Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:20:39 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 92
#KOTWART0192
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 2, 2015
மலர்ந்தும் மலராத பாதி மலரிலே மடிந்த இளந்தளிரே!
இந்த பக்கம் 2264 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

17.12.2014 அன்று எனக்கு இளங்கோ என்ற நடைப் பயிற்சியில் அறிமுகமான இளங்கோ என்ற என் நண்பருக்கு, அவரது நண்பர் ஒருவர் அனுப்பிய செய்தி 'வாட்ஸ் அப்' என்ற தகவல் பரிமாற்றம் மூலம் கிடைக்கப் பெற்றேன். அந்தச் செய்தி, 'இன்று பாகிஸ்தான் இராணுவப் பள்ளி மீது நடந்த தாக்குதலைக் கொண்டாடுங்கள், ஏனென்றால் உலகின் ஜனத்தொகையில் 200 முஸ்லிம்கள் குறைந்தார்கள். இதுபோன்ற தாக்குதல் தொடரவேண்டும்'.

உடனே நான் இளங்கோவிற்கு, 'இதுபோன்ற சமுதாய நல்லிணக்கத்திற்கு உலை வைக்கும் செய்திகளை அனுப்ப வேண்டாம்' என்று தகவல் அனுப்பினேன். அவரும் அதனை ஏற்றுக் கொண்டு, 'பள்ளிக் குழந்தைகளைக் கொன்ற தீவிரவாதிகளை விட கொடியவன் இவன்' என்று அவரைச் சாடினார்.

அண்டை நாடான பாக்கிஸ்தானில் ஸ்வாட் மற்றும் கைபர் பள்ளத்தாக்கில் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்த மலாலா யுசுப், தாலிபான் தீவிரவாதிகளால் 9.10.2012இல் சுடப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்பு நோபல் பரிசும், உலக ஐ.நா. சபையில் பேசும் முதல் சிறுமி என்ற புகழுக்கு சென்ற செய்தி அடங்கு முன்னரே 16.12.2014 அன்று பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் புகுந்து பச்சிளம் தளிர்களான 132 மாணவர்களையும் 9 ஆசிரியர்களையும் தீவிரவாதம் காவு கொண்டிருக்கின்றது என்ற கொடுமை வாய்விட்டு அழும் நிலைக்கு மனித இனத்தைத் தள்ளி இருக்கின்றது என்றால் மறுக்க முடியாது.



அத்தனை பிள்ளைகளும் ராணுவத்தில் பணியாற்றும், மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் குழந்தைகள். அந்த படுபாதக செயலுக்கு தீவிரவாதிகள் சொல்லும் காரணம் , 'ராணுவம் தீவிரவாத நிலைகள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி' என்று கூறி இருக்கின்றார்கள். அந்தக் கூற்றின் மூலம் அவர்களின் செயலை நியாயப்படுத்தலாம், ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் அது போன்ற எதிர்நடவடிக்கைக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா என்றால் இல்லை.

`இஸ்லாமியர் போர்களில் தர்மம் காத்து, போர்நெறி தவறாது நடந்து கொண்டனர் என்பதை பெருமானார் முகமது (ஸல்) அவர்களும், அவர்கள் காலத்தில் போர் தளபதிகளாக இருந்தவர்களும், நபி பெருமானார் அவர்களுக்குப் பின்பு வந்த கலிபாக்களும், அலி(ரழி), வலீத் (ரழி) அவர்களும், அதன் பின்பு சிலுவை யுத்தத்தில் இஸ்லாமியப் படைகளை முன் நின்று நடத்திய தளபதி சலாஹுத்தீன் அய்யூப் போன்றோரும் கண்ணியம் தவறாது போர்களை நடத்தினர் என்ற வரலாறு உள்ளது.

பெருமானார் வேற்று நாடுகளுக்கு படையினை அனுப்பும்போது அதன் தளபதிகளுக்கு 'போரின்போது பயிர்களை, உணவு தரும் கனி மரங்களை அழிக்கக் கூடாது, நீர்நிலைகளையோ, குடியிருக்கும் வீடுகளையோ சேதப்படுத்தக் கூடாது, முதியோர், பெண்கள், குழந்தைகள், புறமுதுகிட்டு ஓடுவோர் ஆகியோரையும், வளர்ப்புப் பிராணிகளையும் கொல்லக்கூடாது' என்று கடுமையான கட்டளைகளை விடுத்தார்கள்.

ஆனால் ஏக வல்ல நாயன் அல்லாஹ் அளித்தத் திருக்கொடையான உயிரை அநியாயமாக பழிக்குப் பழி வாங்குகின்றோம் என்று துப்பாக்கி, கை எறிகுண்டு, மனித எறிகுண்டு கொண்டு அழிக்க யாருக்கும் அனுமதி வழங்க வில்லை என்பதுதான் உண்மை.

உலகிலேயே இது போன்ற குழந்தைகள், இளைஞர்கள் கொடூர கொலை சம்பவம் நடக்கவில்லையா என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். அவற்றுள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என எண்ணுகிறேன்.

1) இப்போதெல்லாம் பிள்ளைகள் வீடியோ கேம்ஸ் முன்னாள் மணிக்கணக்கில் அமர்ந்து, பெற்றோர் எவ்வளவோ தடுத்தும் - அவர்கள் விருப்பப்படி காட்சிகளைக் காண்கின்றனர். அதேபோன்று கனடா நாட்டில் 1989ஆம் ஆண்டு மாட்ரிட் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் போருக்கான வீடியோ கேம்ஸ் படங்களைப் பார்த்து அதுபோன்று தானும் துப்பாக்கி ஏந்தி எதாவது ஒரு இலக்கைப் பதம் பார்க்க வேண்டும் என்று துப்பாக்கியோடு சுற்றித் திரிந்து, தன்னோடு படிக்கும் 14 மாணவிகளையே சுட்டுக் கொன்றான்.

2) 1996ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தன்பிலாக் நகரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நுழைந்த ஒருவன் 16 பள்ளி சிறார்களையும், அதன் ஆசிரியரையும் சுட்டுக் கொன்றான்.

3) 1999ஆம் ஆண்டு அமெரிக்கா கொலராடோ பள்ளியில் நுழைந்து துப்பாக்கியால் 13 மாணவர்களை சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

4) 2009ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் 17 வயது இளைஞன் துப்பாக்கியுடன் ஒரு பள்ளியில் நுழைந்து 9 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களை பலி கொண்டான்.

5) 2011 ஜூலை மாதம் நார்வே நாட்டில் இளைஞர் முகாமில் காவல்துறை சீருடையுடன் நுழைந்த ஒருவன் துப்பாக்கியால் 80 இளைஞர்கள், மாணவர்கள் என்று கண்மூடித் தனமாக சுட்டுப் பொசுக்கினான்.

6) 2012ஆம் ஆண்டு அமெரிக்கா நியூட்டன் நகரில் உள்ள ஹுக் ஆரம்பப் பள்ளியில் நுழைந்து 20 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

7) 2014இல் மெக்சிகோ நாட்டில் போதைப் பொருள் கும்பல் ஆதிக்கப் போட்டியில் கல்லூரி மாணவர் 43 கடத்தப் பட்டு, கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்டும் மாண்டார்கள்.

இதுபோன்ற துப்பாக்கித் துறைத்தனத்திற்கு முக்கிய காரணமே மேலை நாடுகளில் காணுகின்ற துப்பாக்கிக் கலாச்சாரமும், ஆதிக்க உணர்வுகளும் தான் தூண்டுதல் என்றால் மிகையாகாது. போர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்:

1) 'கன்வேன்சனல்' என்ற முறைப்படி அறிவித்து போர்

2) 'நான் கன்வென்சனல்' என்ற அறிவிக்காத போர் முறையாகும்.

உதாரணத்திற்கு, கிராமங்களில் இரண்டு ஊர்களுக்கிடையே தகராறு இருக்கின்றது என்றால் அந்தக் கிராமத்தினர் கத்தி, கம்பு, கல் கொண்டு தாக்கிக் கொள்வார்கள் என்பதினை நீங்கள் அறிவீர்கள் .அது அறிவிக்கப்பட்ட போராகும்.

அதனை விட்டுவிட்டு ஒரு கிராமத்தினர் வேண்டாத அடுத்தக் கிராமத்து மக்களுக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று குளங்கள், குடி தண்ணீர் தொட்டிகளில் விஷம் கலப்பது மற்றும் வயலுக்குச் செல்லும் கால்வாய், வரப்புகளை அழிப்பது போன்றவைதான் “நான் கன்வென்சனல்” போர் முறையாகும்.

அதுபோன்ற ‘நான் கன்வென்சனல்’ போர் முறைகளை இரண்டாம் உலகப் போரில் மேலைநாடுகளின் கூட்டுப்படை ஜப்பான் முக்கிய நகர்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றில் உயிர்கொல்லி ஆயதமான அணுகுண்டை வீசி, வயது வித்தியாசமில்லாது லட்சக்கணக்கில் அழித்தனர். அதன் தாக்கம் இன்னும் மறையவில்லை என்பதை நாம் அறிவோம்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழிக்கின்றோம் என்று ஆளில்லா விமானம் மூலம் பள்ளத்தாக்கில் பழங்குடியினர் ஒரு திருமண நிகழ்ச்சியில் இரவு நேரத்தில் குழந்தைகள், முதியவர் ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியினைக் காட்ட ஆடிப் பாடிக் கொண்டிருந்தபோது குண்டு வீசப்பட்டு 62 பேர் மாண்டனர். அதற்கு கூட்டுப் படைத்தளபதியும் வருத்தம் தெரிவித்தார் என்பது கண் கெட்டதும் சூரிய நமஸ்காரம் போன்ற செயலாகாதா?

2) துப்பாக்கி கலாச்சாரத்தின் தாக்கம் தப்பித்த குழந்தைகளுக்கு எவ்வாறு இருக்கின்றது என்பதை சமீபத்தில் பெஷாவர் ராணுவ பள்ளி துப்பாக்கி சூட்டில் காயத்துடன் தப்பித்த ஒரு மாணவன் கூறும்போது, குண்டு அடிபட்டு வகுப்பறையின் கீழே விழுந்தபோது தீவிரவாதிகள் நடந்து வந்த கருப்பு நிற ஷூ சத்தம் இன்னும் தன்னை பயமுறுத்துவதாகக் கூறியிருக்கின்றான் என்றால் எவ்வளவு தூரத்திற்கு பிஞ்சு மனது வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். அவர்கள் அந்தப் பயத்தாக்கத்தை விட்டு அகல நீண்ட நாட்களாகுமல்லவா?

3) மேலை நாடுகளில் தனி நபர் துப்பாக்கி வைத்துக் கொள்வது அவனது உரிமை. ஆனால் ஆசிய நாடுகளில் துப்பாக்கி உரிமம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.

4) ஆசிய, அராபிய, ஆப்ரிக்கா நாடுகளின் தீவிரவாத கும்பலுக்கு நவீன ஆயுதம் எங்கிருந்து கிடைக்கின்றது என்றால் மேலைநாடுகளில் ஆயுதங்கள் தயாரிப்பதிற்கென்றே பல தனியார் கம்பனிகள் உள்ளன. அவை அந்த அரசின் ஆதரவு மூலம் அவர்களுக்கு விநியோகம் செய்கின்றன என்பதுதான் உண்மை நிலை. பிள்ளையையும் கிள்ளிவிட்டு அந்தக் குழந்தை அழுவதை வேடிக்கைப் பார்க்கும் நிலைக்குத்தான் மேலை நாடுகள் உள்ளன.

5) இளைஞர்களை மயக்கி மூளைச் சலவை செய்யும் தீவிரவாதக் கும்பல் மன நோய்களாலும், உளைச்சல்களாலும் நிம்மதி இல்லாமல் இருக்கின்றார்கள் என்பதைத்தான் பெஷாவர் பள்ளி துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் அறிவுறுத்துகின்றன என்றால் மிகையாகாது.

சிறுமி மலாலா துப்பாக்கிச் சூடு, பெஷாவர் பள்ளி துப்பாக்கிச் சூடு போன்றவை முஸ்லிம்கள் கல்விக்கு எதிரானவர்கள் போன்ற ஒரு தோற்றத்தை உலக மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என்பது யாரும் மறைக்க முடியாது. இவ்வளவுக்கும் அந்தக் காலத்தில் அராபியாவிலிருந்து சீனம் வெகு தூரத்திலிருந்தாலும் கல்வி கற்க அங்கே சென்று கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னது இஸ்லாமிய மார்க்கம்.

உலகிலேயே மிக சிறந்த நூலகம் அமைத்து உயர் கல்வியைக் கொடுத்த அலெக்சாண்ட்ரியா பல்கலைக் கழகம் முஸ்லிம்களைச் சார்ந்தது. அப்படி இருக்கும்போது எப்படி இஸ்லாமியர் கல்விக்கு எதிரானவர் என்று கூற முடியும்?

உயிர் என்பது இறைவன் கொடுத்த அற்புத வரம். அதை மனிதன் எடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்பது இஸ்லாம் போதிக்கும் நல்லுரையாகும். தற்கொலையை இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்படி இருக்கும்போது இளந்தளிர்களான பள்ளி மாணவர்களைக் கொன்ற தற்கொலைப் படை போன்ற படுபாதகர்கள் எப்படி முஸ்லிம்களாக ஏற்கப்படுவார்கள். அந்த இளம் மொட்டுக்கள் மலர்ந்து உலகெங்கும் மனம் பரப்ப முடியாமல் செய்தது மாபாதகமான செயலாகாதா?

இந்தத் தருணத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

கஸ்தூரி ராஜா என்ற ஒரு சினிமா டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் உங்களுக்குத் தெரிந்திருக்கும். மிகவும் ஆவலோடு சில படங்களை எடுத்தும் அவை வெற்றியடையவில்லை. சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் சிரமப்படுவதை விட சொந்த ஊரான வேலூர் மாவட்டம் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து மனைவி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோருடன் அங்கே சென்றாராம். அங்கே சென்றும் சரியான வேலை கிடைக்காததால் ஒட்டுமொத்தக் குடும்பமே வறுமையில் வாடியதாம்.

ஒருநாள் தன் மனைவியிடம், சாப்பாட்டுக்கே சிரமப்படுவதை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி விஷ மருந்து வாங்கி வந்து விட்டாராம். அதனை இரவு மனைவியிடம் கொடுத்து கிடைத்த கொஞ்சம் சோற்றிலும் விஷத்தைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, நாமும் சாப்பிடலாம் என்றாராம். அப்போது, பெற்ற குழந்தைகளைச் சாகடிக்க மனமில்லாத பாசமுள்ள அவருடைய மனைவி, 'ஏங்க, நமக்கு இறைவன் இரண்டு ஆண் குழந்தைகளைக் கொடுத்துள்ளான். அவர்கள் நிச்சயமாக பெரியவர்களாகி, நம்மையும் காப்பாற்றி மகளுக்கும் திருமணம் செய்து வைப்பார்கள் என்று உறுதியாக நம்பி நாம் மறுபடியும் சென்னை சென்று பிழைப்போம்' என்று உறுதியான நம்பிக்கையை அந்த மகராசி கணவனுக்குக் கொடுத்தாராம். அந்த அம்மணி சொன்ன வாக்கை நம்பி சென்னை வந்து மறுபடியும் சினிமா உலகில் பிழைப்பைத் தொடங்கினாராம். அவருடைய மகன்களான சினிமா டைரக்டர் மற்றும் நடிகர் செல்வராகவன், தனுஷ் தலையெடுத்து இன்று அவர்கள் வாழ்க்கை ஓஹோ என்று இருக்கின்றதாம். இதனை ஒரு பேட்டியில் கஸ்தூரி ராஜாவே சொல்லியுள்ளார்.

இது எதைக் காட்டுகின்றது என்றால் பிள்ளைகள் மொட்டுக்கள் போன்றவர்கள். அவர்கள் வளர்ந்து, மலர்ந்து பெரியவர்களாகி, தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் நல்ல பல சாதனைகளை செய்ய மணக்கும் முன்பே பறித்து விடலாமா? ஆகவேதான் சில பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்களைப் பறிக்காதீர்கள் என்று விளம்பரப் பலகை வைத்துள்ளார்கள். அதேபோன்று குழந்தைகளையும் இனியும் அழிக்காமல் வாழ விடுங்கள் என்று உரக்க கோசம் எழுப்பலாமா?

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1.
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 03 January 2015
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38703

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

வாழ்த்துப்பரிமாற்றங்கள் என்றபெயரிலும் வசையாடி வன்மப்போராட்டங்களுக்கு அடித்தளமிட்டுஉலையாகிவருகிறது இன்றைய பத்திரிக்கைத்துறைகளும் இணையதளங்கள். அந்தவகையில்தான் ஆசிரியர் அவர்களுக்குப்பரிமாறப்பட்டுள்ள ஊடகப்பரிவர்த்தனை.பட்டவர்த்தனமான மனிதத்திற்கும் மிருகத்திற்கும் அப்பார்ப்பட்ட கோர உணர்வுகளோடு கக்கப்பட்டிருக்கிறது.இறைவன்தான் அவர்களுக்கு நேரானவழியைக்காட்டவேண்டும். ஆசிரியரவர்கள் குறிப்பிடுவதுபோல் வினையாக்கிவரும் கைவிளையாட்டுசாதனங்களை ஒட்டுமொத்தஉலகிலும் தடைசெய்யப்படவேண்டும்,குழந்தைகளின் கைகளில் கூர்செய்யப்பட்டகத்திகளை விளயாடக்கொடுப்பது எந்தவிதத்தில் அறிவில்சார்ந்ததாகும்.

மனிதநேயம் மகத்துவமென்று தத்துவங்கள்பேசிக்கொண்டு தங்களதுமுக்கியதொழிலாக ஆயுதங்களை வியாபாரம்செய்யும் மேலைநாடுகளின் இந்தகொடூரப்போக்கிற்கு முற்றுப்புள்ளிகள் வராதவரை இதுபோன்றவிபரீதங்களைத்தடுக்கமுடியாது ஐக்கிய நாட்டுச்சபையென்ற போர்வைக்குள் மறைந்திருப்பவர்களில் அநேகர் தீவிரவாதத்திற்குஉடந்தையாளர்களே அணையையும்உடைத்து வெள்ளத்தையும்தடுப்பார்களாம் என்ன ஒருகுள்ளநரித்தனம்.

மனஅழுத்தம்தனிய யோகம்கற்றுத்தருவதாக்ச்சொல்லி நல்லமனங்களையும் பேரழுத்தத்திற்குஆளாக்கி படுபாதாளத்தில் தள்ளிவிடும் யோகத்துஷ்பிரயோகக்கூதங்கள் கண்டறியப்பட்டு களையெடுக்கப்படவேண்டும்.

அனாவசியமாக ஒரு மனிதனைக்கொல்வது ஒட்டுமொத்த மனிதசமுதாயத்தையே கொல்வதற்குச்சமமென்று நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்லித்தந்திருக்கிறார்கள் இது உலகமனிதசமுதாயத்திற்குத்தரப்பட்ட செய்தியே தனியொரு மார்க்கத்திற்கோ,மதத்திற்கோ தரப்பட்டசெய்தியல்ல.

ஆசிரியரவர்களின் இன்னுமொரு ஆச்சரியமிக்கதகவல் எங்கெங்கெல்லாம் கல்விக்கூடங்கள் கொலைக்கூடங்களாக இருந்துவந்திருக்கிறன என்பதையும் பட்டியலிட்டுத்தந்திருக்கிறீர்கள் இதைஉலகம்பரிசீலித்துப்பார்க்கட்டும்

தற்கொலையையும்,கொலையையும் நமக்குமார்க்கம் கற்றுத்தரவில்லை மாறாக தற்காப்புக்கலையையே கற்றுக்கொள்ளச்சொல்லியிருக்கிறது.

இந்தசெய்கையால் சோகக்கண்ணீரைத்தான் வரவழைக்கமுடிந்தது வேறென்ன உங்களால்சாதிக்கமுடிந்தது நம்மால் ஆக்கமுடியவில்லையென்றாலும் அழிக்கக்கூடாது இஸ்லாம் என்றால் சாந்தியென்றுபொருள் நீங்கள் செய்துவிட்ட இக்காரியத்தில் யாருக்கு சாந்தியேற்பட்டது கொள்கையில்லாத கொள்கையைகையிலெடுத்து தன்னையும் அழித்து நிரபராதிகளையும்கொல்வதில் என்னபெருமையிருக்கிறது

இன்னும் பூமித்தாயின் அடிமடிகளை அணுஉலையாக்கும் உங்களுக்கு இயற்கைச்சீற்றங்க்கள் தரும்அழிவு புரியவில்லையா? நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லையெனில் இயற்கை உங்களை நிறுத்திக்கொல்லும் இன்ஷா அல்லாஹ்

"அன்பே பிரதானம் அதுவன்றிவேறில்லை சமாதானம்"

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2.
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 03 January 2015
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38704

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

ஆசிரியர்அவர்கள் சீர்திருத்த சிந்தனைக்குரிய சிறப்பான கட்டுரையத்தந்திருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் இந்தக்கட்டுரையில் உங்களுடைய அலுவல்பயணத்தில்நீங்கள் கண்டுகொண்ட அனுபவங்களும் தெளிவாகத்தெரிகின்றன உங்களுடைய அலுவலில் இதுபோன்றசம்பவங்கள் அதிகப்பளுவைத்தந்திருக்கும் சமாளிக்க என்னபாடுபட்டீர்களோ என்பதும் எழுத்துக்களில் உள்ளுணர்வாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் ஜஜாக்கல்லாஹ் க்ஹைரன் வ ஷுக்ரன் தொடரட்டும் இதுபோன்ற உங்களின் நல்லகட்டுரைகளின் அணிவகுப்பு.

இறைவன் மிகப்பெரியவன்.

என்றும் அன்புடன்,
இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved