ஜன. 18 அன்று “மெகா நடப்பது என்ன?” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்!
காயல்பட்டினத்தில் இம்மாதம் 18ஆம் நாளன்று குருதிக்கொடை முகாம் நடத்தப்படவுள்ளதாகவும், இணையவழியிலேயே பெயர் பதிவு செய்யலாம் என்றும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
ஏப்ரல் 2017 முதல் காயல்பட்டினம் நகரில் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன? குழுமம் - அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து - குருதிக்கொடை முகாம்களை நடத்திவருகிறது.
இதுவரை நடைபெற்றுள்ள 9 முகாம்கள் மூலம், தூத்துக்குடி அரசு ரத்த வங்கி மற்றும் திருச்செந்தூர் அரசு ரத்த வங்கி ஆகியவற்றுக்கு - சுமார் 750 பேர் குருதிக்கொடை செய்துள்ளார்கள்; இதில் சுமார் 130 பெண்களும் அடங்கும். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
எதிர்வரும் ஜனவரி 18, 2020 அன்று (சனிக்கிழைமை), காயல்பட்டினம் KMT மருத்துவமனை வளாகத்தில் - 10 வது குருதிக்கொடை முகாம் (BLOOD DONATION CAMP) - தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து - இறைவன் நாடினால் - நடத்தப்படுகிறது.
காலை 9:30 மணி முதல் மாலை 3:30 வரை நடத்தப்படவுள்ள இம்முகாமில் - 18 வயது பூர்த்தி செய்து, 60 வயதை தாண்டாத ஆண்கள் - பெண்கள் கலந்துக்கொள்ளலாம்.
குருதிக்கொடை செய்ய விரும்புவோர் இணையவழியாக - கீழ்காணும் முகவரி மூலம் - முன்பதிவு செய்யலாம்:
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross