Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:41:09 AM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10649
#KOTW10649
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 23, 2013
மார்ச் 20 துர்வாடை வீச்சம் குறித்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விளக்கம் திருப்தியில்லை! KEPA ஆட்சேபம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2860 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று காயல்பட்டினத்தில் வீசிய துர்வாடை வீச்சம் குறித்த KEPAவின் முறையீடு குறித்து, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள விளக்கத்தை KEPA ஆட்சேபித்து அறிக்கையளித்துள்ளது.

இதுகுறித்து, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தின் பெரும்பாலான பகுதிகளில் பல மணி நேரமாக துர்வாடை வீசியது. அதுகுறித்து ஆய்வு செய்யக்கோரி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் - சென்னையிலுள்ள தலைமை அலுவலகம், தூத்துக்குடியிலுள்ள மாவட்ட அலுவலகம் ஆகியவற்றுக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் தொலைநகல் (ஃபேக்ஸ்) மூலம் முறையிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 09.04.2013 தேதியிட்ட விளக்கம் KEPAவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர், டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில் ஆய்வு செய்ததாகவும், அங்கிருந்து துர்வாடை வீசவில்லை என்றும் கூறியிருப்பதோடு,

அந்நாளில் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு திசை நோக்கி காற்று வீசியதாகவும், துர்வாடை வீச்சத்திற்கு உள்ளூரில் குப்பை எரிக்கப்பட்டது காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.



இதுகுறித்து, KEPA சார்பில் பின்வருமாறு மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது:-

மார்ச் 20, 2013 அன்று காயல்பட்டினத்தில் உணரப்பட்ட வாயு வாடை குறித்து தங்களிடம் வழங்கப்பட்ட புகார் குறித்த தங்களின் விளக்கம் கிடைக்கபெற்றது. தங்களின் பதில் திருப்திகரமாக இல்லை.

வாயு வாடைக்கு காரணம் - உள்ளூரில் உள்ள குப்பை எரிக்கப்பட்டதாக இருக்கும் என தாங்கள் தெரிவிக்கிறீர்கள். இந்த முடிவுக்கு வருவதற்கு முன் தாங்கள் - நகரின் குப்பைகள் எங்கு கொட்டப்படுகின்றன என ஆய்வு மேற்கொண்டீர்களா என நாங்கள் வினவ விரும்புகிறோம்.

காயல்பட்டினம் நகரில் உருவாகும் குப்பைகள் - நகரின் மேற்கு பகுதியில் - நகராட்சி பணியாட்களால் கொட்டப்படுகிறது. தங்களின் கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ள தகவலின்படி - காற்றின் திசை வட கிழக்கில் இருந்து, தென் மேற்கு நோக்கி இருந்தது என்றால், குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் இருந்து உருவாகும் துர்வாடை, நகரின் கிழக்கு கரையோரம் உள்ள பகுதிகளில் உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் உணரப்பட்டது. ஆகவே - தங்களின் விளக்கம் சரியல்ல என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள காற்றின் திசை படி, நகரின் வடக்குப்பகுதியில் உள்ள ஓர் இடத்தில் இருந்து தான் அந்த வாயு வாடை வந்துள்ளது என்பதை நிரூபிக்கிறது. நகரின் வடக்கில் DCW தொழிற்சாலை உள்ளது. குப்பைகள் கொட்டப்படும் இடம், நகரின் மேற்கு பகுதியில் உள்ளது.


இவ்வாறு அந்த மறுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மறுப்பறிக்கையை, KEPA தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, செயற்குழு உறுப்பினர் ஷஃபீயுல்லாஹ், செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர், 22.04.2013 திங்கட்கிழமையன்று காலை 11.30 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரிடம் நேரடியாக வழங்கினர்.



அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்குச் சென்ற அக்குழுவினர், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அதிகாரி கோகுல்தாஸிடம் மேற்படி மறுப்பறிக்கையை அளித்துள்ளனர்.




இவ்வாறு, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [23 April 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27045

நம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்றே தெரியவில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில், மாவட்ட ஆட்சியாளருக்கே தவறான தகவலை கொடுத்தவர்கள் அல்லவா, பொதுமக்களாகிய நாம் எம்மாத்திரம்.

வாரியம் கொடுத்த விளக்கம், அப்பப்பா.. ...லே அடித்தானாம் பல்லு போச்சாம் என்பதை நினைவு படுத்துகிறது.

வேளை வெட்டி இல்லாதவர்கள், முக்குக்கு முக்கு அமைப்புகள் வைத்து என்ன கிழித்து விட்டார்கள் என்று கூறுபவர்களுக்கு, இந்த செய்தி கூடுதல் சமர்ப்பணம்.

ஊர் நலனுக்காக பாடுபடும் உங்களுக்கு வல்ல ரஹ்மானிடம் நற்கூலி கண்டிப்பாக உண்டு, இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [24 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27050

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது >>KEPA << அமைப்பின் ஒவ்வொரு செயல் பாடுகளும்.அருமையாகவே இருந்து வருகிறது ......வல்ல இறைவன் தாங்கள் எடுக்க கூடிய அனைத்து நற் செயல்களிலும் துணை நிற்பானாகவும் ஆமீன்.

நம் சகோதரர் .ஜனாப் .S.K.S. அவர்களின் இந்த விளக்கம் ரொம்பவும் நியாயமானதாகவே உள்ளது.நம் ஊர் நலனில் முழு அக்கறை உள்ள தாங்கள் யாவர்களையும் மனதார பாரட்டுகிறோம்.

ஆமா ஏன் '' மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விளக்கம் இப்படி தவறாக இருக்கிறது.நேரில் வந்து அல்லவா இவர்கள் விளக்கமாக நடப்பு அறிந்து........செயல் பட்டு இருக்க வேணும்.

இப்படி தவறாக நமக்கு பதில் தந்த .....இவர்களை நாம் வன்மையாகவே கண்டிக்க வேணும்..........

நம் ஊர் அனைத்து பொது மக்களும் ஒன்றிணைந்து செயல் பட்டு.இந்த >>>KEPA <<< அமைப்பினர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து....இவர்களை முன்னிறுத்தி....இவர்கள் மூலமாக நாம் இந்த >>>DCW <<< தொழிற்சாலையை எதிர்த்து போராடுவதும் ......மற்ற இது போன்ற துர்வாடை வீச்சம் குறித்த செயல் பாடுகளிலும் ஒன்றாக நின்று ( கைகோர்த்து ) போராடினால் தான்.நம் ஊரின் நலனும் & நம் மக்களின் நலனும் பாதுகாக்க முடியும்.

அல்லாஹ் நம் ஊர் மக்களின் நலனை பாதுகாத்து அவனின் சிறப்பான வழிபாட்டில் ......சிறப்பாக்கி அருள்வானகவும் ஆமீன்.

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by nizam (INDIA) [24 April 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 27051

தான் வுண்டு தன் வேலை உண்டு என்ற கோட்பாடில் வாழும் காலத்தில் சம்பளம் வாங்காமல் ஊருக்காக உழைக்கும் கீபாவிர்க்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.

மயிலே மயிலே இறகு போடு என்றால் இறகு போடாது. நமது ஊரின் நிலம் காற்று நீர் ஆகியவற்றின் மாசு அளவை சான்றிதழ் பெற்ற லபோரடோரி மூலமாக அளந்து அது அரசு மாசு கட்டுபாடு வாரியம் நிர்ணயத்த அளவை விட அதிகமாக இருக்குமானால் சட்டத்தின் கதவுகளை தட்டுவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
புதுசாவா நடக்குது...? (?!)  (25/4/2013) [Views - 3764; Comments - 6]
யாரு கை இவ்வளவு நீளம்?!  (25/4/2013) [Views - 2701; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved