Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:20:38 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10304
#KOTW10304
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 27, 2013
சித்தன் தெரு நியாயவிலைக் கடையில் பூட்டிய அறைக்குள் ஒரேயொருவருக்கு மண்ணெண்ணெய் வினியோகம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4284 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சித்தன் தெருவிலுள்ள CA 007 என்ற எண்ணுடைய நியாய விலைக் கடையில், இன்று நண்பகல் 12.35 மணியளவில், மண்ணெண்ணெய் பதுக்கப்படுவதாக இக்கடைக்குட்பட்ட வாடிக்கையாளர்கள் சிலர் நமக்கு தகவலளித்தனர்.

அதனடிப்படையில், 12.40 மணியளவில் அங்கு சென்று பார்த்தபோது, மண்ணெண்ணெய் பேரல்கள் வைக்கப்பட்டிருந்த அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறைக்குள், இக்கடைக்குத் தொடர்பில்லாத ஒருவர், உறையிட்டு மூடப்பட்ட மண்ணெண்ணெய் கேனைத் திறந்து காண்பிக்க, இக்கடையில், பெருமாள் என்றழைக்கப்படும் - சரக்கு வினியோகப் பொறுப்பிலிருக்கும் அலுவலர் பேரலிலிருந்து மண்ணெண்ணெய்யை அள்ளி ஊற்றி கேனை நிறைத்துக் கொண்டிருந்தார்.





உடனடியாக படமெடுத்துக்கொண்டு, இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, மண்ணெண்ணெய் பேரல் ஓட்டையாக இருந்த காரணத்தால் கேனில் ஊற்றுவதாகக் கூறினார். அடுத்த சில நிமிடங்களிலேயே கேனில் ஊற்றப்பட்ட மண்ணெண்ணெய்யை மீண்டும் பேரலில் ஊற்றினார்.

இந்நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கடையில் பதிவுப் பொறுப்பிலுள்ள கல்யாணி என்றழைக்கப்படும் அலுவலர், காவலுக்கு நிற்பது போன்று வெளியில் நின்றுகொண்டிருந்தார்.

இந்நடவடிக்கைகள் சந்தேகமளித்ததையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் பஷீருக்கு தொலைபேசி வழியே முறையிடப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், மதியம் 02.45 மணியளவில் கடைக்கு வந்த வட்ட வழங்கல் அலுவலர், கடையிலுள்ள பதிவேடுகளைப் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நம்மிடம் கருத்து தெரிவிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்பட்டது போக இருப்பில் இருக்க வேண்டிய அளவுக்கு மண்ணெண்ணெய் கடையில் உள்ளதாகவும், நிகழ்வு நடந்துகொண்டிருக்கும்போதே தகவல் தெரிவித்திருந்தால், உடனடியாகப் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் கூறினர்.

உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதையும், அலுவலர்கள் வந்து சேருவதற்குள் நிகழ்வு நடைபெற்று முடிந்துவிட்டதாகவும் அவருக்கு உணர்த்தப்பட்டது. பின்னர், இந்நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சி அலுவலருக்குக் காண்பிக்கப்பட்டது. பூட்டிய அறைக்குள், இக்கடைக்குத் தொடர்பில்லாத ஒருவருக்கு மண்ணெண்ணெய் வினியோகிக்கப்படுவது எப்படி என்று கேட்கப்பட்டதற்கு, வட்ட வழங்கல் அலுவலர் எந்த பதிலையும் தரவில்லை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Kader K.M (Dubai) [27 February 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25805

மாப்பு வச்சுட்டாங்கையா ஆ.....ப்பு!

காற்று நுழைய முடியாத இடத்திலும், நிருபர்களின் கேமரா நுழையும் என்பதை நிரூபித்துள்ளீர்கள்! பாராட்டுக்கள்!

கடைக்காரர் புதியவராம்! மண்ணெண்ணெய் அளப்பது எப்படி என்பதை கற்று கொடுக்க புதிய ஆள் வந்தாராம்!
நீங்கள் அதற்குள் போட்டோ எடுத்து தப்பாக நினைக்க வைத்து விட்டீர்கள்!

கேட்கிரவன் கேனையன் என்றால், எருமை மாடு ஏரோ பிளேன் ஓட்டுமாம்! அந்த கதையாகி விட்டது! நமது காயலின் நிலை! ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பது பழமொழி! எப்படி திருந்துவார்கள் இவர்கள்!

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. take action
posted by syedahmed (GZ, China) [27 February 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 25807

we strongly take action against these looting people for they make like malpractice and find the appliance having faulty writing system in order to prevent the ill afford.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பட்ட பகலில் பகல் கொள்ளை! படமெடுத்தும் பலனில்லை...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [27 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25810

மக்களுக்கு விநியோகிக்கும் மண்ணெண்ணெய் முறைகேடாக அடையாளம் தெரியாத நபருக்கு தாரை வார்த்துக் கொண்டிருப்பதாக இத்தளத்தின் செய்தியாளருக்கு தகவல் வந்ததும் என்னிடம் பேசிக் கொண்டிருந்த அவர் அவசர அவசரமாக விரைந்து சென்றார். கொளுத்தும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் கடையைச் சுற்றியுள்ள முடுக்குகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காதபோது கடைக்காரரிடம் விளக்கம் கேட்கவே அவர் முன்னுக்குப் பின்னாக தடுமாற்றத்தோடு பதில் அளித்தார். சந்தேகம் வலுத்ததால் கடையின் உள்ளறையை ஜன்னல் வழியாக நோட்டமிட்டபோது அங்கேதான் இந்த பகல் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பாரலில் ஓட்டை எனவேதாம் மாற்றிக் கொண்டிருக்கின்றோம் என வாதடியவரிடம் வெள்ளை நிற பிளாஸ்டிக் சாக்கால் மூடிய கேனை வெளி நபர் ஒருவர் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து இவருக்கு இங்கு என்ன வேலை? என கேட்கவே, தான் கையும் களவுமாக மாட்டிக் கொண்டதை அறிந்து சரி! தப்பு நடது விட்டது. இந்த ஒருமுறை மட்டும் மன்னித்து விடுங்கள் பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என அக்கடையை நடத்துபவர் கெஞ்சிக் கேட்டதை நான் என் காதால் கேட்டேன்.

செய்தியாளர் விடுவதாக இல்லை! அதிகாரிக்கு ஃபோன் போட்டு நடந்த விபரங்களை கூறி விட்டேன். எதுவானாலும் நீங்கள் அவரிடம் பேசிக் கொள்ளுங்கள். பொதுமக்களின் தேவைக்காக அரசு தரும் சலுகையையை முறைகேடாகப் பயன்படுத்த ஒரு போதும் நான் ஒத்துழைக்க மாட்டேன் என அவர் உறுதிபடக் கூறினார்.

இக் கடையில் பல முறைகேடுகள் வழக்கமாக நடந்து வருவதாக அத் தெருவாசிகள் பலரும் கூறுவது உண்மை என்றே பட்டது.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Muzammil (Dubai) [27 February 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25821

Maasha Allah good effort. Heartiest Congrats for the reporters.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [28 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25833

இது புதியது அல்ல, வழமையில் உள்ளதுதான்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...ஆச்சரியமா இருக்கு!
posted by OMER ANAS (DOHA QATAR.) [28 February 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 25835

எப்படியோ கள்ளனை தப்ப விட்டுபுட்டீங்களே! சித்தன் தெரு நியாய விலை (கொள்ளைக்)காரன் பண்ணும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமில்லை. நாங்கள் கேள்வி பட்டது உண்மையே என்றாலும்,மாட்டினான் கொய்யாலே என்று பார்த்தோம்.தப்பித்து விட்டானே...!இனியாவது கொஞ்சம் உசாரா இருங்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Seyed Mohamed Sayna (Bangkok) [28 February 2013]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 25839

பாவம் அந்த ஆள் மாட்ட வேண்டியவர் மாட்ட வில்ல தப்பி விட்டார் ,
இப்படிக்கு,
Seyed Mohamed (Sayna)
Kayal Ikiya Mandram
Bangkok -Thailand

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by salai s nawas (singapore) [28 February 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 25842

அரிசியை களவாண்ட அரை கிலோ அரிசியை சாப்பிட வைக்கணும்.

சர்க்கரைய களவாண்ட ஒரு கிலோ சர்க்கரையை சாப்பிட வைக்கணும்.

மண்ணெண்ணெய் களவாண்ட மண்ணெண்ணெய்யே வாயிலே போனயல் வச்சி அரை லிட்டர் ஊத்தி உடனும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இவ்வுளவு தூரம் மக்கள் நலனுக்காக கடின பட்ட சேவை பலன் இல்லாமல் போய்விட்டதே....
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [28 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25845

பூட்டிய அறைக்குள், இக்கடைக்குத் தொடர்பில்லாத ஒருவருக்கு மண்ணெண்ணெய் வினியோகிக்கப்படுவது எப்படி என்று கேட்கப்பட்டதற்கு, வட்ட வழங்கல் அலுவலர் எந்த பதிலையும் தரவில்லை. என்று முடிகிறது செய்தி...

அவர் எப்படி ஐயா... தொடர்பில்லாத நபருக்கும் கடைக்காரருக்கும் நியாயமாக நடப்பார்...? எல்லாம் ஒரு குட்டையில் தேங்கி கிடக்கும் நீர் அல்லவா...!

இந்த செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றவர் புகை படம் எடுத்த பின் அமைதி காத்து இருந்து கொஞ்ச தூரம் ஒதுங்கி நின்று பூட்டிய அறைக்குள் நிரப்பிய மண்ணெண்ணெய் தெருவிற்கு வெளியே கொஞ்ச தூரம் வரும் போது நபரை மடக்கி பிடித்து சம்பந்த பட்ட வார்டு பொது மக்கள் முன் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து இருக்கலாம்...

இவ்வுளவு தூரம் மக்கள் நலனுக்காக கடின பட்ட சேவை பலன் இல்லாமல் போய்விட்டதே.... இனியாவது இது போல் மற்ற (அநியாயமாக நடக்கும்) சம்பவங்களில் கோட்டை விட்டுவிட வேண்டாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. கள்ள கடத்தல் தடுக்கப்படுமா?
posted by NIZAR (KAYALPATNAM ) [28 February 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25858

ரேசன் பொருட்களில் மக்களுக்கு சீனி, மண்ணெண்ணெய், உச்சகட்ட அவசிய பொருளாக இருக்கிறது. இதனால் கள்ள மார்கெட்டில் இதன் கிராக்கியும், இதற்கு கிடைக்கும் விலையும் ரேசன் விலையை விட இரட்டிப்பாக உள்ளது.

இதனால் ரேசன் கடையில் இதை போன்ற பொருட்களை வெளி கடை காரர்களுக்கு விற்பது வாடிக்கையாக உள்ளது. முந்தய காலத்தில் ஆளுங்கட்சி சார்பில் ஒவ்வொரு ரேசன் கடைக்கும் இரண்டு நபர்களை விஜிலன்ஸ் கமிட்டி என்று போடுவார்கள். அந்த விஜிலன்ஸ் கமிட்டி இதை போன்ற விசயங்களை கண்காணிக்கும்.

மேலும் பொது மக்களுக்கும் வேலையாட்களுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்வு ஏற்படுத்தும். இப்பொழுது நடை முறையில் இப்படி கமிட்டி இருக்கிறதா தெரியல? இல்லையன்றால் ஆளுங்கட்சியினர் ஏற்படுத்தி தரவேண்டும். பூட்டிய அறைக்குள் பலான காரியம் செய்வது போல் மண்ணெண்ணையை திருடும் நபர் யார்? அவர் எந்த கடைகாரர்? அவரை உள்ளே அனுமதித்த ரேசன் கடைகாரரிடம் அவரை பற்றி விசாரிக்கவேண்டும்.

நிச்சயமாக இந்த நபர் இந்த வார்டுக்கு உட்பட்டவரும் இல்லை?ரேசன் கடையில் வேலை பார்ப்பவரும் இல்லை? யாருமே இல்லாத பூட்டிய அறையில் யாருக்கு மண்ணெண்ணையை ஆத்தி கொண்டு இருக்கிறார்? இத்தனை கேள்விக்கும் பதில் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதில் சூப்பர் ஹிட் என்ன வென்றால் இந்த புகைபடத்தில் உள்ளவருக்கும் பூட்டிய இந்த ரேசன் கடை ரூமில் இவருக்கு என்ன வேலை? ரேசன் கடை இருப்பை சரிபார்த்த வட்ட வழங்கள் அதிகாரி இந்த புகைப்பட நபரை பற்றி ரேசன் கடையாளரிடம் ஏன் விசாரிக்கவில்லை?

காயல் பட்டினம் இணய தளத்தின் துணிச்சலான இந்த செயல்பாடுகள் வரும் காலங்களில் இதை போன்ற தவறுகள் நடைபெறுவதற்கு அச்சத்தை ஏற்படுத்தும். இதை போன்ற காயல் இணயதள தளத்தின் இந்த செயல் சித்தன் தெரு ரேசன் கடை பணியாளரின் உடம்பில் நடுக்கத்தையும், நாக்கு உளறலையும் ஏற்படுத்தி இருக்கும். இணையதளத்தின் துணிச்சலான சேவைகள் தொடர்ந்து நடைபெற என் இனிய வாழ்த்துக்களை இணையதளத்துக்கும் அதன் செய்தியாளருக்கும் தெர்வித்து கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by முத்துவாப்பா.... (al khobar) [28 February 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25864

நியாயவிலைக் கடையில் மண்ணெண்ணெய் கொள்ளை .....

மண் நமக்கு
எண்ணை அவர்களுக்கு ....

பெயரில் மட்டுமே நியாயம் ........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இதுதான் கதியோ...? (?!)  (27/2/2013) [Views - 3039; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved