Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:34:31 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: இன்று துவக்க விழா! காயல்பட்டினத்தில் விழாக்கோலம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Cnash (Makkah ) [13 July 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5962

கவிமகன் காக்கா உங்கள் விளக்கத்திற்கு நன்றி!! நான் இந்த மாநாடையோ, வேறு மொழியின் பெருமையை பேசும் மாநாட்டையோ குறை கூறவில்லை.. அதற்கான அவசியமும் இல்லை... அது பொதுமக்கள் பணமும், பொருளும் வீணாகாத வரை!!! மொழியால் ஒருவனுக்கு பெருமையோ சிறுமையோ இல்லை... பல மொழிகளை படைத்தது உங்களை அறிந்து கொள்வதற்குதான் என்று படைத்தவன் சொல்கிறான்.

நீங்க சொல்லுற பெரியார் முதல் இன்றைய வீரமணி வரை இஸ்லாம்தான் இன விடுதலைக்கு ஏற்ற மார்க்கம் என்று சொல்லி வாய் சொல்லில்தானே முழங்கினார்கள்!! ஏன் அந்த தூய வழியை அவர் நெறிமுறை ஆக்கவில்லை... இப்பொழுது ஆக்கிய அப்துல்லாஹ் (பெரியார் தாசனுக்கு) திக என்ற இயக்கத்தில் வந்த எதிர்ப்பை உங்களுக்கு சொல்லி தெரிய வைக்க வேணாம். இதெல்லாம் வெறும் மேடை பேச்சிற்க்கும் வோட்டு வங்கியாகவும்தான் பயன்படுத்தினார்கள்.

அப்புறம் இந்த பாமரர் படித்திட முடியாத இலகிய்யங்கள்தான் பலதெய்வ நம்பிக்கையில் இருந்த நம் முன்னோர்களை இஸ்லாத்தில் பால் கொண்டுவந்தது என்பதை ஆதாரபூர்வமாக சொல்ல முடியுமா!! இஸ்லாத்தை தங்கள் வாழ்கை நெறி மூலமும், குர்ஆண் ஹதீஸ் படி வாழ்ந்து காட்டி, அந்த வாழ்க்கை நெறியை போதித்துதான் லட்சகணக்கில் பாமர மக்களை, ஏட்டு அறிவு இல்லாத எழுத படிக்க தெரியாதா சமூகத்தை இஸ்லாத்தில் கொண்டுவந்தது எல்லாம் வரலாறு இல்லையா!!!

இது போன்ற கட்டுகதைகளையும் இதிகாச புராணங்களில் உள்ளவற்றை எல்லாம் இஸ்லாத்தில் நடந்தாக மாற்றி கூறும் சீறாப்புராணம் போன்ற இஸ்லாமிய இலக்கியங்கள் அந்த பாமர மக்களை, (அது முல்லை நிலமோ, நெய்தல் நிலமோ) அப்பொழுது சென்று இருந்தால் இருந்த மார்கமே பரவாஇல்லை என்று இருந்து இருப்பார். உண்மை இஸ்லாத்தை சொல்லுவதை விட்டு விட்டு இல்லாத நடக்காத கற்பனைகளை சொல்லி நபிகள் சொன்னதாகவும் அவர் வாழ்வில் நடந்தவும் கூறுபவன் நிலை என்ன?

(எவன் ஒருவன் நான் சொல்லாததை சொல்லி ஏன் பேரில் இட்டு கட்டுகிறானோ அவன் தான் தங்கும் இடத்தை நரகமாக்கி கொள்ளட்டும், என்றும் இன்னொரு இடத்தில அத்தகையோருக்கு நரகில் முன்பதிவு செய்யபடும் என்றும் ஹதீஸ் சொல்லுவது.. இது போன்றவற்றை சொல்லுபவருக்கு தானே)

ஏன் இஸ்லாத்தில் உண்மை நிலையில் எடுத்து சொல்லி இருந்தால், அதன் படி நடந்து இருந்தால் எஞ்சிய மக்களும் சத்திய மார்க்கத்தை தேடி வந்து இருப்பார்களே,... எதற்கு இஸ்லாத்தில் பேரில் கற்பனைகள் கதைகள்...

இதுபோன்ற கவிதை இஸ்லாத்திற்கு எதிராக, அறிவுக்கு எதிராக எழுதி இருபவரை மேடை போட்டு புகழ்வதும், நல்லடியார் நிலைக்கு கொண்டு போவதும் ஏன்? ஓநாய் உடன் நபி(ஸல்) பேசியதையும், மானுக்கு பிணை நின்றதையும், உடும்புடன் நபி பேசியதையும் நீங்க இஸ்லாத்தில் இந்த பகுத்தறிவு மார்க்கத்தில் உள்ளது தான் என்று ஆதாரபூர்வமாக குர்ஆண்/ ஹதீஸ் மூலமோ ஏன் 4 மத்ஹாப் சட்ட நூலில் மூலமோ நிருபித்து காட்ட முடிமா?

எந்த அன்னையை நாம் முமீன்களின் தாய் இன்று வரை போற்றுகிறோமோ... அந்த மாநபியின் மகள் பாத்திமாவை ஒரு புராண இதிகாசத்திற்கு இணையான பெண்ணை வர்ணிப்பது போல் அவர் அழகை வருணனை செய்கிறாரே.. இதுவா இஸ்லாமிய இலக்கியம்

கதுவகிற் கரிய கூந்தற் காரிகை பாத்தி மாதம்
குனிசிலைப் புருவ வாட்கட் கொடியிடைக் கரிய கூந்தற்
கனியிதழ்ச் சிறுவெண் மூரற் காரிகை நலத்தை நாடி
நினைவுநித் திரையும் போக்கி நீடொடு குழியி னார்ந்த
நனிமதக் களிறு போன்று வேட்கையி னடுங்கி னாரால்

வளைக்கா நிற்கும் கோதண்டத்தை நிகர்த்த புருவத்தையும் வாளை நிகர்த்த கண்களையும் கொடியை நிகர்த்த இடையையும் கரு நிறத்தை யுடைய கூந்தலையும் கோவைக் கனியை நிகர்த்த அதரங்களையும் சிறிய வெண்ணிறத்தைக் கொண்ட பற்களையுமுடைய பெண்ணாகிய அந்தப் பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களின் இன்பத்தை விரும்பித்.........
(நவூதுபில்லாஹ்).

இதை கேட்டும் கண்டுமா அந்த முல்லைநில மக்கள் இஸ்லாத்திற்கு வந்தார்கள்... அல்லாஹ்விற்கு அஞ்சி பதில் சொல்லுங்கள்!!

ஆடம்பரத்தை அறவே வெறுத்த அண்ணலார் மகள் கல்யாணத்தை ஒரு ஜெயலலிதா வளர்ப்பு மகன் கல்யாண ரேஞ்சுக்கு கற்பனை செய்து மதினமா நகர் எங்கும், மாவிலை தோரணம் கட்டபட்டு பந்தல் போடப்பட்டு, முக்கனிகள் வழங்கப்பட்டு... எந்த அளவு இஸ்லாத்தை கொச்சைபடுத்தி இருக்கிறார்.. அன்றைய மதீனாவில் ஏது மாவிலை, ஏது மா, பலா, வாழை... இரண்டு நாட்கள் தொடர்து நபி அவர்கள் வீட்டில் அடுப்பு எரிந்தது கிடையாது இதுதான் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அப்டி இருக்க ஏன் இப்படி!

மேலும் சஹாபிய பெண்கள் அலி (ரலி) அவர்கள் அழகை கண்டு ஏங்கிய கீழ்த்தரமான வர்ணனை.

..........................சில பெண்கள் சொல்லுதற் கருமையான செவ்வானத்தைப் போலும் விரிந்த வத்திரங்களை அரையின் கண் கட்டித் தெள்ளிய செந்நிறத்தையுடைய சந்தனத்தையும் பூசிச் சிவந்த இரத்தினங்கள் பதித்த ஆபரணங்களைத் தாங்கிய வள்ளலாகிய அவ் அலி யிபுனு அபீத் தாலிபு அவர்களின் அழகை விழிகளால் அருந்தப்பட்ட பெண்களாகக் குதிப்பைப் பொருந்திய காமமாகிய நெருப்பானது மேலே பிரகாசிப்பதைப் போன்று நின்றார்கள்.........

அன்றியும், பொன்னினாற் செய்யப் பட்ட வளையல்களைத் தரித்த கார்த்திகைப் புஷ்பத்தைப் போன்ற சிவந்த கைகளை யுடைய மாதர்கள் தங்களின் சிறிய மருங்குலானது அசையவும், பிரகாசத்தைப் பெற்ற சிறிய நெற்றியானது வியர்க்கவும், சிறந்த முதிர்ச்சியை யுடைய ஆபரணங்களைக் கொண்ட முலைகள் விம்மவும், வண்டுகள் மதுவை யருந்தி ஒலிக்கவும், விஜயத்தைப் பொருந்திய வாளாயுதத்தை யுடைய அவ் வலி யிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு என்று சொல்லும் இராஜேசுவரரினது பவனியிற் சென்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

இன்னும் சொல்ல எவ்வளவோ உள்ளது இஸ்லாம் என்ற பேரில் நுழைந்த இதுபோன்ற இந்த இலக்கியங்கள் இஸ்லாத்தை வளர்க்க உதவவில்லை..படித்த மக்களை, சிந்தித்து இஸ்லாத்தை ஏற்க நினைபவர்களை அங்கயே நிறுத்தி வைக்க தான் உதவும்..

தயவு செய்து சீரிய பார்வையோடு சிந்திக்கவும்... இது போன்ற இலக்கண இலக்கியங்களை போற்ற பொருள் செலவிடுவதை விட.. நல்ல பல நூல்கள், பல அறிஞ்சர்கள் எழுதி இருக்கும் உண்மையான வரலாறுகள், சட்டங்கள், தப்சீர்கள் இன்னும் தமிழை வந்து அடையாமல் அரபியாகவே உள்ளது அதற்காக முயற்சி செய்தால் இன்னும் பல ஆயிரம் முஸ்லிம் அல்லாதவர்க்கு/ இஸ்லாத்தை சீரிய வழியில் அறியாதவருக்கும் இனிதாய் அமையும்.

நான் சுட்டிகட்டிய பொய்களும், கட்டு கதைகளும் தவறு என்று ஆதாரத்துடன் நிரூபித்தால் நானும் ஏன் நிலையை மாற்றி கொண்டு இதை ஏற்று கொள்கிறேன். உண்மையா இருக்கும் என்றால் அட்லீஸ்ட் அதை நியாய படுத்தாமல் இருப்பது சிறந்தது!

இது போன்ற கவிஞர்களைத்தான் அல்லாஹ் கூறுகிறான்

" And the Poets,- It is those straying in Evil, who follow them:Seest thou not that they wander distracted in every valley?- And that they say what they practise not?- (26:224-26)

May Allah Guide us Right Path., He knows the best.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved