Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:15:33 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11156
#KOTW11156
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 4, 2013
காயல்பட்டினத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி திடீர் சோதனை! புகைப்பட தொகுப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3158 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி Dr.ஜெகதீஷ் சந்திர போஸ் தலைமையில் காயல்பட்டினத்தில் உள்ள விற்பனையகங்களில் - ஜூலை 3 (புதன்கிழமை) அன்று - திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கூலர்கடை பஜாரில் உள்ள சில பிரதான கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது - தடை செய்யப்பட்டுள்ள சுமார் ரூபாய் முப்பதாயிரம் மதிப்பிலான - பான் பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு நகராட்சிக்குட்பட்ட உரக்கிடங்கில் அழிக்கப்பட்டன.

ஒரு மாதத்திற்கு முன்பே அரசு தரப்பில் செய்தித்தாள், தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது எனும் தகவல் வெளியிடப்பட்டிருந்ததாகவும், அதையும் மீறி சில கடைகளில் அப் பொருட்களைப் பதுக்கி வைத்தும் மறைமுகமாக விற்பனை செய்து வருவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் இந்த அதிரடி சோதனை நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பான்பராக், குட்கா, புகையிலை போன்றவற்றை தடுப்பதற்காக திரு குமார் ஜெயந்த் IAS தலைமையில் மாவட்ட சேர்மனாக திரு ஆஷிஸ் குமார் IAS, அதன் உறுப்பினர்களாக மாவட்ட SP, DRO, சுகாதார துணை இயக்குநர், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் தலா ஒரு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சில உணவகங்களிலும் தரப்பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும் பல இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ள ப்ளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து இது போன்ற பொருட்கள் உபயோகிக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கையும் அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது.

தொடர்ந்து நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் அடுமனைகள் சோதனையிடப்பட்டன. காலாவதியான உணவுப் பொருட்கள், லேபில் இல்லாத பாக்கெட் உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் உபயோகிக்க தகுதியற்ற தண்ணீர் பாட்டில்கள் சோடா மற்றும் குளிர்பானங்கள் ஆகியவை அடங்கும். தேனீர்கடைகளில் தேயிலைத்தூள் பரிசோதன செய்யப்பட்டது.

பொது மக்கள் இந்த பரிசோதனைக்கு ஆதரவு தெரிவித்ததுடன் உணவகங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இனி இது போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டால் பதுக்கல் மற்றும் விற்பனை செய்வோருக்கு அதிகபட்சமாக ஐந்து இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தருவதோடு இத்தகைய சமூக கேடுகளை களைவதற்கு எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று தனது கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி Dr.ஜெகதீஷ் சந்திர போஸ் வழங்கினார். [கைபேசி எண்: 9443151996 ; மின்னஞ்சல்: dofssatut@gmail.com].

இந்த சோதனைகள் போது உணவு பாதுகாபுத்துறை அலுவலர்களான பொன் ஞானசேகர், மாரியப்பன், பாலசுப்ரமணியன், முத்துராஜ், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அசோக் குமார், சுகாதார ஆய்வாளர் சி.பொன்வேல் ராஜ், வி.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் இருந்தனர்.















































































தகவல் மற்றும் புகைப்படங்கள்;
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by salai s nawas (singapore) [04 July 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 28387

கலப்படதுக்கும் காலவதிக்கும் மார்க்கம் ஏது? மதம் ஏது? பணம் ஒற்றே குறிக்கோள்.

சமீபத்தில் சீனாவில் பால் பவுடர் கலபடதிற்கு மரண தண்டனை நிறைவேற்றிய சம்பவம் நினைவிருக்கலாம்.

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

-மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [04 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28390

இந்த திடீர் சோதனையில் பங்கு பெற்ற அனைவர்களுக்கும் பாராட்டுக்கள். ஆனால், இது தொடரனும் என்பது தான் அனைவர்களின் விருப்பம்.

இந்த சோதனையை பார்த்ததும். சிறு வயதில் விளையாடிய திருடன்/போலீஸ் விளையாட்டு (ஒளிந்து விளையாடுதல்) தான் நினைவுக்கு வருகின்றது. எதிர் கோஷ்டி ஒவ்வொரு இடமாக தேடிக்கொண்டு செல்லுவார்கள், நாங்கள் அவர்கள் தேடிவிட்டு சென்ற இடத்தில நிரந்தரமாக ஒளிந்து கொள்ளுவோம், காரணம் திரும்பவும் அங்கு வரமாட்டார்கள், சோதனை தான் முடிந்து விட்டதே.

இது மாதிரி தான் நம் நாட்டின் சோதனைகளும். தொடர்ச்சியாக சோதனையை நடத்தினால் பிரயோஜனம் உண்டு.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by hasbullah mackie (dubai) [04 July 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28391

அடிக்கடி இதே போன்ற சோதனைகள் நடத்தப்பட்டால் மக்களுக்கு நல்ல உணவு பொருட்கள் மற்றும் சுகாதார மான சூழ்நிலை அமைய வாய்ப்பு அதிகமாகிறது.. ஒவொரு பொருளின் எக்ஸ்பைரி தேதி குறிப்பிட வேண்டும் என்று அறிவிதிருப்பதினால் நகரில் நல்ல பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் பழைய காலாவதியான பொருட்களை தேதி மாற்றி மீண்டும் அதே பொருளை விற்கக்கூடிய வியாபாரிகளும் இருக்கிறார்கள்.அதிக கவனம் தேவை..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இது கதையல்ல நிஜம்!
posted by Mauroof (Dubai) [04 July 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28394

ஐயா வாங்க! தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.

ஆடிக்கு ஒரு முறை வந்தால் போதாது ஐயா. அடிக்கடி வரவேண்டும். அதுவும் துறை சார்ந்த பெயர் பலகைகள் பொருத்தப்படாத ஊர்திகளில் பல்வேறு பிரிவாக வந்து நகரின் அனைத்து பகுதிகளில் உள்ள வணிக ஸ்தலங்களிலும் திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு சோதனைக்கு வருபவர்கள் மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களாக இருத்தல் மிக மிக அவசியம். அவ்வாறாயின் நான் உறுதியாக, நிச்சயமாக சொல்கிறேன், தங்கள் வருகை வீண் போகாது. உங்களது துறை கல்லா கட்டும். மக்கள் நலனும் பாதுகாக்கப்படும்.

அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம். யாரவது தெரிந்தால் சொல்லுங்கள். நமது நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் என்ற பதவியில் திரு. பொன்வேல் ராஜ் என்ற ஒருவர் இருக்கிறார். அவருடைய பொறுப்புகள் என்ன? அந்த பொறுப்புகளை அவர் சரிவர நிறைவேற்றுகிறாரா இல்லையா என்பதை பொதுமக்களில் ஒருவராக நாம் எவ்வாறு அறிவது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...நல்ல ஒரு செய்தி தொகுப்பு
posted by AbdulKader (Muscat) [04 July 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 28395

அஸ்ஸலாமு அழைக்கும்,

நல்ல ஒரு செய்தித்தொகுப்பு.... அதிலும் அதிகாரியின் தொலைபசி மற்றும் ஈமெயில் தொடர்பு இலக்கங்களுடன்! பேஷ் பேஷ் !!!

நமதூர் மக்கள் உணவு விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். உணவு பொருட்களில் கலப்படம் அதிகரித்து விட்டது. சொற்ப இலாபத்திற்காக உணவு பொருள் வியாபாரிகள் நம்முடைய்ய உயிரை கூட பெரிதாக நினைப்பதில்லை. உணவு பொருள் மீதோ அல்லது அதை விற்பனை செய்பவர்கள் மீது சிறிய சந்தேகம் ஏற்பட்டால், உடனே இந்த அதிகாரியை நமதூர் மக்கள் இரகசியமாக தொடர்பு கொண்டு ஆவன செய்திட வேண்டிக்கொள்கிறேன்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர் (பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [04 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28396

இனி மக்ரூன், வாழைக்கா சிப்ஸ். ஜிகிரிதண்டாவுக்கு மவுசு கூடும். மறைத்து விற்ப்பார்கள். ஸ்ரீலங்கா கட்லட்டும்,மஞ்சவாடவையும் யாராலும் தடுக்க முடியாது. நிஜாம் பாக்கை அள்ளின்னால் போதாது, பான்பராக்கை கடைக்கே கொண்டோரகூடாது. நொங்கு வியாபாரி முதல் பிளாஸ்டிக் பையை பறித்ததால், நேற்றைய சிறப்பு காயிதபை. இந்த சோதனை எப்போதெல்லாம்???????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved