Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:22:34 AM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11010
#KOTW11010
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 13, 2013
ஜெயசேகரன் மருத்துவமனையுடன் இணைந்து காயல்பட்டினம் நல அறக்கட்டளை நடத்திய மருத்துவ இலவச முகாம்! 800க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2762 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) சார்பில், நாகர்கோயில் ஜெயசேகரன் மருத்துவமனையுடன் இணைந்து, இம்மாதம் 09ஆம் தேதியன்று - மருத்துவ பரிசோதனை இலவச முகாம், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.





முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இஸ்ஸத்தீன், ஆலோசகர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, சுல்தான், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியருமான மீராத்தம்பி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹிஷாம் இறைமறை வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அறக்கட்டளை இணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். துணைச் செயலாளர் எம்.என்.அஹ்மத் ஸாஹிப் அறிமுகவுரையாற்றினார்.



பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வாழ்த்துரை வழங்கினார்.



அவரைத் தொடர்ந்து, நாகர்கோயில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் தேவபிரசாத் ஜெயசேகரன் உரையாற்றினார்.



பின்னர், முகாமில் பங்கேற்கும் மருத்துவக் குழுவினருக்கு, காயல்பட்டினம் நல அறக்கட்டளை சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.





அதனைத் தொடர்ந்து, இம்முகாமை நடத்தித் தருவதற்காக - அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனைக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் நினைவுப் பரிசை வழங்க, டாக்டர் தேவபிரசாத் ஜெயசேகரன் அதனைப் பெற்றுக்கொண்டார்.



மொகுதூம் நெய்னா நன்றி கூற, அத்துடன் துவக்க நிகழ்ச்சி நிறைவுற்றது. பின்னர் முகாம் துவங்கியது. இம்முகாமில், டாக்டர் தேவபிரசாத் ஜெயசேகரன் (Urology), டாக்டர் மாயா கோபால் (Gynaecology), டாக்டர் சாமுவேல் அற்புதராஜ் (Urology), டாக்டர் சரவணன் (Orthopaedics), டாக்டர் இளஞ்செழியன் (Orthopaedics), டாக்டர் சந்திரகுமார் இம்மானுவேல் (Cardiology), டாக்டர் கீதா நாராயணன் (Gynaecology) ஆகியோர் கலந்துகொண்டு, இருதய நோய், பித்தப்பை கோளாறு, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.







இம்முகாமில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, மருத்துவ ஆலோசனை பெற்றனர்.





முகாம் ஏற்பாட்டுப் பணிகளில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் கிளை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காயல்பட்டினம் கிளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், சமூக நல்லிணக்க மையம் உள்ளிட்ட அமைப்பினரும், பெண் தன்னார்வலர்களும் துணைப்பணியாற்றினர்.



தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [13 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28007

சமூக சேவகர் எனது பள்ளி நண்பர் SMK முஹைதீன், எதிர்பாராத சாலைவிபத்தில் காயம் ஏற்பட்டு காலில் அடிபட்டும், தனது ஊனத்தை வெளிகாட்டாமல், ஊன்று கோலுடன் நகரமக்களுக்காக இந்த இலவச முகாமை ஆர்வத்துடன் நின்று ஒத்துழைப்பதை கண்டு மகிழ்ச்சி அடைதேன்.

மண்ணின் மைந்தா, ஆளே இல்லாத இடத்தில் உமரொளி அப்பாவை கூட்டு சேர்த்து படம்பிடித்து காட்டியதை பார்த்தும் சந்தோசம்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. புண்ணியம் செய்யும் கண்ணியவர்கள் உள்ளவரை காயல் வாழும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanpu) [13 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28009

நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துமனை மருத்துவர்கள்குழு முதன்முறையாக கலந்துகொண்டு மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற மருத்துவ முகாம். அல்ஹம்திலில்லாஹ்!

இப்புண்ணிய காரியத்திற்கு முதன்மையாக இருந்து செயலாற்றிய காயல்பட்டணம் நல அறக்கட்டளை (KWT )கும்,அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த த.மு.மு.க, காக்கும்கரங்கள், பாப்புலர் பிரண்ட் மற்றும் பல இம்முகாமோடு இணைந்த அத்தனை அமைப்புகளுக்கும், உணவு மற்றும் பல உதவிகளுக்கு அனுசரணையாய் இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்!

தலைமை மருத்துவர் தமது உரையில்,நான் இதுவரை கண்டிராத ஒரு பெரிய மருத்துவ முகாமை இந்த காயல் பட்டணத்தில் கண்டு உள்ளம் களிப்புருகிறேன்!

இம்முகாமை வெற்றிபெறசெய்ய எங்களுக்கு உதவியாக இருந்த KWT மற்றும் அதோடு பணியாற்றிய அமைப்பு களுக்கும்,குறிப்பாக காயல் மக்களுக்கும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்! நாகர்கோவிலில் ஆரம்பத்தில் எங்கள் மருத்துமனை துவங்கிய நேரத்தில்,எங்களை தொடர்புகொண்டு எங்கள் சிகிச்சை மீது நம்பிக்கை கொண்டு எங்களுக்கு ஆதரவு தந்து எங்கள்வளர்ச்சிக்கு தூணாகஇருந்து தோல்கொடுத்துதவிய இக்காயல்நகர மக்களுக்கு நான் என்றென்றும் நன்றிகடன் பட்டிருக்கிறேன் என்று எல்லோர் நெஞ்சம்நெகிழ, தன் பெருந்தன்மை பேருரையில் குறிப்பிட்டிருக்கிறார்!

KWT ன் முக்கிய முழு முயற்சியால் நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமை தடைசெய்யுங்கள் என்று சில விஷமிகள் ஆர்.டி.ஓ அவர்களிடம் மனுகொடுத்து அது மாவட்ட ஆட்சிதலைவர் வரை சென்று,,

இப்புண்ணிய மருத்துவ முகாம் எந்த இடையூறும் இல்லாமல் நடந்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சிதலைவர் உறுதியாககட்டளையிட்டதாக, இம்முகாமை முன்னின்று நடத்தியவர்கள் மனவேதனயுடன் கூறினார்கள்!

மக்கள் நலனில் அக்கறையுள்ள மனிதநேயமிக்க மாவட்ட ஆட்சிதலைவருக்கு காயல் மக்களின் சார்பாக நன்றிகள் நிறைய சென்றடையட்டும்!

KWT ஆரம்பித்த நாளில் இதன்உதயம் குறித்து முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான்கள் போல் முளைத்திருக்கிறது,மழைகாலம் முடிந்தால் இதுவும் மறைந்துவிடும் என்று ஏளனம் பேசியவர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் என காணமுடியாமல் காணாமல் போய்விட்டார்கள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்(முன்னாள் KWT செயலர்),


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved