Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:07:33 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11314
#KOTW11314
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 18, 2013
குருவித்துறைப் பள்ளி முன்னாள் இமாம் மறைவை முன்னிட்டு, மத்ரஸா ஹாமிதிய்யா சார்பில் இரங்கல் நிகழ்ச்சி! திரளானோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2649 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாமும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் துணைத்தலைவருமான ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர், இம்மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமையன்று இரவு 11.15 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா மறுநாள் - 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவை முன்னிட்டு, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா நிர்வாகத்தின் சார்பில், ஈஸால் தவாப் நிகழ்ச்சி, இம்மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணியளவில், மஜ்லிஸ் வளாகத்தில் நடைபெற்றது.

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமை தாங்கினார். மத்ரஸா ஹாமிதிய்யா மாணவர் அலீ ஃபஹத் கிராஅத் ஓதினார்.

மத்ரஸத்துல் ஹாமிதிய்யா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, மர்ஹூம் அவர்கள் தம் வாழ்வில் செய்த சேவைகளை நினைவுகூர்ந்து அறிமுகவுரையாற்றினார். ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ இரங்கல் உரையாற்றினார். மவ்லவீ ஹாஃபிழ் எச்.பி.என்.ஷாஹ்ஸாத் புகாரீ இரங்கல் கவி பாடினார்.

இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூற, ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சிகள் அனைத்தையும், ‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் நெறிப்படுத்தினார்.

முன்னதாக, ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மர்ஹூம் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மத்ரஸத்துல் ஹாமிதிய்யா நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மனமார்ந்த நன்றிகள்! மறவாது துஆ செய்யுங்கள்!!
posted by T.S.A.Abu Thahir (Kayalpatnam) [18 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28742

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எங்கள் அன்புத் தந்தை - மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் நான்காவது வழித்தோன்றல் - பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் T.M.K.சுல்தான் அப்துல் காதிர் அவர்கள், கடந்த 11.07.2013 அன்று இரவு 11.15 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா மறுநாள் 12.07.2013 அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். மர்ஹூம் அவர்களின் மறைவை முன்னிட்டு, இரங்கல் தெரிவித்தும், துஆ இறைஞ்சியும் - நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், இணையதள செய்திகள் வாயிலாகவும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ள அனைத்து சகோதர - சகோதரிகளுக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ ஊறு விளைவித்திருந்தால், பெருமனது கொண்டு அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, +91 98415 67213 (T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ) என்ற கைபேசி எண்ணுக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன்,
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ
(மர்ஹூம் அவர்களின் மக்கள்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...நினைவில் வாழ்பவர்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28748

தம்பி அபூதாஹிர் ஆலிம் தம்பி யஹ்யா அவர்களின் வேண்டுகோள் படித்தேன்.

உங்கள் தந்தை அவர்கள் ஒரு எறும்பைக்கூட தன் காலால் மிதித்து இருப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு எழுந்ததுண்டு . அவர்கள் மென்மையான நடை அதற்கு சான்று கூறும்.

நான் இலங்கையில் ஏறாவூரில் பள்ளிக் கூடத்தில் படித்த காலம் அது. பெருநாளைக்கு பக்கத்தில் உள்ள மட்டக்கிளப்புக்கு செல்வது வழக்கம். கண்ணாடி ஆலிம் அவர்கள் கடையில் உங்கள் தந்தை சுறுசுறுப்புடன் பணியாற்றிய காலம் அது.

தங்கள் தந்தையின் மறைவுக்கு சில தினங்களுக்கு முன் நான் இலங்கையில் இருந்து திரும்பியபோது, என் சகோதரி அவர்கள் சுல்தான் மாமாவுக்கு சுகம் இல்லை போய் பார்த்து விட்டு வா என்று சொன்னார்கள். நானும் சரி என்று போய்பார்தபோதுதான் தெரிந்தது அவர்கள் உடல் நிலை இவ்வளவு மோசமாக இருப்பது அறிந்து வருந்தினேன்.

அப்போதும் கூட என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மாமா மட்டக்களப்புக்கு போவோமா, இப்போது ஜோராக அந்த இடம் இருக்கிறது என்று சொன்னேன். விளங்கிக் கொண்டார்களோ என்னவோ, அவர்களுக்கே உரிய புன்னகையை உதிர்த்தார்கள். உங்கள் தாயார் து ஆ செய்யுங்கள் என்றார்கள்.

யாருக்கு யார் து ஆ செய்வது? என்றாலும், கண்மணி நாயகம் அவர்கள் சொன்னபடி, நோயாளிகளை சந்திக்க சென்றால், அத்ஹிபல் பௌச ரப்பன்னாஸ், வஷ்பீ அன்த ஷாபி.... என்ற சிறிய து ஆ வை ஓதி அவர்களை முசாபாஹா செய்துவிட்டு வந்தேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து அவர்களின் நல் அமல்களை பொருந்திக்கொண்டு அவர்களுக்கு மேலான சொர்க்க பதவியை கொடுத்தருள வேண்டும் என்று இந்த புனித ரமலான் தினத்தில் வேண்டிக் கொள்கிறேன்.

மர்ஹூம் அவர்கள் விட்டு சென்ற பெருந்தன்மை, எல்லோருடனும் புன்னகையுடன் உரையாடும் பண்பு, எல்லோரையும் தன் நட்பு வட்டத்தில் அணைத்துக்கொள்ளும் உயர்ந்த உள்ளம் இவற்றை நீங்கள் முன்னெடுத்துச் செல்லுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். வஸ்ஸலாம்.

மக்கி நூஹுத்தம்பி
9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved