Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:51:49 PM
வியாழன் | 16 மே 2024 | துல்ஹஜ் 1750, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4112:2003:4106:3507:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:04
மறைவு18:29மறைவு01:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:1005:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5219:1819:44
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 11
#KOTWART0111
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 18, 2012
சமூக நலனில் தண்ணீரும் ஒரு முக்கிய பகுதியே!
இந்த பக்கம் 5499 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நோயற்ற வாழ்வு என்பது உடல் நலன் மட்டுமல்ல. உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ‘நோய்’ இல்லாமல் வாழ்வது. அதுபோல், தனி மனித நலன் என்பது, அவனை சுற்றியுள்ள நல்லோர், அது-அல்லோர் மட்டுமல்லாது, இயற்கை வளங்களையும் உள்ளடக்கிய கூட்டுத் தொகையாகும்.

உலகமே மிகச் சிறியதொரு குறுகிய கிராமமாக மாறி வருகிறது. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகள் மறுகோடி வரை பிரதிபலிப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அவ்வாறு இருக்கையில், நம் அருகிலேயே – நமது தெருவிலேயே – நமது ஊரிலேயே வசிக்கும் அன்பர்கள், நண்பர்கள் செய்யும் தவறுகளும் – அதைக் கண்டும் காணாமல் முகம் திருப்பிக் கொள்வதும் - நாமும் அதையே செய்வதும் – எவ்வளவு அதிகமான சுமையான பாதிப்புகளை உருவாக்கும் என்பதை நாம் உணர்ந்துள்ளோமா?

நீரின்றி அமையாது உலகு – நீ இன்றி அமையாது உலகு.

ஒவ்வொரு மனிதனுக்கும் – ஏன்? ஒவ்வொரு ஜீவராசிக்குமே - தண்ணீர் இன்றியமையாதது. அப்படிப்பட்ட ஒரு அத்தியாவசியமான தேவை நமதூரில் அனைவருக்கும் சரிசமமாக கிடைக்கிறதா? என்றால் - “கேள்வி விஞ்சி நிற்கின்றது. பதிலோ... அஞ்சி ஒழிகின்றது”.

மோட்டார் வைத்து குடி-தண்ணீர் எடுப்பது குற்றம் என சட்டம் சொல்கிறது. நமது மனசாட்சி கூட ஆட்சேபனை தெரிவிக்கின்றது. இருந்தும், சில ஆண்டுகளுக்கு முன் எண்ணிக்கையில் அடங்கிய “தண்ணீர் மோட்டார்கள்” இன்று எண்ணிலடங்காமல் இருப்பதாக மக்களால் பரவலாக புள்ளி விபரக்கணக்கு சுட்டிக்காட்டிப் பேசப்படுகிறது. அறிந்தும் அறியாமையாலும் நிகழ்த்தப்படும் இந்த “தண்ணீர் ஆக்கிரமிப்பு” திருத்தப்பட, நிறுத்தப்பட வேண்டாமா? எனதருமை சகோதரர்களே! சிந்திப்போம் வாருங்கள்.

மோட்டார் வைத்து குடி தண்ணீர் எடுப்பதைப் பற்றிய குற்ற உணர்வு சிறிதேனும் நம்மிடம் உள்ளதா? அல்லது, அதனால் ஏற்படும் சமூக-அநீதி பற்றிய பய உணர்வோ அல்லது விழிப்புணர்வோ உள்ளதா? - என்பது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது.

நமது வீட்டிற்கான தண்ணீரை எடுத்துக் கொள்வதில் நாம் காட்டும் ஆர்வத்தை, அவசரத்தை நமது அண்டை வீட்டாரை, அக்கம்பக்கத்துத் தெருவைப் பற்றி யோசிப்பதில் காட்டுவதில்லையே!. மோட்டார் வைக்க வசதியில்லாதோரும், மனமில்லாதோரும் – மனதாலும், உடலாலும் - எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை. “தமக்கு லாபம் தரும் அனைத்து காரியங்களும் - நல்ல விஷயங்கள்” என்றும், “தன்னை நேரடியாக பாதிக்காத வரை - தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும்” தான் சிலரது மனநிலையாக உள்ளது. “மனசாட்சி உறங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகின்றது”.

தேர்வானாலும், தேர்தலானாலும் வெற்றிக் கனியை பறிப்பது எப்படி என எண்ணுவது இயல்பேயாகும். ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அனைவருக்கும் தண்ணீர் சம அளவில் சென்றடைய வேண்டாமா? ஆனால், வெற்றி அடைந்த பின்னர் ஒருவர் செய்து முடிக்கும் நற்காரியங்கள் மட்டுமே அவருக்கு நிலையான பெயரையும் புகழையும் மனநிறைவையும் பெற்று தரும் என்பதுதான் நிதர்சனம்.

“ஊரை மேன்படுத்துவேன்” - என வாக்குறுதி கொடுத்து வாக்குகள் பெற்ற சமூகத் தொண்டாற்றுவோர் அனைவரும் அவர்தம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய தார்மீக கடமை உண்டு என்பதை மறுத்துவிடவோ, மறந்துவிடவோ கூடாது. அதுவும், தனக்கு வாக்குகள் அளித்தோரையும், தன்னை வெறுத்தோரையும் ஒரே நிலுவையில் ‘நெற்றிக்கண்’ கொண்டு பார்க்க வேண்டுமெனவும் சட்டம் உரக்கக் கூவுகிறது. அவ்வண்ணமே மக்களும் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், இன்றைய ஆட்சி முறை எப்படி நடக்கிறது?...

       ஆர்வமுடன் உழைப்பவன் – நேரம்
           போதவில்லை என்கிறான்,
        அரட்டையுடன் ஊதியம் பெறுபவன் – நேரம்
           போகவில்லை என்கிறான்.
        லட்சம் மக்களின் வாக்குகளை - லட்சியம்
           என்ற பெயரில் சேகரிக்கிறான்,
        லட்சங்களைச் சேர்க்க – தான்
           கொண்ட லட்சியங்களை விற்கிறான்.
        ஆசையுடன் கையூற்று பெறுபவன் – அரசனால்
          ஆட்டி வைக்கப்படுகிறான்.
         அரசனாக வலம் வருபவன் – ஆசையுடன்
           ஆட வைத்துப் பார்கிறான்.

மனிதன் தவறு செய்பவன் என்பதால்தான் அவனை ஆட்சி செய்ய ஒரு குழுவை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். அந்த ஆட்சி குழு என்ன செய்து கொண்டிருக்கிறது? அனைவருக்கும் சம அளவு தண்ணீர் சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது அந்த ஆட்சிக் குழுவின் கடமை இல்லையா?. குடிதண்ணீர் மோட்டர்களை அகற்ற, நகராட்சி நிர்வாகமும் அதன் உறுப்பினர்களும் ஆண்டாண்டு காலமாக ஒவ்வொரு முறையும் மேம்போக்காக நடவடிக்கை எடுக்க அலோசித்துக் கொண்டு மட்டுமே இருக்கையில், அவை பெருகிக் கொண்டேயிருப்பதுதான் இப்போதைய அவதிநிலை.. அவலநிலை. இந்த துக்கம் நமது தூக்கத்தைத் துரத்த வேண்டாமா? இந்த தண்ணீர் - மோட்டார் எனும் அநீதிக்கு நகர்மன்றம் நீதியை நிலை நாட்ட, என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்ற கேள்வியை மக்கள், ‘மன்றத்தின்’ முன் வைக்கிறார்கள். நியாயமான கோரிக்கைதானே?.

மனிதன் என்பவன் ஒரு சமூக பிராணி. ஒருவருக்கொருவர் உதவி செய்து மகிழ்ந்து, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழும் - பண்புக்கும், பழக்கத்திற்கும் உரியவனாவான். ‘நான் வாழ்ந்தால் போதும்’ என நினைப்பதை விட்டு, ‘நாம் வாழ்வோமே!’ என எண்ணுதல் மட்டுமே மேன்மை தரும். சுய நலத்தின் நிழல் நம்மை சூழ்ந்து விடாது காத்தல் மிக முக்கியம். தூய்மையான நல்ல சிந்தனைகளும், அதை நிறைவேற்றும் விடாமுயற்சியும் தான் ஒரு சமூகத்தை அடுத்த படித்தரத்திற்கு அழைத்துச் செல்லும்.

அறிவுக்கு அறிவு தேவையில்லை. மாறாக, செயல்கள் அறிவு செரிந்ததாக இருத்தல் வேண்டும். அறிவு என்பது செயல்களாக பரிணமிக்கும் போது தான் அந்த அறிவே புத்துயிர் பெறுகிறது. ஒருவனின் எண்ணம் என்னவாக இருக்கிறதோ அதுவாகவே அவனும் மாறுகிறான். ஆழ்மனம் எனும் அடிமனத்தில் - நல்லவற்றையும், ஆக்கரீதியான கொள்கைகளையும், சமூக ஒற்றுமையையும் வி(பு)தையுங்கள். அதன் விளைச்சல் நல்ல மகசூலாகவே இருக்கும். மனதை உழுது தான் வாழ்க்கையை செம்மைப்படுத்த முடியும். மனதை உழுது கிடைக்கும் அறிவை, பட்டைத் தீட்டிக் கொண்டால் வைரம் போல் ஜொலிக்கும். வைரம் போல் ஜொலிக்கும் அறிவை கொண்டு செய்யும் செயல்கள், சமூக வளர்ச்சிக்கு நல்ல-பாதை அமைப்பதாக இருக்க வேண்டும். இல்லையென்றால், பரிதவிப்பில் விட்டு விடும்.

“நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” – என்ற எண்ணங்களைத் தன்னைச் சுற்றி படரவிட்டு, வாழ்க்கையை கோணலற்ற, குறிக்கோள் மிக்கதாக மாற்ற அறிந்தவன் - மனிதன். மகிழ்ச்சி என்பது நமது சமூகமும், சுற்றுசூழலும் நமக்கு தருகின்ற கொடை. அது, ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் இருந்தும் பொங்க வேண்டிய நன்னீர் ஊற்று. அதை வெளியே வெயிலில் தேடி அலைந்தால் ஏமாற்றமும் நாவறட்சியுமே மிஞ்சும்.

படிப்பது வேறு. கற்பது வேறு. நாம் இதுவரை எதைப் படித்தோமோ? எதை ‘சரி என்று தவறாக கடைப்பிடித்தோமோ?’ அது போன்ற ஆசைகளுக்கெல்லாம் முற்று புள்ளி வைப்போம். ஏனெனில், “தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே செய்வது குற்றம். தவறுகள் மன்னிக்கப்பட வேண்டும். குற்றங்கள் கண்டிக்கப்பட வேண்டும்”. நம் வீட்டை மட்டும் சோலைவனமாக மாற்றும் முயற்சியில் அண்டை அயலை பாலைவனமாக மாற்றாது இருக்க இன்றே சபதம் ஏற்போம்..

தனி மரம் தோப்பாகாது., அதே போன்று மானங்காப்பதும் ஒரு ‘நூல்’ அல்ல., பெரிய, சிறிய தறிகளில் ‘நெசவு’செய்யப்பட்ட ஆடைகள்தான். தண்ணீர் மெயினாக, மக்கள் கைடாக, நகராட்சி ரெய்டாக – செயலில் இறங்கினால், அறுவடையை அடுத்த தினமே காணலாம். “கட்டுப்படுத்தப்படாத சக்தி உடையவன், சாவியை பயன்படுத்துவதற்கு பதில் கோடாரியை பயன்படுத்துகிறான்”.

“வெறுங்கை என்பது மூடத்தனம். விரல்கள் பத்து என்பது மூலதனம்”. நகராட்சி நிர்வாகமும், ஜமாத்துகளும், பொது நல அமைப்புகளும், சமூக நல்லெண்ணம் கொண்ட மக்களும் ஒன்று கூடி இவ்விஷயத்தில் நல்லத் தீர்வை அமல்படுத்தி ஆணையிட்டால் நிறைந்த மனங்கள்...

நிறைய மனங்கள் மகிழ்ச்சி கொள்வது நகராட்சிக்கே சொந்தம்... நாம் ஒவ்வொருவரும் “ஊரையும், உலகத்தையும் மாற்றிவிட வேண்டுமென விரும்புகிறோம். ஆனால் தன்னை மாற்றிக்கொள்ள ஒருவரும் விரும்புவதில்லை”. “முட்டாளை படிப்பாளியாக்கலாம். ஆனால், சிந்தனையாளன் ஆக்க முடியாது”. நாம் சிறந்த மனிதர்கள். சிந்திக்கப் பிறந்தவர்கள். அதை நடைமுறைப் படுத்தும்போது மானமுள்ள மனிதர்கள் மாமனிதர்கள் ஆகிறார்கள்.

        உங்கள் நோக்கு ஓராண்டுக்குறியது மட்டுமென்றால்
           பூக்களை உருவாக்கும் செடிகளை நடுங்கள்...
        உங்கள் நோக்கு பத்தாண்டுக்களுக்கு என்றால்
          நிழல் தரும் மரங்களை நடுங்கள்...
         உங்கள் நோக்கு என்றும்
   முடிவில்லாத காலத்திற்கென்றால்
           மனிதர்களைப் பக்குவபடுத்துங்கள் -
   நல்லவர்களாக...
   மாறுங்கள்...
    மாற்றுங்கள்...
மறைவான விஷயங்களை படைத்தவன் நன்கு அறிந்தவனாக...

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:சமூக நலனில் தண்ணீரும் ஒர...
posted by: Kader K.M (Dubai) on 18 March 2012
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20981

நல்ல உள்ளங்களே! அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்! அனைத்து உயிர்களையும் வாழவிடுங்கள்! வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:சமூக நலனில் தண்ணீரும் ஒர...
posted by: H.M. SHAFIULLAH (Chennai-600040) on 18 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20982

This article contains essential and useful informations.

Brother! Your style of writing is good. Please write more essential articles like this.

SHAFIULLAH
+919710008200


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:சமூக நலனில் தண்ணீரும் ஒர...
posted by: abbas saibudeen (mumbai) on 18 March 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20983

VERY NICE ARTICLE.MANY MANY THANKS FOR ALAUDEEN SINNAPPA..........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:சமூக நலனில் தண்ணீரும் ஒர...
posted by: NIZAR AL (kayalpatnam) on 18 March 2012
IP: 101.*.*.* India | Comment Reference Number: 20984

சமுக ஆர்வலர் அவர்களே தங்கள் தொடர் கட்டுரைகள் மிக கருதாலமிக்கவை.கட்டுரையின் அளவை வரும் தொடர்களில் குறைதுகொள்ளவேண்டியது நல்லது.

NIZAR AL


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:சமூக நலனில் தண்ணீரும் ஒர...
posted by: S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) on 19 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20985

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

அன்பின் அலாவுதீன் அவர்களின் கட்டுரை தண்ணீரின் இன்றியமையா தேவை பற்றி எழுதி இருக்கும் தன்மையும் முறையும் காலத்தின் அவசியமும் அவசரமும் ஆகும். சம்பந்தப்பாட்ட நபர்கள் இதில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன். வல்ல நாயன் நம் அனைவருக்கும் அவனை அஞ்சி நடக்க கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.

S.D.Segu abdul cader.

Quede Millath Nagar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:சமூக நலனில் தண்ணீரும் ஒர...
posted by: Haddadh - ஹத்தாத் (Thrissur) on 19 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20986

தண்ணீரை தங்கமாக்கி தாரை வார்த்த என் தங்கத்திற்கு கோடி வாழ்த்துக்கள்.என்றும் உங்களது சமூக பனி தொடரட்டும்

நன்றியுடன்
ஹத்தாத்-கேரளம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:சமூக நலனில் தண்ணீரும் ஒர...
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 20 March 2012
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20987

அலாவுதீன் அவர்களின் கட்டுரை அருமை.ஆனாலும்,வேலியே பயிரை மேய்வது பற்றி அவர் ஒரு கட்டுரை எழுதினால் இதைவிட அருமையாக இருக்கும் என்பது என் கருத்து!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:சமூக நலனில் தண்ணீரும் ஒர...
posted by: HAMEED SIRAJUDEEN (Pondicherry) on 20 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20988

அருமையான கட்டுரை....

நம்மில் எத்தனை பேர் இந்த "தண்ணீர் ஆக்கிரமிப்பு" செய்வதில் இருந்து விலகி இருக்கிறோம் என்று உள் நோக்கி உற்று பார்ப்பது மிக முக்கியம்.

மேலும், தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சி எடுப்பதை விட அடி-பைப்பில் அடித்து எடுப்பது நமது உடலுக்கு நல்லது.

கூடுதலாக ஒரு நன்மையையும் உள்ளது. நாம் இப்போதெல்லாம் வீட்டில் உள்ளவர்களோடு கலந்து பேசுவதே இல்லை. இனி அடி-பைப்பில் தண்ணீர் அடித்துக் கொண்டே, உங்கள் மனைவி, தாயார், பிள்ளைகள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசிக் கொண்டே தண்ணீர் அடித்துப் பாருங்கள். பல மன இறுக்கங்கள் அகன்று உடல் நலத்துடன் உள்ளமும் விசாலமாகும்.

வஸ்ஸலாம்

சிநேகத்துடன்
சிராஜுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:சமூக நலனில் தண்ணீரும் ஒர...
posted by: CADER (JAIPUR) on 22 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20989

அருமையான கட்டுரை நகராட்சி மன்றம் இதை நடைமுறைக்கு எடுத்துக் கொள்வது நல்லது.பொது மக்களும் இதன் படி நடந்துக் கொள்வதும் நல்லது எல்லா வீடுகளுக்கும் மீட்டர் வைக்க வேண்டியது.அப்போது தெரியும் யார்? யார்? வீடுகளில் மோட்டர்கள் வைத்துள்ளர்கள் என்று.ஊரில் நில ஆக்கிரமிப்பை அகற்றுவது போல் இந்த தண்ணிர் ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும்.பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் நகராட்சி தலைவி சகோதரி ஆபிதா அவர்கள் இதில் அதிக கவனமும் உறுப்பினர்கள்,அதிகாரிகள் அனைவரின் கடமையும் அடங்கி உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. எனதன்பு உடன்பிறப்புகளுக்கு...
posted by: AnbinalA (Jaipur) on 22 March 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20990

உங்களின் நல்லெண்ணம் கொண்ட சிந்தனைகளை,
விமர்சனத்தில் படித்தேன். அது... ஒரு படித் ‘தேன்’.
ஏடுகளில் ஏற்புடைய கல்வெட்டுக்களாக
உள்ளத்தால் செதுக்கிய நற்சிற்பிகளுக்கும்...

கருவறையை கரு ஆக்கிரமித்ததைப் போன்று,
இந்த தண்ணீர் ஆக்கிரமிப்பை நிறுத்திட, மறந்திட
மௌனமாக மனதில் சபதம் ஏற்றுக் கொண்ட
நிறை-குடங்களுக்கும்,
ஏற்றுக் கொள்ள மனமிருந்தும், ஏழ்மையில்லா
குறை-குடங்களுக்கும்...

சமூக நலனில் அக்கரையிலிருந்து அக்கறையுடன்
களைப்படையாமல், களப் பணியாற்றும்
kayalpatnam.com இணையதள குடும்பத்தாருக்கும்...

எனது
இதயமலர் கணிந்த
இமய அளவு நல்வாழ்த்துக்கள்...

நன்றி! நம்மைப் படைத்தவனுக்கு...

- அன்பின் அலாவுதீன் –


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:சமூக நலனில் தண்ணீரும் ஒர...
posted by: ALADHEEN .A.M.S ( MUMBAI ) (KUWAIT) on 18 April 2012
IP: 178.*.*.* Kuwait | Comment Reference Number: 21016

தண்ணீரின் தேவையை தெளிவாக தந்த நண்பன் சின்ன அளவுதீனுக்கு பெரிய அலாவுதீனின் இமய பாராட்டுக்கள் .

அலாவுதீன் ,
டக்ஹ்னான் குரூப் ஒப் கம்பெனீஸ் ,
சால்மியா / ஹவேலி ,
குவைத்.
தொலைபேசி 0096565031182


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved