Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:20:17 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameModerator
PlaceKayalpatnam
Approved Comments18
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
18
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: கோமான் தெருவில் மணல் லாரி கவிழ்ந்து இளைஞர் பலி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கழிவு நீர் தொட்டி சாலையோரத்தில் இல்லை!
posted by Moderator (Kayalpatnam) [28 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22485

இந்த கழிவு நீர் தொட்டி சாலைப் பகுதியில் இருக்கவில்லை. மாறாக, வீட்டின் வடபுறத்திலுள்ள காலி நிலத்தில்தான் உள்ளது. கருத்துப் பதிவு செய்வோர் இதையும் கவனத்திற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஏப்ரல் 09 அன்று காயல்பட்டினம் நகராட்சியில் பொருட்கள் / சேவைகள் ஏலம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அரசு விதி படி ஏலம் அறிவித்தாக வேண்டும்!
posted by Daruttibyan Network (Kayalpatnam) [31 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17980

காயல்பட்டினம் கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை ஏலம் தொடர்பாக சில தகவல்கள்...

நகராட்சிக்கு வருமானமீட்டும் பல வழிகளில் கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிப்பதும் ஒன்றென அரசு விதித்துள்ளதாக அறிய முடிகிறது. எனவே, நகராட்சியில் அங்கம் வகிக்கும் யாரும் தன்னிச்சையாக அதனை இல்லாமலாக்க இயலாது. மேலும், தணிக்கைக் குழு (Audit) நகராட்சி கணக்குகளைப் பார்வையிடுகையில், மேற்படி ஏலம் குறித்த கணக்குகளும் காண்பிக்கப்பட வேண்டும் என்ற நிலையுள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த 29.03.2012 அன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் செய்தியாளராக நாமும் இருந்தோம். நகர்மன்றத் தலைவர் - துணைத்தலைவர் - உறுப்பினர்கள் என யாரும் இதனை வலியுறுத்தவில்லையெனினும், அரசு சட்ட விதிகளின்படிதான் தாம் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, அரசு விதிகளின் படி ஏலம் அறிவிக்கப்படுகிறது. ஏலத்தை எடுப்பதும், எடுக்காதிருப்பதும் ஏலதாரர்களின் விருப்பத்தைப் பொருத்தது.

கடற்கரை அழகுபடுத்தப்பட்ட பிறகே இவ்வாறு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டுள்ளதையும் நம்மால் உணர முடிகிறது.

எனினும், கடந்த நகர்மன்றத்திலும் இதுபோன்று ஏலம் விடப்பட்டு, அது ஒருவரால் ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால், நகர பொதுமக்கள் கடுமையாக எதிர்த்ததால் அவர்களால் கட்டணம் வசூலிக்க இயலாமல் போனதையடுத்து, காவல்துறை துணையுடன் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

நிர்ப்பந்தத்தை உணர்ந்த பொதுமக்கள், தமது வாகனங்களை கடற்கரை எல்லைக்குள் கொண்டு வராமல், கொச்சியார் தெருவிற்கு முன்பாகவே நிறுத்திவிட்டு கடற்கரைக்கு வருவதை வழமையாக்கிக் கொண்ட நிகழ்வும் நடைபெற்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இன்று (பிப்ரவரி 14) - தௌஹீது ஜமாஅத் ஏற்பாட்டில் - முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிடித்ததைப் பாருங்கள்!
posted by SKS, Daruttibyan Network (Kayalpatnam) [15 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16958

காயல்பட்டணம்.காம் வலைதளத்தில் நாம் வெளியிடும் செய்திகள் அனைத்திலும் வாசகர்களின் கருத்துக்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்த முனைந்தாலும், பலரும் நல்ல முறையில் பயன்படுத்தவே நாடுகின்றனர்.

நம் சமுதாயத்தில் ஒரு சாரார் சரி என்றும், மறு சாரார் தவறு என்றும் விமர்சிக்கும் அம்சங்கள் குறித்தவை (தவிர்க்க இயலாத நிலையில்) செய்திகளாக வெளியிடப்படும்போது மட்டும் பெரும்பாலும் வாசகர் கருத்து வெளியிடும் வசதி தரப்படுவதில்லை.

இதுபோன்ற செய்திகளில், அக்கருத்தை ஒத்தவர்கள் வாழ்த்த நினைக்கும் அதே நேரத்தில் விமர்சிப்பவரும் வாய்ப்பு கேட்கும் நிலை உள்ளது. பொது விஷயங்களானால் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளலாம். அதற்கு நாமும் விளக்கத்தைக் கொடுக்க இயலும். ஆனால், மார்க்கம் என்று வருகையில் அது அவர்களின் மார்க்க உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதோடு மட்டுமின்றி, அவற்றுக்குத் தீர்வு சொல்ல - செய்தி வெளியிடுவோர் மார்க்க அறிஞர்கள் அல்ல என்பதால்தான் கருத்துப்பகுதி தவிர்க்கப்படுகிறது.

உமர் அனஸ் காக்காவுக்கு இந்த விளக்கம் திருப்தியளிக்கும் என்று நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதையை அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும்! தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுக்குழு வலியுறுத்தல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
என்னைப் பற்றி...
posted by SKS (Daruttibyan Network) (Kayalpatnam) [02 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15379

சகோ. ஜாஃபர் ஸாதிக் காக்கா (ஜித்தா) அவர்களே!

மாவட்ட ஆட்சியர் அவர்கள் வந்தது வெள்ளிக்கிழமை. காலை 10 மணிக்கு வருவார் என தாங்கள் குறிப்பிட்ட பகுதிகளைச் சார்ந்த அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் ஆட்சியர் வர தாமதமாகிக்கொண்டே சென்று, நிறைவில் ஜும்ஆ நேரமும் வந்தது. எனவே, காத்திருந்த பலர் ஜும்ஆ தொழுகைக்காக இரண்டு பள்ளிகளுக்குச் சென்றுவிட்டனர்.

அந்நேரத்தில், “நாம் ஜும்ஆவையும் இழந்துவிடக்கூடாது... அதே நேரத்தில் இந்த முக்கிய நிகழ்வையும் பதிவு செய்தாக வேண்டுமே...” என்று நான் கவலைப்பட்டது போலவே, அங்கு காத்திருந்த சில பகுதிகளைச் சார்ந்த மக்களும் கவலைப்பட்டனர்.

இறுதியில், மகுதூம் ஜும்ஆ பள்ளியில் சற்று தாமதமாகத்தான் ஜும்ஆ தொழுகை நடைபெறுகிறது என்ற தகவலறிந்து, அதில் கலந்துகொள்ள முடிவு செய்திருந்தோம். சில மணித்துளிகளில் ஆட்சியரும் வந்தார். சிலர் அவரவர் கோரிக்கைகளை அளித்தனர். என் கடமைக்கு நான் செய்தி சேகரிப்பில் முழு கவனத்துடன் ஈடுபட்டேன். இதுதான் நடப்பு!

நான் இக்கருத்தில் சொல்ல வருவது என்னவெனில், தாங்கள் உட்பட பலர் என்னிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என் தகுதிக்கு மிஞ்சியதாகவே உள்ளது என்பதுதான். ஓரிடத்தில் ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால், (எனக்கு தனிப்பட்ட முறையில் அதில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் - இல்லாவிட்டாலும்) அந்நிகழ்வை அப்படியே பதிவாக்கி, உள்ளது உள்ளபடி செய்தியாகத் தருவது மட்டுமே எனது பணி என்பதை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

என் மனக்குறைக்குக் காரணம்... இந்த ஒருவழிப்பாதை செய்திகளில் கூட சில அன்பர்கள், நான் கே.டி.எம். தெரு சார்ந்த செய்திகளை வெளியிட்டால், நெசவுத் தெரு மக்கள் சந்தேகப்படுவதும், நெசவுத் தெரு சார்ந்த செய்திகளை வெளியிட்டால் கே.டி.எம். தெரு மக்கள் சந்தேகப்படுவதும் அந்தந்த செய்திகளின் கருத்துப் பகுதியிலேயே தெரிகிறது.

என்னைப் பொருத்த வரை நான் ஒரு செய்தியாளன்... எனக்கென பொதுவாழ்விலோ, ஜமாஅத் ரீதியிலோ, தனிப்பட்ட முறையிலோ, மார்க்க அடிப்படையிலோ சில கருத்துக்கள் இருப்பினும், நான் செய்து வரும் செய்திப்பணியில் அக்கருத்துக்கள் அணுவளவும் பிரதிபலிக்காமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறேன்.

அவ்வாறிருக்க, செய்தியாளராக நான் சென்ற இடங்களிலெல்லாம் எனக்கு சரியெனப்பட்ட கருத்தை வலியுறுத்தத் துவங்கினால், பின்னர் என் செய்தியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்ற அடிப்படையிலேயே நான் மவுனம் காத்து வருகிறேன்.

இத்தனையையும் தாண்டி, உங்களில் சிலருக்கு என் விஷயத்தில் தெளிவு கிடைக்கவில்லையெனில், எனது கைபேசி எண்ணுக்கு (+91 98658 19541) தொடர்புகொண்டு கேட்டறிய அன்புடன் வேண்டுகிறேன்.

செய்திப்பணியைப் பொருத்த வரை விமர்சனங்களை நாம் ஏற்கப் பழகித்தான் ஆக வேண்டும் என்பதற்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல என்பதை நன்கறிவேன் என்பதால்தான் இதுநாள் வரை இதுகுறித்து எந்தக் கருத்தும் என் பெயரில் தெரிவிக்காமலிருந்தேன். ஆனால் ஜாஃபர் ஸாதிக் காக்கா அவர்கள் தற்போது என் பெயரைக் குறிப்பிட்டே கேட்டுவிட்ட காரணத்தால்தான் இந்த விளக்கம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது.

அல்லாஹ் நம் யாவருக்கும் உளத்தூய்மையையும், நிறைவான நகர்நல சிந்தனைகளையும் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பிக்கப்பட்ட அஹ்மத் நெய்னார் பள்ளி திறப்பு விழா! மறைந்த முன்னாள் முத்தவல்லீக்காக சிறப்புப் பிரார்த்தனை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
செய்தி திருத்தப்பட்டது!
posted by Moderator (Kayalpatnam) [18 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14815

சகோதரர் முஹம்மத் முஹ்யித்தீன் அவர்கள் சுட்டிக்காட்டிய தகவலை, அஹ்மத் நெய்னார் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ததையடுத்து, செய்தியில் அப்பகுதி திருத்தப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
செய்தியை மட்டும் விமர்சனம் செய்யுங்களேன்...?
posted by SKS (Daruttibyan Network) (Kayalpatnam) [31 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12666

அன்பிற்குரியோரே... ஒரு செய்தியாளராக, முடிந்தளவுக்கு எங்கெங்கு சென்று செய்திகளை சேகரிக்க இயலுகிறதோ, அங்கெல்லாம் சென்று செய்திகளை சேகரித்து, இயன்றளவுக்கு விரைவாக வெளியிடுவதை நாம் வழமையாகக் கொண்டுள்ளோம்.

அதே நேரத்தில், நமக்கு சில நேரங்களில் தகவல்கள் கிடைக்காமல் போனதால், நடந்த நிகழ்வுகள் நடக்காதவையாகிவிடப் போவதில்லை.

புதுப்பள்ளியருகிலுள்ள குளத்தை நாம் செய்தியாக வெளியிட்டுள்ளோம். அதை நகர்மன்றத் தலைவர் அவர்கள் பார்த்ததாகவோ, பார்க்கவில்லையென்றோ நமக்கு தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் நாம் அதை வெளியிடவில்லை. இப்படியிருக்க, “நகர்மன்றத் தலைவர் அங்கு சென்றாரா?” என்று ஒரு சிலர் கேட்டிருப்பது பொருத்தமற்றதாக உள்ளது. “சொந்த ஜமாஅத்தையே அவர் பார்க்கவில்லை...” என்றும், இதுபோல இன்னும் பல தேவையற்ற வாசகங்களையும் ஏன் நம்மில் பலர் அவசரப்பட்டு கரு்த்துக்களாகப் பதிவு செய்ய வேண்டும்?

உண்மையில் நடந்ததென்ன தெரியுமா? அவர்கள் துவக்கமாக சென்று பார்த்த இடமே புதுப்பள்ளியருகில்தான். ஆனால் அத்தகவல் நமக்குக் கிடைக்கவில்லை. (சகோதரர்கள் சிலர் இப்பகுதியில் அவசரப்பட்டு வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்த்த பின்னர் தலைவர் நமக்கு இந்த விளக்கத்தைத் தந்துள்ளார்.)

மழை நீர்த்தேக்கப் பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர், ஒவ்வொரு பகுதியிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவை அடுத்தடுத்து செய்திகளாக வெளிவரலாம்.

அதற்குள், இதுபோன்று அவசரப்பட்டு, எமது பணிகளையும் குறைத்து மதிப்பிட்டு, நடந்தவற்றையும் நடக்காதவையாக சந்தேகித்து....... இதெல்லாம் தேவைதானா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க விட்டுவிடுகிறேன்.

மொத்தத்தில், அவசரப்பட்டு யாரையும் யாரும் பகைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதே எனது பணிவான கருத்து!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 27ஆம் ஆண்டு விழா! இன்றும், நாளையும் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கருத்துக்கள் நிறுத்தப்படுகிறது!
posted by Moderator (Kayalpatnam) [28 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6481

அன்பின் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இச்செய்தியின்கீழ் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை ஓரளவுக்குப் பின் நாம் நிறுத்திவிட்ட நிலையில், இந்த மீலாத் விழாவை நடத்திய சகோதரர் சட்னி செய்யித் மீரான் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மீண்டும் கருத்துப்பதிவுக்கு இடமளிக்கப்பட்டது.

எனினும், இச்செய்தியின் கீழான கருத்துப் பரிமாற்றம், நம் யாவருக்கும் மனச்சோர்வளிக்கும் என்ற ஒன்றைத் தவிர வேறெதையும் தந்துவிடப் போவதில்லை என்று உணரப்படுவதால் இத்துடன் கருத்துப் பதிவு நிறுத்தப்படுகிறது.

நம் மக்களிடையேயுள்ள இதுபோன்ற பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் குறித்து விவாதிக்க விரைவில், www.kayalpattinam.com வலைதளத்தில் discussion board மூலம் ஏற்பாடு செய்யப்படும். அந்தப் பக்கத்தி்ல் விரும்புவோர் புதுப்புது தலைப்புகளில் கூட விவாதித்துக்கொள்ளலாம்.

அதை விடுத்து, இதுபோன்ற செய்திகளின்கீழ் பதிவு செய்வதைத் தவிர்த்துக்கொள்வது நம்மிடையே இருக்கும் சிறிதளவு ஒற்றுமையைப் பாதுகாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தயவுசெய்து சிரமத்தைப் பொருந்திக்கொள்க! நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 27ஆம் ஆண்டு விழா! இன்றும், நாளையும் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முற்றும்!
posted by Moderator (Kayalpatnam) [25 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6369

இச்செய்திக்கான பார்வையாளர் கருத்துப்பதிவு இத்துடன் நிறுத்தப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 27ஆம் ஆண்டு விழா! இன்றும், நாளையும் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Attn: சகோ.ஜமால் (கொழும்பு)
posted by Moderator (Kayalpatnam) [22 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6262

அன்புச் சகோதரர் ஜமால் அவர்களே!

இச்செய்தியிலுள்ள, ”நகரில் நடைபெறும் மீலாது விழாக்களிலிருந்து சற்று மாறுபட்டு” என்ற வாசகம், கூடுதலாக இவ்விழாவில் செய்யப்படும் ஓர் அம்சத்தைக் குறிப்பிட்டுச் சொல்லும் செய்தியாளரின் பார்வை மட்டுமே!

ஒன்றைக் குறைத்து, பிரிதொன்றை உயர்த்தும் வகையில் எந்த வாசகமும் நமது காயல்பட்டணம்.காம் தளத்தில் இடம்பெறாமல் இயன்றளவு முழு கவனத்துடன் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. எனவே, அப்படி ஒரு மாற்றுக்கருத்தை தாங்கள் கொள்ளத் தேவையில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் நீக்கிய தாள்களை எரிக்க தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எங்கிருந்து கிடைத்தாலும்...
posted by Daruttibyan Network (Kayalpatnam) [23 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5563

காயல்பட்டணம்.காம் வலைதளத்தில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் காயல்பட்டினத்துடன் தொடர்பானவையாகவோ அல்லது காயல்பட்டினம் மக்களுக்குத் தேவையான தகவல்களாகவோதான் இருக்கும்.

செய்தியாளர் நேரடியாக களத்திற்குச் சென்று அவருழைப்பில் சேகரிக்கும் செய்திகள் அப்படியே வெளியிடப்படும்... பிற ஊடகங்களிலிருந்தோ, பிறரின் துணையுடனோ வெளியிடப்படும் செய்திகளில் அவர்களது பங்களிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அந்த ஊடகம் அல்லது தனி நபரின் பெயருடன் வெளியிடப்படும்.

இது விஷயத்தில் எத்தனை செய்திகள் என்பது ஒரு பொருட்டல்ல. இந்த தளத்தில் வெளியிடத் தேவையான தகவல்கள் எந்த ஊடகங்களிலிருந்து கிடைக்கப் பெற்றாலும் அவை வெளியிடப்பட்டு வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
18
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved