Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:14:18 PM
வெள்ளி | 17 மே 2024 | துல்ஹஜ் 1751, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4112:2003:4106:3507:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:48
மறைவு18:29மறைவு01:38
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:1005:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5219:1819:44
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 5
#KOTWEM5
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 21, 2012
நடப்பதினால் ஏற்படும் நன்மைகள்!

இந்த பக்கம் 5063 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

Ø நோயின்றி வாழவும், ஆரோக்கியமாக இருக்கவும், காலை, மாலை தூய்மையான கடற்கரைப் பகுதி, பூங்கா மைதானத்திலும், மரம் நிறைந்த சோலையிலும் நடக்க வேண்டும்.
Ø நடப்பதை ஓர் கடமையாக கொண்டால் நலமாக வாழலாம்

Ø மாலை வெயிலில் ‘வைட்டமின் D சத்து’ உள்ளதால் மாலையில் நடப்பது நல்லது.

Ø வாகன புகை விடும் சாலை வழியாக எப்போதும் நடக்காதீர் (புகை உடலுக்குபகை)

Ø நடப்பதினால் இருதயம் (இதயம்) புத்துணர்ச்சி அடைகிறது. இதயத்தின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும், அதிக இரத்த அழுத்தம் நடப்பதினால் குறைகிறது.

Ø நுரையீரலுக்கும் நல்லது, புற்றுநோய் ஏற்படும் இறப்பு பாதிப்பு அதிக அளவில் குறைகிறது. சா;க்கரை வியாதி உள்ளவா;கள் நடந்தால் இரத்தத்தின் சாக்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் பருமன், தொந்தி குறையும்.

Ø நடப்பதினால் மூட்டுவலி நீங்கும், இடுப்பு வலி போக்கும், சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும், மலச்சிக்கல் நீங்கிடும், இதயம் சீக்கிரத்தில் பழுதடையாமல் பாதுகாக்கும். நல்ல நடப்பது அஜீரண கோளாறு நீங்கிவிடும். இரவில் நன்றாய் தூக்கம் வரும். இரத்த குழாய் அடைப்பு நடப்பதினால் நீங்கும். தினமும் நடந்து சுகத்தை அள்ளுங்கள்.

எவ்வளவு தூரம் நடக்க வேண்டும், எப்படி நடப்பது?

Ø ஆபீஸல் வேலை பார்க்கின்றவர்கள் அல்லது தொழிலதிபர்கள் நடக்க போக நேரம் ஒதுக்குவதில்லை. அவா;கள் விட்டில் நடைபயிற்சி இயந்திரம் சைக்கிள் போன்ற ஓர் வாகனத்தை வீட்டில் வாங்கி வைத்து அதன் மூலம் நடைபயிற்சி செய்ய முடியும்.

Ø நடப்பதற்கான அளவு விதிமுறைகள் உள்ளன. அதை ஆலோபதி ஆங்கில டாக்டர், சித்தா டாக்டர்களும் தெளிவுபடுத்தி நூல்கள் எழுதி உள்ளனர். அவற்றை வாங்கி அவசியம் நாம் படிக்க வேண்டும். மக்கள் நலன் கருதி அவற்றை படித்து தேவையான குறிப்புகளை மட்டும் எழுதி உள்ளேன்.

Ø ஒருமைல் தூரம் நடக்க 2000 அடி நடக்க வேண்டும். துலையை குனிந்து தரையை பார்த்தவாறு நடக்கக் கூடாது. நிமிர்ந்த நிலை தோள் பட்டை சற்று மேலே தூக்கியவாறு ஆண்கள் கம்பீரமாக வேகத்துடன் நடக்க வேண்டும்.

Ø நடக்கும் போது நமது நடையின் அளவு அதாவது வலது காலுக்கும், இடது காலுக்குமிடையே உள்ள அளவு 2 ½ அடிமுதல் 3 அடி வரை என்ற அளவில் நடப்பதே நடையின் முக்கிய நோக்கமாகும். (ஆரம்பத்தில் குறைந்தது 2 அடியாவது நடை அமைய வேண்டும்.) நடக்கும் போது இருகைகளும் நன்றாய் அசைய வேண்டும்.

Ø ஆரம்பத்தில் மெதுவாகவும், ஒரு வாரத்தில் நடையின் வேகத்தை கூட்டுங்கள்.

Ø கவலையோடு நடக்கக் கூடாது. எல்லோரும் சேர்ந்து நடக்கலாம். ஆனால் பேசிக்கொண்டு நடப்பதை தவிர்க்கவும். வுயதான ஆண், பெண் துணைக்கு ஒருவரை அழைத்து நடக்கச் சொல்ல வேண்டும் ( பகவல் 12 மணி முதல் 3 மணி வரை நடப்பதை தவிர்க்கவும்)

Ø முதலில் ஒரு நிமிடத்தில் 70 அடி நடக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 2 மைல் கடந்து செல்ல வேண்டும். ஒரு நிமிடத்தில் 105 அடி நடை நடப்பதால் ஒரு மணி நேரத்தில் 3 மைல் தூரம் கடந்து விடலாம் (ஒரு மணி நேரத்தில் 2 மைல் கடந்து செல்ல பழகிக் கொள்ள வேண்டும்)

Ø கொஞ்சம் வயதானவர்கள் அதிகாலையில் இரண்டு பிஸ்கட் காஃபி, டீ, அருந்திவிட்டு நடக்கலாம். நடப்பதற்கு இடையில் தண்ணீர் அருந்தக் கூடாது. நடந்து வந்ததும் ஓர் இடத்தில் கை, கால்களை நீட்டி நன்றாக மல்லாந்து படுத்து கொள்ளவும்.

Ø 30 வயது உள்ளவர்கள் 13 நிமிடத்தில் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும்.

Ø 40 வயது முதல் 50 வயது வரை 15 நிமிடத்தில் ஒரு மைல் கடந்து செல்ல வேண்டும்.

Ø நோயாளிகள் டாக்டரிடம் கேட்டு நடப்பது நல்லது. கடற்கரை மணலில் வெறுங்காலுடன் நடக்கலாம்.

Ø நடப்பதை கணக்கிட ஸ்பீடோ மீட்டர் உள்ளது. அதை வாங்கி இடுப்பில்படும்படி நடக்கலாம். இதனால் கலோரி அளவு புரிந்து கொள்ள முடியும்.

Ø ஓடுவதைவிட, சைக்கிள் ஓட்டுவதைவிட, நீச்சலடிப்பதைவிட, ஜிம்முக்கு போவதை விட ரொம்ப ஈஸி காலை மாலை நடப்பதேயாகும்.

Ø வளைந்து நடப்பது, 8 முறையில் நடப்பது குறிப்பிட்ட சில நூலில் விளக்கம் பெறலாம்.

Ø இளைர்கள் சுமார் 6 கி.மீட்டர் தூரமும் சற்று வயதானவர்கள் 4 கி.மீட்டர் தூரம் நடந்து வருவது நல்லது.

நடப்பதால் ஏற்படும் நன்மை என்ன?

Ø இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்பு கரைந்து விடுகிறது. இதயம் புத்துணர்ச்சி பெறும்.

Ø மெதுவாக நடந்தால் ஒரு மணிக்கு 240 முதல் 300 வரை கலோரின் எhpக்கப்படுகிறது.

Ø சற்று வேகமாக நடந்தால் ஒரு மணிக்கு 300 முதல் 360 வரை கலோரிகள் எரிக்கப்படுகிறது.

Ø வேகமாக நடந்தால் ஒரு மணிக்கு 360 முதல் 400 வரை கலோரி எரிக்கப்படுகிறது.

Ø இரத்த ஓட்டம் சீராக, இதயம் நன்றாக வேலை செய்ய தினமும் நடக்க வேண்டும்.

Ø தினமும் நடக்காதவர்களுக்குத்தான் பல்வேறு நோய் ஏற்படுகிறது.

Ø குறைந்தது தினமும் 45 நிமிடங்கள் நடந்து பழகிக்கொள்ள வெண்டுமாம்.

Ø குளிர்காலத்தில் காது, கழுத்து, பகுதியை மறைத்து மஃப்ளர் அணிந்து அதிகாலையில் தவறாமல் நடப்பதும் நல்லது. வெளியூர் சென்றாலும், நடக்கும் பழக்கத்தை ஒரு போதும் விட்டுவிடக் கூடாது.

Ø நபிகள் நாயகத்தின் நோய் நிவாரணி என்ற நூலில் நபிகளார் அவர்கள் தினமும் தன் வீட்டிலிருநது பேரீச்சம்பழ தோட்டம் வரை நடந்து சென்றதாக கூறுகிறது.

Ø மற்றொரு நூலில் ஷாஃபி இமாம் அவர்கள் கூறுகிறார்கள். சாப்பிட்ட பின் 80 எட்டுகள் நடந்து கொள்ளவும் இதயம் கல்லாகாது என்றார்கள்.

ஸ்பீடோ மீட்டர் என்றால் என்ன?

ஸ்பீடோ மீட்டர் என்பது ஒரு மினி கருவி இதை நடப்பவர்கள் தனது இடுப்பில்படும்படி அணிந்து நடந்தால் - நடக்கும் தூரத்தையும், கலோரின் அளவையும் தெளிவாகக் காட்டும். ஆமொpக்காவில் வேலைபார்த்துக்கொண்டு எய்ம்ஸ் ஆஃப் இந்தியா தொண்டு நிறுவனத்தில் பொதுபணி செய்யும் காயல்நகர அலியார் சாஹிபு ஸ்பீடோ மீட்டரை எனக்கு தந்து சென்றார்கள். நமதூரில் காலைமாலை நடக்கப் போவோர்களுக்கு நடைபயிற்சி கிளப் ஏற்படுத்தினால் எல்லோருக்கும் ஸ்பீடோமீட்டர் தருவதாக கூறுகிறார் அவர்.

குறிப்பு:

நடப்பது பற்றி நூலிலிருந்து மக்கள் நலன் கருதி தொகுத்தேன். டாக்டா; எஸ். அமுதக்குமார் M.B.B.S., M.C.I.B., எழுதிய நலம் தரும் நடை பழக்கம் (நமதூர் அரசு நூலக வாரிசை எண்:20470) மற்றும் அன்னை கதிஜா அறிவு நூலகம் (இது ஏ.எல்.எஸ்.இன் சொந்த நூலகம்) நடை நோய்க்கு தடை (8-ம் நடை பயிற்சி என்றால் என்ன?) சித்தா டாக்டர் இரா. பூபதி எழுதிய நடைபயிற்சி அதன் பயன்களும் இவைகளில் இன்னும் மேலதிகாமான தகவல் உள்ளது. இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் நலம் தரும் வெங்காயம் - பூண்டு, சீரகம்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நடப்பதினால் ஏற்படும் நன்ம...
posted by: Mohamed Rilwanullah K M K St KPM (Bangalore) on 22 January 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20475

A very good article by Mr.Ibn Abbas, highly informative. Every one should follow this. May Allah make us healthier and happier in this life and Hereafter.

Rilwanullah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நடப்பதினால் ஏற்படும் நன்ம...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) on 22 January 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20476

நடப்பதால் ஏற்படும் நன்மையையும், நடையின் அவசியத்தையும் அழகாக விளக்கியுள்ளார் கட்டுரையாளர்.

நம் நகரில் பாதிக்கபட்ட்பின் மருத்துவரின் அறிவுரையை ஏற்று நடக்க முடியாமல் ஆண்களும் பெண்களும் பலபேர் சுப்ஹு தொழுகைக்கு பின் பலர் கடற்கரை நோக்கியும், சிலர் காட்டு மொகுதூம் பள்ளி நோக்கியும் நடப்பதை காணலாம். கட்டுரையாளரின் அறிவுரை படி ஆரோக்கிய மாக இருக்கும் போதே நடந்து பழகினால் மருத்துவரை நாடுவதை தவிர்த்து சுகமாய் வாழலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நடப்பதினால் ஏற்படும் நன்ம...
posted by: ALS maama (Kayalpatnam) on 22 January 2012
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20478

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்தக்கட்டுரையை இது வரை 123 பேர் படித்து இரண்டு பேர் தங்களின் கருத்துகளையும் வாழ்த்துக்களையும் தந்து என்னை உற்ச்சாகப்படுத்தி இருக்கிறார்கள் அவர்களுக்கு எனது நன்றி அல்ஹம்துலில்லாஹ்.

மாலை வெயிலில் வைட்டமின் D என்று வாசிக்கவும். நான் இந்த கட்டுரையின் ஆசிரியறல்ல தொகுப்பு ஆசிரியரே, பல்வேறு ஆசிரியர்கள் எழுதிய நூலில் இருந்து தொகுத்தவையே.

தொகுப்பாசிரியர் - ALS இப்னு அப்பாஸ்,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நடப்பதினால் ஏற்படும் நன்ம...
posted by: KAMILA KIZHAR (chennai) on 30 January 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20480

ALS மாமாவின் கட்டுரை சூப்பர் .... வாழ்த்துக்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved