Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:21:41 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 212
#KOTWEM212
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 18, 2016
மாற்றத்திலும் மாற்றம் வேண்டும்!

இந்த பக்கம் 2148 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“நவம்பர் 8” ஜனாதிபதி தேர்தல் என பல நாட்களுக்கு முன்பே அமெரிக்காவின் பக்கம் திரும்ப வைத்த உலக நாடுகள் அனைத்தையும் சில மணித்துளிகளிலேயே “இந்தியா” வின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்ததுதான் பிரதமரிடம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களைப் பற்றிய சங்கதி.





அண்டை நாட்டிலிருத்து கள்ளப்பண இறக்கம், கருப்புப்பண ஒழிப்பு என பலதரப்பட்ட காரணங்களை கட்டவிழ்த்தும், வருவான வரித்துறைக்கு வருவாய் போன்ற பல வியூகங்களின் அடிப்படையில் திடீரென மத்திய அரசு எடுத்த முடிவு பாமர மக்கள் முதல், அரசியல் வாதிகள், அதிகாரிகள், வணிகர்கள், சிறு வியாபாரிகள் வரை அனைவரையும் ஆட்டம் காண வைத்துவிட்டது.

நம்மில் பலரது நிலை - கையில் பணமிருந்தும் செலவழிக்க முடியாத நிலை தடுமாற்றத்தை தந்தது உண்மைதான்! இச்சூழலில் வஞ்சித்து வசைபாடுவதை விட்டுவிட்டு, இதற்கு சரியான தீர்வை எடுப்பது மட்டுமல்ல நமது சாமர்த்தியம், இன்ணொமொரு முக்கியப் பணியை நாம் செய்வதற்குத்தான் இறைவன் இதன் முலம் இப்பாடத்தை நமக்கு புகட்டியுள்ளான் என்றெண்ணத் தோன்றுகிறது.

அது என்னவெனில், இவ்வுலக வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சந்தோசமான சம்பவங்களை எண்ணி இறைவனுக்கு நன்றியுரைத்து, இதைவிட சிறந்ததை மறு உலகில் தா! என கேரிக்கை வைத்தும், ஒவ்வொரு சந்தோசமற்ற சங்கடமான நிகழ்வுகளின்போது அவனிடமே பாதுகாப்பும் பாவமன்னிப்பும் இதற்கு பகரமாக மறு உலகில் நன்மையைத் தா என தாழ்மையுடன் கேட்கும் போதும் சரி எப்போதுமே உலக வாழ்வோடு மறுஉலக வாழ்க்கையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏராளமான படிப்பினைகளையும், நல்லதொரு மாற்றங்களை நம்மில் ஏற்படுத்த வழிவகுக்கும்.

நம்மிடையே சிலர் சில நாள் முன்பு வரை 500, 1000 ருபாய் நோட்டுக்களை யாருக்கும் கொடுக்க மனமின்றியும், வறியவர்கள் பலர் யாரும் தரமாட்டார்களா? என்றெண்ணிக் கொண்டுமிருந்த நிலை மாறி இன்று “இதோ! வைத்துக் கொள்ளுங்கள்!!” என அதே பணத்தைப் பலர் கொடுக்க முன்வந்தால் கூட வாங்க மறுக்கும் சூழலானது - “ஒரு காலம் வரும், அப்போது யாரும் வாங்க முன் வரமாட்டார்கள்” என்று மறுமையின் அடையாளங்களில் ஓர் அடையாளமாக கூறிய நம் நபியின் கூற்று நம் நினைவுக்கு முன் நிழலாடி எச்சரிக்கிறது.

அரசானது அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு அதிலிருந்து விடுபட குறிப்பிட்ட காலத் தவணையில், அரசு அடையாளச் சான்றுடன் அப்பணத்தை வங்கிகளில் சமர்ப்பித்து, மாற்றுப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் படி சலுகையை அறிவித்தும் - பெரும்பான்மையோர் இப்பிரச்சனைக்கு சட்டச்சிக்கலின்றி, வருமான வரித்துறையின் பிடியில் சிக்காது வெளிவர, செல்லாக் காசாகக் கூடிய (நம் மரணத்தின் பின்) இப்பணத்தைப் பற்றி இரவு தூக்கமின்றி இன்னலுற்றுக் கொண்டிருப்பதைப் போன்று என்றாவது ஒரு நாள், நாளை மறுமையிலே செல்லாது என இதே போன்று நம் அமல்கள் எல்லாம் எடுத்தெறியப்பட்டுவிட்டால் நமது நிலை என்ன என்பதை எண்ணி, நம் தூக்கத்தை தொலைத்ததுண்டா?

எவ்விதச் சலுகையோ, காலத் தவணையோ, பிரதி ஆவணங்களையோ, பொன்னையோ, பொருளையோ, பணத்தையோ, கொடுத்து சரிகெட்ட முடியாத சூழலை எண்ணியதுண்டா? இதை நம்மில் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்துகொண்டால் சுலபமாக வெற்றியடைய வாய்ப்புண்டு நமக்கு.

(78:31) “நிச்சயமாக இறையச்சமுடையோருக்கு வெற்றியுண்டு குர்ஆனின் இவ்வசனத்தின் படி!

அல்லாஹ் நாடினால் எதையும் நொடிப்பொழுதில் மாற்றியமைக்கக் கூடிய ஆற்றலுள்ளவன்.

“நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்” என்ற இறைமறை வசனத்தைப் பலமுறை ஒதிவரும் நாம், இன்று ஒரே இரவில் பல கோடிகளை கையில் வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் கூட சில மணித்துளிகளில் சில்லறைக்காக சிங்கியடித்துக் கொண்டிருப்பதின் மூலம் இவ்வசனத்தின் ஆழம் நம்மைத் தட்டியெழுப்புகிறது. மேலும் “இவ்வுலகம் இறைவனின் பார்வையில் செத்த ஆட்டிற்குச் சமம்” என்ற இறைத் தூதரின் பொன்மொழியும் நம்மை சிந்திக்க வைக்கிறது.

புதிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “டிரம்ப்”பாக இருந்தாலும் சரி, இறைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்கும் பாரதப் பிரதமர் “மோடி” யாக இருந்தாலும் சரி! நீங்கள் மற்றவர்களை ஆட்டம் காண வைப்பதெல்லாம் சில காலம்தான். ஆனால் நீங்களே ஆட்டம் காணக் கூடிய ஒரு நாள் வருவது வெகு தூரமில்லை! அதற்கு முன் இஸ்லாமை உங்கள் வாழ்வியலாகக் கொண்டு, இறைமறை வழியின் பாலும், தூதரின் கூற்றின் பேரிலும் வாழ முயற்சித்தால் உங்களுக்கும் உண்டு வெற்றி!

இஸ்லாம் என்பது மிகவும் இனிமையானது, இறைவன் மன்னிப்பவனாகவும், கருணையாளனாகவும் இருப்பதால்தான் நம்மை இன்னும் கண்டிக்காமல் அவகாசம் தந்துள்ளான். இதை நாம் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். பணமென்னும் பேராசையால் உடன்பிறப்புக்களிடையே உறவுகள் சிதையுண்டு இருக்கும் நிலைமாறி உரியவர்களிடம் ஒப்படைத்து உன்னதமாய் ஒற்றுமையாய் வாழ முயற்சிக்க வேண்டும் மாற்றம் செய்த ஒவ்வொருவரும் மரணம் வருமுன்னே.

“பிறக்கும் போது கூட வந்தது இந்த பணமுமல்ல”
“இறக்கும் போது கூட வருவது இந்த பணமுமல்ல”
இடைப்பட்ட காலத்தில் இருக்கும் இப்பணம்
நாளை மறுமையில் நம்மை சோதனைக்குள்ளாக்கி
விடக் கூடாதென்பதில் பணத்தை கவனமாய் கையாள
வேண்டும். நம்மையறியாது கூட பணத்திற்கு
நாம் அடிமையாகி விடக் கூடாது.
அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே நாம் அடிமை!!!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. உங்களின் உண்மையை உரக்கச் சொல்லும் பாங்கு போற்றத்தக்கது...!!!
posted by: SK Shameemul Islam (Chennai) on 19 November 2016
IP: 122.*.*.* India | Comment Reference Number: 44888

காலத்துக்கேற்ற சிந்திக்க வைக்கும் அழகிய சிறிய கட்டுரையை சகோதரி பின்த் மிஸ்பாஹி சிறப்புற வழங்கியுள்ளார்.

முதலில் நான் எழுத்துமேடை உறுப்பினர் என்ற அடிப்படையில் இப்பகுதிக்கு உங்களை என் சக நண்பர்களுடன் உளமார வரவேற்கின்றேன்.

உங்களின் உண்மையை உரக்கச் சொல்லும் பாங்கு போற்றத்தக்கது.

யாரும் யாருக்கும் உதவ முடியா ஓர் உலகைப்பற்றி உண்மையாக உணர்த்தியமை உலக நாடுகளை அரசாட்சி புரிபவர்கள் யாராக இருந்தாலும் இவ்வுலகம் முடிவுற்றபின் துவங்கிடும் மறுஉலக வாழ்க்கையில் ஒவ்வொருவரும் "மாலிக்குல் முல்க்" என்னும் சர்வலோக அதிபதி முன் தன்னந்தனியே தான் கொண்டுவரப்படுவார்கள் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

ஆது, ஸமூது, ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன், அபூஜஹ்ல், வலீத் இப்னு முகீரா உள்ளிட்ட பலரது நிலை பற்றி குர்ஆன் மிகத்தெளிவாக எச்சரிக்கிறது. செல்வாக்கும் செல்வ செழிப்பும் பதவி பவிசுகளும் கொண்ட அத்தகையோர் தம்மைப்படைத்த மகாவல்லவன் குறித்து துளி அச்சமும் இல்லாமல் போனதால் நினைத்ததை செய்பவர்களாகவும் செய்ததை எண்ணி மகிழ்பவர்களாகவும் இருந்த இறுமாப்பின்போதுதான் உலகிலேயே அழிவை சந்தித்தார்கள். மறுமையோ அவர்களுக்கு இன்னும் கேடாகவே முடியும்.

குர்ஆன் இதுபோன்ற வரலாறுகளை உரைப்பது இன்று உலகில் வாழ்பவர்களுக்கு கடந்தகால கொடுங்கோன்மை மன்னர்களின் நிலை என்னவாயிற்று என்பதை உணர்த்தி படிப்பினை பெறுவதற்கேயாகும்.

எனவே இறை அச்சத்தோடு மன்னிப்பையும் உலகிலேயே தேடுவதால் எப்பேர்ப்பட்ட பாவிகளாக வந்தாலும் மறுமையில் இறைவன் நாடினால் அவர்களை மன்னிப்பான் என்று எழுத்தாளர் கூற மறக்கவில்லை.

மேலும் மக்கள் சமூகம் தம்மிடம் இருக்கும் போது பிறருக்கு கொடுத்து அடுத்தவர் துயர் துடைப்பதுதான் காலத்தால் செய்யும் நல்லறம் என்பதையும் யாரும் வாங்க மறுக்கும் நிலையில் எதைக்கொடுத்து என்ன பயன் என்பதையும் அக்கறையோடு குறிப்பிடுகிறார்.

எழுத்தாற்றல் மேலும் வலுப்பெறவும் சொல் செயல் மூலம் பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்வதற்கும் வல்ல ரஹ்மான் அருள்புரியட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஏமாற்றமேதுமில்லை மறுமைவங்கியில் சேமிக்க இம்மையில் மாற்றம் வேண்டும்
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 19 November 2016
IP: 37.*.*.* | Comment Reference Number: 44890

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

குன் என்ற சொல்லி ஆக்கியவன் அதே குன் என்ற சொல் கொண்டு அழிக்க நேரமாகாது இருந்து நேரம் நெருங்கிவிட்டதாக ஆதார அத்தாட்சிகள் அடையாளங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன

இரவில் கிடைத்த சுதந்திரம் இரவிலேயே போனது அதுதான் உலகம் எதுவும் நிலையல்ல

ஆசிரியவர்களின் விளக்கம் மிகத்தெளிவானவை அல்லாஹ் தனதுமறையில் 99வது அத்தியாயம் அல்ஃஜில்ஃஜாலில் அதிர்ச்சியில் 8வசனங்களாக தெளிவாக விளக்குகிறான் அதை மனிதன் விலக்கிக்கொள்வதாலேயே பெரும் அவதிக்குள்ளாகிறான் இம்மை வெறுமையெனஉணர்ந்து மறுமையை நினைத்தால் அவை ஒன்றுமில்லை

கலீஃபாக்கள் நாணயங்கள் நாணயத்தோடு இருந்தன அவையென்ன உலோகமோ அவற்றின்மதிப்பின்படி படைக்கப்பட்டது

இன்று அச்சடிக்கப்பட்ட வெற்றுக்காகிதங்களும் இணையதள நேரலை (online)வணிகங்களால் உலகமக்கள் நிறையவே பாதிக்கப்பட்டுவிட்டனர் இன்னும் பாதிக்கப்படுவர் ஒரேவினாடிக்குள் வல்லரசாகும் கனவிலிருக்கும் ஒருநாட்டின் நிதியின் விதிதலைகீழாகமாறிப்போனது விதியைமாற்றப்போவதாக மக்களைவீதிக்குக்கொண்டுவந்துவிட்டது

மஹ்ஷரின்வீதி இப்படியிருக்காது அங்கே அல்லாஹ் நாடியவர்களுக்குமட்டுமே நிவாரணம் கிடைக்கும் அன்றி ஒருதுளித்தண்ணீரும் கிடைக்காது

அஸ்திவாரமேயில்லாத இந்தஉலகக அரசால் நிர்ணயிக்கப்படும் விதிகளுக்குட்பட்டு முப்பது,நாற்பது விழுக்காடுகள் வரிகளாகட்டுகிறோம் ஒரே இரவில் அஸ்திவாரமிழந்தது நம்கையிருப்புகள் ஆனால் அல்லாஹ் பொறுப்பேற்கும் நமது இருலோகசொத்துசுகங்களுக்காக விதித்த ஏழைவரியாம் இரண்டரை விழுக்காடு வரியைக்கட்ட மனம்மறுக்கிறது

இன்ஷா அல்லாஹ் எஞ்சியிருக்கும் காலத்தில் ஈமானைவலுவாக்குவோம் கொடுக்கப்பட்டகடமைளைகளே நமது உடமைகளாக்குவோம் வல்ல இறைவன் நமதுமடமைகளைப்போக்கப்போதுமானவன் எழவரிகளைக்கட்டுவோம் தர்மங்கள்செய்வோம் வறுமையை ஒழிப்போம் மறுமைக்குசொத்துசுகங்கள்சேர்ப்போம் விழிப்போடும் இருப்போம் ஏக நாயன் நமக்கெதிரான சூழ்ச்சிகளனைத்தையும் முறியடித்து பாதுகாத்து நேர்வழியில் நடத்துவானாக ஆமீன்

ஜஃஜாக்கல்லாஹ் கைர் ஆசிரியைஅவர்களே தேவையான காலத்தில் கொடுக்கப்பட்ட அற்புதமான,உண்மையான கட்டுரை வல்ல இறைவன் உங்களுக்கு இருலோகத்திலும் கிருபை,றஹ்மத்செய்வானாக ஆமீன்

இறைவன் மிகப்பெரியன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...அருமையான ஆக்கம்
posted by: A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) on 19 November 2016
IP: 37.*.*.* | Comment Reference Number: 44891

அஸ்ஸலாமு அலைக்கும் ...

மாற்றத்திலும் மாற்றம் வேண்டும் என்ற இந்த கட்டுரை மிகவும் அருமை ....

தற்போதைய காலா சூழ்நிலைக்கு பொருத்தமான ஒரு அருமையான கட்டுரையை தந்த அருமை சகோதரிக்கு எனது பாராட்டுக்கள் .... அவரின் எல்லா வரிகளும் எல்லோர்களையும் நிச்சயம் யோசிக்க & சிந்திக்க வைத்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...மாற்றம்...முன்னேற்றம்...அன்பு சகோதரி
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 23 November 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44925

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இந்த இணையத்தளத்தில் ஒரு பெண்மணியின் குரல் ஓங்கி ஒலித்தது,,, உம்மு நுமைரா என்ற சகோதரியின் குரல்தான் அது. அந்த ஆக்கத்துக்கு எனது கருத்துக்களை இங்கே பதிவு செய்த போது, நமது ஊரிலே ஆலிமாக்கள் இளநிலை முதுநிலை பட்டதாரி பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்களே,,,, அவர்கள் இதுபோல் தங்கள் கருத்துக்களை துணிந்து பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

இதோ என் அன்பு மருமகன் மறைந்தும் என் நினைவில் வாழும் ஷெய்க் அப்துல் காதர் மிஸ்பாஹி அவர்களின் திருமகளார் இங்கு மாற்றத்திலும் மாற்றம் வேண்டும் என்ற ஆக்கத்தை இங்கு பதிவு செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

ஆனால் மாற்றம் பெண்களிடம் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், மோடியின் முதல் அஸ்திரம் பொது சிவில் சட்டம் அது புண்ணாக்காகி புழுத்து போய் விட்டபோது இன்னொரு அஸ்திரத்தை விட்டிருக்கிறார் அது தான் செல்லாத நோட்டுக்களாக நம் கையில் இருந்தாலும் அவை செல்லும் நோட்டுக்களாக 2017 மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கியில் ஒப்புக் கொள்ளப்படும் என்ற இன்னொரு செல்லரித்துப் போகும் அஸ்திரம்.

முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் rstv தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். உலகநாடுகளின் தலை சிறந்த பொருளாதார வல்லுனர்களும் சொல்கிறார்கள். எனவே அதை பற்றி நாம் கொஞ்சம் கவலைப் பட்டாலும் நாளடைவில் ஒரு தீர்வு வரும்.

ஆனால் நாம் யோசிக்க வேண்டியது, மறுமையில் அல்லாஹ் நமது அமல்களை இப்படி செல்லாது என்று ஒரே நொடியில் சொல்லிவிட்டால் நாம் என்ன செய்வது என்ற நியாயமான பயம்தான்.

ஆனால் அல்லாஹ் நமக்கு வினாத்தாள்களை தந்து அதற்கான விடைத்தாள்களை நமது கரங்களில் தந்துள்ளான். என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் அதற்காக நாம் இங்கே தயார் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை திருமறையும் திருநபியும் தெளிவாக கோடிட்டுக் காட்டி இருக்கிறார்கள். நாம் தான் மெத்தனமாக இருக்கிறோம் என்பதுதான் நிதர்சன உண்மை.

நமது சம்பாத்தியங்கள் ஹலாலானவைகளாக இருக்க வேண்டும். நாம் செலவழிப்பதும் அதேபோல் ஹலாலானதாக இருக்கவேண்டும். நமது வருமானத்தில் சில நிபந்தனைகளுடன் இரண்டரை விழுக்காடு மட்டுமே இறைவரி ZAKAATH செலுத்த வேண்டும். இதையே நம்மில் பலரும் சரியாக செய்வதில்லை. நோன்பு காலம் வந்தால் மட்டும் நமக்கு அந்த கவலை வருகிறது. உலமாக்களிடம் குறுக்கு கேள்விகள் கேட்டு எப்படியாவது அந்த வரியிலிருந்து விலக்கு பெற பகீரத பிரயத்தனங்கள் செய்கிறோம்.

நம் செலவினங்களை பொறுத்தவரை நமது குழந்தை பிறந்த நாள் விழா, பெயர் சூட்டும் விழா, பெண்குழந்தைக்கு காது குத்தும் விழா, பூப்பெய்திய நாள் விழா, திருமண விழா, வலீமா விருந்து விழா இப்படி தொடர்ந்து கொண்டே செல்லும் நமது இல்லத்து விழாக்களுக்கு நாம் செய்யும் செலவுகளுக்கு திருமறையும் நபிகள் நாயகமும் எந்த அளவுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. நாம் வாழ்வதற்கு தேவையான வீடுகள் அரண்மனைகளாக கோபுரங்களாக உயர்ந்து நிற்கும் அதே வேளை வீடு ஒழுகிறது, ஒரு சிமிண்டு சீட் வாங்க காசில்லை என்று நம் வீட்டுக்கு முன்னாலே வந்து நிற்கும் ஏழைகளுக்கு நாம் என்ன உதவிகள் செய்கிறோம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் அல்லாஹ் நமக்கு ஒரு சிறிய LITMUS TEST வைத்திருக்கிறான் அதுதான் இந்த DEMONETISATION.

இன்ஷா அல்லாஹ் நாம் இப்போதே ஒரு முடிவுக்கு வந்து மேலே சொன்ன நமது செலவினங்களை கட்டுப் படுத்திக்க கொண்டு அல்லாஹ் ரசூல் சொன்ன வழியில் நாம் பயணிக்க ஆரம்பித்தால் அல்லாஹ் நமது நல்லமல்களை ஏற்றுக் கொண்டு நமது அமல்களை இந்த செல்லாக் காசுபோல் தூக்கி எறியாமல் நம் மீது கருணை கூர்ந்து நம் எல்லோரையும் சொர்க்கத்தில் நுழைய வைப்ப்பான் என்ற து ஆ க்களுடன் எனது கருத்துக்களை நிறைவு செய்கிறேன்.

அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் ஆக்கங்களை படிப்பவர்களுக்கும் அதன்படி தங்கள் வாழ்க்கையை சீர்செய்து கொள்பவர்களுக்கும் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved