Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:47:31 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 47
#KOTWEM47
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 18, 2012
ரய்யான் கதவின் சாவி... வரம் கொண்ட ரமலான் - 2012!

இந்த பக்கம் 3147 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இது கவிதையில்லை.........
உணர்வு...........தேடல்............
தவிப்பு............வேண்டுதல்...................
வாசிக்கும் போதே மனது வழி கசியும்
கண்ணீரே துஆக்களாய் மாறும்............
எனக்கு அதுவே போதும்.............. முஸ்தாக் அஹ்மத்

----------------------------------------

இதோ இன்னுமொரு ரமலான்.......
இதோ இன்னுமொரு ரஹ்மத்.............

பிறை கண்டு கொண்ட பேரானந்தம்.............
அல்லாஹ்வின் அட்சய பாத்திரம்
இஸ்லாத்தின் நான்காம் தூண்
இஸ்லாமியர்களின் ஆரோக்கிய தேன்.......

சொர்கத்தின் முகவரி....

ரய்யான் கதவை கடக்கும் ரகசியம்
ஏற்றுக்கொள்ளப்பட்ட நோன்பாளிகளுக்கு
அல்லாஹ் அளித்த அருட்கொடை..........

ஆயிரம் ஆயிரம் முறை கேட்டாலும் இன்னும் அதிசயமாகவே தோன்றும் லைலத்துல் கத்ர் இரவும் அதன் ஆயிரம் மாத நன்மைகளும்...

இருளகற்றும் இறைமறை
திறக்கப்பட்ட சொர்க்கம்.........
மூடப்பட்ட நரகம்...........
முடக்கப்பட்ட சைத்தான்

கஸ்தூரி மணம்..
வணக்கமாகும் உறக்கம்..........
ஹஜ்ஜாகும் உம்ரா...........

நன்மைகள்....
பெருகும் ஒன்றுக்கான பத்துக்கள்..........

கேட்டதும் கேட்டுக்கொண்டே இருப்பதுமான
ரமலான் குறித்த ஹதீஸ்களின் தொகுப்புகள்
சொல்லிவிடும் -இன்னும் மிச்சமிருக்கும்
சொர்க்கத்திற்கும் நமக்குமான தூரத்தை.................

நீண்டு விரிந்து கிடக்கிறது
அமல்கள் குறித்த கேள்விகளும் - அதன்
பயன்களை அடையும் தூரங்களும்.............

நோன்பிற்கும் பட்டினிக்குமான இடைவெளி
வணக்கங்களால் மட்டுமே நிரப்படுகிறது.........

கொடுத்தல் என்பதின் புரிதலின் குறைகள்
எஜமானர்களின் வீட்டின் முன் நீளும்
ஏழைகளின் வரிசைகளில்
நிறைந்து கிடக்கிறது.

சகோதர சண்டைகளுடனே
லைலதுல் கத்ரின் தேடல்.....
புரிந்தும் புரிய மறுக்கும் தொடரும்
மனித முரண்களின் தொடர்..........

விடியல் சொல்லிவிடும் ஆயுளின்
நிச்சயத்தை...........

பாவ மன்னிப்பிற்காய்
படைத்தவன் கொடுத்த பாக்கியம்.........

இந்த நிமிடத்தின் நிஜத்திலும்
இருப்பின் நிச்சயத்திலும்
ரமலானை வரவேற்பதோடு............
மிச்ச மிருக்கும் துஆக்களை
மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் மனது............

காலராவிலும் கான்செரிலும்
காணமல் போனது - எங்கள்
மருத்துவத்தின் மகத்துவம்................

உன்னிடம் சரணடைவது ஒன்றே உத்தமம்..............
காப்பாற்று................ கதறும் குரல்களை காதிலேற்று............

குறைந்த வணக்கங்களோடு
அருகதையற்ற விண்ணப்பம் .....
இருப்பினும்
கருணையாளனே.................
குறைகொண்ட வணக்கங்களை
நிறையாக்க- ரமலான் எனும் ரஹ்மத்
இறக்கி ரசித்தவனே...............

நோயில்லா சந்ததிகள் கொடு.........
உயிர் கொண்டு போகும் நோய்கள் தவிர்........
தாங்கும் சக்தி கொடு.......... தடுக்கும் மருந்து கொடு........

மன்னிக்கப்பட்ட பாவங்கள்..
மீண்டும் படராத மனம் கொடு............

ஜக்காத் கொடுக்க ஏழைகள் தேடும் இஸ்லாமியர்கள்..........
இம்மையில் நோன்பு திறக்கும் போது குளிர்ச்சி மறுமையில் உன்னை சந்திக்கும்போது மலர்ச்சி இவையாவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட துஆவாய் இப்போதே வேண்டும்..........

அத்துடன்...... இம்மையில்
இனிவரும் பெருநாளையாவது - என்
பால்ய தோழனோடு கொண்டாடும் பாக்கியம் வேண்டும்.........

வரங்கள் கொண்டு வரும் ரமலானே வருக...............
உலக முஸ்லிம்களின் - ஈருலக வாழ்க்கை முழுதும் வசந்தங்கள் தருக.....................

[கட்டுரை திருத்தப்பட்டது @ 12:30 am / 14.8.2012]

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ரய்யான் கதவின் சாவி... வர...
posted by: P.S.ABDUL KADER (jeddah) on 19 July 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20837

ர‌ம‌லான் வ‌ருகிற‌து !
ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிறது !

ஈமானில் நாமெல்லாம்
எத்தனை மார்க்கென்று
தீர்மான‌ம் செய்ய
திருநோன்பு வ‌ருகிறது

அருளாளன் அல்லாஹ்வின்
அன்பள்ளி வ‌ருகிறது !
திரும‌றை வ‌ந்த‌
தேன்மாத‌ம் வ‌ருகிறது !

த‌க்வாவை கொஞ்சம்
த‌ட்டிடவே வ‌ருகிறது !
ஹக்கன‌வ‌ன் க‌னிவையும்
அறிவிக்க வ‌ருகிறது !

அருமை நாயகம் (ஸல்)
அறிவித்த‌ நல் அம‌லை
அருமையாய் நாம் ஏற்க
அழைப்பாக வ‌ருகிற‌து !

பத்திய மாத‌மென்று
பறைசாற்றி வ‌ருகிற‌து !
உத்த‌ம ஸஹாபாக்கள்
உவ‌ந்த‌ மாத‌ம் வ‌ருகிற‌து !

ப‌சியின் ருசியறிய
பாங்கோடு வ‌ருகிற‌து ! க‌ல்பில்
க‌சியும் ஈர‌த்தைக்
காட்டிட‌வும் வ‌ருகிற‌து !

கஸ்தூரி வாச‌ம்
க‌ம‌க‌ம‌க்க‌ வ‌ருகிற‌து !
கைக‌ளை ஈகையால்
அல‌ங்கரிக்க‌ வ‌ருகிற‌து !

ஏழை வீதிக‌ளும்
புன்ன‌கைக்க‌ வ‌ருகிற‌து
எல்லோர் ம‌ன‌ங்க‌ளுக்கும்
சுக‌ம் சேர்க்க‌ வ‌ருகிற‌து !

க‌லிமாவில் நாவெல்லாம்
க‌லந்திட‌ வ‌ருகிற‌து !
தொழுகை த‌வ‌றாதேயென‌
தூது சொல்லி வ‌ருகிற‌து !

லைல‌த்துல் க‌த்ரென்னும்
ர‌ம்மிய‌ இர‌வுத‌னை
தொழுகையால் அல‌ங்க‌ரிக்க‌
சோப‌ன‌மாய் வ‌ருகிற‌து !

அன்று ப‌த்ருப் போரில்
அண்ண‌லார்க்கு வெற்றியினை
த‌ந்து ப‌ரிச‌ளித்த‌
த‌னிமாத‌ம் வ‌ருகிற‌து !

நோன்பின் மாண்பு சொல்லும்
நூர்மாத‌ம் வ‌ருகிற‌து !
மாண்பில் நாம் ம‌கிழ‌ இபாத‌த்
ம‌ண‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !

ர‌மலான் வ‌ருகிற‌து
ந‌ல‌ம் கொண்டு வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வருகிறது !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ரய்யான் கதவின் சாவி... வர...
posted by: முஹம்மது ஆதம் சுல்தான் (RIyadh) on 19 July 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20839

ராமலாம் மாதம்,மனத்தளவில் நினைத்தாலே மகிமைபீறிடுகிறதே! மாடிமேல் மாடிக்கட்டி கோடியில் கொழிக்கும் கோமானும், குருவி கூடுபோல் குடிசையில் வாழும் ஏழையின் பசியை உணர இஸ்லாம் கோடிட்டு காட்டிய கொள்கையில் நோன்பிருந்து தன் உணர்வுகளுக்கு ஒர் வலயம் அமைத்து வல்லோனிடம் விழிநீர் வழிய வேண்டப்படும் வனப்பான மகிமைமிகு மாதமல்லோவோ இம் மாதம்.

இம்மாதத்தின் மகிமையை புகழ்ந்து எழுத முனைந்து வார்த்தைகளை இவ்வையகதிலிருந்தும்,வானத்திலிருந்தும் ஒன்று சேர்த்து குவித்தெழுதினாலும் எல்லை இல்லா எழுத்தாகதான் எஞ்சி நிற்குமேயல்லாது முடிவு பெறாது.

தம்பி முஸ்தாகின் மாணிக்கவரிகளில் மெய்மறந்து மூழ்கிவிட்டேன். இமகிமை மாதத்தில் மறை தந்த இறையோன் முஸ்தாகின் மனமுருகிய துவாவை கபூல் செய்து நம் அனைவர்களின் நாட்டங்களையும் நிவர்தியாக்கி தந்தருள்வானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. re
posted by: daud (chennai) on 21 July 2012
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20840

அஸ்ஸலாமு அலைக்கும்

முஸ்தாக் அவர்களின் முத்து முத்தான வார்த்தைகளும் கவிதையும் நெஞ்சை தொட்டுவிட்டன வரிக்கு வரி முத்தாய்ப்பான கருத்துக்கள் .....மக்களின் நெஞ்சத்தை தொடட்டும் மனதில் மாற்றம் ஏற்படுத்தட்டும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் நிலைக்கட்டும் .... தங்களின் பிராத்தனை இறைவனிடத்தில் ஒப்புக்கொள்ளப்படட்டும் ஆமீன் .......................................

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ரய்யான் கதவின் சாவி... வர...
posted by: Hameed Rifai (Yanbu (KSA)) on 22 July 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20841

நண்பர் முஸ்தாக் அஹ்மத்
இழைந்து குழைந்து
உருகி உருகி வடித்த
பொக்கிஷம் இந்த கவிதை
மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்
ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும்
அதன் பாதிப்பு
என் சுவாசம் வலி நுழைந்து
இதையத்தை தழுவி
விழிநீர் சுரக்க
எழுதிய கைகளை தேடுகிறது

நண்பரே நீங்கள் எழுதிய இந்த கவிதையில் சிலதை எடுத்து இங்கே பாராட்ட வினைந்தேன் இறுதியில் எதை பதிக்க எதை விடுக்க என்ற குழப்பத்தில் மொத்தத்தையும் பதியவே ஆசைபடுகிறேன்

கண்ணியம் மிக்க ரமளானின் கருணை பொங்கும் அமல்களை கவிதை வடிவில் தந்து சகோதரத்தை வலிறுத்தி வடித்த தங்கள் கவிதை இன்றைய பொழுதுகளில் அவசியமானதும் அவசரமானதும்

உங்களோட அதிகம் நாள்கள் பழகும் பாக்கியம் எனக்கு கிடைகவில்லை ஆனால் சந்தித்த பொழுதில் எல்லாம் கவிதை பேசியே ரியாத் நகர வீதிகளில் நாம் உலா வந்திருக்கிறோம்

பல நேரங்களில் உங்கள் கவிதையின் குரலாகவே நான் இருந்திருக்கிறேன் என்ற இருமாபோடு கூடிய பெருமை எனக்கு எபோழுதும் உண்டு

மீண்டும் இணையும் வாய்ப்பை இறைவன் நமக்கு சீக்கிரம் குடுப்பான் என இறைஞ்சுகிறேன்

சந்தோஷமா சில சந்தோஷங்களை கண்ட சந்தோஷமா ??????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ரய்யான் கதவின் சாவி... வர...
posted by: K M SHAFEER ALI (CHENNAI) on 22 July 2012
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20842

அஸ்ஸலாமு அழைக்கும்

என் சஹோதரரின் நண்பனே
என் ஆசானே
எல்லோருடைய மனக்குமுறலும்
உங்கள்
கவிதையாக ?
தேடலாக ?
உணர்வாக ?
விழி வழியே
உள்சென்று
அனைவரின்
விழி நனைய செய்திருக்கும்
ஆசானே
உன் மொத்த தொகுப்பிற்கும்
முத்தான இரு வரிகள்
அனைவரையும்
கரைய வைத்த உணர்வுபூர்வமான
இரு வரிகள்

நோன்பிற்கும் பட்டினிக்குமான இடைவெளி
வணக்கங்களால் மட்டுமே நிரப்படுகிறது.........

அல்லாஹ் உங்கள்
எண்ணங்கள் செயல்கள்
தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி
தருவானாக ஆமீன்
முன்னாள் இளந்தென்றல் ஆசிரியரே
இந்நாள் ஆசிரியர் யார் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: Ismail (Dammam) on 09 August 2012
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21141

மாஷா அல்லாஹ்.. தரமான தகவல்களை உணர்வு பூர்வமான முறையில் வாசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.. பழைய நண்பனுக்கு பாராட்டுக்கள். (பார்த்து 20 வருடங்களுக்கும் மேல் இருக்கும்.)

சிறு தகவல் திருத்தம்.. லைலதுல் கத்ரை பற்றி வரும் போது ஆயிரம் மாதங்கள் என்று வரி வந்தால் பொருத்தம்..

தொடர்ந்து தரமிக்க அரிய பல கவிதைகளை தர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நன்றி
posted by: musthak ahamed (goa.) on 13 August 2012
IP: 116.*.*.* India | Comment Reference Number: 21248

தவறை சுட்டிக்காட்டிய நண்பர் இஸ்மாயீல் நன்றிகள்.

அட்மின் அவர்களுக்கு,
கீழ் கண்டவாறு திருத்தம் செய்யவும்

ஆயிரம் ஆயிரம் முறை கேட்டாலும்
இன்னும் அதிசயமாகவே தோன்றும்
லைலத்துல் கத்ர் இரவும் அதன் ஆயிரம் ஆண்டு நன்மைகளும்...

இதற்க்கு பதிலாக

ஆயிரம் ஆயிரம் முறை கேட்டாலும்
இன்னும் அதிசயமாகவே தோன்றும்
லைலத்துல் கத்ர் இரவும் அதன் ஆயிரம் மாத நன்மைகளும்...

என்று திருத்தம் செய்யவும்.

முஸ்தாக் அஹ்மத்.

[கட்டுரை திருத்தப்பட்டது @ 12:30 am/14.8.2012]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved