Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:31:03 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 26
#KOTWEM26
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 5, 2012
"செல்"லமே !

இந்த பக்கம் 2666 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

க்ரஹெம்பெல்லால் முற்றுப்புள்ளியிடப்பட்ட
தொலைபேசி தொழில் நுட்பம்
காலம் கடந்து கம்பிகளற்ற அலைபேசியை
இயற்கையின் அழிவிற்கு
தொடக்க உரை எழுதத் தொடங்கிவிட்டது.

வராம சாபமா என்று அறியுமுன்னரே
நம் சட்டைப்பையோடு சங்கமமாகிவிட்டது.

இது
பலமான பாவம்
பாவமான பலம்.

இது வளர வளர சிதைந்த மாற்றங்கள் ஏராளம்
இயற்கையை சிதைத்த மாற்றங்கள் தாராளம்.

விண்ணை முட்டும் டவர் கேட்டது.
விண்ணில் சில இடம் கேட்டது.

கருணையற்ற கதீர்வீச்சில்
பரவையினகள் பல கருகின.

மரங்கள் மனிதனை கண்டு பயந்தது.
ஒரு மரத்தை விட்டு விடுங்கள்
உங்களின் ஒரு தெருவிற்கு
உதவியாய் இருப்போம்.
எங்களின் சில இனத்தை விட்டு விடுங்கள்........
உங்கள் இனத்திற்கே உதவியாய் இருப்போம்.

அக்சிஜென் கொடுத்து ஆயுள் நீட்டித்த காரணத்தை
காற்று மூலம் ஒவ்வொரு மனிதனின்
காதோரமும் கண்ணீரோடு சொல்லிச் சென்றது.

இரண்டு காதுகளிலும்
எலக்ட்ரானிக் எக்யுப்மென்ட் பொருத்தப்பட்டதால்
இன்று வரை இயற்கையின்
வேண்டுதல் விழவேயில்லை.

இறுதியில்
மனிதன் இயற்கைக்கு எதிரானான்........
இயற்கை மனிதனுக்கு எதிரானது.........

சாபம் வாங்கி வைத்துக்கொள்ள
வரங்களை செலவழித்தான்.........

பேசிக்கொண்டே இருக்கிறார்கள்..........
மனங்களை மூடிக்கொண்டே...........
மிஸ்டு காலால் சிரித்த நட்பு
மிஸ்டு வாழ்க்கையால் அழுதுக்கொண்டு இருக்கிறது............

விழாக்காலங்கள் - ஒற்றைக்
குறுஞ்செய்தியோடு தன சந்தோசங்களை
முடக்கிகொண்டது...

ஏமாந்து....... ஏமாற்றி..........
ஏமாற்றி..........ஏமாந்து......

கிட்டதட்ட கடித சந்தோசங்களே
காணாமல் போய்விட்டது.....
இனி அவை பேரன்மார்களுக்கான
பெருங்கதையின் சொல்லப்படாத - ஓர்
அத்தியாமாய் ஒதுங்கிக்கொள்ளும்..........

செல்லமாய் அலைபேசி
மனிதனுக்கு சொல்லிச் சொல்லிப்போகும்
மரணச் செய்திகள் அநேகம் உண்டு.........

இடுப்பில் வைத்தால் - கிட்னி இழப்பை...
சட்டைப்பையில் வைத்தால் - உன் இதயம் இழப்பாய்.....

பின்னே இந்த சனியன் எதற்கு.......

அகற்ற முடியாத அழிவு......
தூர வைக்கமுடியாத தொந்தரவு...........

உலகின் உன்னத விஞ்ஞாநிகளுக்கேல்லாம்
உயர்வான ஒரு வேண்டுகோள்.............

கடைசி உயிர் கருகுமுன்பாவது,
இயற்கைக்கும் மனிதனுக்கும் தோழமை ஏற்படுத்தும்
தொழில் நுட்பம் ஒன்றை கண்டுபிடியுங்களேன்........

இதற்கான ரகசியம்
அல்லாஹ்வின் வார்த்தைகள் கொண்ட
அருள்மறையின் ஏதாவது ஒரு பக்கத்தில்
இருந்துக் கொண்டேதான் இருக்கும்.

பின் குறிப்பு : சவூதி சென்ற சகோதரர் ஹாமீத் ரீபாயிக்கு,
"சாம்செங்- கலாசி - டச் ஸ்க்ரீன் ஓன்று
வாங்கி அனுப்பவும்......
ஹீ... ஹீ......
இது...
அகற்ற முடியாத அழிவு......
தூர வைக்கமுடியாத தொந்தரவு...........
அலைபேசியாய்
பறவையினங்கள்

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:
posted by: Kader K.M (Dubai) on 05 April 2012
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20696

அருமையான கவிதை,சிந்திக்க தூண்டும் கவிதை!எங்களின் காயல் (செல்) லத்தை அடையாளம் காண்பித்த kayalpatnam.com க்கு நன்றி! ஆசிரியருக்கு பாராட்டுக்கள் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:
posted by: mackie noohuthambi (colombo) on 05 April 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20697

சகோதரர் எங்கே இருந்து இந்த கட்டுரையை எழுதுகிறார். இறைவனின் சன்மானங்களை சாபமாக ஏன் நினைக்கிறீர்கள். நம் சிந்தயிலேதான் கோளாறு.

நான் பதினேழு வயது மாணவனை இங்கே சந்தித்தேன். என்ன செய்கிறாய் என்று கேட்டேன். ROBOISM படிக்கிறேன் என்றான். புரியவில்லையே என்றேன். பதினாறை அறுபத்தி ஒன்று வெல்ல முடியுமா?

உங்களுக்கு தெரியாதா, இப்போது அலை பேசிக்குள்ளே இணையத்தளம் வந்துவிட்டது. இன்று அமெரிக்காவில் அதிகம் பேசப்படுவது ROBOISM தான். இன்னும் சில ஆண்டுகளில் அலைபேசிகள் கடல் அலையுடன் சங்கமித்து விடும். ஒரு காலத்தில் தட்டச்சு தெரிந்தவன் ஊரில் கெட்டிக்காரன். இன்று தட்டச்சு தெரியும் என்று சொல்லிப்பாருங்கள். குகை வாசியா நீங்கள் என்று கேட்பான்.எனவே அந்த முன்னேற்ற பாதையில் நான் அடியெடுத்து வைக்கிறேன் து ஆ செய்யுங்கள் என்றான்.

அவன் ஐந்து வேளையும் தவறாமல் பள்ளிவாசலுக்கு ஜமாத்துக்கு வருகிறான். தீதும் நன்றும் பிறர் தர வாரா. பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும், பிறந்தபின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகளாவில் பேசப்படும் இஸ்லாமிய தத்துவங்களுக்கு புது வடிவம் கொடுக்க, ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றெல்லாம் செத்தாருள் வைக்கப்படும் எனபது போல் எல்லா விஷயங்களையும் POSITIVE THINKING என்ற கண்ணோட்டத்துடன் மக்கள் முன் எடுத்து வைத்து இளைஞர்களை நெறிப்படுத்துங்கள்.

படைத்தான் படைபெல்லாம் மனுவுக்காக, மனுவை படைத்தான் தனை வணங்க என்று நம் முன்னோர்கள் சொன்னது சத்தியமானவை. விளித்து எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை நாம் செய்யும் எல்லா வேலைகளும் வணக்கமாக மாறும் அல்லாஹ் ரசூல் சொல்படி நமது வாழ்கையை அமைத்துக்கொண்டால்.வானமும் நமக்கு வசப்படும்.

எனவே எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை முறையாக அணுகுவோம், அனுபவிப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வோம். அல்லாஹ் எல்லோருக்கும் அவன் சொல்படி நடக்க தவ்பீக் செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:
posted by: M.S.ABDULAZEEZ (G Z) on 05 April 2012
IP: 14.*.*.* China | Comment Reference Number: 20698

சகோதரர் மற்றும் நண்பர் ஜனாப் முஸ்தாக் காகா அவர்கிளின் கட்டுரை பல உண்மைகளின் துளிகள். மறுப்பு இல்லை. மிக சூப்பர்... வாழ்துகள். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் யாவர்களையும் பாதுகாப்பானாக. ( முஸ்தாக் காகா என்னை நியாபகம் உள்ளதா ? உங்களின் ரியாத் தம்பி ) காகா மொபைல் சீனாவில் அதிகம் உள்ளது அனுப்பிதரவா??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:
posted by: kithuru mohamed abbas (Dammam) on 05 April 2012
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20700

அஸ்ஸலாமு அழைக்கும் நண்பன் முஸ்தாக் அஹ்மது டயல் டோன் இல்லாத அலை பேசியை பற்றி எழுதிய கட்டுரை அருமையாக இருந்தது அதிக நேரம் அலைபேசியை ஹெட்போன் இல்லாமல் பேசினால் காதுக்கு பிரச்சனை வரும் என்றும் சொல்லுகிறார்கள் அதைப்பற்றி கட்டுரையில் சொல்லவில்லையே ஏன் நண்பனே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. செல் போன்
posted by: hasbullah mackie (dubai) on 06 April 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20702

கட்டுரையாளரே தங்கள் கையில் அல்லது உங்கள் வீட்டில் செல்போன் உபயோகம் இல்லையா என்ன? இந்த சனியனை விட்டு விட வேண்டியது தானே? உறுதி படுத்துங்கள்....

கத்தியை பற்றி கவிதை எழுதலாம் சனியன் என்று......

ஆனால் அதை மனிதன் தானே உபயோகிக்கிறான். பல பெயருடைய உயிரைக் கொன்றதும் தான். அதற்காக வேண்டி சனியன் என்று ஒதுக்கியிருந்தால் இன்று சமையலை நிறுத்தி விடலாமே.....

கத்தியை உபயோகிப்பதற்கு புத்தி வேண்டும்....அதே போன்று செல்போன் உபயோகம் நம்மலுடைய அறிவும் ,மார்க்க சிந்தனையும் ,அச்சமும் இருந்தால் இந்த பெரிய அருட்கொடையை யாரும் வேண்டாம் என்பார்களா?

சனியன் என்று தூற்றி விட்டு பிறருக்கு samsung galaxy கொடுக்க சொல்லியிருக்கிர்ரீர்கள்...

இந்த கட்டுரை oru TIME PASS........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:
posted by: sulaiman (manama) on 06 April 2012
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 20703

எழுத்து மேடையில் நல்ல கருத்துள்ள கட்டுரைகளை தந்த காயல்.காம் க்கு நன்றி ,, ஆனால் இந்த கட்டுரை கருத்துள்ளதாக தெரியவில்லை?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 07 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20708

கட்டுரைக்கும் கவிதைக்கும் வித்தியாசம்
தெரியாத வாசக அன்பர்களே...

விரித்து எழுதினால் அது கட்டுரை
சொற்களை மடித்து எழுதினால்
அது கவிதை ...
விஞ்ஞானமும் மெய்ஞானமும்
இரட்டை பிறவிகளாய் வளரும்
நம் இந்திய திரு நாட்டில்
மெய்ஞானம் மறந்த விஞ்ஞானம்
மெத்த வளரும் காலமிது.
மெய்ஞானம் ..ஆன்மா
விஞ்ஞானம் உடல்
உடல் அழிந்தாலும் ஆன்மா
அழியாது என்பார்கள் சிலர்

மெத்த வளருது விஞ்ஞானம் மேற்கே
என்றான் முண்டாசு கவிஞன்
இங்கும் வளர்ந்தது விஞ்ஞானம்
2G 3G 4G என
கோபுரங்கள் உயரமாய் வளர்ந்தன
கோடிகளும் கோபுரமாய் குவிந்தன
விஞ்ஞான குதிரைக்கு
கடிவாளம் போடுவது
வீண் முயற்சி
மெய்ஞான பாதையில்
வீர நடை போட்டால்
விஞ்ஞானமும் ஒரு
விளையாட்டே....

செல்பேசி இன்று ஒரு சொல்பேசி
பல் இல்லாமல் கூட இருந்துவிடலாம்
செல் இல்லாமல் இருக்க முடியுமா...
பல் போனால் சொல் போச்சு என்பார்கள்
செல் போனாலும் அப்படித்தான் நண்பரே...
விஞ்ஞானம் தரும் வினையகற்றி
அதை நன்ஜானம் தரும்
நற் கலையாய் மாற்றுவோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. செல்லமே ஆபத்து! ஆபத்தே செல்லம்
posted by: sheit (dubai) on 07 April 2012
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20711

சஹோதரர் ஆபத்தை அழகாக உணர்திகிறார்! நகைச்சுவையுடன், நவீனங்கள் எல்லாமே ஆபத்துதான் முறையாக பயன்படுத்தினால் ஒழிய, அணுவை விடவா ஆபத்து அதுவே கூடங்குளம் வரை வந்துவிட்டது.இந்தகாலத்து மனிதன் உணவு இல்லாமல் இருப்பான் ஆனால் செல் இல்லாமல் இருக்கமாட்டான் இது காலத்தின் கட்டாயம்.சஹோதரருக்கு என் நன்றிகள்

சேட்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved