Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:39:44 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12157
#KOTW12157
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 23, 2013
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறியாளர் சர்வே எண் 278 இடத்தினை ஆய்வு செய்தார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2542 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (DISTRICT ENVIRONMENTAL ENGINEER) கோகுல்தாஸ் நேற்று (அக்டோபர் 22) - காயல்பட்டினம் தென் பாக கிராம எல்லையில் அமைந்துள்ள - முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மானுக்கு சொந்தமான சர்வே எண் 278 இடத்தினை பார்வையிட்டார்.

2009 ஆம் ஆண்டு, இவ்விடத்தை 5 லட்ச ரூபாய் தொகைக்கு, காயல்பட்டினம் நகராட்சிக்கு - குப்பைகள் கொட்டுவதற்காக தருவதாக முன்னாள் தலைவர் தெரிவித்திருந்தார். இது குறித்து தீர்மானமும் அப்போது நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. CRZ எல்லைக்குள் இந்த பகுதி அமைந்திருப்பதால், இது குறித்து மேலும் அதிக விபரங்கள் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கோரப்பட்டிருந்தது. கோரப்பட்ட விபரங்கள் வழங்கப்படாத காரணத்தால், இது குறித்த கோப்புகளை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் - நகராட்சிக்கு திருப்பி அனுப்பியிருந்தது.

தற்போது தமிழக அரசின் பயோ காஸ் திட்டத்திற்கு தேவையான 25 சென்ட் நிலம், நகராட்சியில் தேடப்பட்டு வருகிறது. இச்சூழலில் கடந்த டிசம்பர் மாதம், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மூலம், இதே இடம், முன்னாள் நகர்மன்றத் தலைவரால் - முன் மொழியப்பட்டது.

சமீபத்தில் சர்வே எண்கள் 278, 334/1, 334/2, 334/12, 334/15 மற்றும் 392/5 ஆகிய இடங்களை ஆய்வு செய்து - மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் IAS தனது குறிப்புகளை நகர்மன்றத்திற்கு அனுப்பியிருந்தார். பெருவாரியான உறுப்பினர்கள், பயோ காஸ் திட்டத்திற்கும், நகரின் குப்பைகளை கொட்டவும் - முன்னாள் நகர்மன்றத் தலைவரின், சர்வே எண் 278 இடத்தினை பயன்படுத்த ஆதரவு தெரிவிக்க, அவ்வாரே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சர்வே எண் 392/5 இடத்தில பயோ காஸ் திட்டம் அமைய நகர்மன்றத்தலைவர் பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 19) அன்று நகரில் ஆய்வுகள் மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை அலுவலகத்தின் SUPERINTENDING ENGINEER பூபதியும், சர்வே எண் 278 இல் இத்திட்டங்கள் அமைவதில் உள்ள சிக்கல்களை எடுத்து கூறினார்.

நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் சர்வே எண் 278 ஐ ஆய்வு மேற்கொள்ளும்போது - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், ஆணையர் ஜி.அசோக் குமார், சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ், 5வது வார்டு உறுப்பினர் எம். ஜஹாங்கிர், 18 வது வார்டு உறுப்பினர் ஈ.எம். சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது பொறியாளர் கோகுல்தாஸ், பயோ காஸ் திட்டத்திற்கு இவ்விடம் பொருத்தமில்லை என கருத்து தெரிவித்தார். நகரில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இவ்விடத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, நீண்ட தூரத்திற்கு அனுப்பி வைத்தால், மின் இழப்பு (TRANSMISSION LOSS) ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

குப்பைகளை கொட்டும் தேவைக்கு இவ்விடம் முன்னரே விண்ணப்பிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதை நினைவு கூர்ந்த பொறியாளர் கோகுல்தாஸ், மீண்டும் இந்த இடத்தை அவ்வகைக்கு பரிந்துரை செய்ய - இப்பகுதி கடலின் உயர்நிலை அலை எல்லையில் (HIGH TIDE LINE - HTL) இருந்து எவ்வளவு தூரம் உள்ளது என்று நிர்ணயம் செய்து, அதற்கு மேற்கான நிலங்களை - வருவாய் அதிகாரிகளின் துணைக்கொண்டு தனி உட்பிரிவு (SUB DIVISION) ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். அதன் பின்னரே - இவ்விடம் குறித்து முடிவுகளை கூற இயலும் எனவும் கூறினார்.

குப்பைகளை கொட்ட தேர்வு செய்யப்படும் இடத்தினை சுற்றி, எந்த வளர்ச்சிப் பணிகளுக்கும் அனுமதி இல்லை (NO DEVELOPMENT BUFFER ZONE) என நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மேலும் கோகுல்தாஸ் தெரிவித்தார்.

இந்த விதிமுறையால், முன்னாள் நகர்மன்றத் தலைவர் தர முன்வந்துள்ள 5 ஏக்கர் நிலத்தினை தவிர்த்து - அவரின் இந்த சர்வே எண் (278) நிலத்தில் உள்ள ஏனைய நிலப்பகுதியிலும், (குப்பைகள் கொட்ட வழங்கப்படும் நிலத்தின் எல்லைகள் எவ்வாறு அமையும் என்ற அடிப்படையில்) இந்த சர்வே எண்ணை சுற்றியுள்ள பிற சர்வே எண் நிலங்களிலும், எந்த வளர்ச்சிப்பணிக்கும் அனுமதி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னாள் நகர்மன்றத் தலைவரும், இதனால் பாதிக்கப்படும் இதர நில உரிமையாளர்களும் சம்மதம் தெரிவிப்பார்களா என்பதும் தெளிவில்லை.

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:30 am / 23.10.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by syed ahamed (காயல்பட்டினம்.) [23 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30931

இந்த 278 சர்வே எண்ணை சுற்றியுள்ள பிற சர்வே எண் நிலங்களிலும், எந்த வளர்ச்சிப்பணிக்கும் அனுமதி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னாள் நகர்மன்றத் தலைவரும், இதனால் பாதிக்கப்படும் இதர நில உரிமையாளர்களும் சம்மதம் தெரிவிப்பார்களா என்பதும் தெளிவில்லை. CP

இந்நிலத்தை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற காரணமாக இருந்த நமது நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னாள் நகர்மன்றத் தலைவரிடமும் அவரின் நிலத்திற்கு அருகாமையில் சுற்றியுள்ள இதர நில உரிமையாளர்களிடமும் சம்மதம் (எழுத்து மூலம்) வாங்கி வருவார்கள் என என் போன்று பல தமிழக அரசின் பயோ காஸ் திட்ட ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறோம்.

அன்றைக்கே நமது முன்னால் சேர்மன் மரியாதைக்குரிய மர்ஹூம் M K T அப்பா 7 ஏக்கர் அரசு நிலத்தை இதற்காகவே தொலை நோக்கு சிந்தனையுடன் 1958 இல் நாளையை தலைமுறைகள் பயன் பெரும் வகையில் மிக சிறப்பாக ஒதுக்கி கொடுத்துள்ளார்கள் ஆகவே தயவு செய்து சர்வே எண் 392 இதையாவது தேர்வு செய்து தமிழக அரசின் பயோ காஸ் திட்ட வேலை ஆரம்பமாக உறுப்பினர்களே ஒத்துழையுங்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சர்வே எண் 392/5 பற்றிய 1958- ம் ஆண்டு தீர்மானம்
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [24 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30948

சகோதர் செய்யத் அஹ்மத் அவர்களே!

Bio-gas plant மற்றும் குப்பை கொட்டும் விஷயமாக, சர்வே எண் 392/5 பற்றி உங்களின் ஒவ்வொரு கருத்து பதிவிலும் மர்ஹூம் MKT அப்பா அவர்கள் தலைவராக இருந்தபோது இயற்றப்பட்ட தீர்மானம் பற்றி வலியுறுத்தி வருகிறீர்கள், ஆனால் சில நடப்புகள் உங்களுக்கு தெரியவில்லை அல்லது உங்களுக்கு சொல்லி தரப்படவில்லை.

MKT அப்பா அவர்கள் 1953-1965 வரை இரண்டு முறை (2 term) தலைவராக இருந்துள்ளார்கள். தலைவி நகர்மன்றத்தில் தெரிவித்த, நீங்கள் உடும்பு பிடியாக சொல்லும் தீர்மானம் இயற்றப்பட்ட ஆண்டு 1958. அதாவது MKT அப்பா அவர்களின் முதல் ஆட்சி காலத்தில். அதன் பின்னர் MKT அப்பா அவர்கள் மேலும் 7 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்கள். அந்த 7 வருடங்களில் அவர்களே அந்த தீர்மானத்தை செயல்படுத்த முயற்சி எடுத்தது மாதிரி தெரியவில்லை.

இந்த 55 ஆண்டுகளில், அவர்களுக்கு பின்னால் வந்த, பாவலர் அப்பா, LK அப்பா உட்பட எந்த தலைவரும் முயற்சி எடுக்கவில்லை. ஏன் MKT அப்பா அவர்களின் மருமகள் (மகனின் மனைவி) நாச்சி தம்பி ராத்தா அவர்கள் தலைவியாக இருந்தபோது கூட அந்த முயற்சி எடுக்கப்படவில்லை. காரணம், மாற்று மத சகோதரர்களின் மயானமாக இருப்பதால், இந்த இடத்தில் குப்பை கொட்டினால் அவர்களின் மத உணர்வுகள் புண்படலாம் என்பதனால்.

நீங்கள் கேட்கலாம், இப்போது அந்த இடத்தில் குப்பையா கொட்ட போகிறோம், Bio-gas plant தானே அமைக்க போகிறோம்? என்று. அந்த இடத்தில் அந்த திட்டம் அமைவதை எதிர்க்கும் அந்த வார்டு உறுப்பினர், சாமி அவர்கள், அந்த புறம்போக்கு சர்வே எண்ணில் எந்த ஆக்கிரமிப்பும் இருக்க கூடாது. அப்படி யாரும் ஆக்கிரமித்து இருந்தால், அதை நகராட்சி மீட்க வேண்டும் என்று தான் தீர்மானம் கொண்டு வந்தார்.

நகர்மன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் அந்த இடத்தில் bio-gas plant வரக்கூடாது என்று தீர்மானமே நிறைவேற்றி உள்ளனர். அப்படி தீர்மானம் நிறைவேற்றபட்டிருக்க தலைவி அவர்கள் ஏன் அங்கு தான் bio-gas plant வர வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்?

'ஊருக்கு நன்மை என்றெல்லாம் கதை சொல்லி, அதைச் சுற்றியுள்ள நிலத்தின் ரேட்டை கன்னாபின்னாவென்று உயர்த்தி, மக்கள் பணத்தைக் கொண்டு பிறர் சம்பாதிக்கத் துணை போவதற்கு இந்தத் தலைவி ஒன்றும் பச்சப்புள்ள இல்ல!!! (c&p)

இது சகோதரர் ஹாமீத் ரிபாயீ அவர்களின் கமெண்ட் # 30614.

ஆம். தலைவி அடம்பிடிக்கும் இடத்திற்கு மிக அருகில் தலைவி அவர்களின் உறவினர்களின் இடம் ஏதும் உள்ளதோ? தன் உறவினர் நிலத்தின் விலையை கன்னாபின்னாவென்று உயர்த்தாமல், மற்றவர்கள் நிலத்தின் விலையை உயர்த்த, துணை போவதற்கு இந்த தலைவி ஒன்றும் பச்சப்புள்ள இல்லைதான்!!!

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சர்வே எண் 278-ம் சில கேள்விகளும்
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [25 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30952

சர்வே எண் 278-ல் ஹாஜி WSAR அவர்கள் 5 ஏக்கர் தர சம்மதம் மற்றும் நம் நகர்மன்றம், குப்பை கொட்ட, உயிரி எரிவாயு மையம் அமைக்க நிலம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்!

இந்த தீர்மானம் நிறைவேறிய பின் இந்த இணையதளம், தீர்மானத்திற்கு எதிராக 3 வெவ்வேறு தலைப்பின் கீழ் செய்தி (news# 12154, 12156 மற்றும் 12157) வெளியுட்டுள்ளது. அதன் நோக்கம் எக்காரணம் கொண்டும் அந்த திட்டம் சர்வே எண் 278-ல் வந்து விடக் கூடாது என்பது தான், ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி? சில விளக்கங்களுக்கு உங்கள் இணையத்தளத்தில் சார்பாக, தலைவி அல்லது அவர்களின் விபரம் அறிந்த ஆதரவாளர்கள் சார்பாக பதில் எதிர்பார்கிறேன்.

அட்மின் அவர்கள் கேட்கலாம். நாங்கள் செய்தியைத்தனே போட்டோம். இதில் என்ன காழ்ப்புணர்ச்சி? என்று. நீங்கள் போட்ட செய்திகளில் மாற்று கருத்து உடையவர்களின் நிலைப்பாட்டையும் செய்தியோடு போட்டு இருந்தால் நடுநிலையாக இருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

News# 12154 பற்றி. மாவட்ட ஆட்சியர் அவர்களின் தல ஆய்வு (Field report) அதில்

>>' மேற்படி 25.00 சென்ட் அளவுள்ள நிலத்தினை தானமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

>> மேற்படி நிலப்பரப்பு கடற்கரை பகுதியினை ஒட்டி அமைந்துள்ளதால் “கடற்கரை மேலாண்மைப் பகுதி” வரையறைக்குள் (CRZ) அமையப்பெறாவண்ணம் திட்ட செயல்பாட்டிற்கான நிலம் தெரிவு செய்யப்படலாம்' (C&P)

மாவட்ட ஆட்சியர் அவர்களே பரிந்துரை செய்துள்ளார்கள். ஆனால் தலைவி அவர்கள், அந்த பரிந்துரை போதாதென்று, அந்த இடத்தில் இரண்டு திட்டங்களும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

news# 12156, சென்னை நகராட்சி நிர்வாகத்துறையின் பொறியாளர், காயல்பட்டினத்தில் ஆய்வு!

சர்வே எண் 278 இடத்தை பார்வையிட்ட பொறியாளர், இந்த இடம் தனியார் வசம் உள்ளதால் திட்டப்பணிகளை இங்கு அமல்படுத்த சில சிக்கல்கள் உள்ளன என தெரிவித்தார்.(C&P)

மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த அந்த இடத்தில் என்ன சிக்கல் என்று சொன்னார்?

News#12157, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறியாளர் சர்வே எண் 278 இடத்தினை ஆய்வு செய்தார்

! அப்போது பொறியாளர் கோகுல்தாஸ், பயோ காஸ் திட்டத்திற்கு இவ்விடம் பொருத்தமில்லை என கருத்து தெரிவித்தார். குப்பைகளை கொட்ட தேர்வு செய்யப்படும் இடத்தினை சுற்றி, எந்த வளர்ச்சிப் பணிகளுக்கும் அனுமதி இல்லை (NO DEVELOPMENT BUFFER ZONE) என நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மேலும் கோகுல்தாஸ் தெரிவித்தார். (C&P)

இந்த விதிமுறையால், முன்னாள் நகர்மன்றத் தலைவர் தர முன்வந்துள்ள 5 ஏக்கர் நிலத்தினை தவிர்த்து - அவரின் இந்த சர்வே எண் (278) நிலத்தில் உள்ள ஏனைய நிலப்பகுதியிலும், (குப்பைகள் கொட்ட வழங்கப்படும் நிலத்தின் எல்லைகள் எவ்வாறு அமையும் என்ற அடிப்படையில்) இந்த சர்வே எண்ணை சுற்றியுள்ள பிற சர்வே எண் நிலங்களிலும், எந்த வளர்ச்சிப்பணிக்கும் அனுமதி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னாள் நகர்மன்றத் தலைவரும், இதனால் பாதிக்கப்படும் இதர நில உரிமையாளர்களும் சம்மதம் தெரிவிப்பார்களா என்பதும் தெளிவில்லை.(C&P)

இது உங்கள் நிருபரின் கைவண்ணம். தற்போது நமது நகரின் குப்பைகள் எங்கே கொட்டபடுவது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அந்த குப்பைகள் LF ரோட்டுக்கு பின்புறமுள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில்தான். தப்லீக் இஜ்திமா நடைபெற்றது அந்த இடத்தின் அருகில்தான். இதை விட கொடுமை என்ன தெரியுமா?

நாம் தினமும் சாப்பிடும் ஆட்டு இறைச்சி அறுக்கப்படும் இடம் இந்த குப்பை கொட்டும் இடத்தை அடுத்தது தான். குப்பை கொட்டும் இடத்தை சுற்றி எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு விதிகள் சொல்ல, அதை அடுத்து நகர்மன்றத்தால் நிர்வகிக்கப்படும் ஆடு அறுக்கும் இடம் (slaughter house) உள்ளது. அப்படி ஒரு சூழல் பற்றி தலைவிக்கு தெரியுமா? அல்லது இந்த இணையதளத்தின் நிருபர் தான் அப்படி ஒரு சுகாதாரக்கேடு இருப்பதி பற்றி செய்தி வெளியிட்டுள்ளாரா?

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மாலையில் மிதமழை!  (21/10/2013) [Views - 2620; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved