Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:21:29 PM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11177
#KOTW11177
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 6, 2013
ஜூன் 27 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பால் ஒத்திவைப்பு!! வீடியோ காட்சிகளுடன் விரிவான விபரங்கள்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3668 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம், ஜூன் மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.



கூட்டப் பொருட்கள் (அஜெண்டா):

இக்கூட்டத்தில், பின்வரும் 29 பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருந்தன:-



























































கலந்துகொண்டோர்:

இக்கூட்டத்தில்,
04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா,
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,
14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா,
அண்மையில் பதவி விலகல் கடிதம் அளித்துள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான்
ஆகியோரைத் தவிர இதர உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

05ஆவது வார்டு உறுப்பினர் குறுக்கீடு:

கூட்டபொருட்களை நகராட்சி ஊழியர் செந்தில் வாசிக்கத் துவங்கியவுடன், குறுக்கிட்டுப் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கிர் - கொம்புத்துறை / சிங்கித்துறை பெயர்கள் பயன்பாடு குறித்து மேசைப் பொருள் (டேபிள் அஜெண்டா) கொண்டு வரவேண்டும் என கூறினார்.



தற்போது நகரில் நடைபெற்றுவரும் தேசிய மக்கள் தொகை / ஆதார் அட்டை பதிவு முகாம்களில் கடையக்குடி / கற்புடையார் வட்டம் என்ற பெயர்களுக்குப் பகரமாக, கொம்புத்துறை / சிங்கித்துறை என்ற பெயர்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார். அதற்கு பதில் கூறிய நகர்மன்றத் தலைவர், டேபிள் அஜெண்டா என்பது கூட்டத்தின் இறுதியில் கொண்டு வர வேண்டியது என்று கூறி, அலுவலர்களை டேபிள் அஜெண்டா பொருளை ஆயத்தம் செய்யுமாறு கூறிவிட்டு, திட்டமிடப்பட்ட படி, ஜூன் மாத கூட்டத்தைத் துவக்கலாம் என்று கூறினார்.

டேபிள் அஜெண்டா விவாதிக்கப்பட்ட பின்னரே, பிற கூட்டப் பொருட்கள் பேசப்பட வேண்டும் என உறுப்பினர் எம்.ஜஹாங்கிர் வலியுறுத்தினார். இதுவரை வழமையாக நகர்மன்ற கூட்டங்களில் - டேபிள் அஜெண்டா இறுதியாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது என நகர்மன்றத் தலைவர் விளக்கினார். தலைவரின் விளக்கத்தை பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, முதலில் டேபிள் அஜெண்டா விவாதிக்கப்படும் என முடிவுசெய்யப்பட்டது.

டேபிள் அஜெண்டா பொருள் - உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்கு ஏறத்தாழ 90 நிமிடங்கள் (1 மணி நேரம் 30 நிமிடங்கள்) நேரம் எடுத்தது. டேபிள் அஜெண்டா பொருளில், நகரின் அனைத்துப் பகுதிகளின் பெயர்களும் அரசு ஆவணங்களின் படி இருக்கவேண்டும் என நகர்மன்றத் தலைவர் கூறினார். இதற்கு ஒரு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேசைப் பொருள் (டேபிள் அஜெண்டா) வாசகம் வருமாறு:-



டேபிள் அஜெண்டா வாசிக்கப்பட்டவுடன், 07ஆவது வார்டு உறுப்பினருக்கும், பிற உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக, கொம்புத்துறை / சிங்கித்துறை என்பதற்கு பதிலாக கடையக்குடி / கற்புடையார் வட்டம் என்ற பெயர்களையே அனைத்து அரசு அலுவலகங்களும் பயன்படுத்த வேண்டும் என்று கோரி கடிதம் எழுத தீர்மானிக்கப்பட்டது. மேலும் நகரின் இதர பகுதிகளின் பெயர்களும் அரசு ஆவணங்கள்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

18ஆவது வார்டு உறுப்பினர் குறுக்கீடு:

அதனைத் தொடர்ந்து, நகர்மன்ற ஊழியர் செந்தில் ஜூன் மாத கூட்டப்பொருளை வாசிக்கத் துவங்கினார். கடந்த மாத கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொருளான பொருள் எண் 1 குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி புதிய பிரச்சனை ஒன்றை எழுப்பினார். தான் கூட்டத்தில் இணைக்க இரு விஷயங்களை சமர்ப்பித்ததாகவும், ஆனால் ஒரு விஷயம் கூட்டப்பொருளில் இணைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நகர்மன்றத் தலைவர், இணைக்கப்படாத கூட்டப்பொருள் (13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் - அண்மையில் அ.தி.மு.க.வில் இணைந்தவர்கள் போலியாக இணைந்ததாக கடந்த நகர்மன்றக் கூட்டத்தில் கூறியதிற்குக் கண்டனம் தெரிவித்து) - நகராட்சி விதிகளுக்கு உட்படாதது என்றார். நகராட்சி ஆணையரும் - மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 20இன் படி நகர்மன்ற நிர்வாகம் குறித்த அம்சங்களை மட்டுமே உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட 18ஆவது வார்டு உறுப்பினர், “அப்படியானால், கடந்த கூட்டத்தில் எவ்வாறு நகர்மன்ற ஊழியரைக் கண்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது?” என்று கேள்வியெழுப்பினார். அதற்கு விடையளித்த நகர்மன்றத் தலைவர், அது நகராட்சியால் வழங்கப்படும் ரசீது குறித்தது என்பதால் நகராட்சி நிர்வாகம் தொடர்பான தீர்மானம் அது என்றார்.

12ஆவது வார்டு உறுப்பினர் குறுக்கீடு:

அடுத்து 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, தனது வார்டில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றுக்கு வண்டியில் தண்ணீர் வழங்க நகர்மன்றத் தலைவர் மறுத்ததாக குற்றஞ்சாட்டினார். அதற்கு மறுப்பு தெரிவித்த நகர்மன்றத் தலைவர், தான் அப்பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியரிடம் பேசியதாகவும், தேவையான குடிநீர் அளவு குறித்து அவரிடம் கேட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகம் நின்றதற்கான காரணத்தை அறிந்து நிரந்தர தீர்வு வழங்குவதே முறை என்றும் கூறினார்.

வாய்மொழியால் கேட்கப்பட்டால் வண்டி மூலம் குடிநீர் வழங்கக்கூடாது என்றும், எழுத்து மூலமாக கேட்கப்பட்டால் மட்டுமே பரிசீலனை செய்யவேண்டும் என்றும், அப்போதுதான் வண்டி மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் குறித்து கண்காணிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

அடுத்து, 12ஆவது வார்டு உறுப்பினர் - இரண்டாம் குடிநீர் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். பொன்னன்குறிச்சியில் வேலைகள் நின்றிருப்பதாகவும், இதற்கு நகர்மன்றத் தலைவியின் அலட்சியப்போக்கே காரணம் என்றும் கூறினார். அதற்கு பதில் கூறிய நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் முழுமையான தகவலை வழங்க வேண்டும் என்றும், பொன்னன்குறிச்சியில் பணிகளுக்கு நிலத்திற்கு உரிமை கோரி இடையூறு செய்யும் பெண் - 4 லட்ச ரூபாய் தொகையும், நகராட்சியில் பணியும் கேட்பதாகவும் கூறியதுடன், குடிநீர் திட்டம் 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற வேண்டியுள்ள நிலையில், ஒவ்வொரு தனி நபரும் பிரச்சனைகள் செய்யும்போது அவர்களுக்குப் பணம் கொடுத்து பிரச்சனைகளைத் தீர்ப்பது சாத்தியமற்றது என்றும், எனவே இப்பிரச்சனையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு தான் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறினார்.

பார்வையாளருடன் நகர்மன்ற துணைத்தலைவர் மோதல்:



இவ்வாறு விவாதங்கள் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் - பார்வையாளர்களை நோக்கி, “இங்கு பேசுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை!” என்று கூறினார்.

தொடர்ந்து பார்வையாளர்கள் பக்கம் வேகமாக வந்த அவர், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த முஹ்யித்தீன் என்பவரை நோக்கி, “என்ன முறைக்கிறே...?” என கூறி - அரங்க வாயிலில் நின்ற காவல்துறையினரை அழைத்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

“நாக்கை ஒட்ட அறுத்துடுவேன்...”:

பார்வையாளர்கள் என்ன பேசினார்கள் என நகர்மன்றத் தலைவர் வினவ, 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள், நகர்மன்றத் தலைவரை கடுமையான சொற்களால் விமர்சிக்கத் துவங்கினார். ஒரு கட்டத்தில், “(தலைவியின்) நாக்கை ஒட்ட அறுத்துடுவேன்...!” என்றும் கூறினார். (விரிவான விபரம் இதனடியில் தரப்பட்டுள்ள அசைபட (வீடியோ) காட்சியில் உள்ளது.)

கூட்டம் ஒத்திவைப்பு - உறுப்பினர்கள் வெளிநடப்பு:

கூட்டத்தில் சலசலப்பு தொடரவே - கூட்டத்தை ஒத்திவைப்பதாக நகர்மன்றத் தலைவர் அறிவித்தார். அப்போது நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், தான் எழுதிக்கொண்டு வந்திருந்த மடலை வாசித்தார்.

அதில், மே மாதம் 03ஆம் தேதியன்று - விதிகளை மீறி நகர்மன்றத் தலைவி தீர்மான புத்தகத்தை நகல் எடுத்ததாகவும், அதனைத் தட்டி கேட்ட உறுப்பினர்கள் மீது உயர்நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறி, இதற்காக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, கூட்டரங்கை விட்டும் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, 13 வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். எனவே, திட்டமிடப்பட்ட 29 கூட்டப்பொருட்களில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அசைபட (வீடியோ) பதிவு:

இதுகுறித்த அசைபடப் பதிவை (வீடியோ) காட்சியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வேதாளம் மீண்டும் ......
posted by Abdul Wahid S. (Kayalpattinam) [06 July 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 28423

Pre planned walk-out drama.

1) Agenda வில் இல்லாத ஒரு விசயத்தை Agenda விலுள்ள விவாதப் பொருட்களுக்கு முன் விவாதிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது தரமற்ற செயல்.

2) கொம்புத்துறை, சிங்கித்துறை விசயத்தில் இவ்வளவு அக்கறை கட்டக்கூடியவர்கள் ஏன் மரைக்கார் பள்ளி தெரு (கடற்கரைத் தெரு), அசாத் தெரு (துஷ்டராயர் தெரு) விசயத்தில் வருஷம் பலவாகியும் அக்கறை இல்லை.

அக்பர் ஷா தெரு, வாவு நகர் etc., இதெல்லாம் யாரை கேட்டு வந்ததாம். எந்த அரசாங்க ரெகார்டில் இருக்கிறதாம்?

(மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் ...... )

-------------------------------------------------

Coordinated attack on one of the observers.

வேதாளங்கள் போடும் ஆட்டத்தை மக்கள் முன் கொண்டு செல்லும் Media மீது வேதாளம் குறி வைத்தது. நகராட்சிக் கூட்டத்தை Media யாக்கள் Video எடுப்பதை தடுத்தார்கள். அதற்காக ஒரு வெளிநடப்பும் செய்தார்கள். "Video எடுப்பதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை" என்று High Court (Madurai Bench) மூலம் தீர்ப்பு (இவர்களுடைய பாசையில் சொல்வதானால் "ஆப்பு") வந்தவுடன் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது.

அந்த வேதாளத்தின் பார்வை ஒரு web site மீது பாய்ந்தது. ரமழானில் சைத்தான் கட்டிப்போடப்படுவான் என்பதை நாம் அறிவோம். அனால் வேதாளம்.......? . கடந்த ரமழானில் அந்த வேதாளம் இந்த web site ஐ முடக்க போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. போலீஸும் தன் பங்கிற்கு விசாரித்ததில் web site ஐ முடக்க தனக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்துகொண்டது. வேதாளம் வேறு வழியில்லாமல் மீண்டும் தனது இருப்பிடத்திற்கு (முருங்கை மரத்திற்கு) சென்றது.

(Web site ஐ இல்லாமல் ஆக்குவேன் என்று வீரவசனம் பேச வைத்தவர்கள் எல்லோரும் இன்று web site களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது வேறு விஷயம்)

அதே வேதாளம் கிழிறங்கி வந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நகராட்சி தலைவியை பதவியிறக்கம் செய்ய முயற்சித்தது. அந்த தீர்மானமும் நீதிமன்றத்தின் மூலம் முறியடிக்கப்பட்ட (ஆப்பு வைத்த) பின் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது.


இப்போ அந்த வேதாளத்தின் குறி (நகராட்சி கூட்ட) பார்வையாளர் மீது பாய்ந்துள்ளது. பார்வையாளராக யாரும் வரக்கூடாது என்று சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சதிவேலையை முறியடிக்க அடுத்த மாதக்கூட்டத்திற்கு மக்கள் அதிகமாக செல்ல வேண்டும்.

கடந்த 20 மாதத்தில் 7 வெளிநடப்புகள். அனைத்தும் பொட்டை காரணங்கள்.

நகராட்சியை வைத்து காசு சம்பாதிக்க முடியாதவர்கள், அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்திருக்கிறார்கள்.

வேதாளங்கள் (கீழே இறங்காமல்) நிரந்தரமாக முருங்கை மரத்திலேயே இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அதனை பொதுமக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் நீதி மன்றத்தின் மூலம் பெறப்படும் ஆப்புகள் (தீர்ப்புகள்) வேதாளம் விசயத்தில் நிறந்தரமாக செயல் பட வாய்ப்பில்லை.

இல்லையென்றால் இதுபோன்று வேதாளம் அடிக்கடி கீழிறங்கி அப்பப்போ தொல்லை கொடுக்கும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S ABDUL KADER (KAYAL PATNAM) [06 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28425

நகரமன்ற தலைவி அவர்கள் கூட்டம் ஒத்திவைக்க படுகிறது,என்று சொல்லிய பின்பு துணைaiyaத்தலைவர் ஒத்திவைத்த கூட்டத்தை கூட்டி விவாதப்பொருள் முன்வைத்தது உறுப்பினர்கள் கலந்து சென்றது எந்த சட்ட சாசனத்திலும் நான் கண்டதில்லை. முன்னோர்கள் சமூக ஆர்வலர்கள் முந்தைய உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் வழிநடத்தி வந்த இந்த மாமன்றம், இன்று அல்லல்படும் நிலைகண்டு (ஊர் பெயர் சொல்ல கூட ) வேட்கபடுகிரேன், மனவருத்தம் அடைகிறேன்.

இந்த அரசு மக்களுக்கும், நகர நலனுக்கும் நல்லநல்ல திட்டங்கள் செய்துதர காத்து இருக்குது, ஆனால் உறுபினர்களின் ஒற்றுமை அழிவால் வீணாகிவிடுமோ என்ற அச்சம் மனதில் தோண்டுகிறது. உறுப்பினர்கள் சகோதரத்துவம் குறைந்தே மன்ற கூட்டதிற்கு வருகிறார்கள்.

உறுபினர்களின் ஒற்றுமை குறைவால், அதிகாரிகளும், அலுவுலக ஊழியர்களும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். அலுவுலக ஊழியர்களில் தற்காலிய பணியில் இருப்பவர்கள்தான் ரெம்பவும் ஓவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by EASA SHAFEEQ (DAMMAM) [06 July 2013]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28426

நமது நகர்மன்ற உறுப்பினர்கள் மத்தியில் என்ன ஒரு ஒற்றுமை.ஓ இதை தான் ஆட்டு மந்தை என்பார்களோ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by ABU HURAIRA (Abu Dhabi) [06 July 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28428

அசை படம் பார்க்கும் போது மிகவும் மன வருத்தம். கொஞ்சமாவது படிப்பறிவு உள்ளவர்களை முஹல்லா வாசிகள் தேர்வு செய்யவேண்டும்.

எல்லா ஜமாஅத்களும் அந்த அந்த உறுபினர்களை அழைத்து வார்டுகளுக்கு என்ன செய்தார்கள் என்று கேட்க வேண்டும்.

ஒரு பெண் உறுப்பினர் மீண்டும் சபை நாகரிகம் தெரியாமல் தலைவியை பார்த்து மீண்டும் வாடி, போடி என்றும் கூறுகிறார்.

பார்வையாளர்கள் என்று பார்க்கும் போது 10 அல்லது 15 பேர் தான் இருக்கிறார்கள். ஏன் நமது வூரில் யாருமே இல்லையா?

தயவு செய்து மாதம் ஒரு முறை சென்று பாருங்கள் நமது நகரட்சின் செயல்பாடுகளை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பாவம்! பரிதாபத்திற்குரியவர்கள்...(?)
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [07 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28429

நாறிப்போன நகர்மன்றத்தின் உண்மை நிலவரத்தை சகோதரர் வாஹித் தெள்ளத் தெளிவாக கோடிட்டுக் காட்டிவிட்டார். ஒவ்வொஇரு முறையும் கூட்டப் பொருள் விவாதத்தின் போது சுகு அண்ணாச்சியின் விர ஆவேச உரைகள் விஜயகாந் ஸ்டைலில் தான் இருக்கும். அது இப்போ தலைவிக்கு பழகிப்போச்சு.

ஓரங்கட்ட தாங்கள் எடுத்த ஒட்டு மொத்த முயற்சிகளும் பலனளிக்காமல் போகவே, முட்டி மோதிக்கொண்டு வரும் உறுப்பினர்கள் தலைவி முனு முனுத்தால் கூட அட! அவ்வளவு ஏன்? கொட்டாவி விட்டு அவூதுபில்லாஹி மினஷெத்தான்னு சொன்னால் கூட அதுவும் ஏதோ நம்மைப் பற்றிதான் பேசுறாங்கன்னு உறுப்பினர்கள் தங்கள் செவி மடலை உயர்த்தும் நிலமை பரிதாபத்திற்குரியதே!

ஆண் உறுப்பினர்கள் எப்படியும் போகட்டும்! பெண் உறுப்பினர்கள் அவர்களுக்கு நாங்கள் சளைத்தவரில்லைன்னு சரி சமமாக மல்லுக்கட்டி மாய்வது எதற்காக? சாரா உம்மாள் நல்ல குடும்பத்து பெண்மணிதானே. இப்படி கசாப்பு கடை மாதிரி அதாங்க, “நாக்கை இழுத்து வச்சு ஒட்ட அறுத்துடுவேன்னு” தலைவியை மிரட்டுறது கொஞ்சங்கூட அழகல்ல!

பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்த மீசை மாமா மீது முப்பையார் பாய்வது முன் விரோதம் என்பது தெளிவாக விளங்குகின்றது. ஆமா ரெண்டு பேரும் ஒரே கட்சிதானே? அப்புறம் எதுக்கு இப்படி மிக்கி மவுஸ் ஆகுறாங்க...? மொத்தத்துலெ நகராட்சியில் நாற்றம் எடுப்பது நடுநிலையாளர்களுக்கு நல்லாவெத் தெரியும்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...கோரதாண்டவம்....
posted by Mohammed Nooh KA (sarafiyyah, jeddah) [07 July 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 28439

யாரிந்த சாரா உம்மா ? சபை நாகரீகம் அறியாத பெண். மன்றத்தின் தலைவியை பரத்து தகாத வார்த்தைகளால் மன்ற நிகழ்விலேயே விமர்சிக்க என்ன உரிமை உள்ளது?

மேலும் பிரதிநிதிகளை தெர்ந்தெடுத்த மக்களை (பார்வையாளர்களை) வெளியே விரட்ட அந்த உறுப்பினருக்கு என்ன உரிமை உள்ளது?

இவர்கள் செய்யும் அக்கிரமத்துக்கும், ஆணவ போக்கிற்கும் பொதுமக்களே இவர்கள் மீது பொதுநல வழக்கு தொடர்ந்தும் பதவியை விட்டும் தூக்கியடிக்க வேண்டும். அந்த நன்னாள் மிக விரைவில் நடந்தேறும்.இன்ஷா அல்லாஹ்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இயற்கை குணம் மாறாது
posted by Abdul Wahid S. (Kayalpattinam) [07 July 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 28440

யாரிந்த சாரா உம்மா ? சபை நாகரீகம் அறியாத பெண். மன்றத்தின் தலைவியை பரத்து தகாத வார்த்தைகளால் மன்ற நிகழ்விலேயே விமர்சிக்க என்ன உரிமை உள்ளது? ......... Copy & Paste (Re:Comment Reference Number: 28439)

இந்த பெண் உறுப்பினரின் அடாவடித்தமான சொல் மற்றும் செயலை வீடியோ வில் பார்த்து அதிர்ந்து போன ஒரு ஆலிம் தனது ஜும்மா உரையில் இவருக்கு பிரத்தியோகமாக 'நசீஹத்" செய்தார். அவர் இன்னும் திருந்தவில்லை, பெண் அடாவடித்தனத்தை கைவிடவில்லை என்பது இப்போது வெளியாகியுள்ள வீடியோவிலிருந்து தெளிவாகிறது.

எங்ககளுடைய வார்டு (8 வது வார்டு) உறுப்பினர் (சகோ., பெத்தா தாய்) நகர்ரட்சி தலைவிக்கு எதிராக செயல்பட்டாலும், பெண்ணுக்கே உரித்தான சில கட்டுப்பாட்டுடன் இதுவரையில் செயல்பட்டு வருகிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் பண்பாடு உள்ளது என்பது பெருமைப்படத் தகுந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Hameed Rifai (Yanbu) [07 July 2013]
IP: 204.*.*.* | Comment Reference Number: 28447

ஒரு நகர்மன்றக் கூட்டம் எப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்பதை இவர்களின் கூட்டங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். வெறுமனே செய்தியைப் பார்த்துவிட்டு இருந்துவிடலாம் என்றுதான் எண்ணுகிறேன். ஆனால், மனதில் எழும் கேள்விகளைக் கேட்காவிட்டால் நானும் பொறுப்பற்றவனாகி விடுவேனோ என்று கருதி, என் மனதில் தோன்றும் சில கேள்விகளைக் கேட்கிறேன்.

(1) 29 கூட்டப் பொருட்களில் ஒன்று கூட வாசிக்கப்படவில்லை. ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், அஜெண்டாவில் உள்ளவற்றைத்தான் துவக்கமாக விவாதிப்பர் என்பது பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவரும் அறிந்த மரபு. இது, நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த ‘அதிமேதாவி’ உறுப்பினர்களுக்குத் தெரியாமல் போனது எப்படி? அதிலும் குறிப்பாக, இந்தக் கூட்டத்தின் துவக்கத்தில் அஜெண்டாவை வாசிக்க விடாமல் zero hourஇல் பேசப்பட வேண்டியவற்றை முதலிலேயே கேட்ட நகர்மன்ற உறுப்பினர் நண்பர் ஜஹாங்கீருக்கும் இந்த ஞானம் இல்லாமலா போனது?

(2) இரண்டாவது பைப்லைன் குறித்து கேள்வி கேட்ட நகர்மன்ற உறுப்பினர் சுகு அவர்கள் இரண்டு நகர்மன்றத்தைப் பார்த்தவர். அவருக்கும் இந்த அறிவு இல்லையா?

(3) சக உறுப்பினர் மீது உள்ள குரோதத்தை கண்டனத் தீர்மானமாகக் கேட்ட உறுப்பினர் சாமி ஐயா அவர்களே! பல நிர்வாகங்களில் பல பொறுப்புகளில் பணியாற்றவர் நீங்கள்! உங்களுக்குமா இந்த மரபு தெரியவில்லை?

என்ன நடக்கிறது நம் நகராட்சியில்? இதுவே இன்னொரு ஊர் என்றால், அனைவரையும் கூட்ட அரங்கிற்குள்ளேயே அடைத்துப் போட்டு, ஒன்னு திருந்துங்கள்! அல்லது அங்கேயே இருந்துகொள்ளுங்கள்!! என்று கூறி பெரிய திண்டுக்கல் பூட்டைப் போட்டுவிட்டுச் சென்றிருப்பார்கள். சுரணையற்றவர்கள்தானே நாம்?

அடுத்து துணைத்தலைவர் மேட்டருக்கு வருகிறேன்.

(4) பார்வையாளர்களில் ஒரு பெரியவரை நோக்கிப் பாய்ந்த “பாயும் புலி” அவர்களே! அப்படி அவர் செய்த தவறு என்ன? (அ) உங்களைப் போல உரக்கப் பேசாததா? (ஆ) வாயில் வரும் வார்த்தைகளையெல்லாம் கொட்டாததா? (இ) உறுப்பினராக உங்கள் தகுதியை நீங்கள் உணராத நிலையில், ஒரு பார்வையாளராக தன் தகுதியை உணர்ந்து அவர் நடந்துகொண்டதா? (ஈ) வீராவேசமாக அடிக்கச் சென்றீரே! அடித்திருக்க வேண்டியதுதானே? .........த்தில் அடித்தானாம்; பல் போச்சாம் என்று சொல்வார்களே அது போல, எங்கோ அவர் அரசியல் மேடையில் உம் பொது வாழ்வை விமர்சித்ததற்கு பழி தீர்க்க, எங்கள் பணத்தில் நடைபெறும் நகர்மன்றம்தானா உமக்குக் கிடைத்தது?

(5) தலைவி அவர்கள் “கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது” என்றதும், அவசர அவசரமாக ஒரு மடலை எடுத்துப் படித்தீர்களே? கூட்டத்தின் வாயிலில் நுழையும்போதே அதைப் படித்துவிட்டல்லவா வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்? கூட்ட அரங்கில் வைத்து அந்த மடலை தாங்கள் தயாரித்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறிருக்க, வெளிநடப்பு செய்ய வேண்டும் என்பது நீங்கள் முற்கூட்டியே போட்ட திட்டம் என்று இதை எடுத்துக்கொள்ளலாமா?

(6) நம் சமுதாயத்தைச் சேர்ந்த - கோஷாவைப் பேணும் ஒரு பெண்மணி நகர்மன்றத் தலைவராக இருக்கிறார். அவரைப் பார்த்து “வவுந்து போடுவேன்” என்று ஒரு உறுப்பினர் கேட்கிறார். அப்போதெல்லாம் ரோசப்படாத எங்கள் “சமூக சேவகி” பெத்தாதாய், நடக்காத பிரச்சினையில் தலையிட்டு வீரத்துடன் சட்டம் பேசுகிறாரே? சூப்பர். அது அவர் தவறல்ல! அவரையும் தேர்ந்தெடுத்தார்களே அவர்களின் தவறு.

(7) எதையோ எதிர்பார்த்து வந்தவர்கள், அது நடக்காததால் ஏமாந்தது போன்று இருக்கிறது வீடியோ பதிவில் ஒவ்வொருவரின் முகமும்! அதை வெளிக்காட்டுகிறது “சுகுவார்” அவர்களின் வார்த்தை. “உங்க ஆள்களை வெச்சி.....” என்று பார்வையாளர்களைக் காண்பித்து, தலைவியை நோக்கிக் கூறும் அவரது வார்த்தை செயற்கையாகவே உள்ளது. நீர் எதிர்பார்த்தவர்கள் வராததால், தயாரித்து வந்திருந்த வாசகங்களை வேண்டாவெறுப்பாக கொட்டித் தீர்த்துள்ளீர்!

(8) கடைசியாக, வீரமங்கை சாராமா அவர்களை நோக்கி: மார்க்க நடைமுறை தெரிந்த - ஒழுக்கத்தை விரும்பக் கூடிய ஒரு பெண் எப்படி நடக்கக் கூடாது என்பதை இத்தனை நாட்களாக எங்கள் பிள்ளைகளுக்கு எழுத்துப் பாடமாகத்தான் நடத்திக் கொண்டிருந்தோம். இப்போது, வீடியோ பாடமாகவே நடத்தலாம் போல! இதுவரை ஒரு நான்கைந்து வீடியோ உள்ளது.

நல்ல வேளை! உங்களுக்கு வாக்களிக்கும் பாவத்தை நான் செய்யாமலிருந்தேன். (அல்லாஹ் காப்பாற்றினான்!) ஒருவேளை உங்களுக்கு வாக்களித்திருந்தால், இன்று சஊதியிலுள்ள என் தனியறையில் கதவை அடைத்துக் கொண்டு, என் காலில் கிடப்பதை எடுத்து என் தலையிலேயே அரை நாள் அடித்துக் கொண்டிருந்திருப்பேன்.

வாழ்க ஜனநாயகம்!!! த்தூ............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...இது தான் நாகரிகம
posted by b.a.buhari (CHENNAI) [08 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28469

து தலைவர் அவர்களை உங்கள் தகப்பன் வயதில் இருக்கும் உங்களுக்கு ஒட்டு போட்ட ஒரு காயல் குடிமகனை பார்த்து நீங்கள் கேட்கும் வார்த்தை உங்களுக்கு தப்பாக தெரியவில்லைய?

யார் நாக்கை அறுபது, நீங்கள் தான் முடிவு பண்ண வேன்டும் , மக்கள் நாங்கள் இருக்கும் பொழுது நீங்கள் தலைவியை ஒண்டும் பண்ண முடியாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved