Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:48:36 PM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11224
#KOTW11224
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 9, 2013
ரமழான் 1434: பிறை தென்படாததால் இன்று நோன்பு இல்லை! ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!! விரிவான விபரங்கள்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3394 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பிறை தென்படாததாலும், பிறை பார்க்கப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெறாததாலும், இன்று ஷஃபான் 30ஆம் நாள் என்றும், நாளை ஜூலை 10 புதன் பின்னேரம் வியாழன் இரவு ரமழான் முதல் நாளிரவு என்றும், ஜூலை 11ஆம் தேதி ரமழான் முதல் நாள் என்றும், ஜாவியா, மஹ்ழரா மற்றும் நகர உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கூட்டுக் கூட்டத்தில், சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-

நடப்பாண்டு (ஹிஜ்ரீ 1434) ரமழான் துவக்க நாள் குறித்து முடிவு செய்வதற்கான - காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரி, மஹ்ழரா அரபிக் கல்லூரி மற்றும் நகர உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கூட்டுக் கூட்டம், இன்றிரவு 07.00 மணியளவில், ஜாவியா அரபிக் கல்லூரி வளாகத்தில்> மவ்லவீ கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ கூட்டத்திற்குத் தலைமையில் நடைபெற்றது.





ரமழான் தலைப்பிறை தொடர்பாக இக்கூட்டத்தில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டது. காயல்பட்டினம் உட்பட - வரையறுக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தலைப்பிறை காணப்பட்ட தகவல் இரவு 08.45 மணி வரையிலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எங்கிருந்தும் தலைப்பிறை கண்ட தகவல் பெறப்படவில்லை.

இது தவிர, பல மாவட்டங்களின் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கூட்டத்திலும், சென்னையிலுள்ள தமிழக அரசின் தலைமை காழீ அறிவிப்பிலும், பிறை தென்படவில்லை என்பதால் நாளை (ஜூலை 10 அன்று) ஷஃபான் 30ஆம் நாள் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில், ஜூலை 10 அன்று ஷஃபான் 30ஆம் நாள் என இக்கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அனைத்து உலமாக்கள் சார்பாக, மவ்லவீ எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ முறைப்படி அறிவிப்பு செய்தார்.



நாளை இரவு ரமழான் 01ஆம் நாள் துவக்கம் என்றும், வியாழக்கிழமை (ஜூலை 11ஆம் தேதி) ரமழான் முதல் நோன்பு என்றும் இக்கூட்டத்தில் மேலும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தின் காஷிஃபீ, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ,

ஜாவியா அரபிக் கல்லூரியின் மூத்த நிர்வாகி மவ்லவீ ஹாஃபிழ் கலீஃபத்துல் குலஃபா முத்துவாப்பா ஃபாஸீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, ஜாவியா அரபிக் கல்லூரியின் பேராசிரியர்களான மவ்லவீ சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ, மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அலீ ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் மாமுனா லெப்பை ஃபாஸீ, ஹாஜி ச.த.சதக்கத்துல்லாஹ், மக்தப் மக்தூமிய்யா முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஷாதுலீ ஃபாஸீ, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ,

நகர உலமாக்களான மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.தாஜுத்தீன் மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஈனுத்தீன் மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் லெப்பை பாக்கவீ, மவ்லவீ ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் தாவூதீ, மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ ஹாமித் லெப்பை ஃபாஸீ, மவ்லவீ எஸ்.எச்.முர்ஷித் அலீ ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



ஜாவியா வெளி வளாகத்தில், நகரப் பிரமுகர்களான ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் உள்ளிட்ட பொதுமக்கள், அதிகாரப்பூர்வமான தகவலை அறியக் காத்திருந்தனர்.



உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு வாசகம் வருமாறு:-



கலந்துகொண்ட உலமாக்களின் கைச்சான்றுப் பதிவுகள் வருமாறு:-





ரமழான் தலைப்பிறை அறிவிப்பின் அசைபட (வீடியோ) காட்சியைக் காண இங்கே சொடுக்குக!

இன்று மாலை 06.45 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் பொதுமக்கள் ஆவலுடன் ரமழான் தலைப்பிறையை எதிர்பார்த்தனர். மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் பிறை தென்படவில்லை.



[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டது @ 22:05 / 09.07.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஒற்றுமையின் உரைக்கல்.
posted by s.s.md meerasahib (TVM) [10 July 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 28513

அஸ்ஸலாமு அலைக்கும்.

ரமழான் 1434: பிறை தென்படாததால் இன்று நோன்பு இல்லை! ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு. மாஷாஅல்லாஹ்.... நபி மொழியும், அல்லாஹ்வின் பிரியமும் (ஒற்றுமை) கடைபிடித்துள்ளனர் நம் உலமாக்கள். இது போன்றே.... எல்லா விசயத்திலும் ஒற்றுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...உலமாக்கள் சபை
posted by mackie noohuthambi (kayalpatnam) [10 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28517

பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது.இவ்வளவு உலமாக்களும் சேர்ந்து காயல்பட்டினம் உலமாக்கள் சபை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி ஊரில் ஏற்படும் மார்க்க சம்பந்தமான ஐயப்பாடுகளை தீர்க்க முன்வந்தால் எவ்வளவு பிரச்சினைகள் சுமூகமாக தீரும். காயல்பட்டினம் மக்களின் வாழ்வில் ஒரு புதிய பிறை தென்படும்.

நோன்பை முடிவு செவதற்கும் பெருநாளை முடிவு செய்வதற்கும் மட்டுமே கூடும் கூட்டமாக இல்லாமல் இந்த உலமாக்கள் சபை செயல்படும்போது அல்லாஹ்வும் அவனது ரசூலும் சந்தோஷப்படும் ஒரு புதிய சமுதாயம் உருவாகும். அல்லாஹ் அந்த நல்ல சூழலை இந்த ரமலான் முதல் நமதூருக்கு ஏற்படுத்தி தருவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...மாஷா அல்லாஹ் ,மர்ஹபா!
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [10 July 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 28518

FROM KAYALPATNAM.COM

செவ்வாய், ஜுலை 9, 2013

ரமழான் 1434: பிறை தென்படாததால் இன்று நோன்பு இல்லை! கயல்பபட்டனம் ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!! விரிவான விபரங்கள்!!!

அஸ்ஸலாமு அலைக்கும்!  السلام عليكم و رحمةالله و بركاته மாஷா அல்லாஹ் ! யா  அல்லாஹ் முந்திய காலங்களில் இவ்வாறே எல்லா விதமான ஊர் விவகாரங்களையும் மார்க்க விவகாரளையும் உலமாக்களுடன் கூடி முடிவு எடுத்து   அதன்  படி உலமாக்களும் , உமராக்களும் , அவாமுன்னாஸ் களும் நடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றார்களே அவ்விதமான சூழ்நிலையை மீண்டும் தருவாயாக ! முடிவுக்கு முயற்சி செய்த அத்தனை உலமாக்களுக்கும் ஊர்மக்களின் சார்பாக நன்றி .

جزاءكم الله خيرا جزيلا    و شكرجميلا       اللهم طول حياتكم وأخلف نفقة كم  ا'مين

  வியாழக்கிழமை  11-7-2013 ஹிஜ்ரி 1434 அன்று நோன்பு வைக்கும் அனைவருக்கும்  சங்கைமிகு ரமழான்  வாழ்த்துக்கள் . அத்துடன் தற்கால , வருங்கால  ஊர், உலக சன்மார்க்க நன்மைக்காக  ஓர் அத்தியா அவஷ்யமான வேண்டுகோள் !

நுஜ்மு , பலக்கி சம்மந்தமான பாட வகுப்புகள்  கண்டிப்பாக உலமாக்களுக்கும் குறிப்பாக இளம் உலமாக்களுக்கும் இடைக்கிடை நடத்த ( Course of  training  )ஏற்பாடு  செய்ய  வேண்டும்  என்று எல்லா உலமாக்களுக்கும்,இருமதரசா நிர்வாகி களுக்கும் வேண்டிக்கொள்கிறோம். அல்லாஹ் ,ரசூலுக்காக உடனடி ஏற்பாட்டை இந்த 1434ரமழானிலேயே  ஆரம்பியுங்கள் .நாட்டில் இதற்கான SPECIALIST கள் சில ஆலிம்கள் தான் இருக்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மாலேகாவும் நாகர்கோயிலும்.....
posted by Husain Noorudeen (Abu Dhabi) [10 July 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28525

மாலேகாவுனில் தெரிந்த பிறையை வைத்து ஒரு பெருநாளை கொண்டாடியவர்கள், ஏன் அருகில் இருக்கும் நாகர்கோயிலில் தெரிந்த பிறையை ஏற்றுக்கொள்ளவில்லையாம்?!?!?!?!?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இறைவன் அருள் கொத்து கொத்தாய் பொழியட்டுமாக,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [10 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28533

மாஷாஅல்லாஹ் ஒவ்வொரு வருடமும் நம் ஊரு உலமாக்கள் ஒன்று கூடி ஒரு நல்ல முடிவை மக்களுக்கு தரும் இந்த சேவை மகத்தானது.எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்த விசயத்தில் எல்லோரும் ஏகமனதாக தெளிவான முடிவை எடுத்து வருவது மக்களிடையே ஆலிம்கள் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி உள்ளது.வெட்டு ஒன்று துண்டு இரண்டுபோல் சரியான நேரத்தில் உண்டு அல்லது இல்லை என்பதை தெரிவிப்பது மாற்று கொள்கை உள்ளவர்கள் கூட பாராட்டும் அளவிற்கு உள்ளது.இப்படி ஒரு தலைமயின் கீழ் தொடர்ந்து உலமாக்கள் சேவை செய்ய வாழ்த்துக்கள்.பாவத்தை பொசுக்கும் இந்த ரமலான் மாதத்தில் இறைவன் அருள் நம் யாவரின் மீது கொத்து கொத்தாய் பொழியட்டுமாக......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Seyed Mohamed (Sayna) (Bangok) [13 July 2013]
IP: 115.*.*.* Thailand | Comment Reference Number: 28645

அஸ்ஸலாமு அழைக்கும் இப்படி எல்ல விசயதுலைஉம் ஒட்ருமையாக இருக்க அல்லா உதவி செய்வானாக ஆமீன் ,

இப்படிக்கு
Seyed Mohamed (Sayna)
Bangkok - Thailand
Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved