Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:32:53 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 57
#KOTWART0157
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 30, 2014
இந்திய அரசியல்: தமிழக முதல்வரின் ‘பிரதமர் கனவு’ பலிக்குமா?
இந்த பக்கம் 2214 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



“தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டுமென்றால், நாம் சொல்வதைக் கேட்கக் கூடிய மத்திய அரசு அமைய வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும். அதற்காக, எம்.ஜி.ஆர். பிறந்த நல்ல நாளில், லோக்சபா தேர்தல் பணிகளைத் துவங்குங்கள்!”. இது தமிழக முதல்வர் மாண்புமிகு ‘அம்மா’ ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் அழைப்பு - அறிவிப்பு - அறைகூவல்!

அதிரடி முடிவுகளை எடுப்பதும், அதிர்ச்சி வைத்தியம் தருவதும், முன்பின் முரணாகப் பேசுவதும் - செயல்படுவதும் தமிழக முதல்வரின் வாடிக்கை. இந்த அறிக்கையில் அவர் என்ன கூறுகிறார் என்பதுடன், அதற்கு பலனாகத் தொண்டர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையும் ஆராய வேண்டும். 40 தொகுதிகளையும் வென்றால் அம்மாதான் இந்தியப் பிரதமர் என்கிறார்கள் கட்சிக்காரர்கள் - பரப்புரை செய்கிறார்கள். ஆனால், ஜெயலலிதாவோ, “நாம் சொல்வதைக் கேட்கக் கூடிய மத்திய அரசு அமைய வேண்டும்” என்கிறார். அப்படியானால், சொல்பவர் இவர். கேட்பவர் வேறொருவர். அதாவது பிரதமர் ஆசனத்தில் இருப்பவர் வேறொருவர். இது என்ன குழப்பம்?

சரி, அது எப்படி போனாலும், ஜெயலலிதாவிற்கு டெல்லிக்குப் போவதற்கு ஆசை உண்டு என்பது அறிந்த விஷயம். 1982-89 காலத்தில், ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர் அவர். தேசிய அரசியலில் என்.டி.ராமராவ் இருந்தபோது, தனக்கு துணைப் பிரதமர் பதவி கேட்டதாகவும், தேர்தல் செலவிற்கு பெரிய அளவில் பணம் தருவதாகச் சொன்னதாகவும் செய்தி இருந்தது. இப்போது நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென்றும், அடுத்த பிரதமராக வேண்டும் என்றும் அவரிடம் கனவு இருப்பது உண்மையிலும் உண்மை.

எந்த அடிப்படையில் 40 தொகுதிகளை வெல்லும் ஒருவர் பிரதமர் ஆக முடியும் என்று இவர் கணக்குப் போடுகிறார் என்று பார்ப்போம். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 545. இன்றைய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 202 ஆசனங்களும், பாரதீய ஜனதாவிற்கு 116 ஆசனங்களும் உண்டு. இவர்கள் இருவரும் 318 ஆசனங்களைத் தொடுவதால் இவ்விருவர் அல்லாது - இவர்களின் ஆதரவு இல்லாது மூன்றாவது ஒரு நபரோ, அணியோ ஆட்சியமைக்க முடியாது. ஆகவே, காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. இப்போது அது தேர்தலை சந்திக்கப் போகிறது.



மிகுதி 227 ஆசனங்களை, சுயேட்சை உறுப்பினரையும் சேர்த்து 38 கட்சிகள் பங்கு போடுகின்றன. அவற்றில் பிரதானமாக: உத்திரபிரதேசத்தின் 80இல் சமாஜ்வாதி கட்சி 22, பகுஜன் சமாஜ் கட்சி 21, (காங்கிரஸ் 21) மேற்கு வங்காளத்தில் 42இல் திரிணாமூல் காங்கிரஸ் 19, பிஹாரின் 40இல் ஐக்கிய ஜனதா தளம் 19, தமிழ்நாட்டின் தி.மு.கழகம் 18, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 16, ஒடிசா பிஜு ஜனதா தளம் 21இல் 14, சிவசேனா 11, அதிமுக 9, மற்றவை ஒற்றைப்படை எண்ணிற்குச் செல்கின்றன. இவர்கள் அனைவரும் 40 என்ற எண்ணிக்கையைப் பெற முடியாது. ஆகவே, “நாம் 40 பெற்றால் நானே பிரதமர்” என்பது அம்மாவின் கனவு. இது சாத்தியமா இல்லை சறுக்குமா?

ஒருவேளை பா.ஜ.க.வும், காங்கிரசும் ஆட்சியமைக்கும் அளவு தனிப்பெரும்பான்மை பெறாது, மூன்றாவது அணி என்ற ஒன்று தன் பலத்திலேயே - பண்டாரங்கள் கூடுவது போல - ஆட்சி அமைக்கும் வாய்ப்பு நேர்ந்தால், தேசிய கட்சி இரண்டும் சேர்ந்து 270 ஆசனங்களுக்கு மேற்படாது எடுக்க வேண்டும்.

இன்றைய நிலையில் காங்கிரஸ் 202, பா.ஜ.க. 116 என்று 318 ஆசனங்கள் அவர்களிடம் உண்டு. ஊடகங்கள் ஓங்கி முழங்குவது போல காங்கிரஸ் 202இல் இருந்து இறங்கி 100 ஆசனங்கள் பெறுவதாக வைத்துக்கொண்டாலும், பா.ஜ.க. தனது 116 இலிருந்து கூடவே செய்யும். 150க்கும் குறைவாக அவர்களை மதிப்பிட முடியாது. அதையும் தாண்டலாம்.



இந்த மூன்றாவது அணி கூடாரத்திற்குள் ஆம் ஆத்மி கட்சியும் நுழையவே செய்யும். அவர்களும் சில ஆசனங்களை அங்குமிங்குமாகப் பெறலாம். ஒருவேளை, யாரும் எதிர்பாராத அளவு அதிகமாகவும் அவர்கள் பெறலாம். டெல்லியில் அவர்கள் இப்போது நடத்தும் காட்டு தர்பார் “சிறுவர்கள் செய்த வெள்ளாமை வீடு வந்து சேராது” என்பது போல் கவலைக்கிடமாக இருந்தாலும், அரசியல் அறிவு - அனுபவம் குறைந்த இளைஞர்கள் ஒரு கூட்டம் அவர்கள் பக்கம் இருப்பதால் மீண்டும் ஓர் அதிர்ச்சியை அக்கட்சி தந்தாலும் வியப்பில்லை.

மேலும் இந்த கூடாரத்தில் பெண்களின் குடுமிப்பிடி சண்டையோடு, ஆண்களின் மல்யுத்தமும் இருக்கும். அங்கு குறைந்தது ஆறு கட்சிகளின் தலைவர்கள் தனக்கே பிரதமர் பதவி எனப் போட்டி போடுவர். இதில், அதிக ஆசனங்களைப் பெற்றவர் “நானே மூத்தவன்; நானே முதல்வன் எனக்கே பட்டம் சூட்ட வேண்டும்” என்று சண்டை பிடிப்பார்.

இந்தச் சூழலையே தமிழக முதல்வர் குறி வைக்கிறார். அதில் இணக்கம் வருமா, இல்லை “நான் சேரவில்லை” என்று யாராவது சொன்னாலும் இந்த அணி ஆட்சியமைப்பது இயலாது என்றாகிவிடும். அப்படியானால், பண்டாரங்களின் ஆட்சி எந்த நேரம் கவிழுமோ என்ற நிலையற்ற தன்மையைத்தான் தரும். அது நாட்டிற்கு நல்லதல்ல. எந்த முதலீடும் வராது. எந்த வளர்ச்சியும் பெறாது.

புதுச்சேரியைப் பொருத்த வரையில் அங்கு காங்கிரசை அசைக்க முடியாது. ஆகவே, 39க்குள்தான் ஜெயலலிதா தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. 39 ஆசனங்களை எப்படிப் பெறும்? அதை - தமிழ்நாட்டில் அமையும் கூட்டணியைப் பொருத்துதான் மதிப்பிட முடியும்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 38% வாக்குகளையும், தி.மு.க. 22% வாக்குகளையும் பெற்றன. அ.தி.மு.க.வின் இந்த 38இல் நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சி 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற 10% வாக்குகளும் அடக்கம். இப்போது, அ.தி.மு.க.விற்கு அந்த 10% இல்லை என்பது தெளிவு. அந்த 10க்குத்தான் தி.மு.க. தலைவர் படாத பாடுபடுகிறார்.



இப்போது அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி 28% என்று இறங்கியே இருக்கும். தி.மு.க. தனது 22% விகிதத்தோடு, விஜயகாந்திரன் 10% விகிதத்தையும் சேர்த்தால் 32%. அம்மாவின் நிலை 28%. பலம் மிக்க பலப்பரீட்சையில் இறங்கலாம் - போட்டி போட்டுப் பார்த்து விடுவோம் என்று முடிவு செய்து, தே.மு.தி.க.வின் கதவைத் தட்டியபடியே இருக்கிறார் தி.மு.க. தலைவர். தே.மு.தி.க.வைப் பொருத்த வரை, அந்த 10 % வாக்கு வங்கி இப்போது இருக்காது என்பதே அரசியல் அவதானிகளின் கணிப்பு.ஆனால், அரசியல்வாதிகளின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்து பெற்றது 22% விகிதம். ஆட்சியளர்களுககு எப்போதும் தேர்தலில் சில சாதகங்கள் இருப்பது உண்டு. இப்போது தி.மு.க.விற்கு அது இல்லை. அ.தி.மு.க.விற்கு அது உண்டு. ஆகவே, இப்போதும் அக்கணக்கில் ஏற்ற தாழ்வு வரவே செய்யும்.

மேலும், 10% விகிதமாக மதிப்பிடப்பட்ட விஜயகாந்தின் செல்வாக்கு, கூட்டணி ஒன்று நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற எப்படிப் பயன்படும் என்று சிந்திப்பவர் எவருமிலர். இந்த 10% விகிதம் எல்லா தொகுதியிலும் இருக்காது. ஏறி இறங்கி இருக்கும். இலங்கை - அமெரிக்கா போல் தேசிய அளவில் ஒரே வேட்பாளரைத் தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கு அது பயன்படுவது போல், சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலில் அதன் தாக்கத்தைப் பெரிய அளவில் காட்டாது.

இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக விஜயகாந்த் கட்சி வரும் - வளரும் என்று நம்பிய - இரு கழகங்களின்பாலும் அதிருப்தியுற்ற ஒரு கூட்டம், அவரைப் பிரதானமாக ஆதரித்தது. நடிகர் மன்ற ஆதரவும் ஒரு புறம் இருந்தது - இருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயகாந்தின் அரசியல் நடவடிக்கைகள் நிச்சயமாக அவரது செல்வாக்கைக் கூட்டவில்லை. “ஏமாற்றாதே, ஏமாறாதே” என்று எம்.ஜி.ஆரின் வழியில் வந்த, “கருப்பு எம்.ஜி.ஆர். நான்” என்று தன்னை வர்ணித்த அவர் ஏமாற்றினார் - ஏமாந்தனர் மக்கள்.

எனது கணிப்பு, விஜயகாந்த் பா.ஜ.க. அணிக்குத் தலைமை தாங்குவார் என்பதே. 2% விகிதம் மட்டும் வாக்கு வங்கியைக் கொண்ட பா.ஜ.க., விஜயகாந்தையும் இணைத்து, தமிழகத்தில் தன்னை மூன்றாவது சக்தியாக்கிடத் துடிக்கிறது. ம.தி.மு.க., பா.ம. க., தே.மு.தி.க. மற்றும் சில உதிரி கட்சிகளைச் சேர்த்துக்கொண்டால், தங்கள் அணி 15 முதல் 20% விகித வாக்குகளைப் பெறலாம் என நினைக்கிறார்கள்.

"பாரதீய ஜனதாவின் நரேந்திர மோடி பிரதமராகும் வாய்ப்பு இல்லாவிடில், ஜெயலலிதா பிரதமராக வர பா.ஜ.க. ஆதரவு தர வேண்டும்” என சமீபத்தில் பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி பேசினார். இவர் ஏன் இப்படிப் பேசினார்? மோடியின் வெற்றி உறுதியில்லை என்று நினைக்கிறாரா? இல்லை -ஜெயலலிதாவையும் தடவிக் கொடுப்பது போல் பேச வேண்டும் என்ற கட்டாயத்தில் அப்படிப் பேசினாரா என்று தெரியாது. ஆனால், அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் இணைந்து போட்டியிட வேண்டுமென்ற இவரது மன்றாடலை ‘அம்மா’ புறக்கணித்துவிட்டார். அதன் வருத்தம் அவருக்கு உண்டு. ஒரே உறைக்குள் இரண்டு வாள் இருக்க முடியாது. உண்மைதான்.



பாரதீய ஜனதா ஆட்சியமைக்கும் வாய்ப்பு இல்லாது போனால், நரேந்திர மோடி எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வாரே தவிர, நிச்சயம் ஜெயலலிதாவோ, வேறு யாருமோ பிரதமராவதற்கு அவர் ஆதரவு அளிக்க பா.ஜ.க.வை விட மாட்டார்.

அதே நேரம், தாங்கள் ஆட்சியமைக்க ஜெயலலிதாவின் ஆதரவைக் கேட்க அவர் தயங்க மாட்டார். அ.தி.மு.க.வால்தான் மோடி பிரதமராக முடியும் என்ற ஒரு நிலை வந்தால், ஜெயா தனக்குத் துணை பிரதமர் பதவி வேண்டுமென்று கேட்பார்; அடம் பிடிப்பார். அது தராவிட்டால், அந்த பா.ஜ.க. அரசை வீழ்த்தவும் அவர் தயங்க மாட்டார். இந்த இரண்டு நிலைகளும் வரும் வாய்ப்பு உண்டு. சேனியன் குடுமி சும்மா ஆடாது.

கூட்டணிகள் உறுதியாகிய பின்புதான் யாருக்கு எவ்வளவு ஆசனங்கள் கிடைக்கலாம் என்று கணிக்க முடியும். தி.மு.க.வோடு விஜயகாந்தும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்தால் அது ஓரளவு பலம் பெறும். இல்லாது, விஜயகாந்த் பா.ஜ.க.வுடனும், காங்கிரஸ் தனித்தும் போட்டியிட்டால் அது ஜெயலலிதாவிற்கு போட்டியை மிகவும் இலகுவாக்கும்.

இப்போதைய சூழலிலும் அவர்தான் முன்னணியில் நிற்கிறார். எப்படியும் அவர்தான் அதிக ஆசனங்களைப் பெறுவார் - 40 அல்ல! ஆனாலும் தமிழக முதல்வரின் பிரதமர் கனவு பலிக்காது!

[Administrator: கட்டுரை திருத்தப்பட்டது @ 11:00 am / 31.01.2014]

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: P.S. ABDUL KADER (KAYALPATNAM) on 31 January 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32882

பெரியவர் எம். எஸ்.ஷாஜகான் துரை அவர்களின் தவறுதலான பிரதமர் கணிப்பு கட்டுரை படித்து பார்த்தேன். இந்தியமக்கள் மத்தியில் மாற்றத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள், காங்கிரஸ்கட்சி தனியாக அதிக எண்ணிக்கை பலன் கொண்டு ஆட்சி அதிகாரம் செய்த காலம் வேறு, இன்று கூட்டாக கொள்ளையடித்து முன்னுக்கு பின் நடந்து வந்தேருவது வேறு. இன்னும் நாட்டிலேயே எந்தஎந்த கட்சிகள் யாருடன் கூட்டணி என்று முடிவுஇல்லை. இன்னும் இரண்டு வாரத்திற்குள் கூட்டணி முடிவு கண்டு தமிழக முதல்வர் அம்மாவை பிரதமாராக அமர வைக்க தேர்தல் பணி மக்களோடு தேர்ந்து ஆட்டுவோம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: Mohamed Noohu (Chennai) on 31 January 2014
IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 32884

"தமிழக முதல்வர் அம்மாவை பிரதமாராக அமர வைக்க தேர்தல் பணி மக்களோடு தேர்ந்து ஆட்டுவோம்" copy & Paste. "மக்களோடு தேர்ந்து ஆட்டுவோம்" நல்ல ஆட்டுங்க யார் வேண்டாமென்று சொன்னது. ஒருத்தனுக்கு (தமிழக முதல்வர்) சிங்கள் ரூமையே (தமிழ்நாடு) ஒழுங்கா வைக்கதெரியலயாம், அவன் (தமிழக முதல்வர்) மாளிகைக்கு (இந்தியா) ஆசைபட்டனாம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: me.syed mohamed sahib (Qatar) on 31 January 2014
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 32889

அஸ்ஸலாமுஅலைக்கும்.மரியாதைக்குரிய சாஜஹான் துரை அவர்களுக்கு அரசியலில் இன்னும் அதிக அறிவு அவசியம் என்பதை அவர்கள் அரசியல் கட்டுரை ஆருடம் காட்டுகின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. இந்த கச்சியிலும் ஆட்டுறதுக்கு நிறைய ஆண் மக்கள் இருக்கிறார்கள்.
posted by: s.s.md meerasahib (TVM) on 31 January 2014
IP: 106.*.*.* India | Comment Reference Number: 32890

நீங்கள் எல்லோரும் சேர்ந்து அம்மாவுக்கு ஆட்ட ஒன்னும் முடியாது. இந்த கச்சியிலும் ஆட்டுறதுக்கு நிறைய ஆண் மக்கள் இருக்கிறார்கள். நீங்கள் என்னத்தான் அம்மாக்கு ஆட்டுனாலும் அது நரேந்திர மோடிக்கு ஆட்டினது போல்தான் அமையும். மாமா அவர்கள் கணிச்சது சரியோ இல்லையோ........ மாமாவின் தலைப்பு "தமிழக முதல்வரின் ‘பிரதமர் கனவு’ பலிக்குமா?" பழிக்காது இது மட்டும் உண்மை. வாழ்த்துக்கள் மாமா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) on 31 January 2014
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32897

கட்டுரையாளருக்கு அரசியல் ஞானம் இன்னும் தேவை என்பது தெளிவாக தெரிகிறது. அவரது ஒற்றை குறிக்கோளான தமிழக முதல்வரை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட வேண்டும் என்ற எண்ணம் அவரது அரசியல் முதிர்ச்சியற்ற கட்டுரையின் மூலம் தெளிவாகிறது.

அவர் பி.ஜெ.பி யின் செல்வாக்கை பற்றி அலசும் போது, ஊடகங்களில் வரும் செய்திகளை மையமாக வைத்து கருத்தை சொல்லியுள்ளார். மோடி அலை என்பதெல்லாம் சுத்த ஹம்பக். 4 மாநில தேர்தலை வைத்து அப்படி கணித்துள்ளார் என்று எண்ணுகிறேன்.

பி.ஜெ.பி.க்கு அந்த 4 மாநிலங்களில் மட்டும் தான் செல்வாக்கு. கூட குஜராத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். அந்த 5 மாநிலங்களில் உள்ள எம்.பி க்களின் கூட்டு தொகை கிட்டதட்ட 120 தான். ஆக அந்த 120 சீட்டும் 100% கிடைக்கும் என்று எண்ணுகிறீர்களா?.

மாநில தேர்தல் என்பது வேறு, பாராளுமன்ற தேர்தில் என்பது வேறு. தே.மு.தி.க வுக்கு 10% வாக்கு உள்ளது என்பதும் சுத்த ஹம்பக். தே.மு.தி.க - பி.ஜெ.பி யுடன் சேர்ந்தாலும் அக்கூட்டணி ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது. பி.ஜெ.பி க்கு முன்பைவிட கூடுதல் சீட் வரும் என்று சொல்கிறீர்களே!!!. அது எந்த அடிப்படையில் என்பதை தெளிவுபடுத்தவில்லை.

தங்கள் வாதபடி, ஒரு வேளை பி.ஜெ.பி. ஆட்சி அமைக்க முற்படுமானால், ஜெயலலிதா ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார். ஆனால் கருனாநிதி ஆதரவு கொடுக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், சமீபத்தில் தான், மோடி நல்லவர், திறமையானவர் என்றெல்லாம் மோடிக்கு நற்சான்றிதல் அளித்தார். அவரது அமைச்சரவையில் பங்கு பெற்றவர் தான்.

குஜராத் கலவரம் நடக்கும் போது, அமைச்சரைவில் இருந்து கொண்டு, அச்சம்பவம் ஒரு மாநிலம் சம்பந்தபட்ட விவகாரம் அதில் எனது கருத்தை கூற முடியாது என்று சப்பைகட்டு கட்டியவர் தான். கட்டுரையாளர் ஏன் குஜராத் கலவரத்தையும் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பற்றியும் கணிக்கவில்ல. ஆனால் அதிமுக பி.ஜெ.பி க்கு ஆதரவு அளிக்காது. ஏனெனில் பி.ஜெ.பி யின் ஆட்சியையே கவிழ்த்து காட்டி சாதனை படைத்தவர் ஜெயலலிதா அவர்கள்.

ஜெயலலிதா என்றைக்குமே நான் பிரதமராக வருவேன் என்று சொன்னதில்லை. நமது சொல்படி நடக்கும் ஆட்சி அமையும் என்று தான் சொல்லியுள்ளார். பொதுகுழுவில் தீர்மானம் போட்டது உண்மை. அது தொண்டர்களின் ஆசை. ஏன் அவருக்கு பிரமராக வருவதற்கு தகுதி இல்லையா? அல்லது வாய்ப்பு தான் இல்லையா?

தேவகௌடா, குஜரால், சரண்சிங், வி.பி.சிங், மொரார்ஜிதேசாய் போன்றோர் எப்படி பிரதமர் பதவிக்கு வந்தார்கள். இத்தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் தான் மேலோங்கும். ஜெயலலிதா பிரதமராக வரவும் வாய்ப்புள்ளது.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 01 February 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32927

அஸ்ஸலாமு அழைக்கும் ,

எது எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும் ,யார் யாரோடு வேண்டுமானாளும் கூட்டு வைக்கட்டும் வரும் பாராளுமன்றம் கீழ்காணும் அமைப்பில்தான் அமையும் இன்ஷா அல்லாஹ் .

காங்கிரஸ் மற்றும் கூட்டணி (யாரோடு வேண்டுமானாளும் கூட்டு வைக்கட்டும்) - 135 அல்லது ( 5 சீட்டுகள் முன்ன பின்ன ) பிஜேபி மற்றும் கூட்டணி (யாரோடு வேண்டுமானாளும் கூட்டு வைக்கட்டும் ) -160 அல்லது ( 10 சீட்டுகள் கூடுதல் கிடைக்க வாய்புகள் இருக்கலாம் ) ஆனால் இதைதாண்டி ஒரு சீட்டு கூட கூடுதல் கிடைக்க வாய்புகள் இல்லை )

மாநில கட்சிகள் 170 - 180 சீட்டுகள், சிறு ,சிறு கட்சிகள் 20 - 25 சீட்டுகள் , ஆம் ஆத்மி 15 - 20 , தனி நபர்கள் சுயட்சைகள்- 3 .

அப்பா அப்படி கட்டுரை எழுதியதால்தான் நாம் இப்படி விமர்சிக்கவும் கருத்துகள் எழுதவும் முடிகிறது . நன்றி சாஜஹான் அப்பா அவர்களுக்கு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved