் முழு அக்கறை இருப்பதும் தெரிகிறது .....தமிழகத்தில் இடைப்பட்ட காலதில் மின்சார பிரச்சனைகளை அம்மா அவர்கள் ஓரளவு நீக்க '' போர்கால'' அடிப்படை முயற்ச்சிகளை எடுக்கத்தான் செய்தார்கள் என்பதும் உண்மையே ...........

பொது மக்களின் அத்தியாவசிய கடமைகளில் முக்கியமானது ....மின்சாரம் தான் ...இதில் துரோகம் யார் இழைத்தார்களும் .... அவர்கள் கண்டிப்பாகவே தேர்தல் நேரத்தில் பொது மக்களின் தீர்ப்பை நன்கு உணர்வார்கள் என்பதும் உண்மையே .................

மின்சார பாதிப்பால் தமிழகத்தில் பொது மக்களும் பாதித்து .... தொழிற்சாலையும் ( பாதிக்க ) முடங்க கூடிய வாய்ப்பும் இருப்பதால் தான் .....மக்களில் குமுரலான வேதனை .....

>>>> அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாகவும் ஆமீன் <<<<

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தமிழக அரசின் மின்வெட்டு சாதனை.
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [27 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31710

நம் முதல்வர் அவர்களுக்கு ஆ ஊ என்றால் எல்லாத்துக்கும் மத்திய அரசு தான் காரணம். அவங்க வீட்டில் தண்ணீர் வரவில்லையென்றாலும் மத்திய அரசு தான் காரணம்.

ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த சட்டமன்ற கூட்டத்திலும், மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறும் என்று அறிவித்தார். ஆனால் இந்தியாவில் அதிக மின்வெட்டு மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

மின்மிகை மாநிலமாக மாறினால், என்னுடைய (தன்னுடைய) ஆட்சியின் சாதனை. மின்வெட்டு மாநிலமாக மாறி, மக்கள் கொந்தளித்தால், மத்திய அரசுதான் காரணம்.

எப்போது கரெண்ட் போகும், எப்போது வரும்? என்று தெரியாமல் மக்கள் அவதிபடுகின்றனர். முந்தய தி.மு.க ஆட்சி மின்வெட்டு காரணமாக தான் தோற்றது. அந்த மின்வெட்டை தங்கள் கட்சிக்கு சாதமாக மாற்றி, ஆட்சியில் அமர்ந்தார்கள் . இப்போ அதே மின்வெட்டு பிரச்சனை வரும்போது, மத்திய அரசை குறை சொல்கிறார்.

மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் பழுதுக்கு யார் காரணம் என்று தீவிரமாக விசாரித்து, அதில் யாருடைய சதிசெயலும் இருந்தால், தண்டனை கொடுங்கள். தமிழக மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுங்கள்.

சென்னையில் வசிப்பவர்களுக்கு மட்டும் மின்வெட்டே இல்லை. ஆனால் சென்னையை தவிர, மொத்த தமிழகத்திலும் 10 மணி நேர மின்வெட்டு. சென்னையும் தமிழகத்தை சேர்ந்தது தானே.

இப்படி மத்திய அரசை குறை கூறாமல், மாநில (என்) அரசு, மின்வெட்டை போக்க நடவடிக்கை எடுத்து, மின்வெட்டு இல்லாத மாநிலமாக ஆக்க முயற்சி எடுங்கள். இல்லையென்றால், முந்தைய தி.மு.க அரசுக்கு ஏற்பட்ட கதிதான் இந்த அ.தி.மு.க (என்) ஆட்சிக்கும் ஏற்படும்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...செல்லுமிடத்து சினம் காக்க..
posted by mackie noohuthambi (kayalpatnam) [27 November 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 31712

செல்லுமிடத்து சினம் காக்க, காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் என்று வள்ளுவம் சொல்கிறது.

கலைஞர் ஆட்சியில் மின்வெட்டு இருந்தபோது தனக்கு முன்னுள்ள ஆட்சியின் இயலாமையை குறை சொல்வார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று புரட்சி தலைவி சூளுரைப்பார். இவர் ஆட்சியில் மின்தடை ஏற்படும்போது கலைஞரையும் சாடுவார், பொருளாதார மேதையையும் சாடுவார்.

தன் முதுகை யாருமே பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. மின் உற்பத்திக்கு என்னதான் முயன்றாலும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட இறை சக்தியை குறைத்து மதிப்பிடுவதால் வரும் "தான்" என்ற மமதை கர்வம்தான் எல்லோரையும் கவிழ்த்து விடுகிறது.

ஒரு செய்தி எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு கிராமத்துவாசி ஒரு நகரத்தில் வசிக்கும் தன் நண்பரை பார்க்க போகிறார்.பெரிய அலுவலகம் அது. உள்ளே சென்றதும் அவனை வரவேற்று உட்கார சொல்கிறார்.வேர்வையாக இருக்கிறதா இதோ காற்று வருகிறது பார், இருட்டாக இருக்கிறதா, இதோ வெளிச்சம் வருகிறது பார், இன்னும் குளிர் காற்று வேண்டுமா இதோ பார்.உலகில் நடப்பதை இங்கிருந்தே பார்க்கணுமா இதோ பார்..எல்லாம் எனது கைக்குள் அடக்கம் என்று கூறி தனது விரிந்த மேசைக்கு கீழ் இருந்த ச்விட்ச்களை போட்டு கிராமவாசியை அதிர வைக்கிறான் நண்பன்.

பேசிக் கொண்டே இருந்த பொது மின் தடை ஏற்பட்டது. எல்லாம் முடிந்து இருள் சூழ்ந்து விட்டது. இப்போது கிராமவாசி கேட்டான், "ஏன் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டாய்?"." நான் நிறுத்தவில்லை, கரண்ட் போய்விட்டது " என்றான் நண்பன். "என்ன, எல்லாம் உனது கைக்குள் அடக்கம் என்று சொன்னாயே? "இப்போது அந்த கர்வம் பிடித்த நண்பன் தலை குனிந்தான்.

"எனக்கும் மேலே ஒரு சக்தி மின்வாரியம். அங்கு தடை ஏற்பட்டால் எல்லாம் போய்விடும்". அதையும் மீறிய பெரிய சக்தி இறைவன். இதை எல்லோரும் எல்லா காலமும் நினைவில் வைத்து நடப்பது எல்லோருக்கும் நல்லது.

இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான், இல்லை ஒரு தெய்வம் என்று சொல்லவில்லை என்றான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. திமுக, அதிமுக அரசுகளே காரணம்.
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [27 November 2013]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 31713

தமிழ் நாட்டின் துரதிஷ்ட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்..1967 க்கு பிறகு ஏற்பட்ட திமுக , அதிமுக அரசுகள் நீண்டகால பயனுள்ள திட்டங்களின் அடிப்படையில் ஒருபோதும் செயல்படுவதில்லை. ஒருவர் தோற்றுவித்த திட்டங்களை அடுத்து வரும் அரசு தொடர்வதில்லை.இதனால் மக்களின் வரிப்பணம் பாழாகிறது..

எல்லாம் கவர்ச்சி திட்டங்கள். இலவச திட்டங்கள்.குறுகிய கால திட்டங்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்து செயல்படுத்தும் திட்டம் அவர்கள் ஆட்சி காலத்திலேயே பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையோடு செயல்படுத்தும் திட்டங்கள் .வாக்கு வங்கிக்காக செயல்படுத்தும் திட்டங்கள்தான்.முந்திய அரசு மேற்கொண்ட பல மின் திட்டங்களை இவர்கள் செயல்பாட்டுக்கு வர ஒத்துழைப்பதில்லை.இதுதான் இங்குள்ள பிரச்சனை.

உதாரணமாக நம் அருகிலுள்ள உடன்குடி அனல் மின் திட்டம் என்ன பாடுபடுகிறது என்று பாருங்கள்.தூத்துக்குடி அருகே வேம்பாரில் BSA குழுமத்தின் தனியார் மின் திட்டம் . ஆமை வேகம்.முந்திய ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட திட்டம் , பின் வரும் ஆட்சியில் செயல்வடிவம் கொடுப்பதில் இழுபறி.இதுபோல இன்னும் பல மின்திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன. மிந்திட்டம்தான் என்றில்லை. பல்வேறு திட்டங்களும் இதைபோன்றுதான் இழுபறி.

திமுக , அதிமுக அரசுகள் மத்திய அரசோடும் எப்போதும் ஒத்துழைப்பதில்லை.இதனால் மத்திய அரசின் நிதி உதவி நமக்கு தாராளமாக கிடைப்பதில்லை.மத்திய அரசின் திட்டங்களையும் அரசியல் காழ்புனச்சி காரணமாக இங்கு இவர்கள் துரிதமாக செயல்படுத்த விடுவதில்லை .

உதாரணமாக கூடங்குளம் அணு மின்திட்டம். மாநில அரசு அரசியல் சூழல் காரணமாக எதிர்ப்பு ஆர்பாட்டங்களை தூண்டிவிடுவது. அல்லது அவர்களை முறையாக ஒடுக்குவதில்லை.இது எப்போதோ முடிவடைந்துருக்க வேண்டிய திட்டம். பல வருடம் தாமதம்.இதைப்போன்றுதான் கெயில் நிறுவனத்தின் எரிவாயு விநியோக குழாய் அமைக்கும் திட்டம். இப்படி எல்லா திட்டங்களுக்கும் இவர்கள் முட்டுக்கட்டை போடுவதால் மத்திய அரசும் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி அரசு அமைந்தால் , இதற்கெல்லாம் ஒரு விடிவு ஏற்படும்.தமிழகம் வேகமாக முன்னேறும்.மின் திட்டங்கள் மட்டுமில்லாமல் , தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், சாலை வசதிகள், ரயில்பாதை வசதிகள் போன்ற பல விஷயங்களில் தமிழகம் அதிகம் பயன்பெற முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved