Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:59:04 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10601
#KOTW10601
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 16, 2013
பைக் மீது பேருந்து மோதல்! பைக்கில் பயணித்த இரு மாணவர்களும் காயங்களுடன் தப்பினர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3884 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பைக் மீது பேருந்து மோதியதில், பைக்கில் பயணித்த இரு மாணவர்கள் காயங்களுடன் தப்பினர். விபரம் வருமாறு:-

திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் அரசுப் பேருந்து ஒன்று, காயல்பட்டினம் கூலக்கடை பஜார் வழியாக இன்று மதியம் 02.45 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. கூலக்கடை பஜார் மேல் முனையிலிருந்து பேருந்து நிலையத்தை அப்பேருந்து நெருங்கியபோது, ஐசிஐசிஐ வங்கி அமைந்துள்ள சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த - காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த நேஷனல் நூஹ் என்பவரின் மகன் செய்யித் முஹம்மத், ஆத்தூரைச் சேர்ந்த மிதுன் ஆகிய இரு மாணவர்களும் பேருந்தைக் கவனியாமல் குறுக்கே சென்றதால் விபத்துக்குள்ளாகி, பேருந்தின் இடப்புற அடிப்பகுதியில் பைக் சிக்கியது.









பைக்கில் பயணித்த அவ்விருவரும் உடனடியாக அதிலிருந்து தூக்கியெறியப்பட்டனர். பேருந்து ஓட்டுநர் உடனடியாக ப்ரேக்கை அழுத்தியதால், பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படாமல் உள் காயங்களுடன் அவர்கள் தப்பினர்.

உடனடியாக அங்கு கொண்டு வரப்பட்ட தமுமுக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவ்விருவரும் காயல்பட்டினத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், அம்மாணவர்களின் குடும்பத்தினர் விருப்பத்தின்படி அவர்கள் அங்கிருந்து அருகாமை ஊர்களிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

படங்களில் உதவி:
சாளை முஹம்மத் முஹ்யித்தீன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [16 April 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26898

சிறு காயங்களுடன் இந்த சிறுவர்களை காத்த வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

ஊரில் நம் பசங்க வண்டி ஓட்டுகின்ற லட்சணமும், அதிக வேகத்தையும் பார்த்தாலே நமக்கு அதிருது. பால்குடி மறக்காதவனுக்கும் பல்சரை ஓட்டக் கொடுக்கின்றார்கள். கொஞ்சம் கவனம் சகோதரர்களே. நம் பிள்ளைகளை நாம்தான் கட்டுக்குள் வைத்துக்கொள்ளனும்.

இந்த பேருந்து ஊருக்குள், அதுவும் நான்கு முனை சந்திப்பில் மெதுவாக வந்ததால், ஓட்டுனர் கட்டுப்பாட்டில் இத்துடன் முடிந்தது, இதுவே அதிக வேகத்தில் பேருந்து வந்து இருந்தால், ஆணி பிடுங்கப்பட்டு இருக்கும். அல்லாஹ் காத்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ;g...
posted by O.A.NAZEER AHMED (chennai;) [16 April 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 26899

அல்லாஹ காப்பற்றினான். அந்த டிரைவர்க்கு நன்றி சொல்லவேண்டும். vahanam கிடக்கும் நிலையை பார்த்தால் நெஞ்சு பதருஹிறது.. சஹோதரர்ஹாலே ஸ்கூலில் படிக்கும் மாணவனுக்கு எதற்கு பைக்.. யோசிக்கவேண்டாமா..

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்! கையை முறுக்கினாள் பைக் ஓடும்.அதில் ஒன்றும் திறமை இல்லை.. நிறுத்த தெரியனும்.. அந்த அபாயமான முனையில் அப்படி வரலாமா.. அது அந்த சிறுவனுக்கு தெரியாது.. adhuthan பிரச்னையே.. தவறு மாணவனிடம் இல்லை.. இந்த வயதில் பைக் வங்கி கொடுத்த தந்தை இடம் உள்ளது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S.ABDUL KADER (jeddah) [16 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26904

வழி தடம் முன்னமே உணராத மாணவன், தவறான வழித்தடத்தில் வந்து முட்டி வாகனத்தில் வந்து தட்டி தடம் புரண்டதுதான் மிச்சம். வாகனத்தோடு முடிந்தது.,

இரு மாணவர்களும் பூரண சுகத்துடன் வீடு திரும்பி வர இறைவனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பெற்றோர்களே இதற்கு முழு பொறுப்பு...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [16 April 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 26905

ஓட்டுநர் உரிமம் பெற அரசு வயது வரம்பை நிர்ணயித்துள்ள நிலையில் பால்குடி மாறாத பாலகர்கள் பைக்கை அதுவும் முன்று பேருக்கு குறையாமல் ஓட்டிச் செல்வதை பரவலாக காணமுடிகின்றது.

இவர்களுக்கு சாலை விதிகளோ சட்டதிட்டங்களோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை! காக்காமாமாமார்களின் பைக்கை லாவகமாக எடுத்துச் சென்று ஊர் சுற்றுவதை வழக்கமாக்கி வைத்துள்ளனர்.

தாயாருக்கு தன் பிள்ளை ரோட்டில் போடும் ஆட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதே நேரம் தந்தையின் கண்டிப்பும் கண்காணிப்பும் இருந்தாலே ஒழிய இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வாய்ப்பில்லை.

வளரும் பருவம். வாழ வேண்டிய வயசு. படிப்பு பட்டம் உயர்வு என கனவு கண்டு வரும் பெற்றோர்கள் இது போன்ற அலட்சியங்களுக்கு துணை போகாமல் தம் பிள்ளைகளைப் பேணி காப்பது அவர்களின் கடமை. அல்லாஹ் நம் சிறார்களைப் பாதுகாப்பானாக! ஆமீன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சிறுபிள்ளைகள் பயமறியாது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [17 April 2013]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26911

இப்படிமட்டும் நடந்திருந்தால் என்னாவது,என்று எண்ணிப்பார்க்க முடியாத பயங்கர விபத்திலிருந்து வளரும் கதிர்களைக்காத்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரித்தாகட்டும்!அல்ஹம்திலில்லாஹ்!

ஓரளவு நிலைமையை புரிந்து உடனேயேநிறுத்திய ஓட்டுனருக்கு நம் நெஞ்சம்நிறைந்த நன்றியை தெரிவிப்போமாக!

நண்பர் நூஹுவின் மகனும் மற்றொரு பிள்ளையும் சேர்ந்து விபத்துக்குள்ளான செய்தியைப்பார்த்து பதைபதப்புக்ககுள்ளானேன்!

வளரவேண்டியவயது,வாழவேண்டியவருங்காலம்.சிறுபிள்ளை பயமறியாது என்பார்கள்,.எதில் தான் திறமையை காட்ட வேண்டுமென்ற வரம்பில்லை!

பெற்றோர்களே,பிள்ளைகளுக்கு பிரியபட்டதை வாங்கி கொடுங்கள்,வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்கள்காசு,உங்கள் உரிமை ஆனால்,

உயிர்பறிக்கும் அல்லது உயிரோடுவிளையாடும் பொருட்களை பாசத்தின் பெருக்கத்தால்,பெருமை என்று நினைத்து நீங்களளிக்கும் பரிசின் பின்விளைவுகளை கிஞ்சித்தாவது கவனத்தில் கொள்ளவேண்டாமா? அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAAI (JEDDAH) [18 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26919

அஸ்ஸலாமு அலைக்கும்

யப்பா .....போட்டோவை பார்க்கவே நமக்கு பயமாகவும் / நம் மனதுக்கு சங்கடமாகவும் உள்ளது .அல்லாஹு தான் நம் பிள்ளைகளை காப்பாற்றினான்.....வல்ல நாயனுக்கு தான் நாம் சுக்கூர் செய்யனும் ..... நம் ஊர் சிறு பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம் .....நீங்கள் தங்களின் இளம் வேகத்தை குறைத்து ....நிதானமான முறையில் செயல் படுவதையே நாங்கள் விரும்புகிறோம்.

நம் ஊர் தெருவுக்குள்ளும் நீங்கள் போகும் வேகத்தை நாங்கள் பார்க்கும் போது எங்களுக்கே பயமாக உள்ளது.தம்பி மார்களே '' நிதானம் '' என்பது நம் வாழ்கையை முன்னுக்கு அழைத்து செல்லக்கூடிய ஒரு படி .......

பிள்ளைகளே நீங்கள் வாகனம் ஒற்றுவது ஒன்றும் தப்பே இல்லை .....மிகவும் கவனமாக வாகனம் ஒற்றுவது தான் நல்லது ....உங்களுக்கு ஓன்று என்றால் உங்களையே முழுமையாகவே நம்பி உள்ள ....உங்கள் தாய் / தந்தை ,, சகோதர ,சகோதரிகளை கொஞ்சம் எண்ணி பாருங்களேன் .....அப்போது தங்களின் வாகன வேகத்தின் அளவு தன்னாலேயே குறையும் அல்லவா ................

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. விபரீத விபத்துகள்
posted by NIZAR (KAYALPATNAM) [18 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26927

முந்தய காலத்தில் சைக்கிளுக்கே தரிகிடதோம் போன்றும் அந்த பள்ளி கூட நாட்களை மறக்க முடியாது. ஆனால் இன்று சில மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் செல்வதற்கு பைக் வாங்கி கொடுக்க பட்டுள்ளது. அரசு சட்டப்படி வாகன உரிமம் எடுக்க தகுதி இல்லாத வயதில் வாகனம் ஓட்டுவது என்பது அடிப்படை தவறாகும். பனிரெண்டாம் வகுப்பு படிதாளுமே உரிமம் தகுதி அடைய முடியாது.

இதை போன்ற ஆபத்துகள் நடைபெறும் பொழுது மாணவர்கள் செய்யும் தவறை ஒத்துக்கொண்டு மறந்து விடுவது பெற்றோரின் இயல்பாக உள்ளது. நொடிப் பொழுதில் நடைபெறும் இதை போன்ற விபத்துகளால் வாழ்க்கையே முடங்கி போயி தன் சுய காலை தேவைகளை கூட செயல்படாமல் முடங்கி விடுகிறார்கள். பைக் கையில் கிடைத்தவுடன் எத்தனை ஆர்பரிப்பு, மூன்று பேராக ஏறிக்கொண்டு முக்கிய வீதிகளில் ஜெட் வேகத்தில் பறக்கும் சந்தோசம், எதை சொன்னாலும் எத்துக்கிராத வயசு. எதிரே வருவதை எதிர்த்து போகும் மூர்க்க வயசு.

இப்படி எத்தனை சொன்னாலும் இதை போன்ற விபத்துக்களுக்கு காரணம் பெற்றோர் செய்யும் தவறே தவிர வேறு இல்லை. பழங்கள் தானாக பழுக்க வேண்டும், பிஞ்சிளியே பழுத்து விட்டால் தூரத்தான் போடணும். அதே போல் பிள்ளைகளுக்கு எதை எதை எப்பொழுது கொடுக்கணுமோ அந்த பருவத்தில் கொடுப்பதுதான் சிறப்பாக இருக்கும். இதல்லாம் முன்னேற்றம் என்று கொடுத்தால் அது மாணவர்களின் வாழ்க்கையே சில நேரங்களில் புரட்டி போட்டுவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ரோட்டைக் காணோம்! (?!)  (16/4/2013) [Views - 3175; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved