Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:31:44 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10870
#KOTW10870
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 23, 2013
சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.35 ஆயிரம் நிதியொதுக்கீடு! ஜூன் 22 அன்று வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடத்த முடிவு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2371 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக 35 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதியன்று வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கூட்ட நிகழ்வுகள்:

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் மே மாத செயற்குழுக் கூட்டம், 17.05.2013 வெள்ளிக்கிழமை இரவு 19.45 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

மன்ற உறுப்பினர் சோனா முஹம்மத் அபூபக்கர் இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

தலைமையுரை:

அடுத்து, இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத்தின் துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் வரவேற்புரையாற்றினார்.

மன்றச் செயல்பாடுகள் நடைபெறும் விதம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், மன்றத்தால் இரவு நேரங்களில் நடத்தப்படும் கூட்டங்கள் அனைத்தும், அக்கூட்டங்களில் பங்கேற்போரின் வசதிகளைக் கருத்திற்கொண்டு, இனி வருங்காலங்களில் 21.15 மணிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட,
ஜனாப் முத்துவாப்பா,
ஜனாப் எம்.எச்.அப்துல் ரஹ்மான்,
ஜனாப் இல்யாஸ்
ஆகியோரைக் குறிப்பிட்டும், அனைவரையும் பொதுவாகவும் அவர் வரவேற்றுப் பேசினார்.

கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:

அடுத்து, நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.எஸ்.தவ்ஹீத் சிற்றுரையாற்றினார். சிங்கப்பூரில் வேலை தேடுவதற்காக நல்லதொரு களம் அமைத்துத் தந்தமைக்காக, மன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், மன்றத்தின் வெற்றிக்காக முழு ஒத்துழைப்பு நல்கி வரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:



பின்னர், மன்றத்தின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்தும், கடந்த கூட்டம் முதல் நாளது தேதி வரையில் மன்றத்தால் நடத்தப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் குறித்தும், மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார்.

மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது, மன்றச் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் அனைவரிடமிருந்தும் பெறப்பட்ட மதீப்பீட்டுப் படிவங்களின் (Performance Appraisal and Members’ Feedback form) படி தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, செயற்குழுவின் மூலம் முழுமையாக பரிசீலிக்கப்பட்ட பின், அதனடிப்படையில் இனி வருங்காலங்களில் மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தின் தன்மைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

வரவு-செலவு கணக்கறிக்கை:



அடுத்து, மன்றத்தின் நாளது தேதி வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் மஹ்மூத் ரிஃபாய் வாசிக்க, சில விசாரணைகளுக்குப் பின் கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.

தொடர்ந்து பேசிய அவர், மன்றப் பொருளாளர் பொறுப்பிற்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

மன்றத்தின் நிதிப் பரிமாற்றங்களை இன்னும் இலகுவாக்கிடும் பொருட்டு, வங்கியொன்றில் வைப்புக் கணக்கு துவக்கப்பட விரைவில் வேண்டும் என்றும், அவ்வாறு வைப்புக் கணக்கு துவக்கப்படும் வரை, நடப்பு வங்கிக் கணக்கிலேயே நிதிப் பரிமாற்றத்தைத் தொடரலாம் என்றும் கூறினார்.

நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உரை:

அடுத்து, மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் பேசினார். அண்மையில் தாயகம் சென்றிருந்தபோது, ஹாஃபிழ்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வுகள் மற்றும் ஏழை - எளிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளில் தானும் பங்கேற்றதாகக் கூறி, அவை தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஹாஃபிழ்களுக்கு முழு ஊக்கமளித்து வரும் செயல்திட்டமான - ஹாஃபிழ்கள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, நீண்ட கால செயல்திட்டத்தின் அடிப்படையில் வடிவமைத்துத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், மன்ற உறுப்பினர்கள் தாயகம் செல்கையில், மன்றப் பணிகளுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்கி, மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

நிதியொதுக்கீடு:

பின்னர், பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி, காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளிய மக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட - வீடு கட்டுமானப் பணிகள் மற்றும் சிறுதொழில் வகைகளுக்காக ரூபாய் 35 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.

விண்ணப்பங்கள் பரிசீலனைக் குழு:

மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நடப்பு பருவத்திற்கான பரிசீலனைக் குழுவினராக,
கே.எம்.டி.ஷேக்னா லெப்பை,
கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய்,
ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

பணி விபரங்களடங்கிய தரவுதளம்:

அடுத்து, மன்ற உறுப்பினர்களின் பணி விபரங்களை உள்ளடக்கிய தரவுதளம் (database) ஒன்றை மன்றத்தின் சார்பில் உருவாக்கி, செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, உறுப்பினர் சோனா அபூபக்கர் ஸித்தீக் விளக்கிப் பேசினார்.



வேலை தேடுவதற்காக சிங்கப்பூருக்கு வரும் காயலர்களுக்கு இந்த தரவுதளம் பெரிதும் துணை புரியும் என்று கூறிய அவர்,

வேலைவாய்ப்பு கருத்தரங்கு:

வரும் 22.06.2013 தேதியன்று, மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் கருத்தரங்கம் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கருத்தரங்கில், உறுப்பினர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் தன்மைகள், தமது பணி குறித்த விபரங்கள், அந்நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகள், அவற்றைப் பெற்றிடுவதற்கான வழிமுறைகள் குறித்து, ஒவ்வொரு நிறுவனத்தின் சார்பாகவும் குறைந்தது ஓர் உறுப்பினர் பேச வேண்டுமெனவும் தெரிவித்தார்.

காலாண்டு செய்தி மடல்:

அடுத்து, மன்றத்தின் ஒவ்வொரு 3 மாத கால நடவடிக்கைகளையும் உள்ளடக்கி, காலாண்டு செய்திமலர் ஒன்றை, தேவையான வரைபடங்களுடன் தயாரிக்க, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் இஸ்மாஈல் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:



அடுத்து, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் இஸ்மாஈல் பேசினார். மன்றத்தின் செயற்குழுக் கூட்டங்கள் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தகுதியானதாக அடையாளங்காணப்பட்ட நிகழ்விடங்களை, கணனி உதவியுடன் அனைவருக்கும் அவர் விளக்கினார்.

புது மணவாழ்வு காணும் மன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து:

அடுத்து, அண்மையில் திருமணம் செய்துகொண்ட மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ, சில நாட்களில் திருமணம் செய்யவுள்ள உறுப்பினர்களான ஏ.எச்.காதிர் ஸாஹிப் அஸ்ஹர், ஹஸன் ஸுலைமான் ஆகியோருக்கு மன்றத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கப்பட்டது.

அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர்:

07.06.2013 அன்று நடைபெறவுள்ள மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளராக, துணைக்குழு உறுப்பினர் எம்.எல்.எஸ்.மகுதூம் அப்துல் காதிர் நியமிக்கப்பட்டார்.

சிறப்பழைப்பாளர் அறிவுரை:

பின்னர், மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்களை மெருகேற்றி செய்வது குறித்து, சிறப்பழைப்பாளர் முத்துவாப்பா சில அறிவுரைகளை வழங்கினார்.

கூட்ட நிறைவு:

இவ்வாறாக நடைபெற்ற கூட்டம், விவாதிக்க வேறம்சங்களெதுவுமில்லா நிலையில், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் துஆவுடன் இரவு 21.40 மணியளவில் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு - துணைக்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.



எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!


இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நீ இரு! நா போறேன்!! (?!)  (22/5/2013) [Views - 2690; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved