Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:18:24 AM
சனி | 4 மே 2024 | துல்ஹஜ் 1738, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:45
மறைவு18:28மறைவு15:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:41
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 78
#KOTWEM78
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 25, 2013
குடம் பாலில் துளி விஷம் ...

இந்த பக்கம் 2604 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கல்வியில் பின் தங்கிய சிறுபாண்மையினரான நம் சமுதாய மக்கள் கல்வியறிவு பெற வேண்டும், சமூகத்தில் அறிவாற்றல் மிக்கவர்களாகவும் கற்றுத்தேர்ந்து கடைநிலையிலிருந்து முன்னுக்கு வர வேண்டும் எனும் உன்னத நோக்கில் தன் சொந்த நிலங்களையெல்லாம் தானமாகத் தந்து, சொத்துக்களை விற்று, பள்ளிக்கூடங்கள் கட்டி, அவற்றை கண்ணியத்தோடும், கட்டுப்பாடுகளோடும் கட்டிக் காத்து வந்தனர் நம் நகரின் கல்வித் தந்தைகள் பலர். இன்றும் அப்புனிதர்களின் பெயர் தாங்கி நிற்கும் கல்விச்சாலைகள் உள்ளன.

ஏழைகளுக்கு இலவசக் கல்வியோடு சீருடை, புத்தகங்கள் வழங்கி அவர்களும் சமுதாயத்தில் உயர வழிவகை செய்து தம் வாழ்நாள் முழுவதையும் கல்விக்காக அர்பணித்த எத்தனையோ தியாகிகள் மண் மறைந்து விட்டாலும் நம் மனதில் என்றும் மறையாமல் இருப்பது அவர்கள் செய்த சேவை மற்றும் சீர்திருத்தமும் அன்றி வேறேது?

சமீப காலமாக கல்விக்கூடங்கள் திரையரங்குகளாக மாறி வரும் கலாச்சார சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத்தான் நம்மால் பார்க்க முடிகின்றது. ஆண்டு விழாக்கள் எனும் பெயரில் அரங்கேறி வரும் அவலங்களும், ஆட்டபாட்டங்களும் முகம் சுளிக்கச் செய்யும் விதமாக அமைந்து விடுகின்றன. இத்தகைய செயல்பாடுகளை ஆசிரிய பெருமக்கள் உதவியோடு, நிர்வாகமும் இணைந்து கொண்டு வழி நடத்தி வருவது ஒரு நல்ல தலைமுறையினரை உருவாக்க உகந்ததல்ல என்பதுவே இக்கட்டுரையின் நோக்கம்.

மாணவர்களை ஊக்குவித்து மதிப்பு மிக்க நன்மக்களாக உருவாக்க எத்தனையோ நல்ல பல வழிகள் இருக்கின்றபோதிலும் அவற்றையெல்லாம் வெறும் ஒப்புக்காக மட்டும் வைத்துக் கொண்டு, தரங்கெட்ட சினிமாப் பாடல்களுக்குத் தக்கவாறு சின்னஞ் சிறார்களை ஆட வைத்து அழகு பார்க்கும் இக்கலாச்சாரம் எங்கிருந்து வந்தது? மாறுவேடப் போட்டிகள், வினா விடை, தனித்திறமை, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள், கட்டுரைப் போட்டி, ஓவியம், சாகசம், என ஆரோக்கியமான விஷயங்களை நடத்தும் இப்பள்ளிகள் சினிமாப் பாடல்களுக்கு சிறார்களை ஆட்டம் போட வைப்பதில் அப்படி என்னதான் பெருமையைக் கண்டார்களோ? அதைத்தான் நம்மால் இன்னும் புரிந்துகொள்ள இயலவில்லை! நிர்வாகத்தைக் கேட்டால் பெற்றோர்களே முன் வந்து என் பிள்ளையை டான்ஸ் போட்டிக்கு சேருங்கள் என வற்புறுத்துவதாகக் கூறி நழுவிக் கொள்கின்றனர்.

நாட்டுப் பற்றையும், நல்ல விஷயங்களையும் வலியுறுத்தும் சினிமாக்களை நாம் புறந்தள்ளி விட முடியாது. நான் படிக்கும் காலத்தில் கப்பலோட்டிய தமிழன், வீர பாண்டிய கட்டபொம்மன், நல்ல தங்காள் போன்ற சினிமாக்களுக்கு எங்களை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துச் சென்றுள்ளார்கள். அதற்கே பல விதமான எதிர்ப்புக்களை மார்க்கம் அறிந்தவர்களிடமிருந்து நிர்வாகத்தினர் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு!

பெரும்பாலும் இன்றைய சினிமாக்கள் வன்முறையையும், பாலியல் பகிரங்கத்தையும், களவு, கொள்ளை, கடத்தல், கொலைகள் என பார்க்கக் கூடாத பல விஷயங்களையும் படம் பிடித்து, தெள்ளத்தெளிவாக வெள்ளித்திரைகளில் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எனவேதான் இத்தகைய தரங்கெட்ட சினிமாக்களில் வரும் விரசமான பாடல் காட்சிகளுக்கு பச்சிளம் குழந்தைகளை ஆட வைத்துப் பழக்காதீர்கள் என நாம் பல முறை பல்வேறு கல்விக் கூடங்களுக்கு எச்சரித்துள்ளோம்.

மேலோட்டமமாகப் பார்க்கும்போது, “இதில் என்ன தவறு இருக்கின்றது? ஆண்டு முழுவதும் படிப்பில் மூழ்கிக் கிடக்கும் மாணவ-மாணவியருக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்வல்லவா இது? இந்த ஒரு நாள் அவர்கள் சுதந்திரமாக வானில் சிறகடித்துப் பறக்கட்டுமே? அதை ஏன் வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றீர்கள்?” என விபரீதத்தின் ஆழம் தெரியாமல் சிலர் ஆதரவு தெரிவித்து ஆதங்கப்பட்டுக் கொள்கின்றனர்.

தாராளமாக அந்த மழலைச் சிட்டுக்கள் சிறகடித்துப் பறக்கட்டும். அதற்குப் பல வழிமுறைகள் இருக்க, விரும்பத்தகாத சினிமாப் பாடல்களுக்கு ஆடல் என்று ஆண்டு விழாக்களில் கட்டயப்படுத்துவதைத்தான் நாம் கண்டிக்கின்றோம்.

இது குடம் பாலில் துளி விஷம் கலப்பதற்குச் சமம். பண்பாடுச் சீர்குலைவை ஏற்படுத்தி மாணவர்கள் பாதை மாறி பயணிப்பதற்கு ஏதுவாக அமைந்து விடக்கூடும். இத்தகைய செயல்கள் பெற்றோர்களைக் கவர்வதற்காகவும், தமது பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும் அன்றி இதில் வேறென்ன காரணம் இருக்க முடியும்? இதை வலியுறுத்துவோர் பழமைவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.

ஒரு சினிமா பாட்டை மாணவன் தனது வகுப்பறையில் முனுமுனுத்தாலே மூக்குக்கு மேல் கோபம் வரும் ஆசிரியருக்கு. ஆனால் அதே பாடல்களை மேடை போட்டு அதற்கேற்றவாறு ஆடை அலங்காரமும், ஒப்பனையும் பூசி இளந்தளிர்களை, மொட்டு மலர்களை, சின்னஞ்சிறார்களை அணிவகுக்கச் செய்து ஆட வைத்து ரசிப்பது எவ்விதத்தில் நியாயம்? ஒழுக்கத்தையும், உயர்வான நன்னெறிகளையும் போதிக்கும் கல்விக்கூடங்கள் இன்று திரையரங்குகளாக மாறி வருவதேன்?

முழுக்க முழுக்க இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் பாட சாலைகள் கூட தாம் நடத்தும் ஆண்டு விழாக்களில் அருள் மறையாம் திருமறையின் தூய வசனங்களை ஓதித் துவங்குகின்றனர். அதே மேடையில் அனாச்சரத்தின் உச்சகட்டமாய் கேடு கெட்ட சினிமாப் பாடல்களுக்கு ஆட்டம் போட வைப்பதை எப்படி நாம் பொறுத்துக் கொள்ள இயலும்?

மலரும் மொட்டுக்களான வளரும் நம் இளைய தலைமுறையினரை நெறிப்படுத்தி, நேரான பாதையில் வழி நடத்திச் செல்லும் தலையாய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் அப்பள்ளிக் கூடங்களின் நிர்வாகிகளுக்கும் உள்ளது என்பதை உணர்ந்து இனி வருங்காலங்களில் இத் தீய வழக்கத்தை விட்டொழித்து வருங்காலத்தின் தூண்களை வளையாமல் நிமிந்து நிற்க்க வழி வகுப்பார்கள் என நம்புவோமாக!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தொடரட்டும் தூய நற்சிந்தனைகள்!
posted by: kavimagan m.s.abdul kader (qatar) on 25 February 2013
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 25733

சினிமாப் பாடலுக்கு ஆடல்
சீரழிவின் முதல் தேடல்!
பள்ளிக்கூடத்தில் எதற்கு
பள்ளியறைப் பாடல்?

பிஞ்சு நெஞ்சகத்தில்
நஞ்சை ஏன் வளர்க்க வேண்டும்?
பன்னீர் மர வேரில்
வெந்நீர் ஏன் பாய்ச்ச வேண்டும்?

நல்ல சிந்தனை நயமாய் விதைக்கும்
நண்பன் ரஃபீக்கை நாளும் வாழ்த்துவோம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: சாளை பஷீர் (மண்ணடி,சென்னை) on 26 February 2013
IP: 180.*.*.* India | Comment Reference Number: 25741

நல்லதொரு கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் நண்பர் ரபீக்!

மற்ற பள்ளிக்கூடங்களில் ஒழுக்க பிரச்னை வந்து விடுமோ என பயந்துதான் நம் சமூக கல்வி நிறுவனங்களில் நம் பிள்ளைகளை சேர்க்கின்றோம்.

இங்கும் ஆட்ட பாட்டம்தான் நடக்கும் என்றால் நாங்கள் சமூக நிறுவனங்கள் என இவர்கள் சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்.

அழுக்கு போக வேண்டும் என்பதற்காகத்தான் தண்ணீரில் குளிக்கின்றோம். அந்த தண்ணீரே அழுக்காகிவிட்டால் எங்கு போய் குளிப்பது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பெருமைக்கு கட்டுப்படுகின்றனர்...
posted by: N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) on 26 February 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25744

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர் M.N.L. ரஃபீக் அவர்கள், நமது மார்க்க நற்பண்புகளையும் , நமது கலாச்சாரத்தையும் சீரழிக்கின்ற பள்ளிகளை, அதன் நிர்வாகத்தை கோடிட்டு காட்டியிருக்கிறார் – அவருடைய இந்த கட்டுரை மிகவும் பாராட்டத்தக்கது. அந்த பள்ளிக்கூடம் நிர்வாகம் நேர்வழியை பின்பற்றக் கூடியவர்களாக இருந்தால் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.
-----------------------------------
அவர் பார்த்தவரை அதை கண்டிக்கும் முகமாக இந்த கட்டுரையிலே தெளிவாக விளக்கி இருக்கிறார். அதல்லாமல் வேறு பள்ளியில் இதைவிட மோசமாக நடந்திருக்கிறது – அது அவருடைய பார்வைக்கு நேரிடயாக படவில்லை என்றே எண்ணுகிறேன்.
-------------------------------------
நம் முன்னோர்கள் மார்க்கத்தையும் , மக்களையும் முன்னிறுத்தி செயல்பட்டார்கள் அதனால் எல்லாம் சீராக நடந்தது. ஆனால் இன்றுள்ளவர்கள் பெயரையும் , பணத்தையும் முன்னிறுத்தி செயல்படுவதால் எல்லாம் சீரற்று நடக்கிறது.
---------------------------------
அன்றைய பெற்றோர்களில் மிகுதமானவர்கள் நேர்மைக்கு கட்டுப்பட்டனர் -இன்றைய பெற்றோர்களில் மிகுதமானவர்கள் பெருமைக்கு கட்டுப்படுகின்றனர் அதனால்தான் இந்த தலைகீழ் மாற்றங்கள்.

பெற்றோர்கள் மார்க்கத்துக்கு முதல் இடம் கொடுத்தால் எந்த சீரழிவும் நம்மை பாதிக்காது.

நம்முடைய கடமை மனதில் பட்டதை மக்களுக்கு தெரிவிப்பதே! அதை எடுத்து நடப்பதும் , நடக்காததும் அவர்கள் இஷ்டம் – அந்த வகையில் கட்டுரையாளர் தனது பணியை செய்துவிட்டார் அல்ஹம்துலில்லாஹ்! வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அல்லாஹ் தான் காப்பாத்தணும்.............
posted by: S.K.Shameemul Islam (Chennai) on 27 February 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25813

சகோதரா, அதெல்லாம் இருக்கட்டும். இவங்க பெற்றோரெல்லாம் முஸ்லிம்கள்தானே. அவங்கள்ட போய் முதல்ல கேளுங்க, ஏன் ஒங்க புள்ளைகள ஆட உட்டீங்கனு, ஏன்னா அங்க இருக்குற தலைமையாசிரியை எங்கிட்ட அப்படித்தான் கேட்டாங்க. அப்புறம் சொன்னாங்க....... அவுங்க பிள்ளைலான் நல்லா டான்ஸ் ஆடுவான்னு சொன்னாங்க, அடுத்து அதுல என்ன தப்பு இருக்குனு கேட்டாங்க. அப்புறமும் விடல்ல...... ஏன் ஒங்க பெண்கள் தான் எம் புள்ளய ஆடல்ல சேருங்கனு சொல்றாங்கனு வேற சொன்னாங்க.

ஹூம், கருமம், அல்லாஹ்வின் உதவியால ஏம் புள்ளைகள் இப்ப என்னோட சென்னைல இருக்குறதால ஒரு நல்ல ஸ்கூல்ல படிச்சிட்டிருக்குதுங்க. மத்தவங்கள அல்லாஹ்தான் காப்பாத்தணும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Charity Begins at Home
posted by: M.M. Seyed Ibrahim (Chennai) on 27 February 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25831

Well said, Br. S.K.Shameemul Islam

ஒரு குழந்தையின் வளர்ச்சியில், பக்குவத்தில் தாய் மற்றும் தந்தையின் பங்கு மிக அதிகம். ஒரு குடும்பத்துக்கு தந்தை தான் பொறுப்பு. அதனை பற்றி மறுமையில் விசாரிக்கப்படும்போது, "நான் வெலிஊரில் இருந்தேன், குடும்பத்தை காப்பாற்ற வெளி நாட்டில் உழைத்தேன்" என்பதெல்லாம் எடுபடுமா என்பதை சிந்திக்கவும். நன்றாக சம்பாதிக்கும் சிலர் கூட குடும்பத்தாரை தங்களுடன் வைப்பது இல்லை.

எல்லா தாய்மார்களுக்கும் ஆட்டம், பாட்டம், சிறுமியர்க்கு அரைகுறை ஆடை ஆகியவற்றின் விபரீதங்கள் தெரிவதில்லை. நீங்கள் தக்வாதாரியாக, பொறுப்பை உணர்ந்தவராக இருந்தால் நீங்கள் தான் இவற்றை பற்றி கேள்வி கேட்கவேண்டும்.

பள்ளிகள், ஆலிம்கள், பள்ளிகூடங்கள், சமூக அமைப்புகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பு உள்ளதுதான். ஆனால், அவைகள் உங்கள் மகளுக்கு லிப்ஸ்டிக் விட்டு விடவில்லை, அசிங்கமான ஆடைகளை அவைகள் வாங்கி உடுத்துவிடவில்லை. இவைகள் எல்லாம் உங்கள் சம்பாத்தியத்தில் வந்தவை.Charity Begins at Home


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கலாசார சீரழிவா?
posted by: NIZAR (KAYALPATNAM) on 10 March 2013
IP: 101.*.*.* India | Comment Reference Number: 26173

கரும்பு தின்ன கூலியா?என்பது போல் ஹிஜாஸ் மைந்தன் கட்டுரை என்றால் அதை படிப்பதில் என்னை போன்ற எண்ணற்ற சகோதரர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை சொல்ல இயலாது எனலாம்.பள்ளிகூடங்கள் ஆண்டு விழா செய்திகளில் திரை இசை ஆடல் சம்பந்தமாக கருத்து பதிவில் கடும் கண்டனம் தெர்வித்து இருந்த ஹிஜாஸ் மைந்தன் அவர்கள் இதற்காக குடம் பாலில் துளி விஷம் என பொருத்தமான தலைப்பில் தனி கட்டுரையே எழுதி உள்ளது மக்களிடையே இதை பற்றியான விளுப்புனரவை ஏற்படுத்தும் நல்ல முயற்சி என்பது குறிப்பிட தக்கது.

இதற்கு சில அடிப்படை காரணங்கள் என்னவெனில் நீங்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டது போல் தங்கள் பொருள் நேரம், உழைப்பு என அனைத்தையும் கல்விக்காக அர்ப்பணித்து பள்ளிக்கூடம் அமைத்து நிர்வாகிகள் ஆக இருந்த கல்வி தந்தைகள் போல் இன்றைய நிர்வாகிகள் இல்லை.

இன்றைய நிர்வாகிகள் ஆண்டு விழா பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வந்து செல்வதோடு சரி,இனி மற்றவை அனைத்தும் மேடம் அல்லது சாரிடம் முழு பொறுப்பும் ஆகி விடுகிறது.இதனால் இதை போன்ற விஷயங்கள் பற்றி நிர்வாகிகள் கண்டு கொள்வதில்லை.எனவே தங்கள் இஷ்டம் போல் ஆசிரியர்கள் நிகழ்சிகளை அமைத்து கொள்கிறார்கள்.

ஆண்டு விழா நிகழ்சிகளில்பொதுமக்கள்,பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் அடுத்து என்ன நிகழ்ச்சி என ஆவலாக எதிர் பார்க்கும்பொழுது டிராமா என்றவுடன் என்றவுடன் முகம் தொங்கிவிடுகிறது.ஆனால் ஆட்டம் என்றவுடன் அந்த இடமே அமர்க்களமாக ஆகிவிடுகிறது இதற்கு எதார்த்த மான காரணம் அந்த அளவிற்கு சினிமா பாடல்கள் மக்கள் இதயங்களை பாழ்படுத்தி உள்ளது எனலாம்.நிகழ்சிகளில் இட இடையே ஆட்டம் இல்லை என்றால் ஸ்கூல் தரத்தை குறை சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் இதை போன்ற திரை இசை நிகழ்சிகளில் மாற்று மத சகோதரர்களை மற்றும் அனுமதிப்பது சரியா?அவர்களை எப்படி திருப்தி படுத்துவது என்று எனக்கு சொல்ல தெரியவில்லை?மொத்தத்தில் ஒரு குடம் முழுவதும் பால் இருந்து அதி ஒரு துளி விஷம் கலந்தால் எப்படி அணைத்து பாலும் விசமாகிவிடுமோ அதுபோல இதை போன்ற திரை இசை நிகழ்ச்சி கலை அறவே தவிர்ப்பது தான் சிறந்தது என எண்ணுகிறேன்.வரும் காலங்களில் இதை போன்ற விசயங்களில் நிர்வாகிகள் கவனம் செலுத்துவார்கள் என நம்புவோம்.

YOURS,
NIZAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved