Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:09:24 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12352
#KOTW12352
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 17, 2013
விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2883 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற சனிக்கிழமை அன்று பிரதமர் அலுவலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

ஏற்கனவே பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ள சச்சினும் (40), சி.என்.ஆர். ராவும் (79) இப்போது பாரத ரத்னா விருது பெற்றுள்ள 41 தலைசிறந்த பிரபலங்களின் பட்டியலில் இணைந்துள்ளனர்.

முதல் விளையாட்டு வீரர்...

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்த சச்சின் 24 ஆண்டுகளாக அந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். விளையாட்டு உலகின் உண்மையான இந்தியத் தூதராக அவர் விளங்குகிறார். அவரது சாதனைகள் ஈடுஇணையற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாரத ரத்னாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் விளையாட்டுத் துறையில் பாரத ரத்னா விருதைப் பெறும் முதல் நபர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் சச்சின் பேசியபோது, இந்த விருதை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

3-வது விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ்...

பேராசிரியர் சிந்தாமணி நகேச ராமச்சந்திர ராவ் (சி.என்.ஆர். ராவ்), வேதியியல் துறையின் தலைசிறந்த விஞ்ஞானி. இதுவரை 1,400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

சர் சி.வி.ராமன், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு அடுத்தபடியாக பாரத ரத்னா விருது பெறும் 3-வது விஞ்ஞானி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தற்போது அவர், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் குழுத் தலைவராக உள்ளார். செவ்வாய்க் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய திட்டத்துக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டவர்.

4 ஆண்டுகளுக்குப் பின்…

கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குடிமக்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. 1954 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 41 பேர் பாரத ரத்னா விருதினைப் பெற்றுள்ளனர். கடைசியாக ஹிந்துஸ்தானி இசை மேதை பீம்சென் ஜோஷிக்கு கடந்த 2009-ல் பாரத ரத்னா வழங்கப்பட்டது. அதன் பின்னர் யாருக்கும் விருது வழங்கப்படவில்லை.

4 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது சச்சினுக்கும் சி.என்.ஆர். ராவுக்கும் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. 42-வது நபராக சி.என்.ஆர். ராவும், 43-வது நபராக சச்சினும் விருதினைப் பெற உள்ளனர்.

புகைப்படங்கள் மற்றும் தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...baratharathna
posted by drnoordeen (muscat) [17 November 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 31517

சைண்டிச்ட்கு ஒகே. கிரிக்கெட் விளையாட்டிற்கு விருது தேவையா. இவர் 110 கோடிக்கு பாம்பேயில் வீடு கட்டியிருக்கிறார். இம்ரான் கான் பாகிஸ்தானில் கான்செர் ஹோச்பிடல் கட்டுகிறார். இது தான் வித்தியாசம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வாழும் காலத்தில் பாராட்டுங்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31520

"நான் இறந்த பிறகு எனக்கு ஒரு தாஜ் மஹால் கட்ட வேண்டாம். நான் வாழும் காலத்தில் நான் நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு குடிசை கட்டி தாருங்கள்" என்று ஒரு புது கவிதை கூறுகிறது. சச்சின் சாதனைகளை அவர் விளையாட்டை ரசித்தவர்களால்தான் உணர முடியும். ஒரு விலை உயர்ந்த மாணிக்க கல்லை. மர வியாபாரி, மீன் வியாபாரி இருவரிடமும் காட்டினால் அவர்கள் மதிப்பீடு அவர்கள் தொழில் அளவுதான் இருக்கும். விமர்சனங்களும் அப்படித்தான்.

ஆனால் சச்சின் அளித்த பேட்டியை கவனமாக கேட்டவர் யாரும் இந்த கிரிக்கெட் பிதா மகனுக்குள்ளே ஒரு தன்னடக்கமுள்ள, தான் கடந்து வந்த பாதையில் நின்ற சாமான்ய மனிதனுக்கும் நன்றி சொல்லும் உயர்ந்த உள்ளம் உள்ள பெரிய மனிதனை காண முடிந்திருக்கும்.

பாரத ரத்னா என்ற உயர்ந்த விருது நமது நாட்டில் ஒருவர் சாதனைகள் செய்து வாழ்ந்து மறைந்த பிறகுதான் கொடுப்பது வழக்கம்.

சச்சின் வாழும் காலத்திலேயே அது கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது. அதே விருது விஞ்ஞானி ராவ் அவர்கள் சாதனைகளை பாராட்டி வளங்கப்பட்டுள்ளபோது அவரது வயதையும் பாருங்கள். இந்த நிலை மாற வேண்டும். சாதனையாளர்களை அடையாளம் காண இவ்வளவு கால அவகாசம் இந்த அரசுக்கு தேவையா? மாற்றி யோசிக்க பழக வேண்டும்.

நம் நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் எல்லோருமே 80 வயதை தாண்டியவர்களாகதான் இருக்க வேண்டுமா? ஒரு நாட்டில் சமுதாயத்தில் இளைஞர்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அங்குதான் மறுமலர்ச்சி ஏற்படும்.

இந்த வகையில் நபிகள் நாயகம் மிக சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்து இருக்கிறார்கள். YA MAUSHARAS SHABAAB! இளைஞர்களே என்றுதான் பல இடங்களில் அழைத்திருக்கிறார்கள், அவர்களை முன்னிலைப் படுத்தி இருக்கிறார்கள், கௌரவப் படுத்தி இருக்கிறார்கள். எனவே நல்லவைகளை பாராட்டுவோம், சாதனையாளர்களை பாராட்டுவோம். வயது ஒரு பொருட்டல்ல. மனதுக்கு வயது இல்லை. வாழ்த்துவதற்கு உயர்ந்த உள்ளம் வேண்டும்.

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் என்பது பைத்தியக்காரர்களின் பிதற்றல். அரசியல்வாதிகளின் புலம்பல்

LONG LIVE SACHIN TENDULKAR, SON OF YOUNG INDIA, DREAM OF INDIAN CRICKET YOUTHS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [18 November 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 31525

சச்சின் திறமையானவர்தான் . அதேசமயம் இவரைவிட அதிகம் திறமை உள்ளவர்கள் மறைக்கப்பட்டு விட்டனர் என்பதுதான் உண்மை . இன்று ஒரு மேட்சில் சொதப்பிய திறமைசாலிகளுக்கு அடுத்த மேட்சில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு . ஆனால் இவருக்கோ , சதத்தில் சதமடிக்க பல மேட்சுகளை வீணடிக்க வாய்ப்பு .

இவர் பணத்திற்காகத்தான் விளையாடினார் . நாட்டை மறந்து விட்டார் . இவர் ஒவ்வொரு முறையும் ஏதாவது பதக்கங்கள் , பாராட்டுக்கள் பெறும்போதும் , அதை தந்தைக்கு அர்பணிக்கிறேன், தாயாருக்கு அர்பணிக்கிறேன் , மனைவிக்கு அர்பணிக்கிறேன் என்றுதான் சொன்னாறேதவிர , இந்த நாட்டுக்கோ , நாட்டுக்காக உயிர் நீத்த தலைவர்களுக்கோ அர்பணிக்கிறேன் என்று ஒருநாளும் சொன்னதில்லை .

இவர் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்ததற்கு காரணம் , இந்த நாடும் , இந்த நாட்டின் வர்த்தக நிருவனங்களும்தானே தவிர , இவருடைய தாயும் , தந்தையும் அல்ல .

தன்னுடைய தரத்தை உயர்த்திய இந்த நாட்டை மதிக்க தெரிந்திருக்க வேண்டும் . சச்சின் அதை மறந்து விட்டார் .

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Sithan Niyaz (Riyadh) [18 November 2013]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 31528

Bharath Rathna Award for Cricket Player ....................... "RIDICULOUS"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தீவிர தெண்டிப்பாளன் எவோனோ அவனே வெற்றியாளன்-நபிமொழி!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [18 November 2013]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31530

சச்சினை சாடுகிறார்கள்,அது சரியா? தவறா? என்று ஆராய விரும்ப வில்லை?அது அவரவர் சொந்த கருத்து கலந்த உரிமை !

ஆனால் என்உள் மனதில் எழும் கேள்வி என்னவெனில், "முஹம்மது அபூபக்கர்" என்பவர் இதே சச்சினின் சாதனையை போல் சாதித்து 'பாரத ரத்னா" விருது பெற்றால் அப்பொழுது எழும் விமர்சனங்களையோ,வரவேற்ப்புகளையோ, வாழ்த்துகளையோ என்எண்ண அலைகளில் இழையோட விட்டு சிந்திக்கிறேன்,என் இதைய வினாவிற்கு சிரிப்புதான் விடையாய் வருகிறது!

ஏன் சிரிக்கிறாய் என்று தயவுகூர்ந்து எவரும் கேட்காதீர்கள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. முக நூலில் இருந்து...
posted by HydroosAADHIL (KOZHIKKODE-KERALA) [18 November 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31533

தமிழர்களே சிந்திப்பீர்...

யார் இந்த சச்சின் தென்டுல்கர்.?

ஏன் இந்த நபருக்கு இவ்வளவு மரியாதை?

இவர் என்ன இந்தியாவின் முதல் குடிமகனா?

ஏன் இவருக்கு கவுரவ எம்.பி. பதவி?

நாட்டின் வளர்ச்சிக்கு ஏதேனும் பாடுபட்டாரா?

இவரும் நம்மைப்போல் ஒரு சாதாரண இந்தியக் குடிமகன்தான்...பிறகு ஏன் இவருக்கு பாரத ரத்னா விருதிற்கு பரிந்துரைக்கின்றனர்.?

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதேனும் பங்களிப்பு செய்தாரா?

கிரிக்கெட் விளையாடினார் என்பதற்கா?

அப்படி அவர் நம் நாட்டிற்காக செய்தது என்ன?

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.இவர் கிரிக்கெட் விளையாடி சாதனை புரிந்ததர்க்கும் , நம் நாட்டிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

ஏனெனில் , BCCI என்பது இந்திய அரசின் நிறுவனம் இல்லை.அது தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இயங்கும் ஓர் தனியார் விளையாட்டு அணி மட்டுமே.

ஆக ஒரு தனியார் அணியின் விளையாட்டு வீரர் ஒருவருக்குத்தான் இந்திய அரசு, நாட்டின் உயர்ந்த விருதினை கொடுக்க முயல்கிறது .

நாட்டிற்காக இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத இவருக்கு , மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை அரசு இவருக்கு பரிசுப்பொருளாக கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்திய தேசியக்கொடி பொரித்த தலைக்கவசத்தை அணிந்து விளையாடி சம்பாதித்தது மட்டுமல்லாமல் விளம்பரங்களின் மூலமும் சம்பாதித்து அப்பணத்தையெல்லாம் வெளிநாடுகளில் முதலீடு செய்து கொண்டிருக்கிறார் இவர்.

இதன்மூலம் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய வரிப்பணம் வேறு நாட்டிற்கு போய்ச்சேர்கிறது.

இவர் ஏதோ தன் உயிரை பணையம் வைத்து நாட்டிற்கு உழைத்ததை போல,இவரைத்தான் கிரிக்கெட்டின் கடவுள் (?) என்று விபச்சார ஊடகங்களும், சிந்திக்கும் தன்மையற்ற இவரின் ரசிகர்களும் தலைமேல் தூக்கிவைத்தக்கொண்டு கொண்டாடிகொண்டிருப்பவர்கள் இனியாவது திருந்துவார்களா..?

இந்தியர் என்பதைத்தவிர இவரால் நாட்டிற்கு எள்ளலவும் நன்மையில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.!!

ஆக்கம் - விக்கிரவாண்டி-பக்கம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. சரியான சாட்டை அடி
posted by Sithan Niyaz , Pfizer Inc (Riyadh) [19 November 2013]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 31540

நல்ல சாட்டை அடி குடுத்தீங்க கிரிக்கெட் வீரர்களை தலையில் வைத்து கொண்டாடுகிறவர்களுக்கு !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...ஒருநாட்டின் கவுரவத்தின் இலக்கணம்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (yanbu) [19 November 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31547

ஒருநாட்டின் கவுரவமும், இறையாண்மையும் பல துறைகளில் காக்கப்படுவதும் போற்றப்படுவதும் அத்துறைகளின் நாம் மற்ற நாடுகளை விட முன்னேற்றம் அடையும் வேலையில்தான், நாட்டின் பல துறைகள் என்பதில் விளையாட்டு துறையும் அடங்க்கியதுதான் என்பது இளம்பிள்ளகளுக்கு கூட தெரிந்த உண்மை!

நடிகைகள் எல்லாம் இன்று மாநிலத்தை ஆண்டு நாளைக்கு பிரதமராவதற்கு தகுதி உள்ளவர் என்று தலையில் வைத்து கூத்தாடும் இந் நாட்டில்,

முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணா அவளையும் விடாதே, அவள் வயற்றில் இருக்கும் பிஞ்சும் உயிரோடு வெளிவரக்கூடாது என்று வெறியாட்டம் ஆடிய, ஒர் இனத்தை அழிக்கத்துடிக்கும் ஒரு வெறிநாய் பிரதமர் பதவிக்கு போட்டியிடலாம் இந்த நாட்டில்,

ஆனால், நம் நாட்டின் விளயாட்டு துறை கவுரவத்தை இக்கலணி புகழ வேண்டும் என்று அதி தீர சாதனைகள் புரிந்த ஒரு விளையாட்டு வீரரை புகழ் முனைவோருக்கு கிடக்கும் விமர்சனம்,

"விபச்சார ஊடகங்களும், சிந்திக்கும் தன்மையற்ற இவரின் ரசிகர்களும் தலைமேல் தூக்கிவைத்தக்கொண்டு கொண்டாடிகொண்டிருப்பவர்கள் இனியாவது திருந்துவார்களா?"

"நல்ல சாட்டைஅடி குடுத்தீங்க கிரிக்கெட் வீரர்களை தலையில் வைத்து கொண்டாடுகிறவர்களுக்கு!"

என்கின்ற அர்ச்சனை ஆராதனைகளை ஆழ சிந்தித்து கூறுபவர்களின் பெருந்தன்மைக்கு எத்தனை "பலே" "பலே" போடலாம் என்று அவர்களோடு ஒத்தகருத்து சிந்தனையாளர்கள் சொன்னால் அதன் படி போடலாம்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by salih (bangkok) [19 November 2013]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 31560

தமாஸான அரசியல்னா நம்ம இந்திய அரசியல் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. பெறுமதிப்பு மிக்க இந்த மாதிரியான பட்டங்களை யாருக்கு கொடுத்து கவுரவிக்கனும்கிறது தெரியாம என்னமோ அவரு பேசினாராம் இவரு கண்ணுல நீர் வந்துச்சாம் உடனே பாரத ரத்னா பட்டம் கொடுக்க முடிவு பண்ணாங்கலாம் என்னங்கடா பெரிய அநியாயமாகது.

இப்படியே போனால் நாளை மோதிக்கும் விருது. சினிமா கூத்தாடிகளுக்கும், கிரிக்கெட் சூதாடிகளுக்கும் சலுகைகள் வழங்குவதும், வானளாவ புகழவதும் நாட்டுக்கே வெட்கக்கேடு.

இந்திய தமிழ் மீனவன் இலங்கையால் தாக்கப்படும் போது வராத தேசப்பற்று...!

........ஒரு அரசியல்வாதி மக்களை ஏமாற்றும் போது வராத தேசப்பற்று.....!

......ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கும் போது வராத தேசப்பற்று....!

........ஒரு அப்பாவி அநியாக்காரர்களால் பாதிக்கப்படும் போது வராத தேசப்பற்று...!

........வறுமைக்கூட்டிற்கு கீழ் வாழும் ஒரு குடி மகனுக்கு அரசின் திட்டங்கள் போய் சேராத போது வராத தேசப்பற்று....!

........ஒரு இந்தியன் வெளிநாட்டில் அநியாயமாக கொல்லப்படும் போது வராத தேசப்பற்று....!

...........ஒரு மாநில அரசாங்கமே தன் குடிமக்களை கொடூரமாக கொன்றழிக்கும் போது வராத தேசப்பற்று....!

......அட கேவலம் இங்கிலீஷ்காரன் விளையாட்டு கிரிக்கெட்டு பார்க்கும் போது மட்டும் எங்கிருந்துடா வந்து இறங்குது அந்த தேசப்பற்று....?????

.............எல்லாமே விளையாட்டு.........தன் தேசப்பற்று, இறையாண்மை எல்லாத்தையும் கிரிக்கெட்டிற்கு அடகு வைத்து விட்டு... நிற்கிறான் சுதந்திர இந்தியாவின் சாமானிய இந்தியன்....!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved