Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:10:19 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11452
#KOTW11452
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 2, 2013
என்று நோன்பு பெருநாள் (1434)?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3067 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஷவ்வால் (1434) மாத அமாவாசை ஆகஸ்ட் 6 செவ்வாய்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி இரவு 9:50 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் ஆகஸ்ட் 7 அதிகாலை 3:20 மணி.



ஆகஸ்ட் 6 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:37 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:08. அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மறைந்தப்பின்னரே அமாவாசை நிகழ்கிறது. மேலும் அன்று உலகின் எந்தப்பகுதியிலும் வெறுங்கண்கள் கொண்டு பிறையை காண இயலாது.



ஆகஸ்ட் 7 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:37 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:50. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 15 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 13 நிமிடம் பிறை இருந்தாலும் - அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காண முடியாது.



பசிபிக் கடல் பகுதியிலும், தென் அமெரிக்காவின் அநேக பகுதிகளில் வெறுங்கண்கொண்டும், தென் அமெரிக்காவின் இதர பகுதிகளில் மற்றும் தென் ஆப்ரிக்காவின் தென் கோடி பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தாலும், மத்திய அமெரிக்கா, மத்திய மற்றும் தெற்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலும் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.



ஆகஸ்ட் 8 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:37 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:33. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 39 மணி நேரம். அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு எளிதாக காணலாம்.



பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ள ஒரு சாராருக்கு (Hijra Committee, Kerala) ஆகஸ்ட் 7 - ஷவ்வால் 1 ஆகும். மற்றொரு சாராருக்கு (Islamic Society of North America [ISNA], Fiqh Council of North America [FCNA], European Council for Fatwa and Research [ECFR], Conseil Français du Culte Musulman) ஆகஸ்ட் 8 - ஷவ்வால் 1 ஆகும்.

உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஆகஸ்ட் 6 (அமாவாசை) அன்று ரமழான் 28 பூர்த்தி ஆகிறது. ஆகஸ்ட் 7 அன்று பசிபிக் கடல் பகுதியிலும், தென் அமெரிக்காவின் அநேக பகுதிகளில் வெறுங்கண்கொண்டும், தென் அமெரிக்காவின் இதர பகுதிகளில் மற்றும் தென் ஆப்ரிக்காவின் தென் கோடி பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தாலும், மத்திய அமெரிக்கா, மத்திய மற்றும் தெற்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலும் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.

அப்பகுதிகளில் ஆகஸ்ட் 7 அன்று பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றால் - அவர்கள் ரமழான் 29 பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 8 (ஷவ்வால் 1) அன்று பெருநாள் கொண்டாடுவர். அவ்வாறு தகவல் கிடைக்கப்பெறவில்லை எனில் அவர்கள் - ஆகஸ்ட் 8 அன்று ரமழான் 30 பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 9 (ஷவ்வால் 1) அன்று பெருநாள் கொண்டாடுவர்.

அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 6 (அமாவாசை) அன்று ரமழான் 27 பூர்த்தி ஆகிறது. ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 7 அன்று காயல்பட்டினத்தில் பிறையை காண இயலாது. ஆகஸ்ட் 8 அன்று அவர்கள் ரமழான் 29 பூர்த்தி செய்வர். அன்று மாலை காயல்பட்டினத்தில் எளிதாக பிறையை காணலாம். ஆகவே ஆகஸ்ட் 9 (ஷவ்வால் 1) அன்று அவர்கள் பெருநாள் கொண்டாடுவர். வானிலை சூழல் காரணமாக அன்று பிறை தென்படவில்லை எனில் - ஆகஸ்ட் 9 அன்று ரமழான் 30 பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 10 (ஷவ்வால் 1) அன்று அவர்கள் பெருநாள் கொண்டாடுவர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சீனாவில் 8.8.2013 பெருநாள்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [02 August 2013]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 29165

இங்கு சீனாவில் 9.7.2013 ல் தலை நோன்பு பிடித்ததின் காரணமாக 30 நோன்பு பூர்த்திசெய்து, வரும் 8.8.2013 அன்று பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள ஹாங்காங்கில் பிறைபார்த்துதான் பெருநாள் அறிவிக்கப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Seyed Mohamed (Bangkok) [02 August 2013]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 29167

அஸ்ஸலாமு அழைக்கும்

நீங்க எந்த பல்லவியை பாடினாலும்

காயல்பட்டினத்தில் 3 பெருநாள் வருவது நிச்சயம். பொருத்து இருந்து பார்க்கலாம்.

மச்சலாம்
இப்படிக்கு
Seyed Mohamed
Bangkok - Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by A.M. Syed Ahmed (Jeddah) [02 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29168

அப்ப, உம்மாவுக்கு ஒருநாள் , கம்மாவுக்கு ஒருநாள் FLIGHT தப்பினாலும் பெருநாள் தப்பாது என்ற நிலை ஏன்?

இமாம்களே நீங்களே பதில் சொல்லவேண்டும். Is this Divide and Rule?

Thanks to kayalpatnam.com to bring the detailed analysis on the screen...

S.A. Ayesha Hannan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...பிறை கண்டு நோன்பு வைப்பதும் பிறை கண்டு பெருநாள் கொண்டாடுவதும் தான் நபி வலி
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29169

யார் என்ன சொன்னாலும் யார் எப்படி நோன்பு வைத்தாலும் எப்படி பெருநாள் கொண்டாடினாலும் அவற்றை அங்கீகரிப்பதும் நிராகரிப்பதும் அல்லாஹ்வின் கையில் உள்ளது என்பதை இந்த மூன்று சாராரும் உணராமல் இல்லை.

நபிகள் நாயகம் சொன்ன மிக இலகுவான வழி பிறை கண்டு நோன்பு வைப்பது, பிறை கண்டு பெருநாள் கொண்டாடுவது. அரபு நாடுகளிலும் இந்த முறைதான் அனுஷ்டிக்கப்படுகிறது என்பதை இந்த வருடம் நோன்பு பிறை பற்றி பத்வா கொடுத்திருந்த சட்ட மேதைகளின் குறிப்பு இதே இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.

நபிகள் நாயகம் அவர்கள் ஒருமுறை சஹாபாக்களை அழைத்து வைத்துக்கொண்டு சொன்னார்கள். உங்களுக்கு தொழுகையை விட நோன்பை விட, ஹஜ்ஜை விட தான தருமங்கள் செய்வதைவிட அதிகம் நன்மை தரும் விஷயத்தை உங்களுக்கு நான் அறிவிக்கவா? என்றார்கள். அவசியம் அறிவியுங்கள் நாயகமே என்று நபி தோழர்கள் சொன்னபோது, "நீங்கள் ஒற்றுமையாக இருங்கள், சிறு சிறு கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடாதீர்கள்.இதுவே மற்றெல்லா அமல்களைவிடவும் சால சிறந்தது என்றார்கள். விளக்கம் தெரிந்துகொள்ள அவரவர்கள் பின்பற்றும் உலமா பெருமக்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் எல்லோருடைய நோன்பையும் ஏற்றுக்கொண்டு எல்லோருடைய பாவங்களையும் மன்னித்து எல்லோருக்கும் மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக நான் பெரியவன் நான் செய்வதுதான் சரி என்று யார் யார் நினைக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நிறுத்தப்படும்போது அவரவர்கள் அமலே அவர்களுக்கு போதுமானதாக இருக்காது. அல்லாஹ்வின் ரஹ்மத் மட்டுமே முன் வந்து நம்மை சொர்க்கத்தில் புக செய்யும் இந்த உண்மையை நாம் எல்லோரும் உணர்ந்து செயல்படுவதற்கு அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.ஈத் முபாரக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Vilack SMA (Zhe Cheng , Henan ) [02 August 2013]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 29170

மூன்று குரூப்பிலும் உறவினர்கள் , நண்பர்கள் என்று நிறையபேர் இருக்கிறார்கள் . அத்தனைபேருக்கும் ஒரே நாளில் பெருநாள் வந்து ஒரே நாளில் அத்தனைபேர் வீட்டுக்கும் போய் வாழ்த்து சொல்வது சற்று கடினமான காரியம்தான் . அதனால் மூன்றுநாளில் பெருநாள் வந்து தனித்தனியாக வாழ்த்து சொல்வது சுலபம் .

எது எப்படியோ , ஒரு கருத்தாளர் சொன்னதுபோல , ஒரு flight தப்பினாலும் அடுத்த flight ல வந்து உம்மா வீட்டுல இல்லேன்னாலும் , மாமா மச்சான் மார்கள் வீட்டுலயாவது பெருநாள் கொண்டாடலாம் .

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நோன்பு பெருநாள் !!
posted by Salai.Mohamed Mohideen (Bangalore) [02 August 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 29172

இத்தனை வருடங்கள் அ(மெரிக்கா)க்கரையில் உக்காந்து கொண்டு இவைகளை ஊடக செய்திகள் வாயிலாக அவதானித்து கொண்டிருந்தாலும் அதன் பாதிப்பு (கொண்டாட்ட அளவில்) இல்லை. நோன்பு & ஹஜ் பெருநாளும் மிகச்சிறப்பாக ஒற்றுமையாக சந்தோசமாக அங்குள்ள மக்களுடன் கொண்டாடி வந்தோம்.

நான்கு வருடம் கழித்து நமது நாட்டில் / ஊரில் பெருநாள் கொண்டாடப் போகின்றோம் என்ற ஆவல் மனதில் இருந்தாலும் அதில் ஏதோ ஒரு முழு சந்தோசம் இல்லை. அதற்கு காரணம் ஒரே ஊரில்... பல குடும்பங்களில் இரண்டு/ மூன்று பெருநாட்கள். நமதூரை சார்ந்த மாற்று மத சகோதரர் என்னை பார்த்து கேட்டார்... நீங்கள் மூன்று நாளில் எந்த நாள் பெருநாள் கொண்டாடுவீர்கள் என்று !!

"நாளைக்கு பெருநாள் நம்மளுக்கு நல்ல நாள் ..கப்பக்கோழி அறுத்து ..." என்ற பாடலை சந்தோசமாக சிறு பிராயத்தில் நம்மில் பலர் பாடியதுண்டு. இன்று அதற்கும் மவுசு இல்லை . நாளைக்கு ...அடுத்த நாளைக்கு... அதற்க்கும் அடுத்த நாளைக்கு என்றாகி விட்டதினால் !'

பல வருடங்களுக்கு முன் நான் வசித்த நார்த் கரோலினாவில்... இந்தியா - பாகிஸ்தானை சார்ந்த மக்களை உள்ளடக்கிய பள்ளியில் ஒரு நாளும், ஏனைய நாட்டு மக்களை உள்ளடக்கிய பள்ளிகளில் மற்றொரு நாளும் பெருநாள் கொண்டாடி வந்தனர். பின்னர் அவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு, ஒரு சமரச உடன்படிக்கையை மேற்கொண்டு (give & take) இன்று வரை ஒரே நாளில் கொண்டாடி வருகின்றனர்.

இன்று வட அமெரிக்காவில் பெரும்பாலான இடங்களில் Islamic Society of North America [ISNA], Fiqh Council of North America [FCNA] அறிவிப்பை கொண்டு நோன்பு மற்றும் பெருநாட்களை கொண்டாடி வருகின்றனர். அது போன்று நமது நாட்டிலும் ஒன்று ஏற்படுத்தபட்டால் மிகவும் நல்லது !!. ஆனால் அதை பாலோ பண்ணுவார்களா என்பதும் கடினமே !!

ஏது எப்படியோ நமது மாநிலத்தில் குறிப்பாக நமதூரில் மூன்று பெருநாட்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போய்விட்டது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தான் பூண்ட மார்க்க கொள்கை / நம்பிக்கையில் அவ்வளவு உறுதியாக இருக்கின்றார்கள்... அங்கே சமரசம் என்ற பேச்சுக்கு இடமே இல்லாத அளவுக்கு !!

பலநேரங்களில் இதனை நான் நினைத்ததுண்டு. மிகவும் எளிதான நம் மார்க்கம்... அநியாயத்துக்கு கடினமாக்கபட்டு வருகின்றோதேன்று. அதிலும் குறிப்பாக இந்திய துணை கண்டத்தில். வல்ல ரஹ்மானே அனைத்தையும் அறிந்தவன் !!

அனைத்து காயலர்களுக்கும் எனது இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved