Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:28:01 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 136
#KOTWEM136
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 8, 2014
நோயற்ற வாழ்வு, அமைதி தரும் கல்வி, சுகமான வேலைவாய்ப்பு!

இந்த பக்கம் 2374 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இணை பிரியாத இணையதள வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆரோக்கியம் தரும் இன்பம்:

ஒவ்வொரு மனிதர்களுக்கும் தலைப்பில் கண்ட மூன்றும் முக்கிய தேவையாக உள்ளது. ஆரோக்கியம் மிக மிக முக்கியமாகும். ஆரோக்கியமற்றவர்கள் எவ்வளவுதான் பணம் சேர்த்து வைத்திருந்தாலும் உப்பு போல் கரைந்து விடும். நோய்க்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. மனித இனத்தில் பிறந்த பச்சிளம் குழந்தை முதல் வயோதிகர் வரை எல்லா பருவத்திலும் நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இதற்கு சரியான காரணம் என்ன? என்பதை நாம்பெற்ற கல்வியின் சிந்தனையால் புரிந்து நலமாய் வாழும் வழியை தேடிக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

இளைஞர்களில் அதிகமானோர் புகைபிடிக்க விரும்புகின்றனர்.அதனால்தான் நம் நாட்டில் பீடி, சிகரெட், சுருட்டு போன்ற வஸ்துகளின் விறப்னை பலகோடி ரூபாய் ஒரு நாளைக்கு ஆவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் அல்லது ஊர்களில் சிறுவர்கள் மறைத்தோ, மறைக்காமலோ வீதியில் பீடி, சிகரெட் குடித்து போகிற நிலையை கண்டுள்ளோம். அம்மாதிரி திசைமாறிச் செல்லும் பிள்ளைகளுடன் நல்லபிள்ளைகளை சேரவிடாமல் பெற்றோரின் கண்காணிப்பு அவசியம் இருத்தல் வேண்டும். புகைபிடிப்பதால் அவருக்கு மட்டும் கெடுதி அல்ல. புகைபிடிப்போர் விடும் நெக்கோடின் நச்சுப்புகை சுவாசிக்கும் புகைபிடிக்காத நமக்கும் ஆபத்தை கொடுப்பதாக ரஷ்யா விஞ்ஞானி கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். நமதூர் கடற்கரையில் இரவு காற்று வாங்க போகிறவர்களுக்கு சுகமான கடற்காற்றுடன் புகைப்பிடித்தவர் இட்ட நச்சுக் காற்றுவாடை கடற்கரை காற்றை மாசுபடுத்துகிறது. அங்குவரும் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்களில் ஆண், பெண்களை இலவசமாகத் தாக்குகிறது. இப்படி கடற்கரையில் இரவில் ஜாலியாக இருட்டில் படுத்துக் கொண்டோ, அமர்ந்து கொண்டோ புகையை விட்டு தீங்கு செய்பவர் இனியாவது திருந்துவார்களா?

தோளுக்குமேல் வளர்ந்து விட்டால் தோழன் ஆகிற வயதுடைய அவனுக்குப் புத்தி சொல்ல வேண்டுமா எண்ணிப்பார்க்கட்டும். பிறர் சுகங்களில் அக்கறை இல்லாதவர்களா இவர்கள்? ஏன் இப்படி செய்கிறார்கள்? புகைபிடிப்பதால் அவர்களின் நுரையீரல் பாதிக்கிறது. அடிக்கடி புகைபிடிப்பவர் இரவில் இருமுகிறார். தூக்கம் இல்லாமல் புரண்டுபடுத்தாலும் நுரையீரலில் தங்கியுள்ள புகை அவரை விடாது பாடுபடுத்தும். அற்ப சுகத்துக்காக காசை செலவு செய்து இரவில் இருமி மற்றவர் தூக்கத்தையும் கெடுப்பதை புகைபிடிப்பவர்கள் எப்போது எண்ணிப்பார்த்து திருந்தப் போகிறார்கள். புகைபிடிக்காதே என்று சிகரெட் பாக்கட்டிலும் ஒவ்வொரு சிகரெட்டிலும் போட்டு உள்ளது. அரபு உலகிலும் வெளிநாடுகளிலும் நமது பிள்ளைகளின் கடுமையான வேர்வை துளிகளில் தேடிய பணத்தை நாம் வீணாக்கி விடக் கூடாது என்பதை நானும் நீங்களும் உணர்ந்து இருக்கிறோம். அதனால் நமதூரின் அனைத்து பகுதிகளிலும் கல்வி, நோய் நிவாரணி வேலைவாய்ப்பு பெற்றுத் தர பொது அமைப்பு தியாகிகள் தன் நேரத்தை கொஞ்சம் ஒதுக்கினால் நமதூர் ஏழை ஆண்பெண்கள் எல்லா வசதிகளையும் இவர்கள் மூலம் பெற முடியும்.

அமைதியை அள்ளித் தரும் கல்வி:

கல்வியை இரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டும். மார்க்கக் கல்வி, உலகக் கல்வி இவை இரண்டும் முஸ்லீம் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை. மார்க்க கல்வி கற்றால்தான் எல்லா மக்கள்களுடன் ஒற்றுமையாக பரஸ்பரமாக வாழ முடியும். இறைவனை ஐந்துவேளை தொழுவதற்கும் இஸ்லாமிய ஐந்து கடமைகளை அறிந்து அல்லது படித்துக் கொள்வது முஸ்லீம் ஆண் பெண்களின் கட்டாயக் கடமையாகும். பெற்றோர்கள் தானும் கற்று தன் பிள்ளைகளுக்கும் தெளிவாக குர்ஆன் மற்றும் மார்க்க கல்வி போதனை கற்றுக் கொடுப்பார்கள். இதுகுறித்து விரிவாக எழுதினால் அது 10 பக்க கட்டுரையாகிவிடும்.

அமைதியைத் தருவது சிறந்த கல்வியாகும். அது மார்க்க கல்வியிலும் உண்டு. உலகக் கல்வியிலும் உண்டு. நமதூரில் 1927ஆம் ஆண்டு முதல் கல்விசாலை (பள்ளிக்கூடம்) ஆரம்பமாகியது. கிழக்குப் பகுதியிலும், வடக்குப் பகுதியிலும் இரு கல்வி தந்தை குறித்தும் கேள்விப் பட்டுள்ளேன். முறையே வருமாறு அப்துல்ஹை ஆலிம் அவர்கள், ஆதம் ஹாஜி அவர்கள் எல்.கே. தம்பி அப்பா, எம்.கே.டி. அப்பா அவர்கள் இன்னும் பல பெரியவர்களின் பட்டியல் உள்ளதாக கல்விச் சேவையாளர் கூறுவதை கேள்விப்பட்டுள்ளேன். எனது வயது(67)க்கு தகுந்தார் போல் ஆய்வு செய்துள்ளேன். ஆய்வுகளை போட்டிருப்பதாக எச்சரிக்கை படுத்தி என்ன பிரயோஜனம்? புகை நமக்கு பகை என்றால் மட்டும் திருந்துவார் யார்? புகை பிடித்து உடலை நோயில் சிக்க வைத்த குடும்பத்தலைவரால் குடும்பமே துயரத்தில் ஆழ்ந்து விடுகிறது. பணமும் விரயமாக செலவாகிறது.

சிகெரட்டை விட நினைத்தாலும் உடனே நிறுத்த முடியவில்லை என்று சொல்பவர்களை கேள்விப்படுகிறோம். இது ஒருபுறம். கோபப்படுவதாலும், மனஅழுத்தத்தாலம் உடலை பேணாமல் சதா கறி கறி என்று ஒரு கல்யாண விருந்துகளுக்கும் சென்று கொழுப்பை உடலில் அதிகம் ஆக்கிக் கொண்டு அவதிப்படும் மானிடர்களை நமதூரில் காணலாம். பகல் உணவில் களறி சாப்பாடு சாப்பிட்டால் வயோதிகள் இரவு கல்யாண சாப்பாட்டுக்கு விடுமுறை இடலாம். அப்படி செய்பவர்கள் மிகமிகக் குறைவு. உப்பு, கொழுப்பு, சுகர் இம்மூன்றும் வருவதற்கு அவரவர்களே காரணம். குடும்பத்தலைவர் நோய்வாய்பட்டால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து விடும். பணமுள்ள செல்வந்தர்கள் தப்பித்து கொள்கிறார்கள். நடுத்தர மக்கள் நோய் பீடித்தால் சேர்த்து வைத்த பணம் அழிகிறது. நகை அழிந்;து விடுகிறது. குடியிருந்த வீடுகளை விற்று நோயிக்காக செலவு செய்து வெளியில் காட்டிக் கொள்ளாத மனிதர்களை பார்த்திருக்கிறோம். எனக்கு தெரிந்த ஒருவர் பேக்கரி வைத்திருந்தார். அவர் மனைவிக்கு ஏதோ நோய் வந்துவிட்டது.

தனக்கு வருவாய் தரும் ஸ்தாபனத்தை விற்றார். அந்த பணத்தைக் கொண்டு மனைவியின் நோய்க்கு செலவு பண்ணி மனைவியை சுகமாக்கினார். இறைவன் அருளால், அவர் தொழிலின்றி இன்று ஒரு பள்ளியில் முஅத்தின் வேலை செய்கிறார். அவருக்கு பணம் கொடுத்த உதவ அன்று எந்த வைத்திய உதவி அமைப்பும் இயங்கவில்லை. எத்தனையோ பெண்கள் நோய்வாய்பட்டு வீட்டிலேயே வைத்தியம் பார்த்து யாரிடமும் சொல்லாமல் இருப்பவர்களும் நமதூரில் நிறைய உண்டு.

ஏழைகளுக்கு நோய் வந்தால் உதவி செய்பவர் யார்?

நமதூரில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் ஏழை மகளில் எல்லா வயதினர்கள் முதல் வயோதிகர் வரை நோய் வந்தபின்னர்தான் பல டெஸ்ட்டுகள் எடுக்க ஆஸ்பத்திரி நோக்கி செல்கிறார்கள். வரும் காக்கும் பழக்கம் இருப்பதாக தெரியவில்லை. சுகவீனம் வருமுன் சுகத்தைத் தேடிக் கொள்ளுங்கள் என்பது நபிமொழியாகம்.

நமதூர் ஏழை அனைத்துப் பெண்களுக்காகவும் உலகளாவிய காயல் நலமன்றங்கள் வைத்திய பிரிவை துவங்கி சிறப்பாக சேவை செய்து வருகிறது. அவர்களுடன் தொடர்பு கொண்டு நிறைய ஏழை பெண்களுக்கு வைத்திய உதவி பணம் அவர்களுக்கும் அவர்கள் கணவர், குடும்பத்தார்களுக்கும் பெறும் வழிமுறைகளை சொல்லித் தருகிறேன். எனக்கு நேரடியாக பணம் வருத்தாமல் நோய் வாய்பட்ட ஏழை மகளிர் முகவரிக்கே பணத்தை அனுப்ப சொல்லி விடுவது எனது வழக்கம். நிறைய ஏழை படிக்காமல் இருப்பதால் வைத்திய பிரிவில் பணம் பெறும் அணுகுமுறை பக்குவம் கூட தெரியவில்லை என்பதால் என்னை சந்திக்க சீதக்காதி நினைவு நூலகம் வந்தாலும் என் இல்லம் வந்தாலும் தெளிவாக எல்லா விபரங்களையும் சொல்லித் தருகிறேன். அதன்படி அவர்கள் எல்லா குறிப்பு பேப்பர்களையும் நான்தான் வெளியிட எடுத்துக் காட்ட முடிகிறது.

வெள்ளையனின் மொழி ஆங்கிலம் படிக்க மாட்டோம். அது சுதந்திரப்போர்

ஆங்கிலேயர்களான வெள்ளைக்காரன் மொழி ஆங்கிலத்தை முஸ்லீம்கள் படிக்கக் கூடாது என்று அன்றைய அரசியல் சந்தர்ப்பவாதிகள் முஸ்லீம் ஊர்கள் தோறும் பிரச்சாரம் செய்து முஸ்லீம் மக்கள் ஆங்கிலம் படிக்கவிடாமல் சதி செய்தார்கள். இதை உணராத அன்றைய உலமா சிலரும் தந்திர அரசியல்வாதிகளுடன் தெரியாமல் கைகோர்த்து நின்று தேசிய உணர்வுக்கு பாடுபட்டார்களாம்.சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் மொழியை வெறுத்தார்களாம்.

இதை உணர்ந்த அன்றைய ஜின்னாசாஹிப், மௌலானா முஹம்மது அலி சௌகத் அலி ஆகியோர்களும் வடநாட்டில் அலிகார் சர்வகலாசாலை மற்றும் அல்லாமா கவிஞர் இக்பால், தென்னிந்தியாவில் வேலூர் பாக்கியாத் சாலிஹாத் மத்ரஸா முதல்வரும், நவாப் சி. அப்துல் ஹகீம், மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் மற்றும் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் ஆகியோர்கள் வடநாட்டிலும்,தென்நாட்டிலும் முஸ்லீம் மக்கள் அனைவர்களும் ஆங்கிலேயர் அடக்கு முறையை எதிர்த்து போராடுகிறார்கள். அவர்கள் மொழி நமக்கு பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும்போது தேவை என்று உணர்ந்தார்கள். அங்கும் இங்கும் முஸ்லீம் மக்களை வழிநடத்தும் அரசியல் வழிகாட்டி முஸ்லிம் பெரியார்கள் உஷார் ஆகி ஆங்கிலம் படிக்கும்படி மாபெரும் இயக்கத்தை கல்விக்காக அமைத்தார்களாம். அன்றைய முஸ்லீம்கள் இந்தியா எங்கும் இருந்து மலேயா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா போன்ற வெளிநாடுகளுக்கு கப்பல் மற்றும் விமாணம் பயணம் செல்லும்போது ஹார்பர்- ஏர்போர்ட்டில் பாரம் எழுதி தர அங்குள்ள வர்த்தகர்களை சந்திக்க ஆங்கில மொழி தேவை என்று பிரச்சாரம் செய்தார்களாம். காயல்நகரில் 1927ல் ஆங்கிலம் படிக்காதே என்ற கூக்குரலுக்கு பதிலடித் தந்’தவர் மறைந்த கல்வித் தந்தைகளான அப்துல்ஹை ஆலிம் அவர்களும், ஆதம் ஹாஜி (வடபகுதி) அவர்களையும் குறிப்பிடுவார்கள்.

நம்நாட்டின் மொழிகள் ஏராளம்:

முஸ்லீம்கள் நம் நாட்டிலேயே பல மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள். இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றில் பலமொழிகளுக்கு எழுத்து வடிவம் கிடையாது. மலைவாழ் மக்கள், தோடர்கள், பழங்குடியினர் பலரும் பேசும் மொழி பேச்சோடு சரி. எழுத்துக்கள் இருக்காது என்பார்கள். இந்திய ரூபாய் நோட்டில் 15 மொழிகள் அதில் 13ஆவது மொழியாக தமிழ் காணப்படுகிறது. நாம் அறிவோம். அன்னியனை விரட்டி அடித்த நாம் 1947 க்குப் பின் எல்லா ரூபாய் நோட்டிலும் ஆங்கில எழுத்தை பெரிதாக காட்டி இருப்பது ஏன்? காந்தி பெயரையும், கவர்னர் பெயரையும் ஆங்கில மொழிக்கு முதல் இடம் தருவது ஏன்? (ஹிந்தி இந்திய மொழி. அதை இதில் நாம் குறிப்பிட வேண்டாம்) அன்னிய மொழியை வெறுக்க சொன்ன அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் ரூபாய் நோட்டிலும், அரசு காரியாலயம், இரயில், விமானம், கப்பல், போக்குவரத்து, ராக்கட் தளம் இவைகளில் அன்னிய மொழி ஆங்கில ஆதிக்கம் செலுத்துவதை எதிர்க்கிறார்களா? ஆங்கில மொழியைப் படிப்போம். எல்லா மொழியையும் கற்றுக் கொள்வோம் என்பதை முஸ்லீம்களுக்கு புரிய வைத்தார்கள் மறைந்தத தலைவர்கள்.

பழம்பெரும் அரசியல்வாதி சொன்ன தந்திரம் எதற்காக?

இந்திய மக்கள் அவரவர் குல தொழிலை படித்து அவரவர்களின் பணிகளில் வேலை செய்தால் நல்லது என்ற பிரச்சாரத்தை மேடைதோறும் முழங்கியதால் அதற்கு நாடெங்கிலும் எதிர்ப்பு அலைகள். குலதொழில் திட்டத்தை புரியாத முஸ்லீம்களின் சில உலமா அமைப்பில் மத்ரஸாவில் ஓதி பட்டம்பெற்ற ஆலிம்கள் பள்ளிவாசல்களில் கதீபு வேலை, பேஷ்இமாம் வேலையில் அமர்ந்தார்கள். கொஞ்சம் மார்க்க அறிவு தெரிந்தவர்கள் பள்ளி முஅத்தின் வேலையில் அமர்ந்து விட்டார்கள். (ஆங்கில படிப்பில் நாட்டம் செலுத்தவிடாமல் மக்களை திசை திருப்புகிறார் ஒரு அரசியல்வாதி என்றார் ஈ.வே.ரா. பெரியார்) அதற்கான மேடைப் பேச்சை அவர் தொடங்கி குலதொழில் படிக்க சொன்ன அவருக்கு பதிலடி தந்தார். ஆனால் ஒரு இனம் மட்டும் ஆங்கிலம் படித்தார்கள். அரசு வேலைகளில் அமர்ந்து கொண்டு பிறமக்களை ஆதிக்கம்செலுத்துவதை ஈவேரா பெரியார் பக்குவமாக சாடினார். முஸ்லிம்கள் ஆங்கிலம் படிக்காமல் திசைமாறிப் போவதை உணர்ந்த அன்றைய முஸ்லீம் தலைவர்கள் உணர்ந்து விழிப்புணர்வு செய்து அனைத்து மொழி பேசும் முஸ்லிம் மக்கள் ஆங்கிலத்தோடு தனது தாய் பாஷையை கற்க சொன்னார்கள்.

(ஈ.வே.ரா. பெரியார் தமிழ்நாட்டில் தோன்றியிராவிட்டால் பல தந்திர அரசியல் சூழ்ச்சியாளர்களின் திறமைமிக்க பேச்சில் ஆங்கிலம் கற்கப்போகாமலும் இருந்திருப்பார்கள்)வாழையடி வாழையாக படிப்பறிவு இல்லாமல் தன்பிள்ளைகளை குலத்தொழில் படிக்க செய்தார்கள். இதை மேடைதோறும் போட்டு உடைத்தார் பெரியார். பெரியாரின் சுயமரியாதை இயக்க நூல்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள். இஸ்லாத்தை அதன் போதனைகளை எல்லா மேடைகளிலும் புகழ்வார். அதே சமயம் ஒரு இனத்தை மட்டும் அவர்களின் கோட்பாடுகளை போட்டு உடைப்பார். அவரை கைது செய்யமுடியாது. காரணம் அவர் படிக்கச் சொல்கிறார். சிந்திக்க சொல்கிறார். அடிமைகளையும், மடமைகளையும், ஜாதி வெறிகளையும், தீண்டாமைகளை ஒழிக்க பேர் குரல் எழுப்பினார் ஈவேரா பெரியார்.

சுகமான வேலை வாய்ப்பு எப்போது கிடைக்கும்?

இன்று காயல் நகரில் பெண்கள் ஆலிமாக்களாக ஹாபிழ்களாக கூடவே உலகபட்டப்படிப்பு அனைத்தும் கற்று வேலை இல்லாமல் வீட்டில் தொலைக்காட்சி பெட்டிக்குமுன் பொழுது போக்குகிறார்கள். பெண்களுக்கு என வேலைவாய்ப்பு படிப்பு சொளுக்கார் தெருவிலுள்ள சமுதாயக் கல்லூhயிpல் முஸ்லீம் பெண்கள் சென்று படிக்கலாம்.

அங்கு டைலரிங் படிப்பு, எம்பிராய்டரி, டிரஸ்மெட்டீரியல், பேஷன் டெக்னாலஜி படிக்கலாம். ஜுவல்ஸ் மேக்கிங் படிக்கலாம். ஆண்டுக்கு குறைந்த கட்டணம் செலுத்தினர்ல் போதும். வசதி இல்லாத காயல் நகர பெண்களுக்கு குறைந்த கட்டணம் செலுத்தினால் போதும். வசதி இல்லாத காயல் நகர பெண்களுக்கு வெளிநாட்டில் வாழும் காயல்நகர அமைப்பு பண உதவி செய்ய முன்வருகிறார்கள். சமுதாயக் கல்லூரியில் படித்த மாணவி நமதூர் வாவு வஜிஹா காலேஜில் டி.எப்.டி. பாஸ் செய்து பெண்களுக்கான தொழில்கல்வியை தான் கற்ற தொழில் முறைகளை சொல்லித்தருகிறார். கைநிறைய சம்பளம். மனம் நிறைய சந்தோஷம் கிடைத்து விட்டது. கணவருடன் வெளிநாடு போனால் அங்கு வாழும் முஸ்லிம் பெண்களுக்கு வீட்டில் இருந்தே இதை செய்து இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் டி.எப்.டி. பட்டம் பெற்றால்.

அதுபோல் ஆடவர்களில் காயல்நகர முஸ்லீம் இளைஞர்கள் பலர் பட்டப் படிப்பு படித்து வேலையின்றி வாடுகிறார்கள். எந்தப்படிப்பு படித்தால் வேலை கிடைக்கும்? இணையதளத்திற்குள் போய் தேடி தேர்வு செய்து படித்து முடித்ததும் வேலைவாய்ப்பு உடனடியாக உள்ளதை நீங்கள்தான் இளைஞர்களே தேடவேண்டும். பட்டப்படிப்பு என்றால் ஒருபட்டம் போதாது. அதற்கு அடுத்தது என்று பல பட்டங்களை சலிக்காமல் படிக்க வேண்டும். பணம்வேண்டுமானால் உதவி செய்ய இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் பலரிடம் கேட்டுப் படிக்கலாம். பி.ஆர்க் கட்டிடவரைகலையில் அடுத்து ஆ.னு. படிக்கலாம். அடுத்து அடுத்து சம்பாதித்து கொண்டே படிக்கும் ஆர்வம் வர வேண்டும். ஏழை படிக்க பணம் இல்லை என்ற காலம் காயல் நகரில் மலையேறி மறைந்து விட்டது. இறைவன் நமதூர் ஏழைகளுக்கு வழிகாட்ட பல அமைப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளான். விவசாய தொழில் படிப்பு, கால்நடை பராமரிப்பு படிப்புக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உடனடி வேலை காத்திருக்கிறது. அதை படிக்கலாம்.

வேலை வாங்கித் தருவது யார்?

நமதூரில் படித்த இளைஞர்களுக்கு அரபு நாடுகளிலும் உலகில் அனைத்து கண்டங்களிலும் நமதூர் பிள்ளைகள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் எந்தவித மனக்கசப்புமின்றி உங்கள் வீட்டைச் சார்ந்த படித்த பட்டதாரிகளுக்கும், வீட்டுக்கு அருகாமையிலும் தெருவிலும் ஊரிலும் பல பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தர வேண்டும். ஒவ்வொரு ஜமாஅத்திலும் வேலைவாய்ப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தலாம். நமக்குள் மார்க்க அடிப்படையில் உள்ள வேற்றுமை கசப்பு இருந்தாலும் மறந்து ஒருவர் முன்னேற நாம் நிச்சயம் உதவ வேண்டும். சிறிது பணம் தருவது உதவி ஆகாது. அது அன்றே செலவாகி போகலாம். அவருக்கு நல்ல வேலை வாய்ப்பு செய்து தந்தால் அவர் தொழிலால் வளருவார். அதன் ஒருபகுதி நன்மை உங்களுக்கும் எப்போதும் உண்டு.

இயற்கை உணவுப் பொருள் அங்காடி நமதூரில் இயற்கை உரத்தில் தயார் செய்யப்பட்ட உணவுதானியப் பொருள் அங்காடி இன்ஷாஅல்லாஹ் விரைவில் உதயமாக இருக்கிறது. அதை வாங்கி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடல் ஆரோக்கியம் எல்லா நோய்களும் நடுநிலைக்கு வரும் நிலை ஏற்படும் என்கிறார் இதை கண்காணிக்கும் டாக்டர் ஒருவர்.இன்ஷாஅல்லாஹ் அடுத்த எனது கட்டுரை சுதந்திரம் -சந்தோஷம் இணையும்போது சாதிக்க முடிகிறது.

கடைசித் தகவல்:

இன்ஷாஅல்லாஹ் வருகிற 8-3-2014 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இஸ்லாமியர் தமிழ் இலக்கிய மாமன்றம் சார்பில் 10ஆம் மாத கலந்துரையாடல் புதுப்பள்ளி மகாம் (அரசு நூலகம் அருகிலுள்ள) ரிஸ்வான் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதையே அழைப்பிதழாக ஏற்று கலந்து கொள்ள இலக்கியப் பிரியர்களை அழைப்பவர் - அமைப்பாளர் ALS மாமா.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved