Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:20:07 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 87
#KOTWART0187
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 27, 2014
கான்க்ரீட் கனவுகள்!
இந்த பக்கம் 2372 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட சிங்கித்துறை மீனவ கிராமத்தில் ஓலைக் குடிசைகளில் வசிக்கும் இந்த ஏழை மக்களின் அவல நிலையைக் கேளீர்.

பெரும்பான்மையாக குடிசைகளில் வாழும் இந்த மக்கள் கூலிக்கு மீன் பிடிக்கச் செல்கிறவர்கள். இவர்களுக்குச் சொந்தமாகப் படகு ஏதும் கிடையாது. கோடை காலங்களில் மீன்பிடித் தொழில் இல்லாத நேரங்களில் குடும்ப உறுப்பினர்களோ அல்லது குடும்பத் தலைவர்களோ வேறு ஊர்களுக்குச் (கேரளா, தூத்துக்குடி, மங்களூர்) சென்று தங்கள் தொழிலான மீன்பிடித் தொழிலைச் செய்கிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்தக் கிராமத்தில் இருந்துகொண்டு, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வெளியூர்களில் இருந்து தரும் பணத்தில் தங்கள் ஜீவனத்தை சரி செய்கிறார்கள். கோடை காலங்களில் கூட இவர்கள் அச்சத்துடன்தான் குடிசைகளில் வசிக்கிறார்கள். காரணம், இவர்கள் குடிசைகளைச் சுற்றியுள்ள காய்ந்த கருவேல மரங்கள், அதற்குள் இருக்கும் காய்ந்த புற்கள். இதிலிருந்து விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வந்து விடுகின்றன. சில சமூக விரோதிகள் இந்தப் புற்களில் தீயிட்டுச் சென்று விடுகிறார்கள். இந்தத் தீ பரவி, குடிசைகளை எரித்து விடுமோ என்ற பயம்தான், இப்படிப்பட்ட நாசச் செயல்கள் நடந்து, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.



இதன் பிறகு மழைக்காலம். மழை வருவதற்கு முன்னாள் இவர்கள் தங்கள் குடிசைகளைப் புதுப்பித்தோ அல்லது பழுது பார்த்தோ வைத்து விடுகிறார்கள். இதற்காக சுமார் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். மழை அதிகமாக வரும் நாட்களில் தங்கள் வீட்டிற்குள்ளேயே நீரூற்று எடுத்துவிடுகிறது. ரோட்டில் வழிந்தோடும் நீரும் வீட்டிற்குள் வந்து விடுகிறது. இவர்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு, உட்காரக் கூட இடமில்லாமல் தங்கள் வீட்டிற்குள்ளே பரண் என்னும் கட்டிலைக் கட்டி, அதிலே அமர்ந்துகொள்கிறார்கள். எரிவாயு இணைப்பு இல்லாத சிலர் - விறகெல்லாம் நனைந்து, சமையல் கூட செய்ய இயலாமல் பட்டினி கிடக்கிறார்கள்.

இவர்கள் செய்யும் தொழில், இந்த மழைக்காலங்களில் இயற்கைச் சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கடலில் போட்டிருக்கும் வலைகளைக் கூட எடுத்து வர இயலாமல் தவிக்கிறார்கள். இயற்கைச் சீற்றங்கள் முடிந்த பின் அதை எடுக்கச் சென்றால், கடலில் வலையே இல்லாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்புகிறார்கள். காரணம், இயற்கைச் சீற்றங்களாகிய காற்று, கடல் நீரோட்டத்தினால் வலைகள் அடித்துச் செல்லப்பட்டு விடுகின்றன.

இவை போன்ற காரணங்களால் இவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மீண்டுமாக கடன்களை வாங்கி, வலைகளை தயார் செய்து, தொழிலுக்குச் செல்கிறார்கள்.

இப்படித்தான் இவர்களது வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களால் கனவில் மட்டுமே கான்கிரீட் வீடுகளை நினைக்க முடிகிறது. நிஜத்தில் கனவு நிறைவேறுமா...?

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆசிரியரின் எழுத்துக்களைக்காட்டிலும்,எடுத்தபடம் நன்றாக எடுத்துக்காட்டுகிறது.
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 28 October 2014
IP: 5.*.*.* | Comment Reference Number: 37914

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்க்காத்துஹு

இன்றையமீனவர்களின் நிலை இதுதானென மிக எளியநடையில் தகவல் தந்திருக்கிறார் ஆசிரியர் டி. தேவ ஞான சிகாமணி அவர்கள்.

ஆசிரியரின் எழுத்துக்களைக்காட்டிலும்,எடுத்தபடம் நன்றாக எடுத்துக்காட்டுகிறது.

மாண்டுவரும் விவசாய உ லகம் மீண்டுவருமா?

இல்லை,

மீனவ உலகும் அந்த வரிசையில் இணைந்துகொள்ளுமா?

இது அரசின் கவனத்திற்குப்போய்ச்சீரவேண்டும்.

இறைவன் நாடுவான் ஆமீன்.

இறையடிமை.
ஷேக் அப்துல் காதிர்.


இறைவன் மிகப்பெரியவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: சாளை பஷீர் (சென்னை) on 29 October 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37922

நெஞ்சைத் தொடும் வரிகள். படங்கள் மனதை மிகவும் உறுத்துகின்றன. மனித துயருக்கு ஏது சாதியும் மதமும் ?

நமதூரில் மழை மிகத்தீவிரமாக பெய்து கொண்டிருந்த நேரத்தில் வெளியூர் சென்று விட்டு புற வழிச்சாலை வழியாக ஊருக்குள் நுழையும்போதுதான் மழையின் தீவிரத்தையும் ஆவேசத்தையும் நேருக்கு நேர் காண முடிந்தது.

நாம் குடியிருப்பது கல் வீடானாலும் கூட சுழித்தோடும் மழை வெள்ளத்தைப் பார்க்கும்போது வீட்டைப்பற்றிய அச்சம் எழுந்தது. கல் வீட்டில் வசிக்கும் என் மனதே இப்படி பட பட என அடித்துக் கொள்ளும்போது தரவை , சீதக்காதி நகர் , சுலைமான் நகர் , அண்ணா நகர் , கற்புடையார் பள்ளி வட்டம் போன்ற பகுதிகளில் குடிசை கட்டி வாழும் மக்களை நினைத்து மனம் நெகிழ்ந்தது.

மழை விட்டு ஒரு வாரம் ஆகியும் குடிசைப்பகுதிகளில் புகுந்த மழை நீர் இன்னும் வடிந்தபாடில்லை.

கடந்த வாரம் வந்து விட்டி போன பருவகால பெருமழையானது நம் முன் சில கேள்விகளை எழுப்புகின்றது.

1. முறையான ஆவணங்களுடன் தங்களுக்கு உரிய நிலத்தில் குடிசை கட்டி வாழும் மக்களுக்கு ஏன் இது வரை பாதுகாப்பான வீடுகள் கட்டித்தரப்படவில்லை ? அரசு என்ன செய்கின்றது ?

2. நமதூரில் 55 நீர் நிலைகள் இருந்ததாக சொல்லப்படுகின்றது. அவைகள் எங்கே போயின ? கண் மண் தெரியாமல் வளர்ந்து வரும் நில மோகமும் அதையொட்டி செயல்படும் நிலம் வளைக்கும் கும்பலும் காணாமலடித்த நீர் நிலைகள் என்னென்ன / அவைகள் ஏன் மீட்கப்படவில்லை?

பிரபஞ்சத்தின் ஐம்பெரும் ஆற்றல்களில் நீர் முதன்மையானது. இயற்கையாக தேங்கும் மழை நீரும் தகுந்த வாழுமிடமின்மையால் மக்கள் விடும் கண்ணீரும் ஒரு போதும் தங்கள் தடங்கலை மறப்பதில்லை.

அவை என்றாவது ஒரு நாள் தங்களின் இடத்தை தடம் பிடித்து வரும். அப்போது அதில் அரசின் அநீதியும் நிலம் வளைக்கும் கும்பலின் பேராசையும் குப்பை போல மிதக்கத்தான் போகின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved