Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:40:58 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 249
#KOTWEM249
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 5, 2019
மய்யத்தில் நிற்போம்! மஹல்லா ஜமாஅத் கட்டுக்கோப்பைக் காப்போம்!!

இந்த பக்கம் 6094 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அது 2003ஆம் ஆண்டு!

காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில் வாடகை வீட்டில் பல ஆண்டுகளாகக் குடியிருந்த – பொருளாதாரத்தில் நலிவு நிலையிலிருந்த ஒரு குடும்பத்தில் மரணம்... எனது மஹல்லா குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்ய வேண்டும். அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து எதுவுமே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதற்கான செலவுக்கும் வழியில்லாத அன்றாடங்காய்ச்சிகள். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்ற நிலை அவர்களுக்கு!

அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் இயங்கிக் கொண்டிருக்கும் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் (ஹிஃப்ழு மத்ரஸாவில்) நான் அப்போது ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இன்றிருப்பது போல அன்று பொதுவாழ்விலும் பெரியளவில் நான் ஈடுபட்டதில்லை. இக்கட்டான நிலையிலிருந்த அக்குடும்பத்தினர் குறித்த தகவல் என் தாய் வழியே எனக்குக் கிடைத்தது. மாலை நேரம் அது. மஃரிப் வரை காத்திருந்து, அங்கு மஃரிப் ஜமாஅத் நிறைவுற்றதும் அனைவரும் கேட்கும் வகையில் உதவி கோரி உரத்த குரலில் வேண்டுகோள் வைத்தேன்.

அப்போது தேவைப்பட்டது என்னவோ வெறும் மூவாயிரம் ரூபாய் அல்லது அதைவிடச் சற்று கூடுதல் மட்டுமே. ஆனால், தொழுகை முடிந்து வெளிச்சென்ற ஒவ்வொருவரும் தம் பங்களிப்பைத் தர, தேவைக்கதிகமாக நிதி சேரவும் “போதும், போதும்!” என நான் பலமுறை கூறியும், “நாங்கள் நிய்யத் செய்துவிட்டோம்... மீதி இருந்தால் அவர்கள் வீட்டில் அடுத்தடுத்த செலவினங்களுக்கு வைத்துக் கொள்ளச் சொல்!” என்று கூறித் தந்து சென்றனர். கடைசியில் எண்ணிப் பார்த்தால் சுமார் 11 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நிதி சேர்ந்திருந்தது. நல்லடக்கப் பணிகளை நிறைவாகச் செய்துவிட்டு, மீந்த தொகையை அக்குடும்பத்தினரிடமே கொடுத்துவிட்டேன். இந்நிகழ்வை இங்கு நினைவுகூரக் காரணம், வசதியற்றோரின் கையறுநிலையை உணர்த்துவதற்குத்தான்.

நமதூர் மண்ணுக்கென்றே ஒரு மனப்பதிவு இருக்கிறது. “எந்த வேலையையும் நான் உடலை வளைத்துச் செய்யக்கூடாது! யாராவது செய்து தருகிறானா...? அவனுக்கு எதையாவது கொடுத்து வேலையை முடிக்க வேண்டும்... அது நேரிய வழியா, தவறிய வழியா என்பதெல்லாம் எனக்கு அவசியமில்லாதது!” என்பதுதான் அது. கையில் காசை வைத்திருப்பவர்கள், அடுத்தவருக்கு வரப்போகும் பின்விளைவுகள் பற்றிச் சிறிதும் கருத்திற்கொள்ளாமல் – தன்னிச்சையாக முடிவெடுத்து, சில பல தொகையைக் கையூட்டாகக் கொடுத்து, வேலையை முடித்துக் கொள்ள, அதன் வினை இதுபோன்ற வசதியற்றவர்களை அவதியில் ஆழ்த்துவது வாடிக்கையாகிவிட்டது.

நான் சார்ந்துள்ள குருவித்துறைப் பள்ளி மஹல்லாவில் மரணித்தவரை நல்லடக்கம் செய்த பின், குழிவெட்டிய பணியாளர்களுக்கான கணக்கை முடிக்கையில், அக்குடும்பத்தார் உறவினரோ, இல்லையோ – எதையும் பாராமல் அங்கு வந்து அமர்ந்துவிடுவது எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற டீ.எம். மாமாவின் வழமை.

“என்னப்பா... குழி வெட்டுனவன எங்கே...?”

“இதோ இருக்கிறேன் காக்கா...!”

“எவ்வளவுப்பா வேணும்!”

“உங்களுக்குத் தெரியாதா? பார்த்து தாங்க!”

“எனக்குத் தெரியிறதெல்லாம் இருக்கட்டும்! நீ உன் வாயத் தெறந்து சொல்லு!”

“xxx ரூவா தாங்க காக்கா...”

“ஏம்ப்பா அவ்வளவு ரூவா? கணக்கு சொல்லு!”

அவர் கணக்குச் சொல்ல, அவை சரிபார்க்கப்பட்டு தொகை கையளிக்கப்படும். இந்த உரையாடல் நடந்துகொண்டிருக்கும்போதே, மரணித்தவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் வசதியானவர்களாக இருந்துவிட்டால்,

“காக்கா... எதுக்கு இதையெல்லாம் விசாரிச்சிட்டு...? அவன் எவ்வளவு கேட்டாலும் குடுக்கலாம்தானே...?” என்பார்.

அப்போதுதான் டீ.எம். மாமா, “ஆமாப்பா… உங்க கிட்ட இருக்குது... குடுத்துடச் சொல்றீங்க! இல்லாதவன் வீட்டிலும் இவங்க வந்து இதே கணக்கைத்தான் நீட்டுறாங்கங்கறது ஒங்களுக்குத் தெரியுமா? அங்க கொறச்சி பேசுனா, எல்லா எடத்துலயும் வாங்குறதத்தானே கேக்குறேன்னு இவன் சொல்வது ஒங்களுக்குத் தெரியுமா...?” என்பார். உடனே அவர்கள் ‘கப்சிப்’. இந்தக் காட்சி பெரும்பாலும் – நான் ஈடுபடும் நல்லடக்கப் பணிகள் சார்ந்த அனைத்து இடங்களிலும் தவறாமல் காணக் கிடைக்கும்.

மாமாவுக்குத் தற்போது வயது 88. ஆனாலும், இளமைத் துடிப்புடன் அவர்கள் தொடர்ந்து ஆற்றி வரும் இந்தப் பணிகளைப் பாராட்டி, எங்கள் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் வழமையிலேயே இதுவரை இல்லாத ஒரு பாராட்டு கடந்த ஆண்டு (ஹிஜ்ரீ 1439) ரஜப் மாதத்தில் – 14.04.2018. சனிக்கிழமையன்று ஒரு பாராட்டு நிகழ்ச்சியே நடத்தப்பட்டது.







படம்: கோப்பு



எனது பொதுவாழ்வில், நான் விபரம் அறிந்த நாள் தொட்டு – ஒருவர் மரணித்துவிட்டால், அவரது நல்லடக்கத்திற்குத் தேவையான அனைத்தையும் முறையாக முன்னின்று செய்து தரும் வழமையை எந்தப் பிரதிபலனையும் மக்களிடம் நாடாமல், படைத்தவனின் அருளை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்து வருபவர் என் மரியாதைக்கும், பாசத்திற்குமுரிய கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை காக்கா அவர்கள். காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் நிர்வாகியாக இந்தப் பணிகளைத் தன்னார்வத்துடன் அவர் செய்வதைக் கண்டுதான் இதுபொன்ற நல்லடக்கப் பணிகளில் எனக்கும் ஓரளவுக்கு ஈர்ப்பு வந்தது. “நல்லடக்க ஏற்பாடுகளை – மரணித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களே செய்வதுதான் ஏற்றம்... அதற்கான முயற்சியையும், பயிற்சியையும் பெற்றுக்கொள்ளுங்கள்!” என பொதுமக்களையும், ஜமாஅத்துகளையும் அவர் வலியுறுத்தாமல் இருந்ததேயில்லை. அவரையடுத்து, என் பாசத்திற்குரிய ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத் காக்கா அவர்கள். இவ்விருவரும் தமது வாழ்க்கைத் தேவைக்காகப் பகல் நேரங்களில் பம்பரமாய்ச் சுற்றித் திரிந்து, தீராத அலுப்புடன் இரவில் தலை சாய்ப்பவர்கள். ஆனாலும், எத்தனை மணிக்குத் தொடர்புகொண்டு மரணத் தகவலைச் சொன்னாலும், அடுத்த நிமிடமே அவ்விடம் வந்து நின்று, ஆவன செய்து தந்துவிட்டுச் செல்வர்.

அவர்களது வயது ஏற, ஏற – அவர்களுக்குப் பக்கபலமாக அந்தப் பணிகளைத் தன் கையில் எடுத்துத் தன்னார்வத்துடன் செய்து வருபவர் என் அன்பு நண்பர் ‘ஸ்கட்’ அபூ அவர்கள். நாங்கள் தனியாகப் பேசிக்கொண்டால் எங்கள் உரையாடல் எல்லாமே ‘ஐந்தாம் கலிமா’வுக்கு மேலேதான் இருக்கும். அவ்வளவு நெருக்கம்.

அவருடன் இணைந்து, என் உறவினரும் – பாசத்திற்குரியவருமான தம்பி எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன். பொது வாழ்வில் சில பல கருத்து வேறுபாடுகள் எங்களுக்குள் இருக்கலாம். ஆனால் வாய் திறந்து வர்ணித்துச் சொல்லவே இயலாத நிலையில், சுற்றுப்பகுதி முழுக்க வீசும் துர்நாற்றத்துடன் இருந்த பல அநாதைப் பிணங்களை, சுற்றுப்பகுதி முழுக்க சாம்பிராணி, ஊதுபத்தியையெல்லாம் பற்றி வைத்துக்கொண்டு, முகத்தில் சிறிதும் சலனத்தைக் காட்டாமல் – மய்யித்தைத் தொட்டுத் தூக்கிக் குளிப்பாட்டி, புத்தாடை (கஃபன்) அணிவித்து சங்கைப்படுத்தி, ஜமாஅத்தார் அனைவரையும் வரவழைத்து, ஏதோ ஒரு செல்வந்தர் வீட்டிலிருந்து மரணித்தவர் போன்ற தோரணையில் அவரை நல்லடக்கம் செய்த காட்சிகள் என் கண்களுக்குள்ளேயே நிற்கிறது. சிலவற்றில் இணைந்து செயல்பட எனக்கும் வாய்ப்புக் கிடைத்தது என்றாலும், அவர்கள் அளவுக்குச் செய்ய நான் இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன. அதுபோல, என் அன்புச் சகோதரர் நஹ்வி முத்துவாப்பா, எங்கள் குருவித்துறை பள்ளியின் முன்னாள் இமாம் மர்ஹூம் ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம் அவர்களது மருமகனார் தாஹா காக்கா (உடல் நலக் குறைவால் வீட்டில் ஓய்வில் இருக்கும் அவருக்கு அல்லாஹ் நல்ல உடல் நலனை வழங்குவானாக!), தைக்கா தெரு ‘ஹிட்லர்’ சதக்கத்துல்லாஹ் காக்கா (அல்லாஹ் அவருக்கு நல்ல உடல் நலத்தைக் கொடுத்தருள்வானாக!), புகாரீ (48) காக்கா, ஐ.எல்.எஸ்.முஹ்யித்தீன் காக்கா, நான் சார்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நகர நிர்வாகியான கே.எம்.என்.உமர் அப்துல் காதிர் காக்கா, ஹாஜி எஸ்.ஏ.உமர், நண்பர் அரபி அய்யூப், ‘பேரவை’ மரைக்கா காக்கா, கோமான் தெரு ‘கவுன்சிலர்’ அஷ்ரஃப், தைக்கா தெரு எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் காக்கா, எஸ்.டி.பீ.ஐ. கட்சியைச் சேர்ந்த கே.டீ.எம். தெரு எஸ்.எம்.கே.மெய்தீன் காக்கா, தமுமுகவைச் சேர்ந்த நண்பர்களான ‘முர்ஷித் ஜெராக்ஸ்’ முஹ்ஸின், எம்.கே.ஜாஹிர் ஹுஸைன், ஹஸன் என இப்படிப் பல தன்னார்வலர்கள் இந்த ஊரில் உள்ளனர்.

எல்லோரும் இருக்கட்டும். நம் வீட்டில் ஒருவர் மரணித்துவிட்டால் அவர்களை நல்லடக்கம் செய்யும் முதல் கடமையும், பொறுப்பும் நமக்குத்தான் என்றிருக்க, யாருக்கோ வந்த விதி போல மரணித்தவர்களது குடும்பத்தினர் பலர் நடந்துகொள்வது நமது இஸ்லாமிய வாழ்வியல் நெறிப்படி வரவேற்கத்தக்கதல்ல.

காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் கடைசியாகக் கட்டுரை எழுதி சரியாக இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவ்வப்போது பல அம்சங்கள் குறித்து கட்டுரை வரைய நினைத்தும் அந்நாட்டங்கள் நிறைவேறாத நிலையில், இன்று இத்தனை அவசர அவசரமாக இந்தக் கட்டுரையை எழுதக் காரணம், இன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு தகவல்தான்!

நேற்றும், இன்றும் இரண்டு மரணங்கள். இரண்டுக்கும் வெவ்வேறு சகோதரர்கள் குழிவெட்டும் பொறுப்பைச் செய்தனர். நல்லடக்கத்திற்குத் தேவையான கஃபன் துணி, மரம், ஆணி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வாங்க அவர்களே பணிக்கப்படும் வழமைப் படி, இவ்விருவரிடமும் பணிக்கப்பட்டிருக்கிறது. ஓரிடத்தில் மொத்தச் செலவு ரூ. 7,560/- மற்றோர் இடத்தில் ரூ. 5,800/-





அடுத்தடுத்த நாட்களில் இப்படி நடந்ததை, இரண்டு இடங்களிலும் நல்லடக்கப் பணியில் ஈடுபட்ட கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை காக்கா, ‘மாஷா அல்லாஹ்’ தாவூத் காக்கா ஆகியோர் கண்ணுற்றுக் கொதித்தனர்.

“பலமுறை நானும் பல ஜமாஅத்துகளிலும் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டேன்... ஒரு பயனும் இல்லை... யாருமே கேட்பதில்லை... நீங்களாவது எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்துங்க தம்பீ...!” என என்னிடம் அங்கலாய்த்தார் சகோதரர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை அவர்கள். இன்று காயல்பட்டினம் ஜாவியாவின் 150ஆம் ஆண்டு நிறைவு முப்பெரும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்க, அதன் இணையதள நேரலைப் பணியில் நானும் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வேளையில் நான் பெற்ற இவரது அங்கலாய்ப்பே இந்தக் கட்டுரைக்குக் காரணம்.

சரி, இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?

|| இயன்ற வரை மரணித்தவரது குடும்பத்தினரே – நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் நேரடியாகக் கடைகளிலிருந்து வாங்க வேண்டும்...

|| எங்கு அடக்கப்படுகிறதோ அந்த மையவாடியைக் கொண்ட ஜமாஅத்துகள் – நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களை விற்கும் கடைகளுடன் நிரந்தரத் தொடர்பை வைத்துக் கொண்டு, தொலைபேசியில் ஓர் அழைப்பு விடுத்துச் சொன்னாலே பொருட்கள் பள்ளியையும், மரணித்தவர் வீட்டையும் தேடி வரும் வகையில் ஏற்பாடு செய்யலாம்...

|| குழி வெட்டுபவர்களை ஓரிடத்தில் அழைத்துப் பேசி, குழி வெட்டுவதற்கான கூலியை - ஆண்டுக்கு ஒருமுறை பத்து சதவிகிதம் அதிகரிக்கும் வகையில் நிர்ணயித்துப் பேசி முடித்து, அதைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் பணியை, இந்த நல்லடக்கப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், மையவாடிகளைக் கொண்ட ஜமாஅத்துகள், ஜமாஅத்துகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பிலிருக்கும் அமைப்புகள் செய்யலாம்.

இவற்றைச் செய்தால்.........

|| ஏற்கனவே கவலையிலிருக்கும் – மரணித்தவரது குடும்பத்தாருக்கு வேலைப்பளு குறையும்...

|| தமது குடும்ப நிகழ்வுக்கு முன்னின்று கடமையாற்றிய மஹல்லா ஜமாஅத்திற்கு அக்குடும்பத்தார் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாகவும், முழுக்கக் கட்டுப்பட்டவர்களாகவும் இருப்பர்.

|| எல்லாவற்றுக்கும் மேலாக, நம்மைப் படைத்த இறைவனின் பேரருள் நமக்கு ஈருலகிலும் நிறைவாகக் கிடைக்கும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எல்லா ஜமாஅத்துகளுக்கும் பொறுப்புள்ளது!
posted by: K.M.N.மஹ்மூத் லெப்பை (செயலாளர்: காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு) (Kayalpatnam) on 05 January 2019
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46356

இன்று காலையில் நமதூர் பெரிய குத்பா பள்ளியில் ஒரு ஜனாஸாவை அடக்கிவிட்டுத் திரும்பியபோது, நல்லடக்கச் செலவினங்கள் தொடர்பாக ஒரு விவாதம் வாட்ஸ்அப் குழுமங்களில் ஓடிக் கொண்டிருப்பதாக அறிந்து, என்னிடம் வாட்ஸ்அப் இல்லாததால், அதை வைத்துள்ளவர்கள் மூலம் பார்த்து அறிந்துகொண்டேன்.

உடனடியாக, சகோதரர் எஸ்.கே.ஸாலிஹ் இடம் இதுகுறித்த எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, “நானும் பல முயற்சிகளை மேற்கொண்டு விட்டேன். இதுவரை எந்தப் பயனையும் காணவில்லை. எனவே, நீங்கள் உங்கள் எழுத்தின் மூலமாவது விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டேன்.

சம்மதித்துச் சென்றவர், சிறிய வாசகத்தைப் பதிவிடுவார் என்று பார்த்தால், ஒரு கட்டுரையையே தந்துவிட்டார்.

சரி, நான் இன்று பெரிய குத்பா பள்ளி மையவாடியில் மய்யித்தை அடக்கிய பின், அங்குள்ள மக்களிடையே பேசியதை அப்படியே கீழே தருகிறேன்:-

ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்துவிட்டால், அடுத்தடுத்துச் செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து எதுவுமே புரியாமல் - கவலையில் மரணித்தவரின் குடும்பத்தார் எதையும் கவனித்துச் செய்ய முடியாத நிலையில் இருப்பார்கள். அப்படியான நேரங்களில், அந்த மய்யித்தை அடக்கும் ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பில், அவர்களது சார்பில் நின்று பொறுப்பேற்று காரியங்களைச் செய்து கொடுக்க வேண்டியது நமது தார்மிகக் கடமை.

நமதூரில் 32 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றுள் மையவாடிகளைக் கொண்ட பள்ளிவாசல்கள் 18. இந்த 18 பள்ளிகளிலிருந்தும் தலா இரண்டே பேர் இந்த நல்லடக்கப் பணிகளைத் தெரிந்துகொண்டு, செய்திட முன்வந்தாலே நமதூரில் 36 பேர் இதற்காகக் கிடைப்பார்கள். அவர்களைக் கொண்டு தங்குதடையின்றி நல்லடக்கக் காரியங்களைச் செய்து, மரணித்தவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கலாம்.

இதன் நன்மையை உணர்ந்திருந்தால் இதற்குத்தான் போட்டி போட வேண்டும். ஆனால் பரிதாபம்! 18 வார்டுகளுக்கும் கவுன்சிலராய் நிற்பதற்கு நான் நீ என போட்டி போடும் மக்கள், இதுபோன்ற நற்காரியங்களுக்கு நேரில் சென்று அழைத்தாலும், தலைமறைவாகி விடுகின்றனர்.

இதுபோன்று பொறுப்பெடுக்க அந்தந்தப் பகுதிகளில் சமூக ஆர்வலர்களாக யாரும் முன்வராத காரணத்தால்தான் - கட்டுரையில் குறிப்பிட்டுள்ள படி, நேற்று நடைபெற்ற நல்லடக்கத்தில் 7,560 ரூபாயும், இன்று நடைபெற்ற நல்லடக்கத்தில் 5,800 ரூபாயும் காண்பிக்கப்பட்டுள்ளது. வித்தியாசம் 1,760 ரூபாய். இந்தத் தொகை வசதியுள்ளவர்களுக்கு ஒன்றுமே இல்லை. ஆனால் வசதியற்றவர்களுக்கோ சுமார் 15 நாட்கள் வாழ்க்கைச் செலவைப் பூர்த்தி செய்யும்.

இந்தப் பிரச்சினையை யார் கையிலெடுப்பது? பூனைக்கு யார் மணி கட்டுவார்?

இங்கு எல்லா ஜமாஅத்துகளைச் சேர்ந்த - எல்லாக் கொள்கைகளைச் சேர்ந்தவர்களும் வந்திருக்கின்றீர்கள். பலமுறை நானும் எல்லா ஜமாஅத்துகளையும், பொதுநல அமைப்புகளையும், ஐக்கியப் பேரவையையும் தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட போதிலும் இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

இப்போது இறுதியாக உங்கள் அனைவரையும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்...

இதுபோன்ற மரண நிகழ்வுகளில், அந்தந்த ஜமாஅத்துகள் பொறுப்பெடுத்துக் கொண்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு உதவியாக இருக்கும். எனவே, இனியேனும் காலம் தாழ்த்தாமல் இதுகுறித்து கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், இதுகுறித்து ஐக்கியப் பேரவையைத் தொடர்ந்து வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கத் தூண்டுமாறும் இங்கு வந்திருக்கும் அனைத்து ஜமாஅத்துகளைச் சேர்ந்த மக்களாகிய உங்களை நான் அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

இதைச் செய்வது ஈருலகிலும் நமக்கு நிறைவான நன்மையைப் பெற்றுத் தரும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திய மேலான சுன்னத்தைப் பின்பற்றிய பாக்கியசாலிகளாக நாம் ஆவோம்.

எல்லாம்வல்ல அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மறந்து விட்டேனே....
posted by: S.K.SALIH (காயல்பட்டினம்) on 05 January 2019
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46357

நமதூரில் ஜனாஸா நல்லடக்கத்தில் தன்னார்வத்துடன் சேவையாற்றும் பலரை இக்கட்டுரையில் பட்டியலிட்ட நான், என் நெருங்கிய உறவினர் அன்புச் சகோதரர் நஹ்வி முத்துவாப்பா, எங்கள் குருவித்துறை பள்ளியின் முன்னாள் இமாம் மர்ஹூம் ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம் அவர்களது மருமகனார் தாஹா காக்கா (உடல் நலக் குறைவால் வீட்டில் ஓய்வில் இருக்கும் அவருக்கு அல்லாஹ் நல்ல உடல் நலனை வழங்குவானாக!), தைக்கா தெருவில் சதக்கத்துல்லாஹ் காக்கா, புகாரீ (48) காக்கா, ஐ.எல்.எஸ்.முஹ்யித்தீன் காக்கா ஆகியோரைக் குறிப்பிட மறந்து விட்டேன்.

நண்பரும், பாடகருமான எஸ்.ஏ.காஜா அவர்கள் நினைவூட்டியதையடுத்து தற்போது இணைத்துள்ளேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...நிகழ்ச்சி தொகுப்புக்களை வழங்கும் ஒருவர் தரும் நெகிழ்ச்சிதொகுப்பு
posted by: mackie noohuthambi (kayalpattinam ) on 07 January 2019
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46361

இன்று இரவு நான் நாடுதிரும்பியபின் வீட்டுக்குள்ளும் செல்லாமல் நேரடியாக ஜாவியா 150 ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியில் நிறுவுரை ஆற்றும் அப்துல் காலிக் மௌலவி அவர்களின் பயானைக் கேட்டு மகிழ்வதற்காக சென்றபோது அவர்கள் அப்போதுதான் என் வருகைக்காக காத்திருந்தது போன்று பேச்சை ஆரம்பித்தார்கள், நிகழ்ச்சி முடிவின்போது மருமகன் ஸாலிஹ் அவர்களை சந்தித்து உனது kayalpatnam .com ஒன்றுதான் காயல்பட்டணம் இணையதளங்கள் ஆரம்பத்தில் 7 என்று இருந்து இப்போது ஒன்றோடு நிற்கிறது. அதுவும் இப்போது ஒரே late news மரண செய்தியைத்தான் தருகிறது latest news தருவதில்லையே என்றேன். வேளை பளு என்றவாறு எனது latest கட்டுரை பார்த்தீர்களா என்றார். இல்லை என்றேன்...

இதோ படித்துப் பார்த்தேன். புல்லரித்து விட்டது. மரணித்தவர்கள் நல்லடக்கம் செய்யப் படுவதற்கு நமதூரில் உள்ள மஹல்லா கட்டுப்பாடுகள் ஒருபக்கம் இன்னொருபக்கம் அவர்களுக்கான குழி வெட்டுவது முதல் கபன் துணிகள் வரை பேரம்பேசும் அளவுக்கு நமது மனோநிலையில் சோரம்போகி இருப்பது வெட்கக் கேடான விஷயம்.

தமிழகத்தின் இஸ்லாமிய தலைநகரில் பள்ளிவாசல்களில் சென்று தொழுவதற்கு கட்டுப்பாடு இருப்பதுபோல் அவர் மரணித்த பிறகும் இவ்வளவு பிரச்சினைகள் உள்ளதை இந்த கட்டுரை தெளிவாக அலசுகிறது.

நபிகள் நாயகம் அவர்கள் ஒரு செய்தியை சொல்கிறார்கள். ALAA INNA FIL JASADHI MULGHATHUN . VA ITHAA SALAHATH SALAHAL JASADHU KULLUN . VA ITHAA FASADHATH FASADHAL JASADHU KULLUN . ALAA VAHIYA QALBUN .

சகோதரர் மாமுனா லெப்பை இன்று நேற்றல்ல பல வருடங்களாக எல்லா ஜமாத்தினரிடமும் இதை சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். எத்தனையோ விஷயங்களுக்கு நமது ஜமாத்தார்கள் அதிரடி முடிவுகள் எடுக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

TM அவர்கள் பேரம் பேசும் இடங்களில் நானும் இருந்திருக்கிறேன். அது ஒரு மன சங்கடத்தை ஏற்படுத்தவே செய்தது. இருந்தாலும் வசதி படைத்தவர்களுக்கும் வசதி இல்லாதவர்களுக்கும் மரணம் பொதுவானது. கபன் துணி குழிவெட்டும் வேலை எல்லாமே பொதுவானது. இதற்கு கூடுதல் குறைச்சல் என்று பில் போடுவதும் அவர்கள் மனசாட்சியை தொட்டு பேசும் செயல்.

நாமும் ஒரு நாள் மரணிப்போம். அப்போது நமக்கும் இப்படி நடக்கும் என்று அவர்கள் நினைத்து அல்லாஹ்வுக்கு பயந்து செய்ய வேண்டும். அல்லாஹ்வின் அச்சம் இல்லை என்றால் நாம் எதையும் செய்யலாம். இதற்கு ஒரு கூட்டம் போட்டு ஒரு ஜமாத்து கட்டுப்பாடு ஊர் தழுவி செய்யப் படவேண்டும்.

இன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரை இந்த புரையோடிப்போன அசிங்கத்துக்கு ஒரு முடிவை விடிவை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக. ''இதனை இதனால் இவண் முடிக்குமென்றாய்ந்து அதனை அதன் கண் விடல்''.ஒரு தனி மனிதன் முயற்சிகள் சமுதாயத்தை பற்றிய கவலைகள் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கின்றன. அல்லாஹ் அதற்கு துணை நிற்கிறான் என்ற பல உதாரணங்களை சொல்ல முடியும்.

ஒரு நல்ல கட்டுரை. சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுகிறது. உங்கள் மூலம் ஒருவருக்கு ஹிதாயத் கிடைத்தால் அது இந்த உலகம் அதி உள்ளவற்றை விடவும் உங்களுக்கு மிக சிறந்தது என்று நபிகள் நாயகம் அவர்கள் சொல்லி இருப்பதை எனது வாழ்த்தாக மருமகன் ஸாலிஹ் அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் எல்லாமே வெற்றியாக முடிவதில்லை. அவர்கள் வெறியுணர்வு அதற்கு காரணம் என்பார்கள். ஆனால் வெறியுணர்வு சில நேரம் அவசியமாகிறது. அந்த வேட்கையுடன் செயல்படுங்கள் அல்லாஹ் ரஹ்மத் செய்வான்

இந்த விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய வேண்டும் என்றால் அதையும் நீங்கள் என்னிடம் கேட்டுப் பெறலாம் . ஆனால் அது ''ஒரு அணில் மண் சுமக்கும் அளவுக்குத்தான்'' இருக்கும் என்பதை மிக்க அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: THAMBI (jeddah) on 29 May 2019
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46415

கண் திறக்க வைக்கும் கட்டுரை அருமை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved