Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:41:00 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 214
#KOTWEM214
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 25, 2016
ஒப்பற்ற தலைவரின் ஆட்சியும், ஒன்றுமில்லாதவர்களின் காட்சியும்!

இந்த பக்கம் 3378 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“உமரின் ஆட்சி இங்கு வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைந்த இந்தியா உருவாகும்” என்றாராம் தேசத் தந்தை மகாத்மா காந்தி... இன்று இந்த காந்தி தேசத்தில் காந்தியையே இருட்டடிப்பு செய்ய நினைக்கும் ஒரு கூட்டம்...

கள்ள நோட்டு அழிப்பு... கறுப்புப் பண ஒழிப்பு... என தங்கள் அடுத்த நாடகத்தை ஆரம்பித்து விட்டார்கள். பெரும் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள்தான் கறுப்புப் பணங்களின் அஸ்திவாரம் என்று கூறிக்கொண்டு, அதை செல்லாததாக்கியவர்கள் அதை விட பெரும்... மதிப்பு கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தி தங்கள் உண்மையான நோக்கம் அதுவல்ல என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து காந்தியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதன் ஆரம்பக்கட்டம்தான்... மூ.மேத்தா அவர்கள் சொன்னது போல, ரூபாய் நோட்டின் ஒரு பக்கம் கண்ணாடி போட்ட காந்தி... மறுபக்கம் காந்தியை போட்ட கண்ணாடி...





அவர்களின் புராண இதிகாச நம்பிக்கைப்படி, யாருக்குமே புரியாத அவர்களின் தேவர்கள் மட்டுமே பேசக்கூடியதாக அவர்கள் நம்பும் தேவநாகரி எழுத்துக்களில் எண்கள்... என்று ஆட்சியில் இருக்கும் எஞ்சிய இரண்டரை வருடங்களில் நாட்டின் ஒட்டுமொத்த வர்ணத்தையும் மாற்றுவதின் அச்சாரமாகவே ரூபாய் நோட்டின் வர்ணத்தை பஞ்சு மிட்டாய் கலருக்கு மாற்றியிருக்கிறார்கள்... அதுவும் எழுத்துப் பிழைகளோடு... நாட்டின் மானத்தைக் காற்றில் பறக்க விட்டிருக்கிறார்கள்.

வட்டியின் பக்கம் போக வேண்டாம் என வங்கியை விட்டும் ஒதுங்கியிருக்கும் முஸ்லிம்கள்...

வங்கி ஊழியர்களின் ‘பலமான’ உபசரிப்புக்குப் பயந்து வங்கிப் பக்கம் போவதையே வெறுத்தொதுக்கும் ஏழை மற்றும் சிறு வியாபாரிகள்



பாமர மக்களை விழி பிதுங்கச் செய்யும் வங்கி நடைமுறைகளுக்கு அஞ்சியே வங்கிகளை நாடாது வாழும் நாட்டின் முதுகெலும்பான கிராமத்து மக்கள்

வேலைப் பளுவின் காரணமாக வங்கியின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காத இல்லத்தரசிகள்





என இவர்களையெல்லாம் ஒட்டு மொத்தமாகக் குறி வைத்து வங்கிகளின் வலைக்குள் இவர்களை இழுத்துப் போடப் பொறி வைத்திருக்கிறது இந்த அரசாங்கம்!

இல்லத்தரசிகள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த சிறுவாட்டுக் காசு முதல்... மீனவர்கள் விற்ற கருவாட்டுக் காசு வரை... வங்கிகளுக்குள் கொண்டு வந்து... அந்தப் பணங்களை எல்லாம் அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் கடன்களாக வாரி வழங்கி... மக்களின் கரங்களில் தூசு படாத திருவோட்டைத் தர தயாராகிவிட்டது.

அலைபேசிகள் வந்ததுதான் வந்தது... “லோன் வேணுமா...!” “லோன் வேணுமா...!” என்று நம் கழுத்தைப் பிடித்துக் கடனில் தள்ளும் பசப்பு வார்த்தைகளும், இனிப்புத் தூவிய கசப்பு விஷங்களும்... ஏற்கனவே நெட்டித் தள்ளுகிறது. இப்போதோ... இதெல்லாம் வேண்டாம் என்று அமைதியாக ஒதுங்கி இருப்பவர்களையும் வம்படியாக வங்கி வலைக்குள் சிக்க வைத்து... இருக்கிற கோவணத்தையும் அவிழ்த்து விட ஆளாய்ப் பறக்கிறது இந்த அரசாங்கம்..

இதுதான் டிஜிட்டல் இந்தியாவாம்...! கேஷ்லெஸ் இந்தியாவாம்...!! இங்கு எழுபது சதவீத மக்களுக்கு கஞ்சிக்கே வழியைக் காணோம்...!! அவர்களைக் கடன் அட்டையில் காய்கறி வாங்கு என்று கூறி, போகாத ஊருக்கு வழி காட்டுகிறார்கள். இதுநாள் வரை... இருக்கிறவனை எல்லாம் அரை கிலோ சர்க்கரை வாங்கவும் அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூப்பர் மார்கெட்டிற்கு காரில் பயணிக்க வைத்து, வேண்டாத பொருட்களை எல்லாம் ஆயிரக்கணக்கான ரூபாய்க்குத் தலையில் கட்டி கடன் அட்டையைத் தேய்த்து தேய்த்து அவன் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பது போதாது என்று இப்போது இல்லாதவர்களையும் தங்கள் கைப்பொம்மைகளாக்கி ஆட்டுவிக்கும் பொம்மலாட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

கல்வி, மருத்துவம் போன்ற மக்கள் சேவைகளையெல்லாம் தனியார்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு..., தனியார்களுக்கும், பெரும் பண முதலைகளுக்கும் வால் பிடிக்கும் ஓர் அரசாங்கம்... ஏழை பாலைகள் சம்பாதித்த பணத்தையெல்லாம் கால் கடுக்க வங்கியின் காலடியில் கொண்டு வந்து கொட்ட... அதை அப்படியே அலேக்காகத் தூக்கி பெரும் பணப் பெருச்சாளிகளுக்குக் கடன் தள்ளுபடி என்ற பெயரிலே அள்ளிக் கொடுக்கும் ஓர் அரசாங்கம்... இன்னுமா நாங்கள் உங்களை நம்புகிறோம் என்று கனவு காண்கிறீர்கள்...???

சேத்துல நிற்கிற விவசாயி இதுவரையிலும் சேட்டுக் கடையில் மட்டும்தான் தன் வாழ்வை அடகு வைத்துக் கொண்டிருந்தான்... இப்போது கூடவே அரசாங்க சேட்டுகளிடமும் தன் வாழ்வை அடமானம் வைத்து, இருக்கிற மிச்ச சொச்சத்திற்கும் வேட்டு வைக்கும் வேலைதான் இது...

கடனே வேண்டாம் என கண்ணியமாய் ஒதுங்கி வாழ்பவனின் கையிலும் கடன் அட்டைகளைத் திணித்து, “நான் உலக வங்கியிடம் கடன் வாங்குகிறேன். நீ என்னிடம் கடன் வாங்கு...” என்று உங்களுடன் சேர்த்து எங்களையும் உடன்கட்டை ஏற வைக்கிறீர்கள்... மக்களை கடன் வாங்க வைத்து விட்டு பின்னாடியே குண்டர்களையும் அனுப்பி அவர்களை மிரட்டி வாழ்வின் விளிம்பிற்கே தள்ளி விடும் நீங்கள் மல்லைய்யாக்களையும், மாஃபியாக்களையும் இரகசியமாகத் தப்ப வைத்து விட்டு, சத்தமில்லாமல் அவர்களது கடன்களையும் தள்ளுபடி செய்து விட்டு... மக்களின் காவலர்கள் என வேஷம் கட்டுகிறீர்கள்.

நபிகளாரின் காலத்தில்... கடன் சுமையோடு மரணிக்கும் எந்தவொரு மனிதனுக்கும் அதனை அடைக்க வழியில்லை எனில் அரசாங்கக் கருவூலத்திலிருந்து அந்தக் கடனுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது அண்ணலாரின் ஆட்சி... ஏட்டுப் பொருளாதாரமும், வறட்டுப் பொருளாதாரமும் பேசும் உலகிற்கு இது ஒரு வரலாற்றுப் பாடம்... தனி மனிதனுக்கு எவ்வாறு பொருளாதாரப் பாதுகாப்பைக் கொடுப்பது என்பதை இஸ்லாமில் படியுங்கள்...!

ஒருவன் தன் வாழ்நாள் முழுக்க வியர்வை சிந்தி... ஓடி உழைத்து... சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்தப் பணத்தை... வரியும், வட்டியும்... அபராதமுமாய் ஒட்டுமொத்தமாய் உறிஞ்சி மக்களை ஓட்டாண்டியாக்கும் ஆட்சியாளர்களே...!

வசதி படைத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்திற்கு மேல் சேர்த்து வைத்திருந்தால், தங்கள் செல்வத்திலிருந்து இரண்டரை சதவிதம் கட்டாயமாக ஜகாத் என்னும் ஏழைவரி செலுத்த வேண்டும் என்பதை வணக்க வழிபாடுகளில் ஒன்றாகவே இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.

இரண்டரை சதவிதம் என்பது மக்களை உறுத்தாத, அவர்களின் உழைப்பை உறிஞ்சாத, மக்களால் மகிழ்வுடன் வழங்கப்படக்கூடிய நியாயமான அளவாகும்.

பெரும் வெற்றி பெற்ற இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கைகளை உங்கள் வழிகாட்டியாய்க் கொண்டு செயல்படுத்திப் பாருங்கள்! அதனை நாட்டு நலனுக்கும், ஏழைகளின் உயர்வுக்காகவும் மட்டுமே செலவழித்துப் பாருங்கள்!! நீங்கள் அள்ளிக் கொடுத்தாலும் வேண்டாம் என மறுக்கின்ற தன்னிறைவு பெற்ற குடிமக்களைக் கண்ணாறக் காண்பீர்கள்...

‘ஜகாத்’ என்னும் சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தின் மூலம் தன்னிறைவு பெற்ற மக்களைக் கொண்டு வெற்றியை நிலைநாட்டியது இஸ்லாம். உமர் [ரலியல்லாஹு அன்ஹு] அவர்களின் ஆட்சிக் காலத்தில் மக்கள் எல்லாம் ‘ஜகாத்’ வழங்கும் நிலைக்கு உயர்ந்த காரணத்தால் ‘ஜகாத்தை’ப் பெறுபவர்கள் யாருமின்றி அரசாங்கக் கருவூலம் நிரம்பி வழிந்தது...

அதை விடுத்து எங்கள் வரிப் பணங்களை எல்லாம்... ஓட்டுக்கு நோட்டாகவும், உங்கள் கோட்டுக்கும்... வீட்டுக்கும்... நீங்கள் உலகம் சுற்றுவதற்கும்.. உங்கள் மினரல் வாட்டருக்கும்... டெலிபோன் பில்லுக்கும்... என்று ஊதாரித்தனமாய் செலவளிக்கும் நீங்கள், நபிகளாரின் எளிய வாழ்க்கை முறையை ஒருமுறையேனும் படித்துப் பாருங்கள்...!

அகில உலகத்தின் அருட்கொடை என்ற அந்தஸ்துடன் கூடிய ஆன்மிகத் தலைவராய்... உயிரையும் அவருக்காகத் தரத் தயாராக இருந்த லட்சோப லட்சம் மக்களின் ஆட்சித் தலைவராய்... அண்டை நாட்டு மன்னர்களும் கூட மரியாதையோடும், கண்ணியத்தோடும், மனதிலிருத்திய மாமன்னராய்... இருந்தாலும் கூட...

அவரது விட்டிலும் கூட மூன்று நாட்கள் சேர்ந்தார்ப் போல் அடுப்பெரிந்ததில்லை...

பல நேரங்களில் அடுத்த வேளை உணவுக்கும் கூட வழியின்றி தனது பணியாளரானன அனஸ் [ரலியல்லாஹு அன்ஹு] அவர்களிடம் உணவு கேட்டுப் பெற்றுப் பசியாறிய கொடுமை...

பசியின் காரணமாக வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு களப்பணியாற்றிய கடுமை...

தன் மரணத்தின்போது கூட ஒரு யூதரிடம் தன் கவசத்தை அடமானம் வைத்திருந்த ஏழ்மை...

முள்ளு முள்ளாக முதுகில் குத்திய கோரைப் புல் படுக்கையில் படுத்துறங்கிய வறுமை...

பட்டினியோடு இருந்தாலும் மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாவும் எடுக்காதது மட்டுமல்ல... பாவமேயறியாத பச்சிளங்குழந்தையான தம் பேரர் பைத்துல்மால் பொதுக் கருவூலத்திலிருந்து ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து அதன் பிஞ்சு வாய்க்குள் போட்டுச் சுவைக்க முற்பட்டபோது, பச்சைப் பிள்ளைதானே என்று விட்டுவிடாமல், “துப்பு! துப்பு!! இது நமக்கு விலக்கப்பட்டது!!” என்று கூறி துப்பச் செய்து, உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நேர்மை...

இதுதான் நபிகளாரும், அவர் வழி வந்த கலீஃபாக்களும் வாழ்ந்து காட்டிய எளிய வாழ்வு...

பத்து இலட்சம் ரூபாய்க்கு ஆடை அணிந்துகொண்டு, ஊரான் வீட்டுக் காசில் ஊர் சுற்றும் நவீன நீரோ மன்னர்களே...! நபிகளார் வாழ்ந்தது போன்றதொரு எளிய வாழ்வை உங்களால் கற்பனையிலும் கூட வாழ முடியாது... குறைந்தபட்சம் உங்களை நம்பி ஓட்டுப் போட்ட மக்களிடம் நரித்தனமாகவாவது நடக்காதிருங்கள்!!!

பசுவை தெய்வமெனக் கூறிக்கொண்டு, பசுத்தோல் போர்த்திய புலியாய் பவனி வருபவர்களே...!

மக்களாகிய நாங்களெல்லாம் உங்களுக்கு சோதனை எலிகளாகி விட்டோமா...! நாங்கள் உழைத்துச் சம்பாதித்த எங்களது பணத்தை எடுப்பதற்கே பிச்சைக்காரர்கள் போல் எங்களை நடுத்தெருவில் நிற்க வைத்தீர்களே...? எதிர்த்துக் கேட்டால் ஒன்று உங்கள் தொண்டர்களைக் கொண்டு தேசத்துரோகப் பட்டம் கட்டுகிறீர்கள்... அல்லது காவல்துறையைக் கொண்டு குண்டாந்தடி நடத்துகிறீர்கள்...

முரட்டுத் தோற்றம் கொண்ட ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து... “ நீங்கள் பங்கு பிரித்ததில் நீதமில்லை...” என்று நபிகளாரின் ஆடையைப் பிடித்து உலுக்கிக் கேட்கிறார்... கோபமுற்ற தோழர்களோ அடிக்கப் பாய்கிறார்கள்... பொறுமையாக அவர்களைக் கையமர்த்திய நபிகளார்... “விடுங்கள்...! பங்கிலே உரிமையுடையவர்களுக்கு அதனை கேட்கவும் உரிமையுள்ளது.” என்றார்களே...?

ஆடு மாடுகளைப் போன்று என்பது கூட மிருக வதைச் சட்டத்தில் வருகிறது... ஆடு மாடுகளை விட மோசமாக மக்களை அடிக்கும் உங்கள் ஏவல் துறையினரும்... நாக்கூசும் வார்த்தைகளால் மக்களை அர்ச்சிக்கும் வங்கி ஊழியர்களும்...

“கர்மெ ஷாதி ஹை! பைசா நஹி ஹை!!”
(வீட்டில் திருமணம், ஆனால் பணம் இல்லை.) என்று மக்களைப் பார்த்து எள்ளி நகையாடிய நீங்களும் நபிகளாரிடம் நாகரீகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்...

போர்க்காலங்களில் கூட எதிரிகளின் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற கடுமையான எச்சரிக்கையுணர்வுடன் தர்மத்தைக் கடைப்பிடித்த நபிகளாரின் ஆட்சி முறையோடு... பட்டத்து யானை நடந்து வந்தால் எறும்புகள் சாகத்தான் செய்யும்... என்ற அகந்தையுடன் நடந்துகொள்ளும் இவர்களது கொடூர மனோபாவத்தை ஒப்பிட்டுப் பார்க்க ஒட்டுமொத்த மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

“நூற்று முப்பத்து எட்டு கோடி மக்களில்... ஓர் ஐம்பது பேர் தேசத்திற்காகப் பலியாவது ஒன்றும் பெரிதில்லையே...?” என்று மனித உயிர்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்தவர்களையெல்லாம் உலக வரலாறு தூக்கி வீசியிருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்! கார்ப்பரேட்களை எல்லாம் கவனமாகக் காப்பாற்றி விட்டு... வெளிச்சத்தில் நீங்களாகவே வாரிக் கொடுத்த கறுப்புப் பணங்களை... இங்கே ஏழைகள் வீட்டு இருட்டில் தேடித் திருடுகிறீர்கள்...

உங்களது இந்தத் திட்டத்தினால் கறுப்புப் பணங்களை ஒழிப்பது சாத்தியமில்லை என்றும், பல்வேறு நாடுகளில் ஏற்கனவே தோல்வியைத் தழுவியத் திட்டம் இது என்றும் - நாட்டின் தலைசிறந்த பொருளாதார மேதைகள் எல்லாம் தலையில் குட்டிய பின்னரும்... “எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும்..., இதனால் எத்தனை மக்கள் செத்து மடிந்தாலும், எதையும் திரும்பப் பெறுவதென்பது என் இரத்தத்திலேயே ஊறிய ஒன்றல்ல” என்ற இறுமாப்புடன் நடந்துகொள்வது ஒரு மக்கள் தலைவனுக்கு அழகல்ல!

பேரீத்தம்பழங்களை ஒட்டுப் போட்டு விவசாயம் செய்துகொண்டிருந்த மக்களிடம், “அவ்வாறு செய்ய வேண்டாம்!” என்று நபிகளார் தடுத்தபோது, மக்களோ.. அதில்தான் தங்களுக்கு அதிக மகசூல் கிடைக்கிறது என்று கூறினார்கள்... “இறைமார்க்க விஷயத்தில் நான் கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படுங்கள்...! உலக விஷயங்களில் என்னை விட நீங்களே அதிகம் அறிந்தவர்கள்...” என மக்களின் மன விருப்பத்திற்கு மதிப்பளித்தார்கள் அண்ணல் நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்கள்...

அதனால்தான் இன்றும் கோடானுகோடி மக்களின் உள்ளங்களில் மக்கள் தலைவராக வீற்றிருந்து உலகின் ஒவ்வொரு நொடியும் அவர்கள் மீது அருள்மழை பொழியும் பிரார்த்தனைக்குக் சொந்தக்காரராக இருக்கிறார்கள்...

மக்களைப் பற்றியும், மக்களின் மனோநிலையைப் பற்றியும் சிறிதும் கவலைப்படாமல்... மல்லையாக்களையும், மாடுகளையும் வைத்துக் கொண்டாடும் நீங்கள் மக்கள் தலைவர்களா...? அல்லது மாடுகளின் தலைவர்களா...? என்பதை வரும் தேர்தலில் மக்கள் நிரூபிப்பார்கள்.

உங்கள் தகிடுதத்தங்களை மறைக்க தேசபக்தி ஜரிகை சுற்றாதீர்கள்...

எங்கள் காதுகளில் இதுவரை சுற்றியது போதும். சுருட்டியது போதாது என்றவுடன் ஏழைகளின் பணத்தை சுருட்டி சூவாணம் விட வந்த திட்டம் இது என்பதை மக்கள் உணர்ந்தேதான் இருக்கிறார்கள்.

ஜனநாயகம் வெல்லும்!!!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அருமையான ஆக்கம்
posted by: Akbar Basha (Jeddah) on 25 November 2016
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44939

உண்மையை உறக்கச் சொல்லியுள்ளார் இவ்வாக்கத்தின் ஆசிரியை. உறங்குபவர்களை எழுப்பலாம். உறங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப இயலுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...கட்டுரைக்கான கருத்து
posted by: Sumaiya Bushriya (Chennai) on 27 November 2016
IP: 168.*.*.* | Comment Reference Number: 44944

மக்களுக்கு உரக்க சொல்ல வேண்டிய கருத்து . அறிவுள்ளவர்கள் நிச்சயமாக படிப்பினை பெறுவார்கள்.

இன்ஷா அல்லாஹ் உங்கள் எழுத்துக்களால் மாயா வலையில் சிக்கி இருக்கும் மக்களை அல்லாஹ் விடுவிப்பானாக .

மேலும் மேலும் உங்கள் சமுதாய பணி தொடர வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சந்திரமதியின் புலம்பல்
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 04 December 2016
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44963

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

இந்தக்கட்டுரையைப்படித்தபின் இன்றைய நம்நாட்டின் நிகழ்வுகள்படி பார்த்தோமென்றால் அரிச்சந்திர புராணத்தில் மயான காண்டத்தில் சந்திரவதி(சந்திரமதி) தன்மகனின் உடலைக்கண்டு புலம்பிய கதை நினைவிற்குவருகிறது

சந்திரமதியின் புலம்பல்
காட்டில் கண்டெடுத்த தன்மகனின் உடலை மடியில்
போட்டுக்கொண்டு இப்படிப்புலம்புகிறாள்

தனியே கிடந்தது (தனியாகக்கிடந்து)
விடநோய்செறிந்து (விஷ நோய்கண்டும்)
தரைமீதுருண்ட மகனே (தரைமீது உருண்டுதுடித்த
போதும் இறக்காத மகனே)

அநியாய வெங்கண் அரவால் இறந்த அதிபா (அநியாயமா ஒருவிஷப்பாம்பு தீண்டி இறந்துபோனாயே)

என்றுபுலம்பினாளாம் அதுபோலிருக்கிறது இதுவரை கறுப்புப்பணம்பற்றி இந்தத்தளத்தில் கட்டுரைகளும்,கருத்துக்களும் எழுதியவர்களின் நிலைபோலிருக்கிறது

தன்சொந்தப்பணத்திற்காக வாங்கிவாசலில் பிணமாகிப்போனவரைகண்டுகொள்ளாது நின்றமக்களை என்னவென்றுசொல்வது?

பணத்திற்காக அடிமையாக கால்கடுக்கநிற்கும் இந்தமனிதம்மறந்தவர்கள் தங்கள் உறவுகளுக்கு இந்தநிலைவந்தாலும் இப்படித்தானிருப்பார்களோ? அந்தமாகிவிட்ட அந்தமனிதர் யாருக்குத்தொந்தரவு செய்யாது வாழ்ந்துவந்தவர்தானே ஏன் அவருக்கு இந்த நிலமை? யாருக்கும் சொந்தமில்லாதவரா?

இது போன்றநிலை மற்றவர்களுக்குவாராதா?

ஏன் இந்த சுயநலம்?

மனிதநேயம் மாறுகிறதா?,மணிமீது நேயம் மலர்கிறதா?

எத்தனையோ உயிர்கள்பலியாகிவிட்டன
இன்னுமென்னவெல்லாம் நடக்குமோ இறைவன் இந்தமானிடத்தைக்காப்பாற்றவேண்டும் பாவம் அந்த முதியவரும் மூதாட்டியும்

நீங்கள் ஆசிரியர்கள் கோடிஉதாரணங்கள்,ஆதாரங்கள் தந்தாலும் மனிதனின் உள்ளுணர்வு பேசவேண்டு அது ஊமையானால் ஒன்றுநடக்காது.

சிந்தித்திக்கவேண்டிய விஷயங்கள் ஏராளம் தந்திருக்கிறீர்கள் அவைகளை நிந்திக்காமல் உணர்ந்தால் மனிதம் வளம்பெற்று,வெற்றிபெறும் ஜஃஜாக்கல்லாஹ் கைர்.

இது எனது தாமதமான பின்னூட்டம்தான்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved