Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:22:15 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 143
#KOTWEM143
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 11, 2014
உலகை ரசிக்க கண்களை பாதுகாப்பீர்!

இந்த பக்கம் 4115 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இணையதள இனிய வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் முக்கியமானது. அவை பழுதாகாமல் பாதுகாப்பது நமது கடமை. நோய் உடலை தாக்கும்போது உடல் உறுப்புகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதன் நிலையை உணர்த்தும். நாம் கவனிக்காமல் நம் தொழில் வேலைகள் முக்கியம் என்று மறந்து இருக்கும் போது உடலில் பாதிப்பு வருகிறது. தரம் குறைந்த உணவுகளையும் கெட்டுப் போனது அறியாது சாப்பிட்டாலும் உடல் உடனே அஜீரணக் கோளாறைக் கொண்டு அல்லது பேதி மூலம் உணர்த்தி விடுகிறது. வாழும் இடம் அழகாக இருக்க விரும்புகிறோம். உடுக்கும் உடை நவீனமாக பளபளப்பாக இருக்க ஆசைப்படுகிறோம். ஆனால் உடலை மட்டும் கவனிப்பதில்லை. உடலின் பிரதான உறுப்பு கண் இதை நாம் கவனிப்பது கிடையாது.

கண்களை பாதுகாப்பீர்

கிரிக்கெட் விளையாடும்போது அருகில் நின்று வேடிக்கை பார்ப்பது கூடவே கூடாது. கிரிக்கெட் பால் (Ball) பலரின் கண்களில் பட்டு வேதனை செய்துள்ளது. குச்சிக் கம்பு என்ற கம்பின் வேகத்தால் கண்ணை பாதித்து இருக்கிறது. ஊஞ்சலின் கட்டை குத்தி கண்ணை இழந்த பெண் காயல் நகரில் கண் பார்வை இழந்து வாழ்ந்து வருகிறது. கண்களிடம் மிகக் கவணம் செலுத்த வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்பவர் கண்ணை பாதுகாக்க கண்ணாடி அணிந்து போக வேண்டும். பயண வேகத்தில் வயல் வரமப்புகளைத் தாண்டிச் செல்லும் போது சிறு சிறு பூச்சிகள், தூசி, மணல், துகள் கண்களை வந்து தாக்குகிறது. இதனால் உருத்தல் வலி ஏற்பட்டால் கண்களை கசக்கக் கூடாது. சுத்தமான நீர் கொண்டு கழுவிய பின் கண் சிகப்பாக மாறி வலி இருந்தால் கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். உலகை ரசிக்க கண் பார்வை மிகவும் அவசியமாகும் எப்போதும் மறக்க வேண்டாம்.

பிறக்கும் குழந்தையின் கண் பார்வையில் கவனம்

குறை மாதத்தில் பிறந்த குழந்தை அதாவது ஏழாம், எட்டாம் மாதத்தில் பிறந்த குறை மாத குழந்தையின் கண்களை உடனடியாக கவனிக்க வேண்டும். அக்குழந்தையின் கண் நரம்புகள் பாதிட்துள்ளதா என்று அறிய கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கவனிக்காமல் இருந்தால் குழந்தையின் கண்களின் பார்வை இழப்பு ஏற்பட்டுவிடும் அபாயம் உண்டு.

கண்புரையின் அறிகுறிகள்

கண்புரையின் அறிகுறிகள் பார்வை மங்குதல் வெளிச்சம் கண்டால் கண்கள் கூசுவது போல இருக்கும். கண்களின் முன்னால் திரை இருப்பது போல காணப்படும். நிறம் மாற்றமாகத் தெரியும். பொருட்கள் இரட்டையாகத் தெரியும். இந்த அறிகுறி கண் காண்பித்தால் புரை வளர்கிறது என்பதை உணர வேண்டும். சுகர் நோய் பாதித்தவர்களுக்கு 40 வயதானதும் கண் புரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுகர் (நீரிழிவு) நோயை கட்டுக்குள் வைத்தால் கண் புரை ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். வண்ணப் பார்வை என்பது நீலம், சிகப்பு, பச்சை நிரங்கள் மாற்றி காண்பிக்கும். கண்கள் பாதிக்காமல் இருக்க விட்டமின்-ஏ உணவுப் பொருட்களை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருவிழியில் சிலருக்கு கோளாறு ஏற்படும். விட்டமின் ’ஏ’ சத்து பற்றாக் குறைகள், கிருமிகள் ஊடுருவல் மற்றும் கண்களில் போதிய அளவு நீர் சுரக்காததால் கண்ணின் மேற்பகுதி ஈரமில்லாமல் உலர்ந்து விடும். தூசி, துகள், அமிலத் துளிகள், கண்ணில் ஏற்படும் காயம், அழகு சாதனங்களால் கண் அலர்ஜி ஆவது இதனால் கருவிழியில் கோளாறு ஏற்படும்.

இதன் அறிகுறிகள் கண்ணீர் வடிதல், கண்களில் வழி, வெளிச்சத்தில் கண் கூசுதல், கண் இமைத் தோலின் வீக்கம், கண் சிவந்து போகுதல், பார்வைக் குறைவு ஏற்படுதல். கண் விழி கோளாறு ஏற்பட்டதின் காரணம் புரிந்து கொண்டு கடையில் விற்கும் கண் சொட்டு மருந்துகளை வாங்கி உபயோகித்தால் மேலும் கண் பாதிக்கும். எந்த கிருமியால் கண் விழித்திரை பாதித்துள்ளது என்பதை கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து அதற்குரிய சிகிட்சை மேற்கொள்ளாவிட்டால் பார்வை முற்றிலும் பாதித்துவிடலாம். மதுரை அரவிந்த் மருத்துவமனை வெளியிடும் கண் ஒளி மாத இதழ் 2008 – ஜூன் இதழில் இருந்து தகவல் சேகரித்துத் தரப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண் சிகிட்சை செய்த பின்னரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் வந்து கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம் என்கிறார் கண் பரிசோதனை மருத்துவர்.

கண்கள் பாதிப்பு இன்னும் சில

நம் நாட்டில் சுமார் 12 கோடி மக்கள் பார்வை இழந்து வாழுகிறார்கள். 25 லட்ச மக்கள் கருவிழி நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். 2020-ல் உலகில் கண் பார்வை அற்றோர் இல்லை நிலை ஏற்பட வேண்டும் என்பது ஐ.நா சபையின் உலக சுகாதார அமைப்பு திட்டம் தீட்டி உள்ளது. வெல்டிங் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் பிரத்தியோக கண்ணாடி அணியாமல் வேலை பார்ப்பதால் கண்கள் பாதிப்பு ஏற்படும். மலை ஏறுபவர்கள் பணிப் பிரதேசம் செல்லும்போது 99 முதல் 100 சதம் புற ஊதா கதிர் கண்களை பாதிக்கிறது. சன் கிளாஸ் அல்லது பாலி கார்பனேட் அல்லது ஸி.ஆர் 39 லென்ஸ் கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும்.

வைட்டமின் ’ஏ’ சத்து கண்ஙளுக்கு தேவை ஏன்?

கர்பிணித் தாய்மார்கள் விட்டமின் ‘ஏ’ சத்து உணவுகளை உட்கொள்வதால் கற்பத்தில் வளரும் குழந்தைக்கு கண் பாதிப்பு நோய் ஏற்படாது. பாலூட்டும் தாய்மார்கள் நிறைய விட்டமின் ‘ஏ’ சத்துப் பொருட்களை சாப்பிடுவதால் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் விட்டமின் ‘ஏ’ சத்து கிடைத்து விடுகிறது. விட்டமின் ‘ஏ’ சத்து குறைவால் கண்களுக்கு செல்லும் இரத்தக் குழாயில் நீர்க்குமிழிகள் போன்ற கட்டிகளால் அடைப்பு ஏற்படும். சிறிது நேரத்தில் சரியாகிவிடும். இதை வளர விட்டால் கண் பார்வை பாதிக்கும். சோதனைக் குழாய் அல்லது மாத்திரை மூலம் ஆரம்பத்தில் சரி செய்து விடலா. கவனிக்காமல் அதிக நாட்களாகிவிட்டால் லேசர் சிகிட்சை மூலம் இக் கட்டிகளை அகற்றலாம். சத்துக் குறைவினால் மாலைக் கண், உலரும் கருவிழி, கருவிழியில் புண், கருவிழி நைந்து கரைந்து போகும் வாய்ப்பு உண்டாகிவிடும். தினமும் உணவுடன் முருங்கைக் கீரை, காரட், புதினா, சிகப்பு முள்ளங்கி, முளைக்கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை, மஞ்சப் பூசனி, தக்காளி, மஞ்சள் நிறக் காய்கறிகள், மாம்பழம், பப்பாளி, பால், வெண்ணெய், தயிர், முட்டை, மீன், ஈரல் இவைகளை வாரம் முழுவதும் சிலவற்றை சேர்த்து சாப்பிட முயற்ச்சிக்க வேண்டும்.

கிளக்கோமா என்றால் என்ன?

கிளக்கோமா என்பது கண் நீர் அழுத்த நோய் எனப்படும். கண்களில் சுரக்கும் கண்ணீரைப் போல உட்பகுதியிலும் “அக்வஸ் ஹூமர்” என்ற திடவம் சுரக்கிறது. இதைக் கண்ணீர் எனக் குறிப்பிடுகிறோம். இது கண்ணின் வெளிப் பகுதியை சுத்தப் படுத்துகிறது. கண்ணின் உட்பகுதியில் இருக்கும் லென்ஸ், கிருஷ்ண படலம், கண்விழியின் உட்புரம் ஆகியவற்றுக்குத் தேவையான ஊட்டச் சத்தை “அக்வஸ் ஹூமர்” திரவம் கொண்டு செல்கிறது. ஏதோ ஒரு காரணத்தால் நுண்ணிய துவாரங்கள் அடைப்பு ஏற்பட்டு அக்வஸ் திரவம் (கண்ணீர்) கண்ணின் உட்பகுதியில் அதிகம் தேங்குகிறது. சிலருக்கு அதிகம் உற்பத்தியாகிறது. கண்ணில் உள்ள மெல்லிய திசுக்கள் பாதிக்கின்றன. இதைத்தான் கண் நீர் அழுத்த நோய் கிளக்கோமா என்கிறார்கள். கிளக்கோமாவில் பல வகைகள் உண்டு. பிறந்த குழந்தைகளுக்கும் இந்நோய் வரலாம். 40 வயது தாண்டியதும் இந்நோய் வரலாம். பரம்பரையாகவும் வரும். கண் புரை முற்றிப் போனால் அதை கவனிக்காமல் இருந்தாலும் கண்ணில் அலர்ஜியானாலும், தலைவலி, கண் சிவந்து போகுதல், மின்சார விளக்குகளை சுற்றி வண்ண வளையங்கள் தெரிவது இந்த நோய் அதிகரிக்க அதிகரிக்க பக்கவாட்டுப் பார்வை குறைந்து கொண்டே வரும். இது இவைகளின் அறிகுறி. இவற்றை கவனிக்காமல் இருந்தால் பார்வை முற்றிலும் இழந்துவிடும் அபாயம் ஏற்படும். உலகை ரசிக்க கண்களை பாதுகாப்பீர்.

ஆற்றில் குளித்து வந்த சிறுவனுக்கு கண் பாதித்தது ஏன்?

ஜெகதல பட்டினம் அருகில் சில சிறுவர்கள் அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர். குளித்து வந்த சிறுவன் ஒருவனுக்கு கண்ணில் வலி ஏற்பட்டது. கண்ணை கசக்கியதால் கண் சிகப்பாக மாறியது. கண் மருத்துவரிடம் உடனே சென்று காண்பித்தார்கள். குளத்தில் குளிக்கும்போது நத்தையின் சிறு முட்டை ஒன்று கண்களில் ஒட்டிக் கொண்டது. இதனால் அவன் கண் உருத்தியது. கசக்கியதால் அது கண்ணின் உட்பகுதியில் சென்றுவிட்டதை கண் பரிசோதனை மூலம் மருத்துவர் கண்டறிந்து நீக்கினார். ஆற்றிலோ, நதி, குளத்திலோ மூழ்கிக் குளிப்பவர்கள் கண்களை மூடிக் குளிக்கும்படியும், மூக்கை மூடிக் குளிக்கும்படியும் நம் முன்னோர்கள் சொல்லும் புத்திமதியாகும். மூக்கின் வழியாக சிறு மீன் குஞ்சு உள்ளே போய்விட வாய்ப்பு இருக்கிறது. எல்லா நிலைகளிலும் கண்களை பாதுகாத்டு வருவது யாவருக்கும் நல்லது. உலகை ரசிக்கும் கண்களை ஆண்டுக்கு இருமுறை பரிசோதனை செய்து பாதுகாப்பது நமது கடமையாகும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: als (kayalpatnam) on 11 June 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35238

கண் பாதிப்பு இன்னும் சில தலைப்புக்கு கீழ் 5வது வரி மலை ஏறுபவர் "பனிப்பிரதேசம்" என்பதற்கு பதிலாக "பணிப்பிரதேசம்" என்று போடப்பட்டுள்ளது,பணி என்பது தவறாகும்,பனிஎன்பதே சரி இந்த கட்டுரை எழுத அரவிந்த் கண் மருத்துவமனை,மதுரை வெளியிட்ட கண் ஒளி மாத இதழ் 2008 முதல் 2011 வரை உள்ள இதழ்களில் தகவல் சேகரிக்கப்பட்டதை வாசகர்கள் அறிந்து கொள்ளவும்.

கட்டுரையாளர்,
als இப்னு அப்பாஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved