Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:50:50 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 24
#KOTWEM24
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 30, 2012
ஓ சிட்டுக் குருவி! உன் ஞாபகத்தில் ஒரு ஞாபகம்!!

இந்த பக்கம் 3264 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஏப்ரல் 20, உலக சிட்டுக் குருவி தினம்.

அந்த தினம், இந்த தினம் என ஏதாவது ஒரு பிரச்னையை வைத்து ஒரு ஆண்டில் ஒரு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. பெற்றோரை சரியாக கவனிக்கவில்லை என்பதாலும் முதியோர் இல்லத்திற்கு அவர்களைக் கொண்டு தள்ளி விடுவதாலும் நினைவு படுத்தப் படுவது பெற்றோர் தினம்.

கேன்சர், எய்ட்ஸ், சர்க்கரை நோய் முதலான நோய்கள் விளிப்புணர்வுக்கு ஒவ்வொரு தினங்கள்.

ஒழுக்க சீர்கேட்டில் உலகோரைத் தள்ளி விடுவதற்கு காதலர் தினம்.

இந்த தொடரில் சிட்டுக் குருவிக்கும் ஒரு தினம்.

ஆம், நம் கண்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் இந்த குட்டிப் பறவைக்கும் இப்போது ஒரு தினமாம். கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவி நமக்குச் சொல்லும் பாடம் என்ன.

அதப் பத்தி நாம் கடைசியில் தெரிந்து கொள்ளலாமே.

ஓ சிட்டுக் குருவியே, உன் ஞாபகத்தில் ஒரு ஞாபகம்.

அந்தி சாயும் போது அடுத்த நாள் அதிகாலையை உன்மனதில் பதிய வைத்தே நீ தூங்கி ஓய்வெடுப்பாய். உனக்கு சீரியல் பார்த்து சீரழிய நேரமும் இல்லை, வெட்டியாய் வெளியில் நின்று ஊர் பலாய் கழுவும் தேவையும் இல்லை. உன்னைப் போன்றே உன்னைச் சுற்றி வாழ்ந்த மனித இனமும் ஒரு நல்ல வாழ்க்கை முறையில் அன்று.

ஆண்டு 1980.

காயல்பட்டணத்தில் தான் உன் அன்பின் ஆதிக்கம் எத்தனை, எத்தனை.

உன்னை இப்போது காணவில்லை என்றதும் எங்களுக்கு நினைவுக்கு வந்தது எங்களின் அந்தக்காலம்.

ட்சூ, டிட்சூ, ட்ச்சூ… என காலங்காத்தாலேயே எங்களை விழிப்பாட்டுவதும் உன் குரல் தானே.

குழந்தைகளுக்கு சோறு ஊட்டி விடும் தாய்க்கு இலவசமாய் நீ காட்சி தருவாய். அவள் குழந்தை உன்னைப் பார்த்துப் பார்த்து மெய்மறந்து உண்ணும். உன் அதிரடி சப்தத்தால் சிறுவர்கள் உன்னைப் போன்றே துள்ளிக்குதித்து வெளியில் சென்று ஒய்யாரமாய் விளையாடுவர்.

ஆத்தூரிலிருந்து, இரட்டை மாட்டு வண்டியில் நெல், மூட்டை மூட்டையாக சாக்குப் பைகளில் வந்திரங்கும்.

பாட்டனார்கள் முன் பவ்யமாய் நின்று கணக்கு கொடுக்க கோனாரும் வந்து நிற்பார். ஓ சிட்டுக் குருவியே, இப்போ நீ மட்டுமா இல்லை. மாட்டு வண்டிகளும் இல்லை. நெல் மூட்டைகளும் இல்லை.

முன்னோர்கள் காட்டிய விவசாய அக்கறை இப்போது எங்கேயும் இல்லை, யாரிடமும் இல்லை.

ஓ சிட்டுக் குருவியே, உனக்கொன்று தெரியுமா.

எங்களிடையே சுற்றித் திரிந்த நீ மட்டுமா இன்றில்லை.

இந்திய நாட்டில் விவசாயம் செய்த 75 லட்சம் விவசாயிகளையும் கூட 10 வருஷத்துக்கு முன்னமேயே காணவில்லையாமே. அன்று, வீடுகள் கட்ட பயன்படுத்தியது கல்குத்து கட்ட குத்து, மெட்ராஸ் டார்ஸ் என்பார்களே. ஆங்கிலத்தில் பர்லிங்ஸ் என்ற பெயர். அத்தகைய பொடி செங்கற்களும் தாங்கி நிற்க மரக்கட்டைகளும்.

வெயிலின் வெக்கை எல்லாம் அன்று அவ்வளவாய்த் தெரிந்ததில்லை. வெயிலின் வெக்கையைத் தனிக்க வீட்டுக்குள் வந்தாலே போதும். மிதமாக ஓடும் மின் விசிறி கொஞ்ச நஞ்சம் வெக்கையையும் வெளியேற்றும்.

மின்சாரப் பற்றாக்குரையும் இல்லை. மின்சாரம் போனால் திண்டாட்டமும் இல்லை. டார்ஸின் மகிமை அது. இப்போது பவர் கட்டு ஒருபுறம், கான்கிரீட்டு மருபுறம். வீட்டில் உள்ளோருக்கோ திண்டாட்டமாம் திண்டாட்டம். காலங்காலமாய்த் தாங்கி நிற்கும் டார்ஸின் சிறு இடைவெளி போதும் உன் சின்னஞ்சிறு கூட்டிற்கு. உன்கூடவே அணில் அத்தானும். உங்கள் இருவரின் அதிகாலை அலறல் ஊரார் அனைவருக்குமே ஓர் ஆனந்த இசைவாத்தியம்.

இயற்கை எமக்களித்த இசையோசை நீ.

அன்று பெரியோரின் கட்டுப்பாட்டில் குடும்பத்தின் பொருளாதாரம்.

பெரியோரின் சம்பாத்தியத்தில் சிரியோர்கள். கூட்டுக் குடும்பங்கள் ஒவ்வொரு வீதியிலும் பொன்னலங்காரமாய். இன்று சிரியோர்களின் சம்பாத்தியத்தில் பெரியோர்கள். தனிக் குடும்பங்கள் சுய நலவாதமாய். ஓ சிட்டுக் குருவி. அன்று மொட்டை மாடிகளும் ஜன்னல்களும் உன் விளையாட்டுத் தளங்கள். விவசாயத்தில் நாங்கள் மட்டுமா உண்டு களித்தோம். நீயும் தானே. இப்போது அனைத்துக் காய்கறிகளும் வேதிப் பொருள்களின் ஆதிக்கத்தில். அறிந்தே உண்கிறோம் மனிதர்கள் நாங்கள். சிறு மூளைகொண்ட நீயோ மேற்கொள்கின்றாய் உண்ணாவிரதம்.

இன்று. அடுக்கு மாடி வீடுகள் உனக்குச் சொன்னது குட் பை.
செல்போன் டவர்கள் உன்மேல் எய்கின்றன தொடர் அம்புகள்.
நெற்கதிர்களோ வேறு சில ஊர்களில் பத்திரமாய் பிலாஸ்டிக் பைகளில்.
அது ஒலுகவும் இடமில்லை. உனக்கு உண்ணவும் விதி இல்லை.
இன்று. நீ எங்கே போனாய் என உன்னைத் தேடித்திரிகிறான் மனிதன்.
ஆனால் அவனிடமோ கொஞ்சம் நஞ்சமாகக் காட்சி தரும் நீ சொல்லும் கடைசிச் செய்தி.

இன்று நான்……
நாளை நீ……
ஓ மனிதா!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: Mohamed Salih (Kayalpatnam) on 30 March 2012
IP: 121.*.*.* India | Comment Reference Number: 20670

மாஷா அல்லாஹ்..

கட்டுரை மிக அருமை .. கடந்த வாரம் தான் எனக்கு ஒரு மெயில் வந்தது சிட்டுக் குருவி பற்றி ..

சரி நாம் இதை பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன் .. சகோதரர் எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம் சொல்லாம கொல்லாம களத்துல இறங்கி சூப்பர் ர மிக அருமையான கட்டுரை கொடுத்து விட்டார் ... எல்லா புகழும் வல்ல இறைவனுக்க ...

காயல்பட்டணத்தில் உண்மை ல ஆண்டு 1980.வரை பிறந்தவர்கள் இந்த சுகமா சிட்டுக் குருவிஇன் சில்மிசங்களை பார்த்து இருக்கலாம் .. அந்த விசயத்துல நான் கொடுத்துவச்சவன் தான் ... என் மகன் காலங்களில் இந்த இனம் இருக்கும் என்பது சந்தகம் தான் ...

என்னுடைய கருத்து.. சிட்டுக் குருவி படம் போட்டு இருந்தால் கட்டுரை படிப்பர்வர்ககுக்கு இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று ...

சரி சரி. நண்பர் அடுத்த முறை கட்டுரை எழுதும் போது கொஞ்சம் சொல்லிட்டு எழுதுங்கப்பா .. அப்பதான் நாங்க வேற தலைப்புல எழுத ட்ரை பன்னுறேன்..

இந்த சின்னபுள்ள ஒரு கட்டுரையை எழுத ரெம்ப நாள் எடுக்குது . அதுக்குள்ள .gap la கடா வெட்டுறீங்கள ... காக்கா...

மீண்டும் ஆசிரியர்: எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ...

இந்த கட்டுரை படிக்கும் அனைவரும் முடிந்த வரை சிட்டுக் குருவி யை காக்க உங்கள் வீடுகளில் சின்ன தட்டில் தண்ணீர் , அது உண்ணும் உணவு , வையுங்கள் .. தோட்டத்தில் கூடு கட்டு கள் ..

உங்கள் பிள்ளைகளுக்கு அழியும் இனத்தை பார்க்க வாய்ப்பு கொடுங்கள் ...

என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ். கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: s.h abubacker siddiq (tiruchy) on 30 March 2012
IP: 210.*.*.* India | Comment Reference Number: 20672

assalamu alaikum ...sameemul islam kaka masha allha very nice your essay conguratulation ............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) on 30 March 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20673

என் அருமை தம்பி S .K .ஷமீமுல் இஸ்லாம் உடைய கட்டுரை மிக அருமை. அந்த நாள் நினைவுகள் எம் மனக்கண் முன்னே தோன்றுகின்றன.

எமது கீழ் பகுதியிலே எத்தனை குளங்கள் மாட்டு குளம், கீறி குளம், ஒன்றாம் தருவை, (நோன தோட்டம் அருகில்), இரண்டாம் தருவை கற்புடையார் பள்ளி அருகில் இப்படி பல குளங்கள் மழை காலம் வந்து விட்டால் பல்வேறு பறவைகள் பல நிறங்களில் நிரிந்து காணப்படும். மழையில் குளிக்கும் சுகமே தனி. எங்கு நோக்கினும் வீட்டிற்கு பின்னல் கொல்லை என்னும் தோட்டம். அதிலே காய்கறிகள் விதை தூவி அவை வளர்ந்து பாகை, புடலை, பீர்கங்காய்,அவரை கொடிகள் கட்டி காய்த்து தொங்கி அதனை பறித்து சுற்றம் சூழ அனைவருக்கும் கொடுத்து வாழ்ந்த மகிழ்ச்சியான காலம் எம் கண் முன்னே நிழலாடுகிறது.

அந்த தோட்டங்கள் எங்கே ? எல்லா வீடுகளிலும் ஆடு , கோழிகள் இட வசதி உள்ள வீடுகளில் மாடுகள். அய்யகோ இனி அந்த காட்சிகளை பொருட்காட்சியில் தான் பார்க்க முடியுமோ அந்த நாள் நினைவுகள் நெஞ்சிலே வந்ததே நண்பனே , நண்பனே நண்பனே என்ற வரிகள் இப்போது நினைவுக்கு வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: mackie noohuthambi (colombo) on 30 March 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20675

சிட்டுக்குருவி....அடடா எத்தனை ஏக்கங்கள் உங்கள் உள்ளத்தில்.

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப்பிரிந்த போன கணவன் வீடு திரும்பல. பட்டு மெத்தை விரிச்சி வச்சேன் சும்மா கிடக்குது, பசும்பாலை காய்ச்சி எடுத்து வைத்தேன் ஆறிக்கிடகுது தலையை வாரி பூமுடித்தேன் வாடி வருகுது சதா தெருவில் வந்து நின்றுநின்று காலும் கடுக்குது, அவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது.... இது ஒரு மனைவி தன கணவனை எதிர்பார்த்து உதிர்க்கும் கவிதைகள்.

தன ஆசையை காதலை, காதலனை ஆசை நாயகனை எப்படி எதிர்பார்த்திருக்கிறாள் என்பதை எவ்வளவு நளினமாக சொல்கிறாள், இதற்கு ஒரு சிட்டுக்குருவியை துணைக்கு அழைக்கிறாள்.

உங்கள் தந்தையும் நானும் கண்டியில் கழித்த நாட்களும் இப்படிதான். நீங்கள் சொல்லித்தான் சிட்டுக்குருவிக்கு என்று ஒரு நாள் இருப்பதாக அறிந்தேன். அந்த குருவிகளை வைத்து அல்லாஹ் ஒரு யானைப்படயையே அழித்தான் என்ற செய்தியும் நினைவுக்கு வருகிறது.

மற்றப்படி எங்கள் வீட்டுக்கு மூடை மூடையாய் நெல் மணிகள் அன்றும் வந்ததில்லை இன்றும் வருவதில்லை எங்கள் வாழ்க்கையே சிட்டுக்குருவியின் வாழ்க்கைபோல் அவ்வப்போது இரை தேடி வயிற்ரை நிரப்பி இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை சிட்டுக்குருவிகள் நமக்கு பாடம் படித்து தருகின்றன. சில சிட்டுக்குருவிகள் போன்று உயரே பறக்கும் மனிதர்கள் தங்களை பருந்து என்று நினைத்துக் கொள்வதையும் இந்த காலத்தில் காண முடிகிறது. அவர்களுக்கும் இந்த சிட்டுக்குருவி கட்டுரை ஒரு கண் திறக்கும் காரணியாக அமையட்டும். வாழ்த்துக்கள். மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: hylee (colombo) on 30 March 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20676

ஒரு அழகான சிட்டான கட்டுரை வாழ்த்துக்கள்.வருங்காலத்தில் twitter சிட்டுக்குருவியை பிள்ளைகளுக்கு காட்டினால் புரிந்து கொள்வார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 30 March 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20677

ஷமீம், உண்மையிலேயே மிக அருமையான ஒரு கட்டுரை. நம் இளமைக் காலங்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டாய் போ....

ஆமா, அது என்ன சிட்டுக்குருவி தினம். அன்னைக்கு சிட்டுக்குருவிக்காக என்ன செய்யுறாங்களாம்! குறைந்தபட்சம் ஒரு மொபைல் டவரையாவது இந்த உலகத்துல இருந்து நீக்குவாங்களா? அல்லது இதுவும் மற்ற தினங்களைப்போல அமெரிக்கர்கள் தங்கள் பொருட்களையும் கொள்கைகளையும் சந்தைப்படுத்த உபயோகிக்கும் ஒரு நாள்தானா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: mohideen fathima (tirupattur) on 30 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20678

அருமையாக இருந்தது.nice


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: சாளை S.I.ஜியாவுத்தீன் (?????????) on 30 March 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20679

அருமையான, சுருக்கமான, பழைய பல நினைவுகளை கிளறி விட்ட கட்டுரை. தம்பி எஸ்.கே. எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

- கோட்டை கோட்டையாக நெல் மணிகள் வந்த காலம்.

-மொட்டை மாடியில் காயப்போட்ட நெல்லை கொத்த கூட்டம் கூட்டமாக வந்த சிட்டுக் குருவிகள்.

- நிறை மாத கர்ப்பிணியான எங்கள் வேலைக்காரி ஒரு மூடை நெல்லை, அரிசி மில்லுக்கு தலையில் சுமந்து, அடுத்தநாள் இடுப்பில் குழந்தையுடனும், அரிசியுடனும் வந்த நினைவுகள். ( யார் சொன்னாலும் அதை காதில் கேட்காமால் நிறைமாதத்திலும் உழைத்து, உடை மரக்காட்டில் குழந்தையை பெற்று, சர்வ சாதாரணமாக அடுத்த நாள் வேலைக்கு வந்த அவள், உண்மையில் வீர தமிழச்சி தான்.)

- பல வைபவங்களுக்கு, மாட்டு வண்டிகளில் வரும், முக்கால் முழ சைசில், சீப்பு சீப்பாய் நாட்டு வாழைப்பழங்கள்.

இப்படி பல நினைவுகளை திரும்பவும் ரீவைன்ட் பண்ணிவிட்டது இந்த கட்டுரை...தொடரட்டும் உங்களின் ஆக்கங்கள் ..

ஆமாம், சிட்டுக்குருவி லேகியத்துக்கும், சிட்டுக்குருவிக்கும் சம்பந்தம் உண்டுமா?

சாளை S.I.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: Raiz (Sydney) on 30 March 2012
IP: 120.*.*.* Australia | Comment Reference Number: 20680

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பர் ! மிக சிறிய சிட்டு குருவியை வைத்து எவ்வளவு பெரிய எச்சரிக்கை மணியை அடித்து இருக்கிறார் சகோதரர் சமீம்!

அருமையான உரை நடை ! எளிமையான சொற்கள் ஆனால் வலிமையான விஷயம் ! சகோதரர் சமீம் நமதூரின் அருமையன சொத்து !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: Firdous (Colombo) on 31 March 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20681

நெஞ்சை தொட்ட கட்டுரை! ஷமீம் காக்கவிற்கு பல நன்றிகள். இக்கட்டுரை மூலம் கொடுத்த படிப்பினை மிக அருமை. வளர்க உங்கள் எழுத்து வண்ணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: SEYED ALI (ABUDHABI) on 31 March 2012
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20682

அடைக்கலக்குருவி என்ற பெயருக்கேற்ப இந்த சின்னஞ்சிறு அழகு பறவைகள் வைகறை பொழுது விடிந்து விட்டதே என்று தன் கீச்சுக்குரலால் காகத்தின் கரையும் பாட்டிற்கு பல்லவி சேர்ப்பதுபோல் குரல் கொடுத்து நம்மிடம் அடைக்கலமாக வந்த போது இப்போது அதை நினைத்தாலே நெஞ்சம் நெகிழுகிறது.

ஷமீம் அவர்கள் எழுதிய இந்த கட்டுரை அந்த அடைக்கலக்குருவிக்கே சமர்ப்பணம்.ஆனால் தன் சந்ததிகளை பற்றியே அக்கறை கொள்ளாத நாமோ இந்த குருவிகளை பற்றியும் அணில்களை பற்றியும் அக்கறை கொள்ள நேரம் ஏது.

யார் அங்கெ ஏ கொத்தனார் ! அந்த முடுக்கு ஓடை இவற்றையும் கொஞ்சம் ரோட்டையும் இழுத்து என் வீட்டுக்கொல்லைக்காக கோட்டைகட்டு போட்டுவிடு. பிரச்சனை வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்வோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: kithuru mohamed abbas (Dammam) on 31 March 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20683

அஸ்ஸலாமு அழைக்கும்

சமீம் உனது கட்டுரை அருமையாக இருந்தது நான் ஸ்கூலில் படிக்கிற காலத்தில் சிட்டுகுருவி என்ற அடிக்கலாம் குருவி எங்கள் வீட்டு மாடியில் கூடுகட்டி இருந்தது மக்ரிப் பாங்கு சொன்ன உடன் கரெக்டாக அந்த கூட்டில் வந்து அடையும் அதைமாதிரி காலையில் இரைதேட புறப்பட்டுவிடும் அந்தகூட்டை நாங்கள் கலைக்காமல் வைத்து இருந்தோம் அதை எல்லாம் இப்பொழுது இந்த கட்டுரை மூலம் ஜாபகபடுதி விட்டாய் மலரும் நினைவுகள் மறக்க முடியாத கட்டுரை சிட்டுக்குருவியை கண்டால் உனது கட்டுரையின் ஜாபகம் தான் வரும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 02 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20685

"சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கிது சொந்த வீடு
உயர உயர பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு......."

என்ற கண்ணதாசன் பாடலையும்

சிட்டுகுருவி பாடுது அதன்
பெட்டை துணையை தேடுது

என்ற ஜெயகாந்தன் பாடலையும் இனி சிட்டுக்குருவியின் நினைவு பாடலாக பாட வேண்டியதுதான்.செல்போன் கோபுரங்களின் வரவால் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்றும் சொல்லப்படுகிறது.

தம்பி ஜியாவுத்தீனுக்கு சிட்டுகுருவி லேகியம் பற்றி என்ன கவலை ?எதுவும் வியாபாரம் செய்ய போகிறாரா../


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ஓ சிட்டுக் குருவி! உன் ஞா...
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 12 April 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20719

http://www.thenational.ae/news/world/south-asia/as-trees-fall-silent-in-urban-india-naturalists-speak-up


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved