Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:25:16 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 61
#KOTWEM61
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 23, 2012
வேண்டாமே இரண்டாம் ஜாஹிலிய்யா!!!

இந்த பக்கம் 3562 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஏலே, இங்க ஃபுல்லா கருப்புலே, அங்கப் பாருலே…. நீலக்கலர்ல….. என சென்ற நோன்புப் பெருநாளன்று மாலை காயல்பட்டணம் கடற்கரைக்கு பர்தா அணிந்து கூட்டம் கூட்டமாக நெரிசலோடும் தள்ளுமுள்ளுகளோடும் சென்ற பெண்கள் கூட்டத்தைப்பார்த்து பேசிச்சென்றது ஒரு கயமைமிக்க வாலிபர் கூட்டம். அதை முறைத்துப்பார்த்த ஒருவரை நோக்கி ‘ஏலே இவர் நம்மல பார்க்குறார்ல, அடிச்சிருவார் போல இருக்குதுல’ என ஏலனமாய்வேறு பேசிச்சென்றனர். கையில் குழந்தையுடன் சென்ற அவரால் வேரொன்றும் செய்யமுடியவில்லை.

மற்றொரு காட்சியில் ஒரு ஆணும் பர்தா அணிந்த ஒரு பெண்ணும் தனித்தனியே ஊர்வீதியில் நடந்து சென்றபின் கடற்கரையை நெருங்கியதும் கணவன் மனைவி போல ஒருவருக்கொருவர் ஒட்டிச்சென்ற போது சிலரால் பிடிக்கப்பட்டனர்.

இதுவல்ல நமது பெருநாள் ஒன்றுகூடல் என்பதை உணர்த்தவும் ஒரு உண்மை முஸ்லிம் பின்பற்றவேண்டிய கலாச்சாரம் பற்றியும் அறிவுருத்தவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

ஒரு காலம் உண்டு.

பெண்கள் வெறும் போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்ட காலம் அது.

திருமணம் என்றால் அது வீட்டோடு முடிந்துபோகும் ஒரு இல்லறச்செயலாக மட்டுமே பார்க்கப்பட்டது அக்காலத்தில். வெளியில் யாருடன் வேண்டுமானாலும் எந்தப்பெண்ணும் சுற்றித்திரிய முடியும். ஏன், கணவன் மனைவி போல வாழவும் வழியுண்டு. அப்படிச் செல்பவர்கள் மனம் மட்டும் ‘செய்யும் செயலுக்கு’ ஒருமித்து இருக்க வேண்டும், அவ்வளவுதான். அப்படியெனில் குழந்தை கருவுற்றால் அவமானமாயிற்றே.

ஹூம், அதற்கும் வழியுண்டு.

யாருக்காவது குழந்தை பிறக்கும். எல்லோரும் கேட்பார்கள் அதன் தந்தை யார் என. அப்போது தான் அவள் ஒரு காரியம் செய்வாள். தன்னுடன் கூடிய அனைவரையும் பட்டியலிட்டுக் அழைப்பாள். வரிசையாக அவ்வனைவரும் நிறுத்தப்படுவர். இவன் என ஒருவனைக் காட்டுவாள். அவன் அதற்கு தந்தை என அக்குலப் பஞ்சாயத்தார் அறிவித்து விடுவார்கள். அவனும் அதை ஏற்றுக்கொள்வான்.

வெட்கம் அது மறக்கடிக்கப்பட்டுப்போன ஒரு மளிகைச்சரக்கு போல இருந்தது அன்று.

அக்காலப் பெண்களுள் மிகுதமானவர்களுக்குச் சொத்தில் பங்கு இல்லை.

பாகப்பிரிவினையும் இல்லை. அடிமைத்தலைக்குள் அகப்பட்டவர் நிலை இன்னும் கொடுமையானது. அவள் பெற்ற பிள்ளை அவள் பெயரோடேயே என்றென்றைக்கும் அழைக்கப்படும்.

உடலைத் திறக்கவே ஆடைகள். ஆடைக்கென எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

ஆடல், பாடல் கூடல்களுக்கெல்லாம் எந்தத் தடையுமே இல்லை.

பாலுணர்ச்சிக்குத் தீனிபோடும் எந்திரமாக (SEX ENGINE) மட்டுமே பெண் பார்க்கப்படுவாள் அன்று. ஆணின் அமர்வுகளில் பெண் சகஜமாக பங்கேற்பாள். குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதானாலும் போர் வெறியைத் தூண்டுவதானாலும் ஒரு பெண்ணுக்கு அன்று நிறைய நேரம் தேவைப்படவில்லை.

மதுவை அவனுக்கு ஊற்றிக்கொடுத்து அவளுமே கூட குடிப்பாள்.

காரிருள் சூழ்ந்த நாட்கள் அவை.

அகவொளி கிடைக்காமல் மாண்டு போனவர் வெறும் ஆயிரமல்ல.

இலட்சோப லட்சம் அல்லது கோடானு கோடி.

அய்யாமுல் ஜாஹிலிய்யா………. ஒரு 400 ஆண்டு கால வரலாறு.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) ஆகியோருக்கு இடைப்பட்ட காலம் இம்மடமைக் காலம். அல்லாஹ்வின் வழிகாட்டல் அன்று இருந்தது. இஞ்சீல் என்னும் இறைவேதம் இருக்கவே செய்தது. ஆனால் அவ் இறைவேதம் பல்வேறு கூட்டல்களுக்கும் கழித்தல்களுக்கும் செருகல்களுக்கும் மாற்றங்களுக்கும் உள்ளாகியது.

இக்காலத்தைப் பற்றி குர்ஆன் கூறுவதைப் பாருங்கள் :

அதற்கு அவர்கள்: “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பிவிட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக்கொண்டு எங்களை பயமுருத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டுவாரும்” என்று கூறினார்கள். அதற்கவர்: “(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது; மேலும், நான் எதைக்கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ, அதையே நான் உங்களுக்கு (சேர்ப்பித்து,) எடுத்துரைக்கின்றேன்; எனினும், நான் உங்களை அறிவில்லாத சமூகத்தவராகவே (கவ்மன் தஜ்ஹலூன்) காண்கிறேன்” என்று கூறினார். குர்ஆன் 46:22-23

…………….உங்களில் எவரேனும் (ஜஹாலத்) அறியாமையினால் (யாதொரு) தீமையைச்செய்து விட்டு, பிறகு அதற்குப்பின், (பாவத்தைவிட்டும்) வருந்தி (அதிலிருந்து விலகி) சீர்திருத்திக்கொண்டாரோ, (அவருடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிடுவான்; ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். –குர்ஆன் 6:54

பிறகு, நிச்சயாமாக உம் இறைவன், எவர்கள் அறியாமையினால் (பிஜஹாலதின்) தீமைசெய்து, அதற்குப் பின்னர் (அவற்றிலிருந்து விலகி) பாவமன்னிப்புக்கோரி, தங்களை சீர்திருத்திக்கொள்கிறார்களோ அவர்களுக்(கு மன்னிப்பதற்)காகவே இருக்கின்றான். –குர்ஆன் 16:119

…………..மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்கு கவலையை உண்டுபண்ணி விட்டன. அவர்கள் அறியாமைக்கால எண்ணம் போன்று (ளன்னல் ஜாஹிலிய்யா), உண்மைக்கு மாறாக அல்லாஹ்வை சந்தேகம் கொள்ளலாயினர். அதனால் அவர்கள் கூறினார்கள்: “இக்காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?”………. குர்ஆன் 3:154

…………அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக (மினல்ஜாஹிலீன்) நீர் ஆகிவிடவேண்டாம். குர்ஆன் 6:35

நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முந்தைய அறியாமைக்காலத்தில் (ஜாஹிலிய்யதில் ஊலா) (பெண்கள் ஒப்பனையையும் ஒய்யாரத்தையும்) வெளிப்படுத்தி திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் வெளிப்படுத்தி திரியாதீர்கள்; தொழுகையை கடைபிடியுங்கள்; ஜகாத்தும் கொடுங்கள்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். –குர்ஆன் 33:33

அறியாமைக்காலத்து தீர்ப்பையா (ஹுக்முல் ஜாஹிலிய்யா) அவர்கள் தேடுகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்? குர்ஆன் 5:50

ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு சுதந்திரம் வழங்கியபோது இந்தியர்கள் தோலின் நிரமும் அவர்களின் உடலில் ஓடும் இரத்தமும் தவிர அவர்களது ஒவ்வொரு செயலும் சிந்தனையும் நடையுடை பாவனையும் நம்மைப் பின்பற்றுவதாகவே அமைந்திருக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்களாம். அதை அவர்கள் அரங்கேற்றுவதிலும் வெற்றி கண்டுவிட்டார்கள்.

அதுபோலவே இஸ்லாம், நமது உயிரினும் மேலான உத்தமத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு அவர்கள் குர்ஆன், சுன்னாஹ் என்ற இரண்டு விஷயங்களை (அம்ரைனி) நம்மிடம் விட்டுச் சென்றார்கள். வெறும் 23 ஆண்டுகாலத் தமது தூதுப்பணியில் சில நூற்றாண்டுகளாக இருள்சூழ்ந்துகிடந்த அரேபியாவை ஒளிமயமாக்கியதோடு மட்டுமன்றி அடுத்த ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே மாபெரும் சாம்ராஜ்யங்கள் இஸ்லாத்தின் கீழ் மண்டியிடும் நிலையையும் உருவாக்கினார்கள்.

அல்லாஹ்வும் அதைவிடுத்து இங்ஙனம் கூறுகிறான்:

மனிதர்களு(டைய நல்வாழ்வு)க்காக வெளியாக்கப்பட்ட சிறந்த சமுதாயத்தினராக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்,) நீங்கள் நன்மையைக்கொண்டு ஏவுகிறீர்கள்; தீமையை விட்டும் (மனிதர்களைத்) தடுக்கிறீர்கள்; அல்லாஹ்வைக்கொண்டு நம்பிக்கை கொள்கிறீர்கள்; (இவ்வாறே) வேதக்காரர்களும் நம்பிக்கை கொண்டால் அவர்களுக்கு அது நன்மையாகும்; அவர்களில் (உண்மை) நம்பிக்கையாளர்களும் இருக்கின்றனர்; (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் (இறைகட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். –குர்ஆன் 3:110

இவ்வளவுக்குப் பின்னரும் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்கள் என ஒரு புறமும் சடங்கு சம்பிரதாயம் அல்லது பூஜை புனஸ்காரம் என்ற அடிப்படையில் மட்டும் இம்மார்க்கத்தைப் பின்பற்றுவோர் மறுபுறமுமாக, ஏனைய ஏவல் விலக்கல்களையும் சட்டத்திட்டங்களையும் புறக்கணித்து வாழும் முஸ்லிம்களே முஸ்லிம் சமூகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

உதாரணமாக, சென்ற ரமளான் மாதத்தை எடுத்துக்கொள்வோம்.

30 நாட்கள் நோன்பிருந்து, இரவு நேர வணக்கங்களில் மூழ்கி, தானதர்மங்களும் புரிந்து இறையச்சத்தை நிறைவாக மனதில் ஏற்றிய பலபேர் பெருநாளன்று அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு ஆண், பெண் என சகஜமாக கடற்கரைக்குச் சென்ற காட்சி இது இரண்டாம் அய்யாமுல் ஜாஹிலிய்யாவா என எண்ணுமளவிற்கு நல்லவர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

“மஸ்ஜிதுகள் தோறும் பிலாலின் பாங்குகள்; ஆனால் பிலாலோ இன்று நம்மிடம் இல்லை” என்னும் கருத்தில் அல்லாமா இக்பால் பாடுவார். பின்வரும் செய்திகள் பிலால்கள் இல்லாத பாங்கொலியையே நினைவுபடுத்துகின்றன.

பெண்ணிற்கு வீடுதான் முதல் பர்தா. மிகவும் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே தன்னை மூடிக்கொண்டு வெளியில் செல்ல அவளுக்கு அனுமதியுண்டு. ஆனால் இக்காலத்தில் பர்தா என்னவோ அவர் கையில் கொடுக்கப்பட்ட உரிமம் (ஓட்டுனர் உரிமம்) போல பேருக்கு அதை அணிந்துகொண்டு (பர்தா என்னும் பெயரில் அதற்கு எதிர்மறையான ஆடைவடிவங்கள் மற்றும் வேலைப்பாடுகள் ஒரு பக்கம்) முகம்பூராவும் மேக்கப் போட்டு, அடுத்த தெருவில் செல்வோரையும் அதிரடியாய் ஈர்க்கும் வண்ணம் உடல் முழுதும் மனம்பூசி, போதாக்குரைக்கு மல்லிகைப்பூவும் சூடிக்கொண்டு, அமைதியாக தெருவோரம் செல்லவேண்டியவர் சாலையின் நடுவே கலகலவெனப் பேசிக்கொண்டு செல்வதை நம் கண்களால் பார்க்கும் போது ஒரு இரண்டாம் அய்யாமுல் ஜாஹிலிய்யாவை(OR RETURN OF AYYAMUL JAHILIYYAAH)யே நினைவுபடுத்துகின்றன.

வெட்கம் என்பது பேச்சுக்குகூட அங்கே பார்க்கமுடியவில்லை. (ஹூம், அது இருந்தால்தான் இப்படி சுற்றித்திரியவே மாட்டார்களே). இதன் நடுவே பலதரப்பட்ட குழந்தை விளையாட்டு சாதனங்கள் வேறு. சென்ற பெருநாளில் அசுர பலூன் (GIANT BALLOON) ஒன்று வந்திறங்கி கடற்கரையையே இரண்டாக்கியது. இது போல இன்னொரு அசுரம் ஏதாவது சேர்ந்து ஹஜ்ஜுப்பெருநாளில் வந்திறங்கினால் கடற்கரை தாங்காது. காயல் கலாச்சாரத்தையும் இனிமேல் கடலில்தான் கரைக்கவேண்டும்.

இளம்பயிர்களை வேலியிட்டுப் பாதுகாக்க வேண்டிய நிலையில் தாமே அவற்றைக் கால்நடைகள் மேய அனுமதிப்பதைப் போன்றுதான் இம்மாதிரியான கொண்டாட்ட தினங்களில் ஆண்கள் சந்திக்கும் பகுதிகளுக்குள் பெண்களும் குடும்ப சகிதமாகப் பிரவேசிப்பது அமைந்துள்ளது.

குழந்தைகளுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டி சிறந்த சமூகமாகத் திகழ்ந்தவர்(சாபிகூனல் அவ்வலூன்)கள் வரலாறுகளை எடுத்துக்கூறி பாழாய்ப்போன தொலைக்காட்சிப் பெட்டியை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி அதனால் கிடைக்கும் மிகுதியான நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டு அவர்களின் உள்ளத்தோடும் உணர்வோடும் இறைஉவப்பைப் பெற்றிடும் நோக்கில் நெறுங்கி உரவாடும்போது மட்டும்தான் முடைநாற்றம் வீசும் மேலும் பல புதுப்புது தீமைகள் ஊற்றெடுத்து உருவாகாமல் வருங்கால சமுதாயத்தை அழிவிலிருந்து தடுக்கமுடியும்.

பின்வரும் இறைவசனங்களை நினைவில்கொள்வோம் :

“நீங்கள் வேதத்திலுள்ள சில கட்டளைகளை விசுவாசித்து சில கட்டளைகளை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கின்றார்களோ அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத்தவிர, வேரொன்றும் கிடையாது. மறுமை நாளிலோ அவர்கள் கடுமையான வேதனையின்பால் விரட்டப்படுவார்கள். –குர்ஆன் 2:85

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கு விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும், அவர்களை சபிப்ப(பதற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். எவர்கள் பாவமன்னிப்புத்தேடி (தங்களை) சீர்திருத்திக்கொண்டு, அவற்றை (மனிதர்களுக்கு) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத்தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்); அவர்களை நான் மன்னித்துவிடுகிறேன்; நான் மன்னிப்பவனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். –குர்ஆன் 2:159-160

இவர்கள் தான் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக்கொண்டவர்களாவர். ஆ! (நரக) நெருப்பை (இவ்விதம்) அவர்கள் சுகித்துச் சகிக்கும்படி செய்தது எதுவோ? –குர்ஆன் 2:174”

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 23 October 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23022

மருமகன் ஷமீம் அவர்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இந்த இழி நிலைக்கு நாம் எல்லோரும் ஒரு வகையில் காரணம் என்பதை மனம் திறந்து ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நம் ஆலிம்கள் சிலர் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். சில ஆலிம்கள் நீர் ஊற்றி வளர்த்தார்கள் என்பதை மறுக்க முடியுமா?

பெண்கள் வீட்டிலேயே இருங்கள் என்று குர்ஆன் சொல்கிறது. பள்ளிவாசலுக்கு வரும் பெண்களை தடுக்காதீர்கள் என்று சொன்ன நபிகள் நாயகம் எனினும் பெண்கள் அவர்கள் வீட்டிலேயே தொழுவது சிறப்பு அதுவும் வீட்டில் ஒரு தனி பகுதி ஏற்படுத்தி தொழுவது, அதிலும் சிறப்பு அங்கு ஒரு திரை ஏற்படுத்தி அதற்கு பின்னால் நின்று தொழுவது என்று சொல்ல வில்லையா?

அப்படியிருக்க இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களுக்கு மாற்றி தருகிறோம் என்று புறப்பட்ட ஆலிம்கள் பெண்களை பெருநாள் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு அழைத்தார்கள். கடற்கரையில் ஒன்று கூடி தொழ அழைத்தார்கள். இப்போது ஜும்மாவுக்கே அழைத்து பள்ளிவாசலில் தொழுக வழி அமைத்து கொடுத்திருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கூறி அவர்களை தெருவுக்கு வந்து கோசம்போட வைத்தவர்கள் யார்? ஊர் ஊராக வேன் வேனாக வெளியூருக்கு ஏற்றி சென்று போர்களத்தில் நிற்பதுபோல் அவர்களை உரிமைக்காக போராட கற்றுக்கொடுத்தவர்கள் யார்?

கல்வி........ உலகக்கல்வி..... இதில் உயரப்பறந்து +2 உடன் நிற்காமல் நல்லதொரு பட்டம் கிடைக்கும்வரை அவர்கள் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களை கல்லூரிகளுக்கு வெளியூர்களுக்கு அனுப்புகிரோமே, படித்த பெண்ணைத்தான் மணம் முடிப்பேன் என்று அடம்பிடிக்கும் காளையர்களை களம் இறக்கி விட்டது யார்?

அலைபேசியும் மடிக்கணினியும் தேனாக தித்திக்க செய்து அவர்கள் கரங்களில் கொடுத்து அவர்களை உசுப்பி விட்டது யார்?

இறை நேச செல்வர்களை அவர்கள் மறைவிடங்களை தரிசிக்க, அதை ஒரு மார்க்க கடமைபோல் ஆக்கி அவர்களை ஊர் சுற்ற வைத்தது யார்?

ஆண்களும் பெண்களும் கலந்து நின்று கொண்டாடும் கந்தூரிகளையும் வாண வேடிக்கைகள், யானை குதிரைகளில் பெண்பிள்ளைகளை சோடித்து ஊர் வலம் வரவைத்து அழகு பார்ப்பது யார்?

இன்னும் எவ்வளவு விஷயங்களுக்கும் நாமும் நமது உலமாக்களும் பாதை அமைத்து கொடுத்துவிட்டு, உலமாக்களே கருத்து வேற்றுமைகளால் மார்க்கத்தில் உள்ளதை ஆதாரம் இல்லை என்று ஒதுக்குவதும், மார்க்கத்தில் இல்லாததை நம் முன்னோர்கள் பெயரால் இவை குர்ஆன் ஹதீஸில் இல்லாவிட்டாலும் நம் முன்னோர்கள் அதை தெரியாமலா செய்திருப்பார்கள் என்று அதற்கு பச்சை கொடி காட்டி அதற்கு நே ஊற்றி வளர்த்தவர்கள் நம் உலமாக்கள்தானே....

கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது போல் இப்போது அழுது புலம்புகிறோமே....... என்ன பயன். அல்லாஹ் எல்லோருக்கும் ஹிதாயத் கொடுக்கவேண்டும்.

ஒரு விரலை நான் காட்டி குற்றம் சொல்லும்போது மீதி மூன்று விரல்கள் என்னை காட்டி குற்றம் சொல்கிறதே..... பாவ மன்னிப்புக்காக கரம் ஏந்த வேண்டியவர்கள் தறி கேட்டு போகும் பெண்கள் மட்டுமல்ல, அந்த நிலை ஏற்பட காரணமாக இருக்கும் நாமும்தான்.

கிறுபை உள்ள அல்லாஹ் நம் பெண் இனத்தை கற்பு நெறி பேணும் நல்ல பெண்களாக மாற்றி விடுவானாக. நீங்கள் சொல்லும் இரண்டாவது ஜாஹிளிய்யாவிளிருந்து பாதுகாப்பானாக. ஆமீன்.

உங்கள் கட்டுரை எல்லோர் கண்களையும் திறக்கட்டும். எனது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வடிகால் அமைத்து தந்த உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. புண்பட்ட உள்ளங்கள் பண்பட்ட உள்ளங்களாக மாற அவன் அருள் புரிவானாக. ஈத் முபாரக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: imthath (chennai) on 24 October 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23031

அஸ்ஸலாமு அழைக்கும்..இந்த மாதிரி நம்ம ஊரு ஆறதுக்கு காரம் நம் பெண்கள் இல்லை,ஆண்கள் தான் மூல காரணம் .தப்பு நடக்கும்னு தெரிஞ்சும் ஏன் அவங்க வீடு பெண்கள பீச் வர அனுமதிக்கணும் ,இந்த மாதிரி பிரெச்சனை பெருநாள் நேரங்கள மட்டும் இல்லை எல்லா sunday evening உம் நடக்குது.

பல முறை நம் பெண்கள் ஆண் துணை ஏதும் இல்லாமல் கடற்கரையுள் இரவு 10 : 30 மணி வரை இருப்பதை கண்டு வருத்தப்பட்டது உண்டு ..இன் நிலை மமற வேண்டும் என்றால் ஆண்கள் நாம் சரியாக அவர்களை வழிநடத வேண்டும் .இன்ஷா அல்லாஹ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:
posted by: moinudeen (chennai) on 24 October 2012
IP: 14.*.*.* India | Comment Reference Number: 23035

அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் ஷமீம் அவர்களுக்கு...இந்த கட்டுரையை பார்க்கும்போது என் உள்ளத்தில் உள்ள ஆதங்கத்தை ஒரு முகக்கன்னாடியில் பார்ப்பது போன்று ஒரு உணர்வு...!! என்னை பொறுத்த வரையில் இந்த கயவர்களின் கேலித்தனம் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே உள்ளன என்று தோன்றுகிறது... அதுவும் நம் கடற்கரையை ஒரு பூங்காவாக அமைத்து அதனை பிற ஊர் மக்களுக்கும் பரப்பி ஒரு சுற்றுலாவாக ஆக்கியமையே இதற்கு மூல காரணமாக இருக்கிறது என்று கூட சொல்லலாம் ..

இதற்கு பிற காரணிகளும் உண்டு என்றாலும்...[என் கருத்தை பொறுத்த வரையில்..] !! இது நம் உணர்வுடனும் , ஆதங்கத்துடனும் , எழுத்துகளுடனும் நின்று விடாமல், இதனை தடுக்க என்ன வழிகள் என்பதை உற்று நோக்கி அதனை செயல் வடிவமாக அமைக்க ஒரு சிறந்த வழி என்ன என்பதை சமூக ஆர்வலர்களாகிய, முஸ்லிம்களாகிய நாம் கலந்தாலோசனை செய்து அவற்றை அமல் படுத்துவது நம் கடமை...உணர்வுகளும் ஆதங்ககளும் ஈமானின் பலகீன மான நிலை என்பதை நாம் மறுக்க முடியாது... அல்லாஹ் நமக்கு உதவி செய்ய போதுமானவன்!!!

-moinudeen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 24 October 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23037

தம்பி ஷமீமுல் இஸ்லாம் அவர்களின் கட்டுரையையும் அதற்க்கு மரியாதைக்குரிய மக்கி நூஹுத்தம்பி காக்கா அவர்களின் எதிர்வினையையும் படித்தேன்

பெண்கள் வெளி உலகையே எட்டிப்பார்க்க கூடாது எனபது நூஹுத்தம்பி காக்கா அவர்களின் வாதம் எனில் நான் அதை மறுக்க கடமைப்பட்டிருக்கிறேன்

இன்றைய நவீன உலகில் அது சாத்தியமில்லை. ஆனால் எதற்கு பெண்கள் வெளியே வர வேண்டும்...எதற்கு வரக்கூடாது என்பதில் சில நியாயமான வரைமுறைகள் உள்ளன எல்லாமும் ஓன்று...என ஒரு நல்லதையும்...ஒரு கெட்டதையும் போட்டு குழப்பி கொள்வது நியாயமல்ல.

பெண்களை போராட்டம் போன்ற அரசியல் சார்ந்த காரியங்களுக்கு அடிக்கடி வெளியே அழைத்துப்போவதில் எனக்கும் கருத்துவேறுபாடு உண்டு.எங்கள் அமைப்புக்கு பெண்கள் பலம் உண்டு என்பதை வெளிக்காட்டிக்கொள்ள சில அமைப்புகள் இது போன்ற காரியங்களை அடிக்கடி செய்கின்றன. சின்ன ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் பெண்களை கொடியேந்தி இவர்கள் அழைத்து செல்கின்றனர். இது தவறு.

அதே சமயம் பெண்களை தொழுவதற்கு பள்ளிவாசல்களில் அனுமதிப்பது மார்க்கம் சார்ந்த செயல்தான். தொழபோகும் பெண்களை யாரும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க மாட்டார்கள். இறைநினைவை மனதில் ஏந்தி வரும் பெண்களை தவறான பார்வை பார்க்க எவருக்கும் மனம் வராது.

ஒரு சின்ன உதாரணம் சொன்னால் அதை எவரும் இங்கு தவறாக எண்ணமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் இதை சொல்கிறேன்.

பொது இடங்களில் தனது குழந்தைக்கு பாலூட்டும் பெண்களை பார்த்தால் நமக்கு எனன எண்ணம் ஏற்படுமோ, அது போன்ற எண்ணங்கள்தான் தொழபோகும் பெண்களை பார்த்தாலும் ஏற்படும். இறை நினைவும் கடற்கரைக்கு சென்று வீணே பொழுது போக்கும் நிகழ்வும் ஒன்றுதானா ...என்பதை மரியாதைக்குரிய நூகுத்தம்பி காக்கா அவர்கள் எண்ணிப்பார்க்கட்டும்.

இங்கு அவசியமே இல்லாமல் வெளியே வந்து பொழுது போக்கும் பெண்களையே தம்பி ஷமீமுல் இஸ்லாம் குறிப்பிடுகிறார். நபிகளார் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுததற்கு நிறைய ஹதீஸ் ஆதாரங்கள் உள்ளன,.

எனவே, தொழுகையும் மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் ஒன்றல்ல என்பதை வலியுறுத்தி நிறைவு செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: Samu.A.B (Dubai) on 25 October 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23050

சகோதரர் ஷமீம் எழுதிருப்பது காயலில் உள்ள நிறைய பேரின் ஆதங்கம் என்பது உண்மை. ஹிஜாப் இல்லாமல், மகாரிம் துணை இல்லாமல் பித்னா நடக்கிறது என்று தெரியும் இடத்திற்கு போவது தவறு.

பெண் நான்கு சுவருக்குள்ளே பிறந்து நான்கு சுவருக்குள்ளே மடிய அடிமை ஒன்னும் இல்லை. அவளும் ஆணுக்கு இருக்கும் அத்தனை உணர்ருகளையும் கொண்ட மனுஷ பிறவி தான். ஒரு பெண் கெட்டு போகணும்னு நெனய்தால் அதற்கு காலேஜ் போகவோ லேப்டாப் வாங்கவோ வேண்டாம்.

வீடு வேலைக்காரன், தோட்டக்காரன் அமோகம். ஏன் நம்ம ஊரில் காலேஜ், லேப்டாப் வர முன்னால எந்த தவறுமே நடக்கலையா? பெண்களே அடக்கி அடக்கி வீடுல்லையா வச்சி இருபது தான் பல தவறுகளுக்கு காரணம். அவங்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகளை கொடுங்கள்.

இஸ்லாம் பெண்களே படிக்க கூடாதுன்னு சொல்லலே. அவகளுக்கு secular education உடன் இஸ்லாத்தையும், ஹிஜாபையும் சேர்த்து கொடுங்கள். நல்லது எது, கெட்டது எது, இன்றைய fast phase உலகில் இஸ்லாம் உடன் competative அக வாழ்வது எப்படினு சொல்லிகொடுங்கள். முக்கியமா அவங்களே நம்புங்கள்.

பெண் என்றலே தப்பு செய்தான் வெளில போற என்பது ஒரு கேவலமான் சிந்தனை. கொஞ்ச நாளைய்கு முன்னால் ஒரு முஸ்லிம் வெப் ல ஒரு அட்வைஸ், வெளிநாட்டுகள வொர்க் பண்றவங்க மனைவிக்கு மொபைல் போன் கொடுகதீங்கனு.

ஒரு மொபைல் போன் தரகூட கணவன் மனையவி கிட்ட நம்பிக்கை இல்லனா அந்த கல்யாணமே தவறு. இஸ்லாம் எனும் பேரில் முஸ்லிம்கள் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடும் physical and psychological வன்முறைகள் தான் எல்லா முஸ்லிம்களையும் முட்டாள்களாக பயங்கரவத்ய்யாக சிதறிக செய்து. சகோதரர் ஷமீம் உடைய ஆதங்கம் நியாமானது.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: Mauroof (Dubai) on 25 October 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23059

சிந்தனைக்கு எடுத்து நம் சமுதாயத்தின் இன்றைய நிலையை சீர்தூர்த்தி பார்க்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்ற ஓர் நல்ல கட்டுரை. ஆசிரியருக்கு நன்றிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...good
posted by: mohideen (kayalpatnam) on 26 October 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23092

அஸ்ஸலாமு அழைக்கும், திருடான பார்த்து திருந்தா விடால் திருட்டை வொளிக்க முடியாது .காரணம் நம்ம மக்களை சைத்தான் தூண்டுதல் குறித்து இன்னும் வெளிப்புணர்வு வரல்லை . தினம் தினம் அவரவர்கள் செயும் அமல்கள் பத்தி லிஸ்ட் தயார் செய்து எல்லோர்க்கும் கெடைக்க செய்து தினமும் அது நடைமுறை படுத்த அவரவர்கள் முயற்சிக்க வேண்டும்.

நிங்கள் இனிமேல் கட்றை எழுதும் பொது இதற்கான தீருவும் தயவு செய்து சொன்னால் வுங்கள் எண்ணம் முழுமை அடயும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved