Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:13:54 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10694
#KOTW10694
Increase Font Size Decrease Font Size
புதன், மே 1, 2013
எத்தனை எக்ஸ்னோரா வந்தாலும்....... ஹும், முடியல!! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3595 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பு கோடை காலத்தை முன்னிட்டு, அன்றாடம் மாலைப் பொழுதில் காயல்பட்டினம் கடற்கரை மக்கள் திரட்சியுடன் காணப்படுகிறது.

ஆண்டுதோறும், கோடை விடுமுறைப் பருவமான ஏப்ரல் பிந்திய பாதி மாதத்திலும், மே மாதம் முழுவதிலும் - உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி, அண்டை ஊர்களான ஆறுமுகநேரி, திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம், குரும்பூர், கேம்பலாபாத், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், நெல்லை மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் காயல்பட்டினம் கடற்கரையில் வந்து குவிவது வாடிக்கை.

கடற்கரைக்கு வருவோர், ஆங்காங்கே நடைபாதை வணிகர்களிடம் தின்பண்டங்களை வாங்கியும், வீடுகளிலிருந்து கொண்டு வந்த உணவுப் பொருட்களையும் இணைந்தமர்ந்து உட்கொள்வர்.

சிறுவர்-சிறுமியர் கடல் மணலில் குழி தோண்டி, ஊற்று நீரெடுத்தும், மணற்கோபுரங்கள் கட்டியும் மாலைப் பொழுதை மகிழ்வுடன் கழிப்பர்.



விடுமுறையிலிருக்கும் மாணவர்கள், கடற்கரையின் தென்புறத்தில் கால்பந்து விளையாடுவர். உள்ளூர் பொதுமக்கள் வட்டமாகக் கூடியமர்ந்து, உரையாடிப் பொழுது போக்குவர்.





குடும்பத்தினருடன் இரவு 08.00 மணிக்கு மேல் கடற்கரைக்கு வரும் உள்ளூர் பொதுமக்கள் பலர் கையில் இரவுணவுடன் வந்து, கடற்கரை மணற்பரப்பில் வட்டமாக அமர்ந்து, உணவுண்டு செல்வதும் வழமை. 29.04.2013 அன்று இதுபோன்று உணவுண்ட பொதுமக்கள், தாங்கள் பயன்படுத்திய காகித தட்டுகளையும், கோப்பைகளையும், எச்சில் உணவுடன் - அமர்ந்த இடத்திலேயே பரத்திவிட்டுச் சென்றுவிட்டனர். மறுநாள் நடைப்பயிற்சிக்காக வந்த உள்ளூர்வாசிகள் இக்காட்சியைக் கண்டதும், அது தொடர்பானவர்களை ‘வாயாரப் புகழ்ந்த’னர்.









இதில் வேடிக்கை என்னவெனில், நகராட்சியின் சார்பில் அண்மையில் நகரெங்கும் வைக்கப்பட்டுள்ள குப்பை சேகரிக்கும் நவீன தொட்டிகள், கடற்கரை நுழைவாயில் அருகிலும் வைக்கப்பட்டிருந்தும், தமது குப்பைகளை சிறிது நேரம் கையில் பாதுகாத்து வைத்து, வீடு திரும்பிச் செல்கையில் குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லுமளவுக்குக் கூட அவர்களுக்கு பொறுமையில்லாது போனதுதான்.



இத்தனையையும் தாண்டி, நடப்பாண்டு விடுமுறைப் பருவமான தற்காலத்தில், பொதுமக்கள் பலரின் நடவடிக்கைகள் நகர்நல விரும்பிகளுக்கு பெரும் கவலையளிப்பதாக உள்ளது.

கடற்கரையில் கால் நனைத்து இன்பம் காண்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமை. ஆனால், சில ஆண்களும், பெண்களும் - உள்ளூர் கலாச்சாரத்தை அறியாமல், சமய பாகுபாடின்றி மாலைப் பொழுதில் கடலில் கூட்டங்கூட்டமாக குளிக்கத் துவங்கியுள்ளனர். குளித்து முடித்துவிட்டு, ஈர உடையுடன் நிற்கும் மகளிரைப் பார்த்து முகம் சுளிக்கும் பொதுமக்கள் ஏராளம்.



எல்லாவற்றுக்கும் மேலாக, காயல்பட்டினம் கடற்கரைக்கு மாலைப் பொழுதுகளில் காற்று வாங்குவதற்காக வந்து செல்லும் பொதுமக்கள், பயன்படுத்தி குப்பையாகப் போட்டுச் செல்லும் குடிநீர் உறைகளை (தண்ணீர் பாக்கெட்) சேகரித்து - பழைய பொருட்களை வாங்கும் கடைக்கு விற்பனை செய்யும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு, தற்போது குடிநீர் உறைகளுடன், மதுபானப் புட்டிகளும் நிறையவே கிடைக்கின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 15க்கும் மேற்பட்ட மதுபானப் புட்டிகளை அவர் சேகரிக்கிறார்.





கடலில் குளிக்காதீர்!

கடற்கரையில் மது அருந்தாதீர்!

என பல வாசகங்கள் கடற்கரை நுழைவாயிலில் இருக்கின்றபோதிலும், அந்தோ பரிதாபம்! இவர்களின் கண்களில் மட்டும் அது படவேயில்லை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பொறுப்புணர்ந்து நடத்தல்
posted by Mauroof (Dubai) [01 May 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27150

இந்த செய்தியை பொறுப்பற்ற இச்செயல்களை செய்தவர்கள் கண்டால், "ஆமா வந்துட்டானுவு பெருசா" என்று சொல்லக்கூடும்.

கடற்கரையில் பொழுது போக்க வருகின்றவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்திட வேண்டும். 6 நண்பர்கள் (இளைஞர்கள்) ஒன்றாக அமர்ந்து தின்பண்டங்கள் சில தின்ற பின்னர், அதில் ஒருவரோ அல்லது இருவரோ குப்பைகளை அதற்கென்றே வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போட எழுந்து சென்றால்! பாருடா அக்கறைய, அடங்கு மாப்ளே, போதும்டா, ரொம்பத்தாண்டா பயபுள்ள சுத்தம் பேனுறான், அப்புறம், நீ மட்டும் இவைகளை போட்டதும் கடற்கரை சுத்தம் ஆகிடுமோ என்பன போன்ற வார்த்தைகளை மற்ற நண்பர்கள் கேட்பதையும் செவியுராமல் இல்லை. மாற்றம் நம்மிடம் இருந்து வரவேண்டும்.

நகராட்சி நிர்வாகம் மேலும் சில சிறிய அளவிலான குப்பை தொட்டிகளை கடற்கரை மணற்பரப்பின் மத்திய பகுதிகளிலும் வைக்க வேண்டும். அப்போதாவது இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் குறைகிறதா என்று பார்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கலாசார மாற்றம்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [01 May 2013]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 27151

ஊர் பெருகி விட்டது. பல்வேறு ஊர் மக்கள் மற்றும் பல்வேறு இன மக்கள் கூடுகின்ற இடமாக நமது கடற்கரை மாறி விட்டது. அதன் எதிரொலியாக கலாசாரம் விரிவடைகிறது. பெண்கள் கடலில் குளிப்பதும், ஆண் பெண் இணைந்து குளிப்பதும் தடுக்க முடியாதது. தடுக்க முற்பட்டால் பிரச்சனைதான் ஏற்படும்..

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் குப்பை அதிகம் சேர்வது இயல்புதான். என்னதான் நவீன குப்பை தொட்டிகள் வைத்தாலும், எல்லோருமே குப்பை தொட்டிக்குள் குப்பையை கொட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.. நகராட்சியும் கடற்கடையை சுத்தம் செய்ய (கூட்டிப்பெருக்க ) ஊழியர்களை அமர்த்த வேண்டும். சென்னை போன்ற மாநகராட்சிகளிலும் இது போன்று சுத்தம் செய்யத்தானே செய்கிறார்கள். வீடுகளிளும்தான் நாம் டஸ்ட் பின் வைக்கிறோம். தினமும் கூட்டி பெருக்கி சுத்தம் செய்கிறோமா இல்லையா? அது போன்றுதான் இதுவும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by A.R.Refaye (Abudhabi) [01 May 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27152

மீண்டும் ஒரு நினைவூட்டல் !!!!! பழைய செய்தியின் கருத்து பதிவிலிருந்து----

கடற்கரையில் கஞ்சி குடிக்கும் போது......

தயவு செய்து கடற்கரை வியாபாரிகள் குறிப்பாக கஞ்சி விர்ப்போர் கண்ணாடி கிளாசை பயன் படுத்த வேண்டாம், காரணம் சில சமயங்களில் அது உடைந்து அதன் துகள்கள் கடற்கரை மண்ணோடு மண்ணாக உட் புதைந்து அதுவால் நாமோ, நம் பிள்ளைகளோ,பொதுமக்களோ பாதணி இல்லாமல் கடற்கரையில் உலவும் பொது அந்த கண்ணாடி உடைந்த பாகங்கள் நம் பாதங்களை பதம் பார்க்காமல் விட்டதில்லை அனுபவத்தால் என் நண்பர் மகளின் காலில் கண்ணாடி துளைத்து ரத்தம் சொட்ட சொட்ட தூக்கி கொண்டு மருத்துவரிடம் கொண்டு சென்ற நிகழ்வுகள் என் மனதில் மாறாத வடுவாகவே உள்ளது.

ஊரில் நான் இருக்கும்போதேல்லாம் கடற்கரையின் கஞ்சி வியாபாரிகளை கோபமாக கடிந்து கொண்டும் எந்த பயணம் இல்லை, காயல் கண்மணிகளே கடற்கரயில் கஞ்சி குடிக்கும் போது நம் பிஞ்சு பிள்ளைகளின் பாதங்கள் நம் நினைவுக்கு வந்து கழிவுகளையும், கண்ணாடி பொருள்களையும் நாம் இரட்டிப்பு கவனம் செலுத்த அகல்வாய் கரைக்கு வரும் அனபர்களை அன்போடு கேட்டுக்கொள்வதோடு, நகராச்சி இதில் ஆவணம் செலுத்த முற்படவேண்டும். என்பதை இதில் பதிவு செய்கிறேன்.

A.R.Refaye-Abudhabi.
--posted on (11 July 2011]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Vilack SMA (HCM) [01 May 2013]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 27153

< தமது குப்பைகளை சிறிது நேரம் கையில் பாதுகாத்து வைத்து, வீடு திரும்பிச் செல்கையில் குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லுமளவுக்குக் கூட அவர்களுக்கு பொறுமையில்லாது போனதுதான். >

பொறுமை எல்லோருக்கும் இருக்கிறது .....ஆம் ..ஆற , அமர உட்கார்ந்து தின்பதற்கு பொறுமை இருக்கிறது . ஆனால் திண்டபின் , அந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டுமே என்ற புத்திதான் இல்லை .

மற்றபடி , கலாசாரம் , சீரழிவு என்பதெல்லாம் பிறர் சொல்லி எடுபடும் விசயமில்லை . அவர்களாகவே உணர்ந்து திருந்த வேண்டும் .

மது பாட்டில் கடற்கரையில் மட்டுமல்ல , ஊரில் உள்ள தெருக்களிலும் கிடக்கிறது .

நகராட்சி நிர்வாகம் கடுமையான சட்டதிட்டங்கள் மூலம் கடற்கரை சீர்கேட்டினை தடுக்க வேண்டும் . இல்லையேல் இது தொடர்கதைதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by riyaz (hongkong) [01 May 2013]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 27156

ரொம்ப முக்கியமான பாட்டில் புகைப்படம் இதெல்லாம் தேவைதானா நம்ம ஊரு மக்களுக்கு வெளிச்சம் காட்டி கொடுக்க. மது பாட்டில் சொல்லலாம் தெளிவா வேறு மக்களுக்கு எடுத்து காட்டணுமா. இந்த மாதிரியான தகவல் படங்களை அட்மின் தவிர்க்கலாமே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை பஷீர் (மண்ணடி , சென்னை) [01 May 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 27157

நானும் இச்செய்தியை பதிந்த நண்பர் ஸாலிஹும் ஒரு நாள் காலை உலாவின் போது ஒரு பொருள் கடற்கரை மண்ணில் புரண்டு கிடந்ததை பார்த்தோம்.

என்னவென்று கிட்ட போய் பார்த்தால் பெண்கள் பயன்படுத்தும் புது உள்ளாடைதான் அது. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

நமதூர் கடற்கரையானது நாளுக்கு நாள் இரவும் பகலும் சமூக விரோதிகள் கொட்டமடிக்கும் இடமாக மாறி வருகின்றது.

போதா குறைக்கு உள்ளூர் பண்பாட்டிற்கு எதிராக பெண்களின் குளியல் , இளம் ஆணும் பெண்ணும் கை கோர்த்து செல்லுதல் , கடற்கரைக்கு வரும் பெண்களை தீய பார்வை பார்த்தல் என பிரச்சினை பல்வேறு வடிவமெடுக்கின்றது.

இதற்கெல்லாம் காரணம் நமதூர் கடற்கரையை அழகு படுத்துகின்றேன் எனக்கூறி தேவையற்ற கட்டுமானங்களையும் விளையாட்டு சாதனங்களையும் நிறுவியதுதான்.

கட்டுமானங்களை நிறுவிய கையோடு இது ஓர் சுற்றுலாத் தலம் என நாளேடுகளில் விளம்பரம் வேறு. வானத்தில் போன சனியனை ஏணி வைத்து வீட்டுக்குள் இறக்கிய கதைதான் இது.

காற்று , நிலம் , நீர் , கடல் , மலை , நதி என அனைத்தும் அனைத்து உயிர்களுக்கும் பொதுதான்.

பொது என்பதற்காக அவை அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மக்களின் தேவைகள் ,சௌகரியங்கள் , உள்ளூர் நடைமுறைகள் , பழக்க வழக்கங்கள் , பண்பாடுகள் போன்றவற்றை மதிக்காமல் வருவோம் போவோம் என செயல்படுவது நல்லதல்ல.

நாளை இதுவே தீவிரமான சட்ட ஒழுங்கு பிரச்சினையாக மாறுவதற்கு எல்லா வாய்ப்புகளும் உண்டு.

கடற்கரை கட்டுமானங்களை அகற்ற வேண்டும். சிறு கடைகளை மணற் பரப்பை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

ஊரில் உள்ள கல் கட்டிடங்களின் வெப்பம் தாங்க முடியாமல்தான் கடற்கரைக்கு வருகின்றோம். அங்கேயும் போய் யாராவது போய் கட்டுமானம் செய்வார்களா ?

வானத்திற்கு வர்ணம் பூச முயன்றவனின் கதையைப் போல பொருத்தமற்ற செயல் இது .

எனது சிறு பருவத்தில் கடல் மணலானது தூய வெண்மையோடும் நீளமான வெண் சீப்பு போன்ற கணவா மீன் ஓடுகளுமாக அழகாக காட்சியளிக்கும்.

இன்று கஞ்சிக்கடைகளின் கரி அடுப்பின் கருந்துகள்கள் , கஞ்சி குடித்த குவளை , காலி குடி நீர் உறைகள் , போதா குறைக்கு மது குப்பிகள் என கடற்கரை ரத்தக் கண்ணீர் வடிக்கின்றது.

தாரங்கதார தொழிற் சாலை கடலை அழிக்கின்றது. கடற்கரையை சீரழிக்கும் பொறுப்பை பொது மக்களாகிய நாம் எடுத்துக் கொண்டோம்.

கடற்கரையின் நிறமே மாறிப்போய் விட்டது. அழிந்து விட்டால் திரும்ப உண்டாக்குவதற்கு இயற்கை வளங்கள் ஒன்றும் தொழிறசாலைகளில் தயாரிக்கப்படுபவை அல்ல.

எங்களுக்கு மாசில்லாத பயமில்லாத எங்கள் கடற்கரை திரும்ப கிடைக்க வேண்டும்.

கடந்த கால நகர் மன்றம் செய்த இந்த தவற்றிற்கு தற்கால நகர்மன்றமும் மாவட்ட நிர்வாகமும் பரிகாரம் தேட வேண்டும்.

பண்பாட்டு ரீதியான பிரச்னைகளுக்கான தீர்வை கடற்கரை பயனாளிகள் சங்கத்திடம் ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by மஹ்மூதுரஜ்வி (தம்மாம்,சவூதிஅரேபியா) [01 May 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27159

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்க நம் கலாச்சாரம்!? வளர்க நமதூர் புகழ்......!!??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [01 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27160

கடல்கரை நல அமைப்பினர் எங்கு போய்விட்டார்கள்.? இனி வரும் காலங்களில் கடல்கரை நுழைவாயலில் சுரங்கசோதனைச்சாவடி போலதான் சோதனை அறைகட்டி சோதித்து பின் உள்ளே அனுப்பனும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...நம்ம கடற்கரை பற்றி
posted by arabi abdul sakkur (trichy) [01 May 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27162

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

நம்ம ஊரை பற்றி எல்லோரும் பெருமையா நினைக்குறதுலே நம்ம கடற்கரையும் ஒன்று. அந்த நம்பிக்கையை நாம தொலைச்சிட கூடாது. நம்ம உள்ளூர் வாசிஹலே ஒன்று சேர்ந்து நாம கண்காணிக்கணும். மது குடிக்குரவங்க தனியாதான் ஒதுங்குவாங்க, அவங்களை பிடித்து தண்டித்தால், ஒரு பயம் எல்லோருக்கும் வரும். அது நாமளா இருந்தாலும் சரி.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [01 May 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27163

காட்சிகளை பார்க்க பார்க்க ஆத்திரம் தான் வருகிறது, கூடவே பாரதியாரின் வரிகளும் நினைவுக்கு வருகின்றது..

" நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்".....!!

என்னத்தை சொன்னாலும் மண்டையில் ஏறுவது சிரமம்தான். பலரும் தங்களின் ஆதங்கத்தை பல காலமாக கொட்டி தீர்த்து விட்டார்கள், நேரிடையாகவும் சொல்லிவிட்டார்கள், அவர்களாக திருந்தனும்.

காயலில் பார் இல்லாத குறையை கடற்கரையும், பஞ்சாயத்து மேற்கு புறம் உள்ள ஆசாரிமார்-தேவர்மார் தெரு போன்ற இடங்கள் நிறைவு செய்கின்றன.

வல்ல ரஹ்மான்தான் நம் ஊரை காக்கனும், இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...நமதூரையும்,நம்கலச்சரத்தையும் பாதுகாப்போம்.
posted by Mohammed Nooh KA (Jeddah. Sharafiyyah.) [01 May 2013]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27165

சாளைபஷீர் & சாலை ஜிஆவுட்தீன் ஆகியோரின் கருத்துக்களையே நானும் பதிவு செயகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. என்னத்த சொல்ல ......
posted by முத்துவாப்பா.... (al khobar) [02 May 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27171

என்னத்த சொல்ல ......

மாதுக்கள் கடலிலும்
மது பாட்டல்கள் கரையிலும்
எங்கே பொய் கொண்டிருகின்றது காயல் ...!!!!

செய்தி ஆசியரின் கடைசி வரியை பார்த்து சிரிப்பு தான் வந்தது , பின்ன என்னங்க குடிக்குற பாட்டிலேயே குடி பழக்கம் உயிரை குடிக்கும் என்று இருக்கு அதை பார்த்து திருந்தாத இந்த மாக்களா இந்த அறிவிப்பை பார்த்து திருந்த போகின்றார்கள் ...

பாட்டிலும் காலி , வீட்டிலும் காலி
உடம்பும் காலி , உயிரும் காலி
குடித்த கணக்கை எடுத்து பார்த்தல்
போனது மட்டுமே நிச்சயம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. நிஜம்.....(?)
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [04 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27193

திரையரங்குகள் இல்லை!

மதுபாணக்கடைகள் இல்லை!

காவல் நிலையம் இல்லை!

இப்படி இல்லை இல்லைன்னு சன் டிவியிலெ நாள் முழுக்க கத்தினாங்க என்னத்த சொல்ல? வித விதமான பாட்டில்கள். விவரம் தெரியாத வெளியூர்க்காரர்கள் மற்றும் உள்ளூர் சனியன்கள் கூடி இருந்து கும்மாளம் போடுறதும், தண்ணியடிக்கிறதும் வாடிக்கையாப் போச்சு!

காதலர் பூங்காவாக காயல் கடற்கரை மாறி வருகின்றது. பல ஜொடிகள் கைகோர்த்து கசமுசா பண்ணுறதை பல முறை பார்த்து முகம் சுழித்து நேரில் சென்று கண்டிக்கும் பல சமுக ஆர்வலர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அதற்காக கடற்கரையே கதி என்று அவர்களால் காவல் இருக்க முடியுமா என்ன? பொதுமக்களாகிய நாம்தான் இது போன்ற அநாகரீக செயல்களைத் தடுக்க முன் வர வேண்டும்.

அவ்வப்போது காவல்துறையினரும் ஒரு விசிட் அடித்தால் சமூக விரோத செயல்களை ஓரளவிற்காவது கட்டுப்படுத்த இயலும்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved