Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:45:46 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10400
#KOTW10400
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 10, 2013
இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அடிக்கல் நாட்டி சிறப்புரை! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3535 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று (10.03.2013) காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் நடைபெற்றது.



நிகழ்ச்சிகளை, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி அலுவலர் சி.குமார் நெறிப்படுத்தினார்.



தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வரவேற்புரையாற்றினார்.



காயல்பட்டினத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் திட்டங்களுக்கு பொருளுதவி புரிந்த முன்னோர்களை பட்டியலிட்டுப் பேசிய அவர், நடப்பு இரண்டாவது குடிநீர் திட்டத்திற்காக தொடர் முயற்சி செய்த காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் கே.எம்.இ.நாச்சி தம்பி மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஏ.வஹீதா மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் மற்றும் உறுப்பினர்களுக்கும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை உள்ளிட்ட, இதற்காக உழைத்த நகரின் அனைத்து பொதுநல அமைப்புகளுக்கும் தனதுரையில் நன்றி தெரிவித்தார்.

பின்னர், மேடையில் வீற்றிருந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.





அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினத்திற்கான இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கான பணிகளைத் துவக்கி வைக்குமுகமாக, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அடிக்கல்லை திறந்து வைத்தார்.





பின்னர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் த.மோகன் வாழ்த்துரை வழங்கினார்.



அவரைத் தொடர்ந்து, இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையுரையாற்றினார்.



நகரில் பல நல்ல பணிகள் தொடர்ந்து நடைபெற, நகர்மன்றத் தலைவர் உறுப்பினர்கள் இணைந்து செயல்பட வேண்டுமென அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.

பின்னர், அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் விழா பேருரையாற்றினார்.



காயல்பட்டினம் மக்கள் என்றுமே அர்ப்பணிப்பு மிக்கவர்கள் என்று புகழ்ந்துரைத்த அவர், இந்த ஊர் நலத்திட்டங்களுக்காக அவர்கள் நிலங்களை அன்பளிப்பு செய்தல் உட்பட பல உதவிகளை நிறைவாகச் செய்துள்ளதாகக் கூறினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்தான் இந்த மாவட்டத்தில் புதுப்புது திட்டங்கள் செயல்வடிவம் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

பின்னர், தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை பிரச்சினை குறித்து விளக்கிப் பேசிய அவர், இன்னும சில மாதங்களில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்றார்.

நிறைவாக, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.



இவ்விழாவில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்.சின்னத்துரை, ஆழ்வார்திருநகரி ஒன்றியக் குழு தலைவர் விஜயகுமார், தூத்துக்குடி ஒன்றியக் குழு தலைவர் சண்முகவேல், சாத்தானகுளம் ஒன்றியக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன், காயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் முத்து, பணி மேற்பார்வையாளர் செல்வமணி, காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ஆர்.ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி,

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், அதன் அங்கத்தினரான ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத்,

காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர்களான கே.எம்.இ.நாச்சி தம்பி, ஏ.வஹீதா உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.





படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டணம்.காம்)


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 23:38 / 10.03.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [10 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26176

-வாழ்த்துக்கள்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:..கனவு நீர் கசிகிறது !!!.
posted by Abdul Cader S.H. (Jeddah) [10 March 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26179

நமது நீண்ட நாள் கனவான இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நிகழ்வினை கண்டு மிக்க மகிழ்ச்சி. குடிநீர் திட்டம் அடிக்கல்லோடு அசையாது நின்று விடாமல் அதன் தொடர்ச்சியான வேலைகள் துரிதமாக நடைபெற வேண்டும். நம் சன்னதிகள் அதன் மூலம் தண்ணீர் பெற்று பயன் அடைய வேண்டும் இதுவே நம் அவா. இதற்க்கு நம் நகர்மன்ற உறுப்பினர்கள் நான் என்னும் அகங்காரத்தை உதறிவிட்டு ஒற்றுமையுடன் இருந்து செயல்படுவதே சாலச் சிறந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [10 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26181

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ். நல்லதோர் துவக்கம் சிறப்பாக இன்று நடந்தேறியது.''துவக்கமாக '' நின்று விடாமல்......இரண்டாவது குடிநீர் திட்ட வேலைகள் மிகவும் துரிதமாக நடந்து.....நமதூர் பொது மக்களுக்கு இந்த 2 பைப்பு லைன் மூலம்.நல்ல தண்ணீர் சேவை தொடங்க வேணும். நம் மக்களின் நெடுநாளைய எதிர் பார்ப்பு......

நம் ஊர் மக்களின் நெடுநாளைய ''கனவு '' இப்போது துவங்க பட்டது.பாராட்ட கூடிய செயல் தான் .

இந்த துடிப்பான வேகம்.குறையாமல்.......இந்த திட்டம் நிறைவேற வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
28/88.AMBALA MARAICAR STREET
KAYAL PATNAM
9629654228


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வேர்களை நினைக்கும் விழுதுகள்
posted by mackie noohuthambi (kayalpatnam) [10 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26182

ஒரு மனோரஞ்சிதமான காட்சி. நேற்று தஞ்சை மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த புரட்சி தலைவியின் மணி மகுடத்தில் இன்னொரு வைரம்.

வரவேற்புரை ஆற்றிய நகரமன்ற தலைவி அவர்கள் வேர்களை நினைக்கும் விழுதுகளாக இருந்து.... நமதூருக்கு நிலங்களையும் நலன்களையும் கைம்மாறு எதிர்பாராமல் அள்ளிக் கொடுத்த வள்ளல்களின் பெயரை பட்டியலிட்டபோது நான் கொஞ்சம் அசந்து தான் போனேன். நகரமன்ற தலைவி மிக நேர்த்தியாக இந்த ஊருக்கு சேவை செய்த முன்னவர்களையும் இப்போது வாழும் வள்ளல்களையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்த பாங்கு, அவர்களின் வரவேற்புரைக்கு மகுடம் வைத்தது.

மேடையில் வீற்றிருந்தவர்களையும் சுற்றி இருந்தவர்களையும் பார்த்தபோது கண்கள் பனித்தன. இவர்களா ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டும் கருத்துக்களால் மோதிக் கொண்டும் இருக்கிறார்கள். நினைத்து பார்த்த போது, "ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்போம்" என்று சொல்வார்களே அந்த வசனம் நினைவுக்கு வந்தது. நாம் இரவு தூங்கபோகும்போது நபிகள் நாயகம் நமக்கு கற்று தந்த து ஆ எனது நினைவுக்கு வந்தது.

"அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா" அல்லாஹ்வின் பெயரால் நேற்றிரவு நான் இறந்தேன். இன்று மீண்டும் அவன் அருளால் உயிர்பெற்று எழுந்தேன். எவ்வளவு யதார்த்தமானது. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள காயலர்கள் ஒன்றாதல் கண்டே....

இந்த ஒற்றுமை கீதம் தொடராதா, நம் கனவுகள் நனவுகள் ஆகாதா என்ற பெருமூச்சு எல்லோர் உள்ளத்திலிருந்தும் சுவாசமாக வெளி வந்திருக்க வேண்டும்...இன்னும் பதினெட்டே மாதங்களில் ஒரு நீண்ட நாள் ஆசை நம்மிடம் நம் முன்னோர்கள் விட்டு சென்ற பொறுப்பு நிறைவேறும் என்று வாக்களித்திருக்கிறார்கள் ஆட்சி தலைவர் ஆஷிஷ் குமார் அவர்களும் அமைச்சர் செல்லப்பாண்டியன் அவர்களும்.

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்ட சபதம் எடுத்துள்ள தமிழக முதல்வர் அவர்களையும் நகர்மன்றங்களில் முதன்மை நகர்மன்றமாக நமதூரை மாற்றிக் காட்ட சபதம் எடுத்துள்ள நமதூர் முதல்வர் அவர்களையும் வாழ்த்துகிறேன்.

நீங்கள் எடுக்கும் நல்ல முயற்சிகளுக்கு இந்த ஊர் மக்கள் உங்களுக்கு தோள் கொடுப்பார்கள். நீங்கள் எடுத்து வைக்கும் எட்டுக்கள் ஒவ்வொன்றும் எல்லா உறுப்பினர்களின் ஏகோபித்த அங்கீகாரத்துடன் அரவணைப்புடன் இணையுமானால், உங்கள் நினைவு வீண் போகாது.

உங்கள் ஆட்சி காலம் ஒரு வேதனை காலம் என்றில்லாமல் சோதனைகளை தாண்டிய சாதனை காலமாக காயல்பட்டினம் சரித்திரத்தில் ஒரு பொற்காலமாக மிளிரும் என்பதில் சந்தேகமில்லை

பல சிக்கல்களின் தீர்வு ஒரு சிறிய விட்டுக் கொடுத்தலில் இருக்கிறது, நெருங்கி வருவதில் இருக்கிறது, ஒரு சிறிய மன்னிப்பில் இருக்கிறது. இதை நினைத்து வாழ்ந்தால் ஊரும் வீடும் அழகாகிறது. வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கானல்நீர் காணும் நீராகிறது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [10 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26183

காயலின் "கானல்நீரை" காணும் நீராகத்தந்திட வழிவகுக்கும் வல்ல இறைவா,விரைவில் அது எங்கள்வாயில் வந்தடையச்செய்வாயாக! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by nazeer ahmed (chennai) [10 March 2013]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 26188

அல்ஹம்துலில்லாஹ். நீண்ட காத்திருப்புக்கு பிறகு இனிப்பான செய்தி. vila எவ்வளவு sirapaha நடந்ததோ அதே வேஹதோடு பணிஹல் நடந்து நிறைவுபெறட்டும். எம் மக்கள் விரைவில் குடிதண்ணீர் கஷ்டத்தில் இருந்து விடுதலை பெறட்டும். யார் யார் itharkaha உளைதர்ஹலோ அவர்ஹல் அனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும் இன்ஷால்லாஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. காயல்பட்டணமே!
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம்) [10 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26189

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டுவிழா மிக சிறப்பாக நடந்திருக்கிறது மகிழ்ச்சி – அல்ஹம்துலில்லாஹ்! இந்த பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற்று, குறிப்பிட்ட காலத்தில் முடிந்து செயல்பாட்டிற்கு வர வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.

-------------------------------

ஒப்பந்தக்காரர் / நகராட்சிக்கு வேண்டுகோள் :

இந்த பணியை ஒப்புக்கொண்டிருக்கும் ஒப்பந்தக்காரரும் நமது நகராட்சி நிர்வாகமும் “ ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி , எல்லாம் சரியாக , முறையாக நடக்க வேண்டிய ஏற்பாடுகளை, முறைப்படி செய்து கண்காணித்து வாருங்கள் “ நீங்கள் கண்காணிக்க தவறினால் உங்களுக்குத்தான் நஷ்டமும் சிறமமும், சிக்கலும், ஏற்படும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

உதாரணத்திற்கு , ஆசாத் தெரு , சாலை போடும் விசயத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கையினால் மாத கணக்கில் ரோடு போடுவது தடை பெற்றிருப்பது போல் குடிநீர் திட்டம் வருடகணக்கில் தடைபட நேரிடும்.

காரணம் அங்கே ஊழல் எதிர்ப்பு இயக்கமும் , அந்த தெரு மக்களுமே வந்தனர். ஆனால் இங்கே ஊரில் உள்ள அத்தனை மன்றங்களும், அமைப்புகளும் , ஜமாஅத்களும் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் வருவார்கள் என்பதை நினைவுப்படுத்துகிறேன்.

மக்கள் எல்லோரும் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் – மேலும் மக்கள் முன்புபோல் இல்லாமல் இப்போது மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஆகவே எல்லாவற்றையும் முறையாக செய்து முடிக்க ஆயத்தமாகுங்கள்.

-------------------------------------

எழுத்துபிழை / ஆவணப் பெயர் பிழை :

அடிக்கல்நாட்டு விழாவில் பங்கு கொண்டோரின் பெயர்களை அந்த கல்லிலே பதிக்கிறார்கள் நாளைய மக்களுக்கு அந்த சரித்திரம் தெரிய வேண்டும் என்பதற்காக.

அப்படி சரித்திரத்தை சொல்லக்கூடிய அந்த கல்லில் பிழைகள் வரலாமா ? காயல்பட்டிணம் நகராட்சி என்று எழுதியிருக்கிறார்களே! காயல்பட்டணமா அல்லது காயல்பட்டினமா என்ற பட்டி மன்றத்திற்குள் செல்லவில்லை.

காயல்பட்டினம் என்று எழுத வேண்டும் என்றால் இரண்டு சுழி “ன“ தான் வரவேண்டும். காயல்பட்டணம் என்று எழுத வேண்டுமானால் மூன்று சுழி ”ண“ வர வேண்டும். இந்த மாதிரியான தவறுகள் அரசு ஆவணங்களில் வரக்கூடாது. அதுவும் சரித்திரம் சொல்லக்கூடிய நிகழ்ச்சிகளில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

--------------------------------------

காயல்பட்டணமே!

அடுத்து முக்கியமானது, தமிழக அரசு ஆவணங்களில் நமது ஊர் காயல்பட்டணம் என்றே உள்ளது காயல்பட்டினம் என்று அல்ல.

நகராட்சி இப்போது சமீப காலமாக இரண்டையும் உபயோகித்து வருகிறார்கள் – அது முறையாகாது எது அரசுடைய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதைத்தான் உபயோகிக்க வேண்டும்.

இப்பொழுது நடந்த விழாவிற்கு அருகில் உள்ள, 1955 இல் குடி தண்ணீர் திறந்து வைக்கப்பட்டபோது வைத்திருக்கும் கல்லை பாருங்கள் “ காயல்பட்டணம் “ என்றே இருக்கும்.

நமது இரயில்வே ஸ்டேஷனில் மட்டுமே காயல்பட்டினம் ( புதிதாக வைத்த போர்டில் காயல்பட்டிணம் என்று ” ண “ போட்டிருக்கிறார்கள்) என்று இருக்கும்.

ஆகையால் நமது ஊரின் பெயர் காயல்பட்டணம் தான் , நமது முன்னோர்களும் காயல்பட்டணம் என்றே அழைத்து வந்திருக்கிறார்கள். எனவே, மக்களும் அந்த பெயரை மாற்றாமல் இருப்பதே சிறந்தது. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. தைரியம் வேண்டும்
posted by Shahul Jiffri Kareem (London) [11 March 2013]
IP: 149.*.*.* United Kingdom | Comment Reference Number: 26191

அமைச்சர் பேசின இந்த செய்தியை ஏன் வெளியிடவில்லை? உண்மையை சொல்ல தைரியம் இல்லையா????

"ஐக்கியப் பேரவை நிர்வாகிகள், அதன் அலோசகர் மனித நேயர் ஹாஜி. S. அக்பர்ஷா, நகர்மன்ற முன்னாள் தலைவர் A.வஹிதா ஆகியோரின் பொதுசேவை ஈடுபாட்டை பாராட்டிய அமைச்சர், இவ்வூர் முன்னேற்றத்துக்கு இவர்கள் தம்மிடம் அடிக்கடி கோரிக்கைகளை முன்வைப்பதாகவும்  குறிப்பிட்டார்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by salai s nawas (singapore) [11 March 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26192

தலைவியின் பெயர் காயல் கல்வெட்டில் பதியப்பட்டு விட்டது. இனி வரலாற்றில் உங்கள் பெயர் பதிக்கப்படவேண்டும் என்றால் எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து, அதன் திறப்பு விழாவிற்கும் உங்களால் வரவேற்புரை நிகழ்த்த வல்ல இறைவன் துணை நிற்பானாக!!

எதிர்பார்த்தவனாய்
-மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved