Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:46:02 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 7
#KOTWEM7
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 10, 2012
காயல்பட்டணத்தின் வேர்கள்!

இந்த பக்கம் 5169 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ரூட்ஸ் (Roots) என்றோர் ஆங்கில நாவல். உலகிலேயே அதிகமாக விற்ற நாவல்களில் இதுவும் ஒன்று. ரூட்ஸ் என்ற ஆங்கிலப் பதத்திற்கு வேர்கள் என்று பொருள். இதனை எழுதியவர் அலெக்ஸ் ஹேலி என்ற அமெரிக்கக் கறுப்பர். இவர் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர். ரீடர்ஸ் டைஜஸ்ட் (Readers Digest) முதல் பிளேபாய் (Playboy) வரை அத்தனை பிரபலமான பத்திரிகைகளிலும் தன் முத்திரை பதித்தவர்.

மால்கம் X என்ற மாலிக் அல் ஷாபாஸ் என்பவரை நாமெல்லாம் அறிவோம் என்று நம்புகிறேன். அமெரிக்கக் கறுப்பராக இருந்து, இஸ்லாமை ஏற்று, அதனை அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்றவர். பல கறுப்பர்கள் புனித இஸ்லாமைத் தழுவ காரணமாக இருந்தவர்.

மால்கம் X ன் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி நியமிக்கப்படுகிறார். மால்கம் X கடுமையான இஸ்லாமியப் பிரச்சாரப் பணியை மேற்கொண்டு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்ததால் அவரால் ஓர் இடத்தில் அமர்ந்து அவரது வாழ்க்கை வரலாற்றை அலெக்ஸ் ஹேலியிடம் சொல்ல முடியவில்லை. ஆதலால் மால்கம் X தான் பிரச்சாரத்திற்காக செல்லுமிடமெல்லாம் அலெக்ஸ் ஹேலியையும் அழைத்துச் சென்றார். வாகனத்தில் பயணித்துக்கொண்டே அவர் சொல்லச் சொல்ல, அலெக்ஸ் ஹேலி அதனைப் பதிவு செய்துகொள்வார்.

இப்படி எழுதப்பட்ட நூல்தான் ''அலெக்ஸ் ஹேலியிடம் சொல்லப்பட்ட மால்கம் X ன் வாழ்க்கை வரலாறு'' (The Life History of Malcolm X as told to Alex Haley) என்ற நூல். இது 1965ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.

மால்கம் X பல பல்கலைக்கழகங்களுக்கும் சென்று இஸ்லாம் குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். அந்தச் சொற்பொழிவுகளில் தவறாமல் ஒரு செய்தியைக் குறிப்பிடுவார். அதாவது, ‘‘அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தப்பட்டு அடிமைகளாக அமெரிக்காவில் விற்கப்பட்டவர்கள்; அங்கே ஆப்பிரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள்” என்பதுதான் அந்தச் செய்தி.

சிறு வயதில் அறியாமல் செய்த தவறுகளுக்காக மால்கம் X சிறையில் இருந்தபொழுது சிறை நூலகத்தின் அத்தனை நூல்களையும் படித்து முடித்து விட்டார். அப்படி பலதரப்பட்ட நூல்களையும் படித்தபொழுதுதான் அவர் இந்த உண்மையைக் கண்டறிந்தார்.

மால்கம் X ஸுடன் கூடவே செல்லும் அலெக்ஸ் ஹேலி இந்தச் செய்தியைக் கேட்டார். மீண்டும் மீண்டும் கேட்டார். ஆச்சரியப்பட்டுப் போனார். தானும் ஒரு கறுப்பர்தானே... தன்னுடைய மூதாதையர்களும் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தப்பட்டு வந்தவர்கள்தானே... அவர்களெல்லாம் முஸ்லிம்களா... அப்படியென்றால் நான் முஸ்லிம்களின் வழி வந்தவனா... என்று சிந்திக்க ஆரம்பித்தார். இந்தக் கூற்று உண்மையானதுதானா என்று ஆராயவேண்டும் என்று அவரது துப்பறியும் பத்திரிகையாளர் மூளை தூண்டிற்று.

அப்பொழுதுதான் அவருக்கு அவர்களின் மூதாதையர்கள் பற்றி அவருடைய குடும்பத்தார் நாட்டுப்புறப் பாடல் போல் பாடுவது நினைவுக்கு வந்தது. அதிலேயே அவரின் மூதாதையர்களின் பெயர்களெல்லாம் வந்து விடும். தன் மூதாதையர்கள் பற்றி மேலும் பல விவரங்களை அறிந்திட அவர் தன் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை அடிக்கடி சந்தித்து பழைய வரலாறுகளையெல்லாம் கிளற ஆரம்பித்தார். நூலகத்தில் சென்று அன்றைய ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறுகளைத் தேடித் தேடிப் படித்தார். அன்றைய ஆப்ரிக்க - அமெரிக்க வாழ்விடங்கள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கம் என்று அத்தனையையும் ஆராய ஆரம்பித்தார். இப்படியே 12 வருடங்கள் அவர் கடும் ஆராய்ச்சி செய்தார்.

இறுதியில் அந்த உண்மையைக் கண்டுபிடித்தார்!

ஆம்! அவரது முந்​தைய ஏழாவது தலைமுறை ஆப்பிரிக்காவில் காம்பியா என்ற நாட்டில் ஒரு மூலையிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில், ஒரு முஸ்லிம் குடும்பத்தில் சென்று முடிந்தது. ஆயிற்று... மால்கம் X சொன்னது உண்மை என்பது நிரூபணமாயிற்று.

ஆப்ரிக்காவிலிருந்து அந்த முஸ்லிம் அமெரிக்காவுக்குக் கடத்திக் கொண்டு வரப்பட்டு, அங்கே அடிமையாக விற்கப்படுகிறார். அவரது வழித்தோன்றல் அடிமைத் தலைமுறையாக, கிறிஸ்தவத் தலைமுறையாக மாற்றப்படுகிறது.

தன் நீண்ட நாள் ஆராய்ச்சியை ஒரு நாவலாக வடிக்க முடிவு செய்தார் அலெக்ஸ் ஹேலி. அதுதான் ''ரூட்ஸ்'' என்ற நாவல். 1976ல் வெளிவந்த அதி அற்புதமான வரலாற்று நாவல் அது! பின்னர் அது அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் திரைப்படமாகவும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திற்று.

நாவல் ஆப்ரிக்காவிலிருந்து ஆரம்பமாகும். கி.பி. 1750லிருந்து தொடங்கும் அந்த வரலாறு 1922ல் அமெரிக்காவில் முடிவடையும்.

இந்த வரலாற்றுப் புதினத்தைப் படித்துவிட்டு பல கறுப்பர்கள் தங்கள் மூல மார்க்கம் இஸ்லாம் என்று அறிந்து இஸ்லாமைத் தழுவினர். படிக்கத் தெரியாத கறுப்பர்கள் கூட தங்கள் முன்னோர்களின் வரலாறைத் தாங்கிய இந்த நூலை வாங்கி பைபிள் போல பட்டுத் துணியில் போர்த்திப் பாதுகாத்தனர்.

இதனைத் தமிழில் நான் மொழிபெயர்த்துள்ளேன். இது ''வேர்கள்'' என்ற பெயரில் (இலக்கியச்சோலை வெளியீடு) நூலாக வெளிவந்து இப்பொழுது விற்பனைக்குக் கிடைக்கிறது. தமிழில் வெளிவந்தது ஆங்கில மூலத்தின் சுருக்கமே.

இது இந்தக் கட்டுரையின் பீடிகைதான். இப்பொழுதுதான் விஷயத்திற்கு வருகிறேன்.

இதேபோல் காயல்பட்டணத்தின் வேர்களையும் கண்டுபிடிக்க எனக்கு ஆசை. “ரூட்ஸ்” போல் ஒரு வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்று என்னுள் ஓர் எண்ணம் எழுந்துகொண்டே இருக்கிறது.

இது சாத்தியமாகுமா?

ஹிஜ்ரி 12ல், அதாவது கி.பி. 633ல் ஹஸ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் காலத்தில் மக்கா-மதீனாவிலிருந்து சிலர் காயல் நகரம் வந்து குடியேறியுள்ளனர். அப்படியானால் நமதூரில் வாழும் சில குடும்பங்கள் அவர்களின் வாரிசுகளாக கண்டிப்பாக இருப்பார்கள். இவர்களில் யாராவது ஒருவர் தன் பாட்டன், முப்பாட்டன் வழி தெரிந்தவர்கள் இருந்தால் நாம் அவர்களின் வேர்களைக் கண்டுபிடிக்க சாத்தியம் உண்டு. அது ஒருவேளை அண்ணலாரின் அருமைத் தோழர்களில் ஒருவரிடம் போய்ச் சேரலாம்.

அதேபோல் ஹிஜ்ரி 277ல், அதாவது கி.பி. 842ல் எகிப்திலிருந்து ஒரு குழுவினர் முஹம்மத் கல்ஜி என்பார் தலைமையில் காயல் வந்துள்ளதாக வரலாற்றில் படிக்கிறோம். இவர்களின் வாரிசுகள் நமதூரில் அதிகமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இவர்களின் வேர்களைத் தொடுவது முந்தைய மக்கா-மதீனா வேர்களைத் தேடுவதை விட எளிதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

கி.பி. 1284ல் மூன்றாவது குடியேற்றம் நடந்துள்ளதாக நமதூர் வரலாறு கூறுகிறது. அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் 21வது நேரடி வாரிசான ஸுல்தான் ஜமாலுத்தீன் அவர்களின் தலைமையில் இந்தக் குடியேற்றம் நடந்துள்ளது. இவர்களின் வாரிசுகளும் நமதூரில் அதிகம் இருப்பார்கள். இவர்கள் தங்கள் வேர்களைத் தேடுவது இன்னும் எளிதாக இருக்கும். ஏனெனில் கி.பி. 1284 என்பது நமக்கு மற்ற குடியேற்றங்களை ஒப்பிடும்போது குறைவான ஆண்டுகளே.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தினமணி ஒரு பெருநாள் மலரை வெளியிட்டது. அதில் நமதூர் வரலாற்றைப் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. மதீனாவில் புனித மஸ்ஜிதுந் நபவியில் பணியாற்றி வந்த பணியாட்களிடம் கொடுங்கோன்மை ஆட்சி புரிந்து வந்த அன்றைய கலீஃபா வரி விதித்ததாகவும், அதனைச் செலுத்தவியலாமல் தவித்த அந்தப் பணியாட்கள் மதீனாவை விட்டு அகல முடிவு செய்ததாகவும், அவர்கள் 4,5 கப்பல்களில் ஏறி இந்தியாவுக்கு வந்ததாகவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

அந்தக் கப்பல்கள் காயல் பட்டணம், கீழக்கரை, அதிராம்பட்டினம், சென்னை பழவேற்காடு, கேரளாவில் தலச்சேரி, கர்நாடகாவில் பட்கல் ஆகிய கடற்கரைப் பட்டினங்களை அடைந்ததாக அக் கட்டுரை கூறுகின்றது. அதற்கு ஆதாரமாக இந்தப் பட்டினங்களில் நிலவும் ஒரே மாதிரியான கலாச்சாரங்களை அந்தக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

முதலாவது மேற்கண்ட பட்டினங்களுக்கு வந்த அனைவரும் ஷாஃபிஈ மத்ஹபைச் சார்ந்தவர்களாக இருந்துள்ளனர். அதனால்தான் மேற்கண்ட பட்டினங்களில் இன்றும் பெரும்பாலோர் ஷாஃபிஈ மத்ஹபைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். கர்நாடகாவில் மொத்த மாநிலத்திலும் பெரும்பாலானோர் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களாக இருந்தபொழுதிலும் பட்கலில் உள்ளவர்கள் ஷாஃபிஈ மத்ஹபைச் சார்ந்தவர்களாக இருக்கும் ஆச்சரியத்தை நாம் காண்கிறோம்.

நமதூரில் திருமணத்திற்குப் பிறகு பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை போவது போல் கீழக்கரை, அதிராம்பட்டினத்திலும் செல்வது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் கேரளாவில் தலச்சேரியில் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் இன்றும் பெண் வீட்டிற்குத்தான் போகிறார்கள் என்பது நமது புருவங்களை உயர்த்துகின்றது. அதேபோல் தலச்சேரிக்கு மிக அருகிலுள்ள கோழிக்கோட்டில் குட்டிச்சிரா என்ற பகுதியைச் சார்ந்த மக்களும் திருமணத்திற்குப் பிறகு பெண் வீட்டிற்கே செல்கின்றனர். ஒருவேளை அவர்கள் தலச்சேரியைச் சேர்ந்தவர்களின் ஒரு பிரிவினராக இருக்கலாம்.

நமது வேர்களைத் தேடும்பொழுது இடையில் சில தலைமுறைகள் விடுபடலாம். இப்படித்தான் “ரூட்ஸ்” வரலாற்று நாவலை எழுதிய அலெக்ஸ் ஹேலிக்கும் சில தலைமுறைகளின் தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் சோர்ந்து இருந்து விடவில்லை. தகவல் இடைவெளி உள்ள அந்தக் காலகட்டத்தை அவர் ஆராய்கிறார். அந்தக் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பகுதியில் நிலவி வந்த கலாச்சாரம், பண்பாடு, தொழில், உணவுமுறை, உடையலங்காரம், பழக்கவழக்கம் என்று அத்தனையையும் ஆராய்கிறார். அதற்காக பல நூலகங்களுக்கு ஏறி இறங்குகிறார்.

இறுதியில் கிடைத்த தகவல்களை வைத்து இப்படித்தான் நடந்திருக்கும் என்று கவனமாக யூகித்து கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்து அந்த இடைவெளிகளை நிரப்புகிறார். இப்படித்தான் ஒரு சரித்திர நாவலை எழுத முடியும். அதனால்தான் நாம் அதனை சரித்திரம் என்றழைக்காமல் சரித்திர நாவல் என்றழைக்கிறோம்.

இப்படித்தான் நாமும் செய்ய வேண்டியிருக்கும். தகவல் இடைவெளிகளை இப்படித்தான் நாம் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.

ஆகவே காயல்வாசிகளே, உங்களில் முன் தலமுறைகளை அறிந்தவர்கள் யாரும் இருந்தால் நீங்களே உங்கள் வேர்களைத் தேடிச் செல்லலாம். முடிந்தால் ஒரு சரித்திர நாவல் வடிக்கலாம். (அனைத்துத் தலைமுறைகளும் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.)

அல்லது என்னிடம் தெரிவித்தால் நான் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று விழைகிறேன்.

இப்படி நமது வேர்களைத் தேடுவதில் பல நன்மைகள் நமக்குண்டு. நாம் ஏன் திருமணத்திற்குப் பின் பெண் வீட்டிற்குச் செல்கிறோம், ஏன் நமது பேச்சு வழக்கில் அதிகம் சுத்தத் தமிழ் கலந்திருக்கிறது, எப்படி நமது பேச்சு வழக்கில் அரபுப் பதங்கள் அதிகம் சேர்ந்தது, நமது உணவுமுறைகள், உடையலங்காரம்,... என்று நமது இன்றைய நடைமுறைகள் பலவற்றிற்கு நல்ல பல விடைகள் கிடைக்கும்.

“தன் வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது” என்று சொன்னார் மால்கம் X.

நமது வேர்களைத் தேடிச் சென்று நாமும் வரலாறு படைக்கலாமா?

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: jamal (kayalpatnam) on 10 February 2012
IP: 49.*.*.* India | Comment Reference Number: 20504

நீங்கள் உங்களின் ஆதாரங்களுக்கு வேறு எங்கும் செல்ல வேண்டாம். நமதூர் இணையதளமான 'காயல்பட்டணம் டாட் இன்' பார்த்தால் போதுமானது. அதில் உங்களுக்குத் தேவையான ஆதாரங்கள் அனைத்தும் காணக் கிடக்கின்றன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: Zubair Rahman-AB. (Doha-Qatar) on 10 February 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20505

சிறந்த ஒரு கட்டுரை. சகோதரர் அப்துல் ஹமீத் அவர்களின் கூற்றுப்படி நாமும் நமக்கு தெரிந்தவரை ஆராய்ந்து அவருக்கு உதவி செய்தால், நிச்சயம் நாமும் நம்முடைய வழித்தோன்றல்களை அறியலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: Shameemul Islam SKS (Chennai) on 10 February 2012
IP: 101.*.*.* India | Comment Reference Number: 20506

வரலாற்றைப் படைக்க வரலாற்றைப் படிக்க வேண்டும் என்பது உண்மைதான். எழுத்தாளரின் விழைவும் அது தான். ஆனால் ஒரு வேளை என் தலைமுறையைத் தேடிப்பார்த்து அதில் ஒருவேளை என் தலைமுறை தான் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் இணைகின்றதென்றால் எனக்கு சந்தோஷத்தை விட கவலைத்தான் அதிகரிக்கும். அதிகரிக்க வேண்டும். ஏனெனில் குலப்பெருமை பேசுபவர்கள் இன்றும் நம்மூரில் அதிகம் இருக்கவே செய்கிறார்கள்.

ஒருவர் குடுபத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஒருவருக்கு கண்ணியம் எனில் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் உள்ள அன்னாரை வளர்த்தெடுத்த, எதிரிகளிடம் இருந்து அன்னாருக்கு யாதொரு இன்னலும் நேராமல் பாதுகாத்தவர்களுக்கு கூட ஹிதாயத் கிடைக்கவில்லை, என்பதை விட ஹிதாயத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை.

அதே வேளை அபூபக்கர் (ரலி) அவர்கள் வமிசத்திலிருந்து அல்லது மக்காவிலிருந்து நேரடியாக வந்தவர்களுக்கான பொறுப்பு யாதெனில் அவர்கள் ஈமான் அளவிற்கு தமது ஈமானை உயர்த்த முனைவதும் இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் ஒருவர் கூட நரகில் போய் விழாமல் தடுக்க அவர்களிடம் ஓயாது உறங்காது இறை அழைப்புப்பணியைச் செய்வதும், மேலும் நன்மையை பிறருக்கு ஏவித் தம்மையே அதில் முன்மாதிரியாக்கிக் காட்டுவதும் தான். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் அல்லாஹ்விடத்தில் அதிக கண்ணியத்திற்கு உரியவர் உங்களில் இறையச்சத்தில் சிறந்தவரே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: I.M.Abdur Rahim (MADURAI) on 10 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20507

அன்பு நண்பர் அப்துல் ஹமீது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் கட்டுரை அதி அற்புதம். உங்களை போல் நானும் நமது காயல் பட்டணம் வரலாற்றை தேடி தேடி சில அறிய தகவலை இணைய தளத்தின் வழியாக பெற்றுள்ளேன். மேலும் பல தகவல்கள் பெற எண்ணியுள்ளேன். இன்ஷா அல்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: sulaiman- (manama) on 10 February 2012
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 20508

masha allah !! உங்களின் முயற்சி வெற்ற்டி அடயுய வாழ்த்துக்கள், நாங்களும் ஆர்வமாக உள்ளோம், காயலின் வேர் பற்றி அறிவதற்காக

அல்லாஹ் தவ்பீக் புரிவானாக,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: M.S. அப்துல் ஹமீது (Dubai) on 10 February 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20509

சகோதரர் அப்துர் ரஹீம் அவர்களே, உங்களுக்குக் கிடைத்த இணையதளத் தகவல்களை எனக்கு தயை கூர்ந்து அனுப்பித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: M. S. Shah Jahan (Colombo) on 10 February 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20510

சரித்திரம் அறிய முயலும் முயற்சி சர்திரம் படைக்கும். வாழ்த்துக்கள்.

M. S. Shah Jahan
President,
Kawalanka. Colombo.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வரலாற்று படிப்பினைகள் மிக முக்கியம்
posted by: M.M. Seyed Ibrahim (Chennai) on 11 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20512

நல்ல முயற்சி. வரலாறை தெரிந்து கொள்வது அதிலிருந்து படிப்பினைகள் பெறவே.

வரலாற்று படிப்பினைகள் மிக முக்கியம். அதிலும் குறிப்பாக தற்போதைய பிரச்சனைகளுக்கு / சூழல்களுக்கு வரலாறில் இருந்து பாடங்களை எடுக்கும் புத்தி கூர்மை வேண்டும்.

800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆட்சி செய்து என்ன பாடங்களை விட்டு சென்றார்கள்? "தாவா (அழைப்பு பணி) செய்ய வில்லை என்றால் உனது சந்ததிகள் கஷ்டப்படுவார்கள். நீ கட்டிய பள்ளி இடிக்கப்படும். இன்னும் பல ". இது நமக்கும் பொருந்தும்.

COMPARE THE 800 YEARS OF MOGHULS WITH THE LAST 23 YEARS OF PROPHET MUHAMMAD + 2 YEARS & 2 MONTHS OF ABU BAKR'S KHILAAFAH + 10 YEARS OF UMAR IBN KHATTAAB'S KHILAAFAH. THE AREAS CONQUERED BY THEM ARE STILL MUSLIM AREAS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வாருங்கள் நாமும் சென்று ஒன்றிணைந்து வரலாறு படைக்கலாமா...!
posted by: SHAMS Kayal PFI (Kayalpattinam) on 11 February 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20513

“தன் வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது” என்று சொன்னார் மால்கம் X. என்பது மிக சரியானதே ...!

நமது வேர்களைத் தேடிச்செல்ல நாம் நமதூரில் உள்ள பெரியவர்களில் அதிகமான புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களோடு தேவைப்படும் தகவல்கள் பெறலாம் மேலும் நமதூரில் உள்ள பழமை வாய்ந்த இடங்களுக்கு சென்று அங்கு ஏதேனும் வரலாற்று ஆதாரங்களை சேகரிக்கலாம்...

வாருங்கள் நாமும் சென்று ஒன்றிணைந்து வரலாறு படைக்கலாமா? இதற்காக ஒரு இணையம் அல்லது ஈமெயில் முகவரி இருந்தால் நன்று...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: I.M.Abdur Rahim (MADURAI) on 11 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20514

அன்பு சஹோதரர் அப்துல் ஹமீது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். உங்களின் இணைய தள முகவரியை அனுப்பவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: M.S. அப்துல் ஹமீது (Dubai) on 11 February 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20515

சகோதரர் அப்துர் ரஹீம் அவர்களுக்கு,

msahameed@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் தரவுகளை அனுப்பித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சில்சிலா என்றால் என்ன? 500 வருட பழமை வாய்ந்தது என்றால் அதனை யாராவது வாங்கி பாதுகாக்க வேண்டியது அவசியம். ஊரிலுள்ள பெரியவர்கள் இதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: omar abdullatheef --- maraikar palli streeet (riyadh) on 12 February 2012
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20516

i think , it is merely a wasatge of time . What we are going to get the core benifits from the research ?.Any how ,we know that we could have come from Arabia . Will it be useful for our feature ?

Now we are in right path that we need to try to retent it instead of self portraiting ourselves that we are from arabia .

You can use your literary talent in way of developing our existiing kayal society .

thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 12 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20517

காயல்பட்டினத்தின் வரலாறு சரியாக எழுதப்படவில்லை. எழுதியதெல்லாம் அறையும் குறையுமாகத்தான் பதிவு செய்ய பட்டிருக்கின்றன. இத்தாலிய பயணி மார்கோ போலோ நமதூரை பற்றி குறிப்பிடுகிறார். பிஷப் கால்டுவெல்லின் "திருநெல்வேலி சரித்திர"திலும் நமதூர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பண்டித நேருவின் "உலக சரித்திர"மும் நமதூர் குறித்த வரலாற்று குறிப்புகளை தருகிறது.

இன்னும் :கட்ட பொம்மன் கும்மி" போன்ற கதை பாடல்களிலும் காயல் குறித்த வரலாற்று தரவுகள் இருப்பதாக தெரிகிறது. இன்னும் அரசு ஆவண காப்பகங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் "திருநெல்வேலி கெசட்டியர்" (manuel of thinnaveli distric gasattiyar) போன்ற ஆவணங்கள் பார்வையிட்டால் நிறைய வரலாற்று தரவுகளை அறியலாம். ஆங்கில மொழி அறிந்த வரலாற்று பட்டதாரி ஆய்வு மாணவர் யாராவது இதை முன்னெடுத்து செய்யலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: சாளை பஷீர் (?????????????,?????????????) on 13 February 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20520

அன்பு நண்பன் அப்துல் ஹமீதின் புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். அவரின் எழுத்தோட்டத்தில் எனக்கு மயக்கம் உண்டு.நவீனம் வெளி வரும் நாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றேன்.

அவர் எழுத உத்தேசித்திருக்கும் வரலாற்று புதினம் தொடர்பாக எனது எண்ணவோட்டங்கள் சிலவற்றை முன் வைக்கலாம் என்றுள்ளேன்.

எப்படி வரலாற்றை , பூர்வீகத்தை மறந்த சமுதாயம் புதிய வரலாற்றைப்படைக்க முடியாதோ அதே போல் பூர்விகம் மீது எல்லை கடந்த பெருமை பாராட்டும் போக்கிலும் சில சிக்கல்கள் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெருமை மிக்க நமது பூர்வீகத்தின் மீதும் உன்னதமான முன்னோர்கள் மீதுமான நமது நினைவுகள் போற்றத்தக்கவைதான்.

அந்த பழம்பெருமை நினைவுகள் நம்மை புதிய சாதனைகளைப்படைப்பதிலும், உன்னத சமுதாயத்தை உருவாக்குவதிலும் உதவும் வரை எவ்வித சிக்கலுமில்லை.

ஆனால் எந்த செயலூக்கமுமில்லாமல் நமது பாரம்பரியம் மீதான பெருமையை மட்டும் நாம் கொண்டாடுவது என்பது உயர் சாதி கர்வத்தை மட்டுமே உண்டாக்கும்.இன்று நமதூரின் சிக்கலும் இதுதான்.

நமதூரின் தலையாய நீரோட்டத்தில் சில தெருக்கள் ஒதுக்கப்படுவதும் இதன் அடிப்படையில்தான்.

எனவே நண்பர் அப்துல்ஹமீத் இந்த சிக்கலை மனதில் கொண்டு வரலாற்று நவீனத்தைப்படைப்பது நல்லது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. வேர்கள் Vs கிளைகள் !...
posted by: Noohu T (?.?) on 13 February 2012
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 20521

என் இனிய நண்பன் அப்துல் ஹமீது.....

நல்ல ஒரு முற்போக்கான சிந்தனைக்கு வாழ்த்துக்கள், அனால் நண்பன் shameem இஸ்லாம் சொல்லுவதுபோல் குலப்பெருமை பேசுபவர்கள் இன்றும் நம்மூரில் அதிகம் இருக்கவே செய்கிறார்கள்.

they are not living within their means, but with the past glory.

இவர்கள் தாங்கள் எதோ ஒரு வகையில் உயர்ந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டு பல குடும்பங்களில் திருமண சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை(Racism)

இப்போது மால்கம் X , matter-இக்கு வருவோம்.. இவர் இஸ்லாம் மேல் பற்று வருவதக்கு காரணம் இஸ்லாத்தில் உள்ள சகோதரத்துவம், அனைவரும் சமம், universal respect and mainly white supremacists.(against racism)

மால்கம் X தன் வேர்களை கண்டுபிடிக்க உயர்ந்த நோக்கம் இருந்திருக்கலாம். அனால் நம்மில் பலர் முஸ்லிமாக இருந்துக்கொன்று தன் கிளைகளில்(குலம்) தொங்கிக்கொன்று இருக்க விரும்புகிறார்கள்.

ஆதலால் நண்பனே, இந்த ஆராய்ச்சியின் முடிவில் அணைத்து கிளைகளும் ஒரே வேரில் முடிந்தால் அனைவருக்கும் சந்தோசம். அப்படி முடியவில்லையனில் கொஞ்சம் மாற்றம் செய்து ஒரே வேரில் முடிக்கலாம். சரித்திர நாவலில் இது சகஜம்தான்.

"முயற்சி திருவினையாக்கும்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: kavimagan (chennai) on 14 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20522

சிந்தனைக்கு விருந்தாக நல்லபல செய்திகளுடன் நம்மை சந்திக்க வந்த காயல்பட்டணத்தின் வேர்கள்,நம்மை சிந்திக்கவும் வைத்திருக்கிறது.கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்,தான் பிறந்த கிராமத்தைக் குறித்து பதிவு செய்யும்போது,

எனது கிளைகள் எங்கெங்கோ பரவிவிட்டன எனது பூக்கள் எல்லா இடத்திலும் மலர்கின்றன ஆனாலும்,

எனது வேர்கள் மாத்திரம் இதோ இந்த மண்ணில் எனக்கான நீரை தேடிக்கொண்டே இருக்கிறது!

என்று சிலாகித்தார். வந்த பாதையை அறியாதவனால்,இனி செல்ல வேண்டிய பாதையை தீர்மானிக்க முடியாது.வேர்களைத் தேடுவது அவசியமான ஒன்று! குலப்பெருமை அடிப்பதற்காக அல்ல! இந்த மண்ணையும்,அதன் மாட்சியையும் நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் பாதுகாத்து,காயப்படாமல் நம்மிடம் ஒப்படைத்தார்களோ அதை அறிந்துகொண்டு, நாமும் அதே பொறுப்புணர்வுடன்,அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதற்காக!

நல்லதோர் ஆக்கத்தைப் படைத்திருக்கும்,சகோதரர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. எல்லோரும் ஆதமின் மக்களே!
posted by: seyed mohamed (ksa) on 14 February 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20523

அன்பு சகோதரர் அப்துல் ஹமீதின் புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். ஒரு நண்பர் இந்த முயற்சி தேவையற்றது போல் எழுதி உள்ளார். வரலாறு என்பது முக்கியமானது. குரானும் பல வரலாறை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. உங்கள் பணி தொடரட்டும். நம் முன்னோர்களை போல் செய்யுங்கள் மார்க்க அழைப்பு பணி. எல்லோரும் ஆதமின் மக்களே. எல்லோரும் வெற்றி அடைவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: Habeeb Rahman (Abu Dhabi) on 14 February 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20524

எனது சகோதரன் அப்துல் ஹமீத் (சாகுல் ஹமீத் பல வருடங்களுக்கு முன்னர் ஷாஹ் அப்துல் ஹமீத் ஆனதும் சில வருடங்களுக்கு முன்னர் அப்துல் ஹமீத் என்ற அழகான பெயரில் நின்று விட்டதும் அவனது வேறை அறிந்த என்னை போன்றவர்களுக்கு மட்டுமே தெரியும்).

பல வருடங்கள் முன்னர் ரூட்ஸ் தமிழில் வெளிவந்தபோது அதை அவனுடன் சேர்ந்து வெறித்தனமாக படித்து முடித்தவர்களில் நானும் ஒருவன்.அவ்வளவு அருமையான நாவல். இருந்தாலும் அதனை எழுதியது மாற்று மத நண்பராக இருந்ததால் இஸ்லாத்தை போற்றும் மூல நாவலின் பல விசயங்களை வசதிக்கு ஏற்ப விட்டதை உணர்ந்து அதன் மூல நாவலின் முழுகருத்துகளையும் உட்படுத்தி மீண்டும் வெளியிட்ட பெருமை அவனையே சாரும். இது போன்ற இன்னும் பல நாவல்களையும் எழுதியுள்ளான், அண்மையில் எழுதிய "இஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம்' என்ற கட்டுரை உட்பட!

அது துபாயில் குற்றாலத்தில் விற்கும் சுண்டல் போல் சுட சுட விற்று தீர்ந்தது அங்கு இருந்த அனைவரும் அறிந்தது! ஷார்ஜா புத்தக கண்காட்சியில் இடம் பெற்ற ஒரே ஒரு தமிழ் புத்தகம் என்பது அதற்கு இன்னும் பெருமை சேர்க்கும்.

காயல் பட்டினத்தின் வேர்கள் நம் அனைவருக்கும் அரசால் புரசலாக தெரிந்திருந்தாலும், அதனை இனியும் ஆழமாக ஆராய்வது நம் அனைவருக்கும் கடமை என்றுதான் சொல்வேன். இத்தாலி ஜெர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளில் நூறு இருநூறு வருடங்கள் பழமையான சுர்சுகளைகூட தலையில் தூக்கி கொண்டாடுவதை நேரில் கண்டிருகின்றேன். நாமோ கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் பழமையான பள்ளியை ஊரில் வைத்துகொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம்.

architect என்ற முறையில் இந்த பள்ளிகளின் பழைய வடிவத்தை மறுபடியும் வெளிக்கொண்டு வருவது நம் ஊருக்கு இனியும் பெருமை சேர்க்கும் என்று நம்புகின்றேன்.அதன் புனரமைப்புக்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நினைவு சின்னங்கள் நம்மிடையில் வாழ்வது, வருங்கால கம்ப்யூட்டர் சந்ததியினருக்கு நமக்கும் நம் மார்கத்தின் மூல வித்துகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்திக்கொண்டே இருக்கும். அவர்களை நாகரிகம் என்ற பெயரில் கூத்தடிப்பதை ஓரளவாவது தடுக்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: ஹசன் இக்பால் (???????? , ?????? ) on 16 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20525

சகோதரர் அப்துல்ஹமீதின் ‘காயல்பட்டினத்தின் வேர்களை’த் தேடும் முயற்சி பாராட்டுக்குரிய தொன்றாகும். ஆயினும் ஆய்வு மேற்கொள்ளும் போது, செவிவழிக் கதைகளைச் சார்ந்து முடிபுகளை எடுக்காமல், தகுந்த ஆவணங்கள், ஆதாரங்களுடனான செய்திகள் தகவல்கள் என்பனவற்றின் அடிப்படையில் விருப்பு வெறுப்பின்றி அது செய்யப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.

அத்தோடு, காயல்பட்டினத்தின் பூர்வீக குடிகள் மற்றும் வந்தேறு குடிகள் பற்றிய ஆதாரப்பூர்வமான விபரங்கள், அரபிகளின் குடியேற்றங்களினால் இஸ்லாம் பிறரைச் சென்றடைந்திருக்குமானால் அது நிகழ்ந்த விதம், அரபிகளின் மரபு வழியிலான மற்றும் குர்ஆன்-ஹதீஸ் வழியிலான திருமண நடைமுறைகள் காயல்பட்டினத்தில் ஓரிரு முஹல்லாக்களைத் தவிர ஏனையவற்றில் மாறுபட்டிருப்பதற்கான காரணங்கள், சீதனம் மற்றும் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை போவது போன்ற வழக்கங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், காயல்பட்டினத்தில் சில முஹல்லாக்களைச் சார்ந்தவர்கள் திருமணச் சம்பந்தங்களில் ஒதுக்கப்படுவதற்கும்- கீழ்ச்சாதியினர் எனக் கருதப்பட்டு எல்லா விசயங்களிலும் புறக்கணிக்கப்படுவதற்கும் ஒடுக்கப்படுவதற்கும்- அவர்களுடைய கருத்துகள் இடங்கொடுக்கப்படாமல் உதாசீனப்படுத்தப்படுவதற்கும்- அவர்கள் அடக்கியொடுக்கப்பட எல்லாரும் தங்களுக்கிடையிலுள்ள மார்க்கம் சம்பந்தமான முரண்பாடுகள் அனைத்தையும் மறந்து ஒன்றுசேர்ந்து முயற்சிப்பதற்குமான காரணங்கள் என்பனவற்றையும் இந்த ஆய்வில் உள்ளடக்கிக் கொள்வதன் மூலமே அது முழுமை பெறும் என்பதும் எனது நிலைப்பாடாகும்.

இதனைப் பதிவு செய்வதாயிருந்தால் எந்த அடித்தல் திருத்தலோ கூடுதல் குறைவோ செய்யாமல் உள்ளதை உள்ளவாறே முழுமையாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆய்வின் மூலம், குலப்பெருமை போன்ற ஜாஹிலிய்யத்தான உணர்வுகள் தூண்டப்படாமலும் ஊரின் ஒற்றுமை பாதிக்கப்படாமலும் வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஹஸன் இக்பால், கொழும்பு, இலங்கை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. A good Job
posted by: Ahamed Mustafa (Dubai) on 16 February 2012
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20526

Whilst appreciating the social & religious services done by Br. Abdul Hameed in Dubai & elsewhere, we really have to appreciate him for the efforts taken on this. It becomes important & interesting for us to know about our roots & that can lead to some interesting facts. Not to forget & can be seen by means of cultural, behavioural & colour contradictions even amongst the various sects of people, it can be concluded that there were inter-mingling between societies & the local originators in course of time.

This is good for any ethnic groups or sects for that matter. We have seen scores of Indians & specailly South Indians scroing to the banks of South Africa, to the Islands of Fiji, Malaysia as plantation workers centuries before. And how they adjusted to the region is what an intersting factor here.

The situation of Kayalpatnam is vice versa & it is too obviuos a fact & we can see living examples, resemblances of several of the community people to the behaviours, colour, etc of the Arabs. Certainly this can not be a fact for us to feel we are big or small, nevertheless this is something a case in point or an example.

The services rendered by our brother in this regard are not to be turned away as some individuals who wrote in the trail below. Abdul Hameed in fact has rendered his heart & soul for several important human services & this is only an additional feather to his cap. I have seen him from close angles.

Unfortunately, we in Kayal never uses Surnames or Family names which is a minus point in accessing our roots. Everyone of us have 2 names, but again it is useless to the extent that it bears no resemblance to our family. I can recall when I was way back in Jeddah, my former Boss, who was a Brit, was collecting all the names that originated from his Second name ''Murta" & he had prepared a big list of all ''Murtas'' in his list. Had this been a case with us we can linger to our ancestors, so easily..

Regards,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. தேவை குழு முயற்சி
posted by: Mohamed Buhary (Chennai) on 17 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20527

மதிப்பிற்குரிய சகோதரர் அப்துல் ஹமீத் அவர்கள் படைத்துள்ள இவ்வாக்கம் பெரிய தாக்கத்தை நம்முள் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையன்று. அல்லாஹ் அவரது எண்ணங்களை உயிரோட்டமானதாகவும் உளத்தூய்மையானதாகவும் ஆக்கியருளி, அவர் எண்ணிய புண்ணியமான இக்காரியத்தை நிறைவேற்றித் தந்தருள்வானாக... எனப் பிரார்த்திக்கிறேன்.

பலரும் பலவிதமான கருத்துகளைப் பதிவு செய்துள்ள இவ்வேளையில் நான் என்ன கருத்தைப் பதிவு செய்வது என்ற நீண்ட யோசனைக்குப் பிறகே பதிவு செய்கிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே இணையதளத்தில் டிஸ்ஷன் போர்ட் பகுதியில் இதுபோன்றதொரு கருத்தை காயல் கலைக் களஞ்சியம் என்பது குறித்து பதிவு செய்திருந்தேன். சகோதரர், தைக்க உபைதுல்லாஹ் அது விஷயமாக என்னோடு தொடர்பு கொண்டார். ஆனால், அது தொடரவில்லை.

எனவே, ஒருவர் அவரது ஆக்கத்தை இங்கே பதிவு செய்தார். அவருடைய பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான அம்சம் இவ்வாறு அமைந்துள்ளது. அதாவது, நாம் யார்? நமது பூர்வீகம், வரலாறு, எங்கிருந்து தொடங்குகிறது? என்பன போன்ற வேர்களைக் கண்டறித்து அதை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் கரு.

இதை ஒரு குழு அமைத்து ஒருங்கிணைத்தால் மட்டுமே சாத்தியமாகும். அப்துல் ஹமீத் என்ற தனிமனிதர் ஒருவரால் மட்டுமே தகவல்களைத் திரட்டுவதென்பது அவரது பணிச்சுமைகளுக்கு மத்தியில் எவ்வாறு சாத்தியமாகும் என்பது என் கேள்வி? ஏற்கெனவே, காயல்பட்டினத்தின் வரலாறை ஆவனப்படுத்துவதற்காக பல பேர் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டால் குறுகிய காலத்தில் இது நிறைவேறும் இன்ஷா அல்லாஹ்...

காயல்பட்டினம்.காம் இணையதள அட்மின்கூட இதற்கான முயற்சிகள் பலவற்றை எடுத்தார். சென்னையில் பல வரலாற்றாய்வாளர்களை அவர் சந்தித்தார்.

மேலும், காயல்வாசிகள் பலரும் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். அவற்றின் தகவல்களையும் ஒருங்கிணைப்பது காலத்தின் தேவை. இதற்காக ஒரு குழுவை ஏற்படுத்துங்கள். குழு முயற்சியுடன் இதை சாதிக்கலாம்.

முஹம்மது புகாரீ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: Dr.Abdulcader (riyadh) on 17 February 2012
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20528

வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்க முடியாது என்ற தத்துவம் சரியான கூற்று.நான் அறிந்த வரை இல் கல்யாண நேரங்களில் பெண்கள் கொல விடுவது மற்றும் பெண் குழந்தைகள்ளுக்கு கத்ன செய்வது ,பெண்களுக்கு முடுக்கு கலாச்சரம் இவைகள் கூட இன்றும் எகிப்தில் நடைமுறை இல் இருப்பதை அறியும்போது வியப்பாய் இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: K S Muhamed shuaub (Kayalpatinam) on 17 February 2012
IP: 116.*.*.* India | Comment Reference Number: 20529

தம்பி சாளை.பஷீர் இன்னும் சென்னை முகமது புகாரி கொழும்பு ஹசன் இக்பால் எல்லோருடைய கருத்தும் ஆழமாக பரிசீலிக்க படவேண்டியதாகும். ஒரு ஊரினுடைய வரலாற்றை தொகுத்து எழுதுவதென்பது தனி நபரால் முடியக்கூடிய காரியம்தான் .எனினும் அவர் பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள் கல்வெட்டு சுவடிகள் படிக்க தெரிந்த அறிந்சர்கள் இலக்கிய தரவுகளை சரியாக பொருளுணர்ந்து உணரக்கூடியவர்கள் என எல்லோரது உதவிகளையும் பெற்றே இப்பணியில் ஈடுபட முடியும் .

ஏற்கனவே சீதக்காதி காயல் பட்டினத்தில் பிறக்கவில்லை. அவர் கீழகரையிதான் பிறந்தார் என அவ்வூர் வாசிகள் பேராசிரியர் பெரும் புலவர் நைனார் முகமதுவை வைத்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் அவர் "தென் வகுதை...."என்று வரும் வரிகளுக்கு கீழகரைதான் அது என மட்டை அடி அடித்து பொருள் கொள்கிறார்.

எனவே இது போன்ற வாதங்களுக்கு எல்லாம் நாம் பதில் சொல்லும் வகையில் ஆதாரப்பூர்வமான நமதூர் வரலாற்றை இலக்கிய கல்வெட்டு தொல்பொருள் தரவுகளோடு பதிவு செய்ய வேண்டும்.

இதில் பழம்பெருமை பேச எதுவும் இல்லை. நம் முன்னோர்கள் வந்த வழி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு இதை பதிவு செய்யலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: yahya mohiadeen (cholukkar street) (dubai) on 18 February 2012
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20530

ஒரு மனிதனுக்கு வரலாறு பற்றிய பின்னோக்கிய உணர்வும், எதிர்காலம் பற்றிய முன்னோக்கிய அறிவும் இருத்தல் அவசியம் என்று கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தகத்தில் படித்த ஞாபகம்.

நண்பர் அப்துல் ஹமீதுவின் இம்முயற்சி போற்றுதலுக்குறியது.

கீழ்காணும் பாரக்ராபில் ஒரு அச்சுப் பிழை உள்ளது.

மால்கம் X ஸுடன் கூடவே செல்லும் அலெக்ஸ் ஹேலி இந்தச் செய்தியைக் கேட்டார். மீண்டும் மீண்டும் கேட்டார். ஆச்சரியப்பட்டுப் போனார். தானும் ஒரு கறுப்பர்தானே... தன்னுடைய மூதாதையர்களும் அமெரிக்காவிலிருந்து கடத்தப்பட்டு வந்தவர்கள்தானே... அவர்களெல்லாம் முஸ்லிம்களா... அப்படியென்றால் நான் முஸ்லிம்களின் வழி வந்தவனா... என்று சிந்திக்க ஆரம்பித்தார். இந்தக் கூற்று உண்மையானதுதானா என்று ஆராயவேண்டும் என்று அவரது துப்பறியும் பத்திரிகையாளர் மூளை தூண்டிற்று.

"ஆப்ரிக்காவிலிருந்து" கடத்தப்பட்டு வந்தவர்கள்தானே..." என்று இருக்க வேண்டும்.

மேலும், நமது ஊரின் குடியேற்றம் பற்றிய வரலாறு, நமது ஊரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் உருவான வரலாறு போன்றவற்றை தமிழ் மாமணி அல்ஹாஜ் R S அப்துல் லதீப் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டால் இந்த ஆக்கத்திற்கு மேலும் பல தகவல்கள் கிடைக்கும்.

பன்னூலாசிரியர் மர்ஹூம் M R M அப்துர் ரஹீம் அவர்கள் எழுதிய இஸ்லாமிய கலைக்களஞ்சியம் - மூன்றாவது தொகுதியிலும் நமதூர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

Administrator: Corrected. Thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!...
posted by: H.M. SHAFIULLAH (Chennai) on 22 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20555

I am very happy to meet my beloved friend M.S. Abdul Hameed through Kayalpatnam.com.

I am surprising to see your essay to find about the roots of Kayalpatnam. Do you feel whether it is worthwhile? Basically some of the people in the Kayal have their in mind that they are descended from Kuraise dynasity in Arab. Your research will make them to stimulate further to commit sin i.e. in Quaran Allah says in many places to avoid “one who praise himself (think superior over others)”. This bad habit was more prevalent in Kayalpatnam for a long period. Because of this there is racism between Streets. I think that still it persists in some of the people in Kayal. What will be benefited by them out of this attitude? Allah says that “it is a great sin”.

Is there any advantage to descend from a holy dynasty or from bias family? Is it acceptable by Quaran and Hadeeth? If it so, why Allah says that Son of Prophet Noohu is not belonging to his family. Why spouses of Prophet Looth (sal) and Noohu (sal) will not be credited by Allah? What happened to Parents of Prophet Muhammed (sal)? Why father of Prophet Ibrahim (Kaleelullah) is not forgiven by Allah? All these incidences show that there wouldn’t be any credit or benefit one who descends from a holy family or born to any holy persons who are accepted by Allah. Only the good things will be calculated at the Day of Judgment.

“Roots” written by Alex Haley gave a different dimension which created a positive vibration since it deals with society. But your “roots” will go to deal with the individual person.

Nowadays the previous attitude of Kayal people is slowly disappearing from that mind. But your effort to find the roots will make them to go back to the past. History of Kayal with respect the culture, business, education, etc. will be useful to society for comparative study. To finding the person belonging to Abubaccer Siddeeq (Rali) or any Sahaba will not give any fruitful effect to the society. Instead the innocent people will oblige to them and treat them as holy person which lead to “Sirkku”.

Please seriously think whether your “Roots” will become a medicine to the society or to poison the society.

It is my personal opinion. Please think it seriously before enter into this. I left this to your judgment.

SHAFIULLAH
+919710008200
hmshafiullah@gmail.com
Chennai-600040

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved