Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:01:14 PM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 83
#KOTWEM83
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 1, 2013
மாணவக்கண்மணிகளே, நீங்களும் வெல்லலாம்!

இந்த பக்கம் 2173 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“ப்ளஸ் 2 மாணவர்கள் தேர்வெழுதச் செல்லும் காட்சிகள்” என்று 14-03-2013 அன்று வெளியான செய்தியில் உதித்த சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்!!!

இது பலருக்கு இன்பமான காலம். சிலருக்கு (தவிர்க்க முடியாத) துன்பமான காலம்.

நல்ல முறையில் படித்தவர்கள், ஓரளவுக்கு தேர்ச்சி மதிப்பெண் பெறுபவர்கள், எதைப் பற்றியும் கவலையில்லாதவர்கள் ஆகியோருக்கு இது இன்பமான காலம். நன்றாகப் படித்தவர்களும் ஓரளவு படித்தவர்களும் அவரவர் கனவை நனவாக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

ஒன்றுமே படிக்காத இன்பசாலிகள், படிப்பை வைத்து என்ன செய்யப்போகிறோம் என வேறு வகையான தேடல்களுக்கு ஆளாகியிருப்பார்கள். இவ்வகையினருக்கு படிப்பை விட்டதால் ஏற்படும் நஷ்டம் இப்போது விளங்காது. காலம் தான் அவர்களுக்கு இச்சிந்தனையை உணர்த்தும். தாம்பெற்ற கஷ்டத்தை தமது வாரிசுகள் பெறக்கூடாது என அப்போது அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

(பரீட்சை எழுதிவரும் மாணவக்கண்மணிகள் கோடிப் புன்னியங்கள் பெற்று ஈருலகிலும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்) ஆனால் விளிம்பில் தேர்ச்சி பெறத் தவறியவர்கள், தாம் செய்த தவற்றை உடனடியாக உணர்ந்தவர்களுக்கு நமது அறிவுரை யாதெனில் நீங்கள் கவலைப்பட ஒன்றுமே இல்லை.

எத்தனையோ பட்டயப்படிப்புகள் (Diploma) உள்ளன. இத்தகையவர்கள் இனிமேலாவது காலத்தின் அவசியத்தை உணர்ந்து இருக்கும் மாணவப் பருவத்தை முறையாக கழிக்க முற்பட்டால் அவர்களுக்கும் சுபிட்சமே.

என்னென்ன படிப்புகளைப் படித்தால் எத்தகைய வேலை வாய்ப்புகளைப் பெறலாம் என்பதற்கு, மேற்சொன்ன அனைத்து வகையினருக்கும் உதவ இன்ஷா அல்லாஹ் காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) தயாராக உள்ளது.

அருமை மாணவர்களே, தேர்வு என்பது வெறும் விளையாட்டல்ல.

உங்கள் குடும்பத்திலுள்ள படித்த நபர்களையும் படிக்காத நபர்களையும் (ஆண்களை மட்டும்) கணக்கெடுத்துப் பாருங்கள். படித்தவர்களின் மகிழ்ச்சியையும் படிக்காதவர்களின் கஷ்டத்தையும் சற்று சிந்திதுப் பாருங்கள்.

இப்போது நீங்கள் எவ்வகையினராக ஆக விரும்புகின்றீர்கள் என சற்று ஆற அமர சிந்தியுங்கள். அதற்கு முன் இரண்டு ரக்அத்கள் இஸ்திஃகாரா (நாட்டங்கள் நிறைவேறத் தொழும் தொழுகை) தொழுது கொள்ளுங்கள்.

தேவைப்பட்டால் உங்கள் குடும்பத்தில் உள்ள நீங்கள் நெறுங்கிப் பழகும் படித்தவர்களுடன் கலந்தாலோசனை செய்யுங்கள். இதுகாலம் வரை உங்களுக்காக உங்கள் பெற்றோரும் உறவினர்களும் ஏகப்பட்ட ஆலோசனைகளை வழங்கியிருப்பர். உங்களது ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் உங்களுக்காக உங்களுடனேயே காலைப்பொழுதுகளை (ஏன் மாலைப் பொழுதுகளையும் கூட)க் கழித்திருப்பார்கள். உங்களோடு அவர்களும் சேர்ந்து நற்பெயர் பெறவேண்டும் என்பதற்காக. ஆயினும் நீங்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது (அல்லாஹ் அத்தகைய சூழ்நிலைகளை விட்டும் உங்கள் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்!!!) அவர்களின் தற்காலிக கவலையாக மட்டுமே அமையும். ஆனால் உங்களின் படிப்பில் உங்களது எதிர்காலமும் உங்கள் தலைமுறைகளின் எதிர்காலமும் உள்ளன.

கொஞ்சம் சிந்தியுங்கள். உங்களின் தற்போதைய வயதுடன் ஒரு 45-ஐ சேர்த்துக் கொண்டு அப்போது படிக்காத நீங்கள் எப்படியெல்லாம் உங்களின் வாரிசுகளால் நடத்தப்படுவீர்கள் என்பதை சற்று எண்ணிப்பாருங்கள்.

அவ்வளவு ஏன், அப்பருவத்தில் (முதுமை) இப்போதுள்ள படிக்காத பலரையும் நீங்களே சென்று பாருங்கள். இதில் வெற்றிவாகை சூடிவருபவர்களை உங்களுக்கு முன்மாதிரியாகக் கொள்ளுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக படைத்த உங்களின் இரட்சகனுடன் என்றென்றைக்குமே தொடர்பாய் இருங்கள். தொழுகையையும் பொறுமையையும் கொண்டு அவனிடம் உதவி தேடுங்கள்.

நல்லிரவுகளில் நீங்கள் படிப்பதற்காக எழுந்திருக்கும் போது ஒரு சிறிது நேரம் அல்லாஹ்வை (தஹஜ்ஜுத் மூலம்) வணங்குங்கள். அப்போது உங்களைவிட்டும் கடந்து சென்ற காலங்களிம் முற்படுத்திய பாவங்களுக்காக அவனிடம் இஸ்திஃக்ஃபார் செய்யுங்கள்.

படைத்தோன் அல்லாஹ் இவ்வுலகிலும் மறுவுலகிலும் ஒளிமயமான எதிர்காலத்தைஉங்கள் அனைவருக்கும் மற்றுமுல்லோர் யாவருக்கும் வழங்குவானாக, ஆமீன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: abubacker (dammam) on 09 April 2013
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26771

இறை சிந்தனையுடன் நல்ல ஆலோசனை வழங்கிய கட்டுரையில் எனக்கு கவலையளித்த விஷயம். (படிக்காத நீங்கள் எப்படி எல்லாம் உங்களின் வாரிசுகளால் நடத்தப் படுவீர்கள் என்பதை சற்று எண்ணிப்பாருங்கள்.)

இறை கல்வி கிடைத்த மாணவன் எந்த நிலையிலும் தன் பெற்றோகளுடனும், மற்றவர்களுடனும் நல்ல முறையில் நடப்பான். உலக கல்வியை மற்றும் குறிகோளாக கருதுபவர்களின் பிள்ளைகளை பற்றி பெற்றவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நலம்.

மாணவர்களுக்கு சிறு பிராயத்தில் இருந்தே இஸ்லாமிய போதனைகளை ஊற்றி வளர்க்க வேண்டும். அதில் நாம் கவனம் குறைவாகவே இருக்கிறோம். இஸ்லாமிய கல்வியுடன் கூடிய பள்ளிகள் பரவலாக நம் பகுதியில் அதிகரிக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved