Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:10:27 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10721
#KOTW10721
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 5, 2013
தக்வா பொதுக்குழுவில் சிறப்பு விருந்தினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆற்றிய உரை தொகுப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2506 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் 24.04.2013 புதன் இரவு 08.00 மணியளவில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு எம்.எஸ்.ஜஃபருல்லாஹ் இல்லத்தில் நடைபெற்றது.

மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை காயல் நல மன்றத்தின் (காவாலங்கா) தலைவரும், சிறந்த எழுத்தாளருமான ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் என்ற தைப்பான் ஷாஜஹான் ஹாஜி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், இந்திய மனித வள மேம்பாட்டுத்துறை மதரசா நவீன கல்வி தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஹாஜி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசியதாவது:-



என் பாசத்திற்குரிய இம்மன்றத்தின் தலைவர் வாவு ஷம்சுத்தீன் காக்கா தொடங்கி, இம்மன்றத்தின் செயலாளர் என் அன்பிற்குரிய செய்யது முஹம்மது காக்கா மற்றும் மரியாதைக்குரிய காவாலங்கா தலைவர் தைப்பான் ஷாஜஹான் காக்கா உள்ளிட்ட அனைவரும் என்னைப் புகழ்வதிலும் பாராட்டுவதிலும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார்கள். அதற்கு பதிலாக நம் சமுதாயப் பிரச்சனைகள், தேவைகளைப் பற்றி பேசியிருக்கலாமே என்று கருதுகிறேன்.



ஆர்வமற்ற சமுதாயம்:

என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய பெரியோர்களே! இளைய தலைமுறைச் சகோதரர்களே!

இன்று நாம் - நம் முஸ்லிம் சமுதாயம் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறோம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல், நீதித்துறை என அனைத்துத் துறைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறோம். நமக்கு எந்தத் துறையைப் பற்றியும் போதிய ஞானமோ, விழிப்புணர்வோ இல்லை. சிறுபான்மையினரான நமக்கு அரசு தரும் உதவித் திட்டங்கள் பற்றியாவது நாம் தெரிந்திருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. அதனைப் பற்றி அறிய ஆவலுமில்லை, அக்கறையுமில்லை.

அமைப்புகளால் பிரிந்திருக்கிறோம்...

2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி. இதில் இஸ்லாமியர்கள் சதவீதம் 5.7 விழுக்காடுதான். ஆனால் நம்மிடம் இருக்கும் அமைப்புகள் 24க்கும் மேல். அமைப்புகளில்தான் பெரும்பான்மையாக இருக்கிறோமே தவிர மக்கள் தொகையில் அல்ல. இவ்வளவு குழுக்களாக இருந்தும் ஒற்றுமையாக இருக்கிறோமா என்றால் இல்லை. எப்படி ஒற்றுமையாக இருக்க முடியும்?

சின்னச் சின்ன விஷயங்களில் எல்லாம் பிணங்கிப் பிரிந்து நிற்கின்றோம். ஒவ்வொரு அமைப்பும் தத்தம் அமைப்புதான் முன்னிலைப் படுத்தப் படவேண்டும் என்று போட்டிப் போடுகின்றன.

மறைக்கப்படும் முஸ்லிம்களின் தியாக வரலாறுகள்:

ஆனால் நம்மை குறைப்படுத்தவும், குற்றப் பரம்பரையாக சித்தரிக்கவும் பெரிய சூழ்ச்சி மறைமுகமாக நடந்து வருகின்றது. நாம் இந்த நாட்டிற்கு விடுதலைக் காலங்களில் செய்த தியாகங்கள் எல்லாம் மறக்கப்பட்டுள்ளன. அதை நினைவுகூர யாரும் இல்லை. விடுதலைக்காக தங்களின் இன்னுயிர் ஈத்த தியாகிகள் பெயர்கள் எல்லாம் மறைக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப் போராட்டங்களில் இஸ்லாமிய சமுதாயத்தை தங்களின் வீர முழக்கங்களால் வீறுகொண்டு போரிட தூண்டிய முஹம்மது அலி, ஷௌகத் அலி சகோதரர்களை யார் நினைத்துப் பார்கிறார்கள்?

ஆங்கிலேயனை விரட்டுவதற்கு கடுமையாகப் போராடிய திப்பு சுல்தானைப் பற்றி யார் புகழ்கிறார்கள்?

ஆங்கிலேயர்கள் மேல் இருந்த வெறுப்பின் காரணமாய் ஆங்கிலக் கல்வி கற்பது ஹராம் என்று பத்வா வழங்கி தங்களின் விடுதலை வேட்கையை இந்த சமுதாயத்திற்கு உணர்த்திய உலமாக்களையும் மதரசாக்களையும் உளமார வாழ்த்துபவர்கள் யார்?

தவறான சித்தரிப்பு:

இன்று இஸ்லாமியர்கள் அன்னியர்கள் போலவும், தேசப்பற்று இல்லாதவர்களாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். இந்திய விடுதலை நேரத்தில் அந்நியனின் பிரித்தாளும் சூழ்ச்சியில் விழாமல் நம் தேசம்தான் நமக்கு சிறந்தது என்று பாகிஸ்தானுக்கு போகாமல் தேச விசுவாசத்தைக் காட்டியவர்கள் தமிழ் முஸ்லிம்கள். நாம் அறிந்த வரை தமிழகத்திலிருந்து யாரும் நாடு மாறிப் போகவில்லை. ஆனால் இன்று நாம் தேசப் பற்று அற்றவர்களாகவும், தேச விரோதிகளாகவும் ஊடகங்களில் திரும்பத் திரும்ப காட்டப் படுகிறோம்.

மாலேகாவ்ன், அஜ்மீர் ,ஹைதராபாத் குண்டுவெடிப்புகளுக்கு மற்றவர்கள்தான் காரணம் என்ற உண்மை தெரிய வந்த பின்பும், எங்கு குண்டு வெடித்தாலும் உடனேயே முஸ்லிம் தீவிரவாதிதான் காரணம் என்று முந்திக்கொண்டு செய்தி வெளியிடுகிறார்கள்.

நம்மிலும் தவறு செய்வோர் உள்ளனர்...

நம்மில் சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை நாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அதைக் கண்டிக்கிறோம். அதைச் செய்யும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.

ஒரு சிலர் செய்யும் தீவிரவாதச் செயல்களால் ஒட்டுமொத்த சமுதாயமே களங்கப்படுத்தப் படுகிறது. உடல், உயிர், உடைமைகள் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறோம்.

பல்லாண்டு கால சிறைவாசம்:

நம்மவர்கள் கைது செய்யப்பட்டால் விசாரணைக் கைதிகளாகவே பல்லாண்டுகள் சிறையில் வாடுகின்றனர். ஒரு குடும்பத்தில் தந்தை, மகன் இன்னும் அவருடைய மகளை மணமுடித்த மருமகன் என மூவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பட்டுள்ளனர் என்றால், அவர்களுடைய குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்தைக் கொடுப்பது யார்? இன்னும் நிறைய பேர் எவ்வித குற்றப் பத்திரிக்கையும் அளிக்கப்படாமல் அவர்கள் அக்குற்றத்தையே செய்திருந்தாலும் அதற்காக வழங்கப்படும் தண்டனை ஆண்டுகளையும் தாண்டி சிறையில் சிரமப்படுகின்றனர்.

இளைஞர்களின் ஆர்வக் கோளாறு:

ஒரு சில ஊர்களில் நாம் பெரும்பான்மையாக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழகத்திலேயே நாம் பெருவாரியாக இருப்பதாக நினைத்துக்கொண்டு ஒரு சில இளைஞர்கள் ஆர்வக் கோளாறினாலும், உணர்ச்சி வசப்பட்டும், இன்னும் சொல்லப்போனால் சிலரின் தவறான வழிகாட்டுதலினாலும், தவறான செயல்களில் ஈடுபடுவதால் நம் சமுதாயம் பாதிப்பிற்கு ஆளாகிறது.

மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாடு அவசியம்:

இவர்களை நேர்வழி நடத்தவும், இவர்களுக்கு சீரான ஆலோசனை வழங்கவும் நாம் வாழும் இடங்களில் எல்லாம் மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். நமக்குள் ஏற்படும் சிற்சில பிரச்சனைகளை காவல்துறை, நீதிமன்றம் அளவிற்கு செல்லாமல் மஹல்லா அளவிலேயே தீர்த்து விடவேண்டும்.

முற்காலத்தில் இப்படி ஒரு அமைப்பு முஸ்லிம் சமுதாயத்தில் இருந்திருக்கிறது. முஸ்லிமல்லாத சகோதரர்கள் கூட இஸ்லாமிய சமுதாய பெரியவர்கள் நீதமான தீர்ப்பு வழங்குவார்கள் என்று தேடி வருவார்களாம். எனவே, மீண்டும் அப்படியொரு மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பை உருவாக்க அந்தந்த முஹல்லாவில் வசிக்கும் பெரியவர்கள், செல்வாக்கு பெற்றவர்கள் தங்கள் நேரத்தை ஒதுக்கி நற்பணி ஆற்றவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

பல்கிப் பரவியிருக்கும் காயலர்கள்:

வரலாற்றுச் சிறப்பு மிக்க நம் காயல் நகர் மக்கள் உழைப்பிலும், நேர்மையிலும் ஒழுக்கத்திலும், மார்க்க நெறிகளைக் கடைப் பிடிப்பதிலும், பிறருக்கு முன்னுதாரமாக இருப்பதிலும் பெயர் பெற்றவர்கள். நம் காயல் நகர் மக்கள் பொருள் ஈட்டுவதற்காக உலகின் பல திசைகளிலும் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றோம். கல்வியில் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக இன்று நம் இளைஞர்கள் உயர் கல்வி பெற்று உயர்ந்த வேலை வாய்ப்பில் பணியாற்றி வருவதைப் பார்க்கின்றோம்.

அழைத்த மன்றங்களுக்கு நன்றி:

அண்மையில் சிங்கப்பூர், ஹாங்காங் தற்போது பாங்காக் நகரங்களில் நடைபெறும் காயல் நல மன்றங்களின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்து கௌரவப் படுத்தியமைக்கு இம்மன்றங்களுக்கு என் உளமார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

நகர்நல மன்றங்கள்:

இன்று உலக அளவில் அனைத்து திசைகளிலும் விரிந்து பரந்து பொருள் ஈட்டி வருகின்றீர்கள். எல்லா இடங்களிலும் நம் ஊர் நகர் நல மன்றங்கள் அமைத்து அதன் மூலம் நம் ஊருக்காக, நம் ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்காக கல்வி, மருத்துவம், தொழில் இன்னும் மேம்பாட்டிற்கான அனைத்து வழிகளிலும் உதவி செய்து வருகின்றீர்கள். நன்கு ஒற்றுமையாக இருக்கின்றீர்கள்.

நகரில் நிலவும் ஒற்றுமைக் குறைவு:

ஆனால் நம் ஊரில் ஒற்றுமை ஒரு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. சகோதர சமயத்தவர்கள் நம்மை ஏளனமாகப் பார்கிறார்கள். நகர்மன்றத்தில் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையில் ஆரம்பம் முதலே பிரச்னை.

நகர் மன்றத்தில் எந்தத் திட்டங்களும் நிறைவேற்ற முடியாமல் தேக்க நிலை நீடித்து வருகிறது.

ஜமாஅத்துகளுக்கிடையே புரிந்துணர்வு இல்லை.

வெளியூரிளிர்ந்து யாரும் எப்போதும் எவ்வித கட்டுப்பாடோ, கண்காணிப்போ இல்லாமல் ஊரில் சகட்டு மேனிக்கு வந்து குடியேருகிறார்கள். அவர்கள் யார், அவர்களது பின்னணி என்ன என்ற எந்த வித விசாரனையுமில்லை. அவர்களைப் பற்றி அறிய யாரும் ஆவல்படுவதுமில்லை.

ஐக்கியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய பேரவையிலேயே ஐக்கியமில்லாத அவல நிலை.

கொள்கை, கோட்பாடு, அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒற்றுமையைக் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம். நம் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் இதற்கு ஒரு தீர்வு காணாவிட்டால் நம் ஊர் நிலைமை மிக மோசமாகிவிடும் என்று அண்மையில் என்னைச் சந்தித்த ஓர் உளவுத் துறை அதிகாரி எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லிச் சென்றார்.

பிரியாதிருப்போம்…

எனவே, என் அன்பான சகோதரர்களே! இளைஞர்களே!!

ஊரின் ஒற்றுமை மிக மிக முக்கியம். நம் உயிருக்கும், நம் மக்களின் உயிருக்கும், நம் பொருளுக்கும் பாதுகாப்பு மிக மிக அவசியம். கொள்கை, அரசியல் வேற்றுமைகள் நம் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக ஆக வேண்டாம்.

ஊரில் ஒற்றுமையாக வாழ்வோம். சகோதர சமயத்தாருடன் வாஞ்சையுடன் பழகுவோம். நம் தாய் நாட்டிற்கு விசுவாசமாக இருப்போம்.

இஸ்லாம் எங்கள் வழி!
இன்பத் தமிழ் எங்கள் மொழி!!
என எப்போதும் பறைசாற்றுவோம் என்ற வார்த்தைகளோடு, என்னை இங்கு பேச வைத்து இவ்வளவு நேரம் நீங்கள் அமைதியாய் இருந்து கேட்டமைக்கு, என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தவனாக விடைபெறுகிறேன். வ ஆகிரு தாவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...


இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், இந்திய மனித வள மேம்பாட்டுத்துறை மதரசா நவீன கல்வி தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.

தகவல்:
M.S.செய்யித் முஹம்மத்
செயலாளர்
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா)

படம் & பதிவேற்றத்தில் உதவி:
கம்பல்பக்ஷ் எஸ்.ஏ.அஹ்மத் இர்ஃபான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Salai S Nawas (singapore) [05 May 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 27219

அருமை நண்பர் அவர்களின் எதார்த்தமான பேச்சு. மறுப்பதற்கு ஒன்றும் இல்லை.

" ஐக்கியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய பேரவையிலேயே ஐக்கியமில்லாத அவல நிலை " - இது தான் ஊரில் தலையாய பிரச்சினை. தலை ஒழுங்காக இருந்தால் எல்லாம் சரியாகி விடும். இது உங்களை போன்ற நல்ல நோக்கமுள்ளவர்கள் நினைத்தால் கண்டிப்பாக முடியும். எல்லா ஜமாத்துகளையும் ஒன்று கூட்டி ஒரு தலைமையை தேர்ந்தெடுத்தால் ஊரே அதன் பின்னர் ஒன்று கூடி நிற்கும்.

அந்த தூய பணியை நண்பர் அபூபக்கர் அவர்கள் செய்யவேண்டும் என்று இந்த இணைய தளம் மூலம் கோரிக்கை வைக்கிறேன் -

-அன்புடன் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by shaik sinan (bangkok) [05 May 2013]
IP: 117.*.*.* China | Comment Reference Number: 27227

அருமையான கருத்து.

வெளியூரிளிர்ந்து யாரும் எப்போதும் எவ்வித கட்டுப்பாடோ, கண்காணிப்போ இல்லாமல் ஊரில் சகட்டு மேனிக்கு வந்து குடியேருகிறார்கள். அவர்கள் யார், அவர்களது பின்னணி என்ன என்ற எந்த வித விசாரனையுமில்லை. அவர்களைப் பற்றி அறிய யாரும் ஆவல்படுவதுமில்லை.

புன்னகயல் , வீரபாண்டிய பட்டணம் ஊர் கட்டுப்பாடு உள்ளது ஆனால் நாம ஊரில் இல்லை. அல்லா அணைத்து மக்களுக்கும் ஒற்றுமையை கொடுபனாஹ் aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இதயம் பேசுகிறது
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27232

ஒரு நூற்றாண்டைக் கடந்த தேசிய கட்சி. பச்சிளம் பிறைககொடியின் கீழ் நின்று பேசும் ஒரு சிம்மக் குரலின் வேதனை கலந்த வெளிப்பாடுகள் பொது செயலாளரின் அற்புதமான் உரை. பேச்சல்ல இவை எல்லாம், அவர் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து வெளியாகும் உஷ்ணமான மூச்சுக் காற்று. அவர் பேச வில்லை, அவர் இதயம் பேசுகிறது.

ஆர்வமற்ற சமுதாயம், அமைப்புகளால் பிரிந்திருக்கும் சமுதாயம். பல்லாண்டு காலம் சிறைவாசம் இருக்கும் இளைஞர் சமுதாயம், மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாடு இல்லாத சமுதாயம். நகரில் நிலவும் ஒற்றுமை குறைவான சமுதாயம்!

பொது செயலாளரின் 20 வயதில் 60 வயது விவேகம் வியக்க வைக்கிறது. நகரமன்றத்தின் ஒற்றுமைக்குறைவு அத்தனை பேரும் அறிந்த பரம ரகசியம். ஆனால் ஐக்கிய பேரவையிலேயே ஒற்றுமை இல்லை என்பது எத்தனை பேர் அறிந்த சிதம்பர ரகசியம்.

முஹலாக்களில் கட்டுப்பாடு இல்லை ஜமாத்களில் அடிபிடி, சிறு சிறு விஷயங்களுக்காக முஸ்லிம் சகோதரர்களையே முஸ்லிம்கள் மாற்றார்களாக பார்க்கும் அவல நிலை இப்படி எல்லா குறைகளையும் ஏக காலத்தில் வெளிப் படுத்திய ஒரு உள்ளக் குமுறல் 100 விழுக்காடு சத்தியமானது.

இதுவரை இவற்றை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இப்படி அக்கு வேறு ஆணி வேறாக வெளிச்சதுக்குகொண்டு வந்து ஒரு பரப்பான காற்று மண்டலத்தில் ஊத்தி விட்ட பொது செயலாளர் அவர்களின் ஆவேச உரை நமது மக்களின் இதயங்களை தட்டுமானால், நாளுக்கு நாள் பெருகிவரும் உலமாக்களின் கருத்து வேறுபாடுகளை களையுமானால் பொது செயலாளர் கனவு காணும் சிறந்த சமுதாயம் மீண்டும் அரசாளும் காலம் வரும்.

நமதூரில் ஒரு உலமாக்கள் சபை, ஒரு ஷரீஅத் நீதி மன்றம் உதயமாகுமானால் இந்த சமுதாயம் விடியலை நோக்கி பயணிக்க முடியும். இல்லை என்றால் ...பொது செயலாளரே அந்த விடையும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்.எங்களுக்கு துணிச்சல் இல்லை.நன்றி, வாழ்த்துக்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [05 May 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27236

அஸ்ஸலாமு அலைக்கும்.

வரலாற்று மிக்க நம் ஊரின் நிலைமையை நமது அருமை சகோதரர் .ஜனாப் .K.A.M.அபூபக்கர் அவர்களின்......உரையை நாம் நம் மனதில் கொஞ்சம் பதிய வைத்தாலே.........போதும் நாம் ஓரளவுக்கு நம் ஊரின் ஒற்றுமைக்காக படு படலாம்.........

>>>>நம் ஊரின் ஒற்றுமை இல்லா நிலைமையை எண்ணி நாம் என்ன செய்வது என்றே நம் யாவர்களுக்கும் புரியவே இல்லை ........அல்லாஹு தான் நம்மை பாது காத்து நாம் அனைவர்களும் ......ஒற்றுமையின் வழியில் செல்ல அருள் புரியணும் .........<<<<

இப்படியே நாம் செயல் பட்டால் ....நாம் ஊரின் நிலைமை ரொம்பவும் படு மோசமாகி விடும் .....இது நமக்கு ஊரின் பெரும் பிரச்சளையாகவே நம் கண் பயங்கரமாகவே முன் நிற்கிறது. என்ன செய்வது என்றே நமக்கு புரிய வில்லை .......

நம் சகோதரர் K.A.M.அபூபக்கர் அவர்களின்.சிறப்பான உரையில் .....நமது ஊர் மக்களின் நலனுக்காகவே துவங்க பட்ட ...ஐக்கிய பேரவையின் .....நிலைமை பற்றி குறிப்பிட்டது ....நம் ஊர் பொது மக்கள் யாவர்களின் மனதில் கடுமையான வேதனையை அழித்து விட்டது ......நம் ஊர் பெரியவர்கள் எந்த நோக்கத்துக்காக ஆரபித்தார்களோ .....அதன் செயல் வடிவம் .....நடக்காமலே போய் விடுமோ....என்றும் நமக்கு பயமாகவே உள்ளது ......ஐக்கிய பேரவையின் நலன் நமக்கு கண்டிப்பாகவே தேவை ......இல்லை என்றால் நம் சகோதரர். K.A.M.அபூபக்கர் அவர்கள் சொன்னது போன்று ....நம் ஊருக்கு வெளி ஊரால் வந்து குடி ஏறுபவர்களால் பிரச்சனைகள் வரலாம்...........அதை கண்ட்ரோல் பண்ண நமக்கு .....ஐக்கிய பேரவையின் .....செயல் பாடுகள் அவசியம் தேவை ....

நம் ஊர் மக்களிடம் (ஆண் / பெண் ) கல்வி திறன் அதிகரித்து இருப்பது பாராட்டு கூறியது தான் ......+....நம் ஊர் மக்கள் உலகம் பூராவும் பரவி நம் ஊருக்காக அமைப்புகள் ஏற்படுத்தி பல நல்ல காரியங்கள் செய்தும் ......ஆனால் நம்மிடம் ஒற்றுமை குறைந்து விட்டதே..............வருத்தமான விசையம் இல்லையா ????

நம் ஊர் நகர் மன்றமோ .....சுத்தமாகவே ....நகரா ''''' மன்றமாகவே இந்த 2 வருசமாகவே இருந்து வருகிறது ....இதும் நமக்கு ஒரு தலை குனிவும் ....+....வேதைனையும் .....வருத்தமாகவும் ....இருந்து வருகிறது ....இதற்கும் ஒரு முடிவும் ....நம் ஊர் பொது மக்களுக்கு விடிவும் ....எப்போது தான் வருமோ .....??

நம் சகோதரர் ஜனாப் .K.A.M.அபூபக்கர் அவர்களிடம் .....உளவு துரை அதிகாரிகள் சொன்னதையும் நாம் கொஞ்சம் நினைத்து பார்த்தாலே போதும் ...........

நம் பக்கத்தில் உள்ள அனைத்து ஊரிலும் கூட ஒற்றுமை உள்ளது..........நம்மிடம் ஏன்??? இல்லை .... >>>>நாம் சிந்திப்போம் ......நாம் ஒற்றுமையின் பக்கம் திரும்பி செயல் படுவோம் ...........இன்ஷா அல்லாஹ் ......வெற்றி நம் பக்கமே .............அல்லாஹ் நல்லதே நாடுவான் ...........

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அப்படி என்ன திட்டம் தேக்கநிலையில் உள்ளது..?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [05 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27784

நகர் மன்றத்தில் எந்தத் திட்டங்களும் நிறைவேற்ற முடியாமல் தேக்க நிலை நீடித்து வருகிறது. C P

அப்படி என்ன திட்டம் தேக்கநிலையில் உள்ளது..? அதை கொஞ்சம் விளக்கமாக ஆதரத்துடன் விளக்கலாமே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved