Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:47:40 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 47
#KOTWART0147
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, செப்டம்பர் 15, 2013
ஜோர்தானின் சிரிய அகதி முகாமில் இளம் மணப்பெண்கள் விற்பனை!
இந்த பக்கம் 2823 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“அகதி முகாமில் இரவில் மின்சாரம் இல்லை. நடுங்கும் கால்களுடன் கூட்டமாகவே கழிப்பறைக்கு செல்வோம். தனியே சென்றால் அங்கு இருளில் ஒருவன் புலிபோல் பாய்வான். மான்போல் நாங்கள் இரையாக வேண்டியதுதான். இதுதான் ஸாதரி அகதி முகாமின் நிலை” என்று கூறினாள் ஜோர்தானில் உள்ள இவ்வகதி முகாமில் வசிக்கும் சிரிய அகதிப் பெண் ஒருத்தி. சில பெண் கள் விடியும் வரை காத்திருப்பதுண்டு. சிலர் தங்கள் கூடரத்திலேயே அவசரத் தேவையைப் பூர்த்தி செய்வதும் உண்டு.



சிரியாவில் உள்நாட்டுப் போர் மூண்டதன் விளைவாக இவ்வகதி முகாம் 2012ம் வருடம் ஜுலை 28ம் திகதி அன்று துவக்கப்பட்டது. தற்சமயம் இங்கு சுமார் 160,000 சிரிய அகதிகள் இருக்கிறார்கள். பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். இங்கு ஆண்களின் பாலியல் தொல்லை அதிகம். உலர் உணவு வாங்குமிடத்தில் பெண்களிடம் சிலேடையாக பேசுபவர்கள் உண்டு. பொது சமையல் அறையில் தனியாகச் சமையல் செய்யும் பெண்ணை துன்புறுத்துபவர்கள் உண்டு. ஆகவே சில பெண்கள் திறந்த வெளியில் சமைப்பதையே விரும்புவார்கள்.

பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பல நடந்துள்ளன. ஆனால் பெண்கள் யாரும் தனக்கு நடந்ததாக ஒத்துக் கொள்வதில்லை. மாறக அடுத்தவருக்கு நடந்ததைக் கண்டேன் என்று தான் வாக்கு மூலம் தருவார்கள். ஆகவே பெற்றோர்களைப் பொறுத்தவரையில் இப்பிரச்சினைக்கு அவர்கள் அறிந்த தீர்வு, தங்கள் வசம் இருக்கும் வயது வந்த பெண்களை உடனடியாகத் திருமணம் செய்து கொடுப்பதுதான்.

நஜ்வாவிற்கு வயது 13தான். அவளது மூத்த சகோதரிகள் இருவருக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தாயிற்று. அவளது கூடாரத்தின் ஓர் ஓரத்தில் அவள் அமர்ந்திருக்க அருகில் அவள் கணவன் 19 வயது காலித் இருக்கிறான். அவளது தாயார் கூறுகிறாள் "அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன். நாங்கள் சிரியாவில் இருந்திருந்தால் இவ்வளவு சின்ன வயதில் அவளுக்கு திருமணம் செய்து வைத்திருக்க மாட்டேன். எனக்கு இங்கு பயமாக இருக்கிறது” என்றார் அவள்.



காலித், “இங்கு கற்பழிப்பு அதிகம். எனக்கு இப்போது குழந்தை வேண்டுமென்ற அவசியம் இல்லை. நான் அவளைப் பாதுகாத்துக் கொள்வேன். திருமண பார்டியைக் கூடநான் விரும்ப வில்லை” என்று நிதானமாகக் கூறினான் அந்த புதிய மணமகன்.

ரீம்- அவளுக்கு வயது 16 தான். நான்கு மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கு லிபியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனோடு திருமணம் ஆயிற்று. அகதி முகாமிற்கு வெளியே சென்று ஒரு மாதம் அவனோடு அவள் வாழ்ந்தாள். இப்போது அவன் லிபியா சென்றிருக்கிறான். இவளுக்கு பாஸ்போர்டு ஏற்பாடு செய்து இவளை லிபியாவிற்கு அழைத்து செல்ல முயல்வதாக தொலைபேசியில் கூறுகிறான். அவன் நினைவில் இவள் நாட்களைக் கழிக்கின்றாள்.

செய்யது, தனது 15,16 வயது இரு மகள்களை சென்றமாதம் தான் திருமணம் செய்து கொடுத்தார். “எனக்கு வேலை இல்லை. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆகவே என்னால் குடும்பத்தை காப்பாற்ற முடியாது. இந்த முகாமில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை"என்றார் அவர்.

15 வயது நடாவிற்கு 18 வயது மாசெம்மோடு சென்ற மே மாதம் 4ம் திகதி திருமணம் நடந்தது. கல்யாண கொண்டாட்டங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அது வழக்கமாக சிரியாவில் நடப்பது போல் இல்லை. பெரிய விருந்து இல்லை. இசை இல்லை. புது உடுப்பு சரசரக்க வரும் உறவினர் கூட்டம் இல்லை. பரிசுகளும் குறைவு. நடாவின் தந்தை 35வயது முகம்மது, நாங்கள் கொண்டாடுகிறோம் ஆனால் அந்த மகிழ்ச்சி உள்ளத்தில் இருந்து வரவில்லை என்று வேதனைப்பட்டார்.

இன்னொரு 50வயது அபு முகம்மது இங்கு இருக்கிறார். அவர் கதையைப் பார்ப்போம். சமீபத்தில் தான் அவர் 40 வயது பணக்கார சவூதி அரேபியர் ஒருவருக்கு தனது இளஞ்சிட்டைத் திருமணம் செய்து கொடுத்தார். தனது மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையும், தனக்கு பொருளாதார உதவியும் கிடைக்கும் என்பது அவர் நம்பிக்கை.



“இப்படி செய்வதில் எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனால் இந்த அகதி முகாம் ஒரு நரகம்" என்றார் அவர். ஆனால் மணமகன் - அவரது மருமகன் சிரிய யுத்தம் முடியும் வரை அவருக்கு உதவுவதாகவும், அதன்பின் சிரியா சென்று மீள் குடியேறவும் உதவுவதாக வாக்குறுதி தந்திருந்தார் என்ற அவர், மாதம் மூன்றாகியும் இன்னும் அவரிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை என்றார்.

தாங்கள் இருக்கும் சூழ்நிலையின் தாக்கத்தால் வெளிநாட்டவர்க்கு தங்களது இளம் வயது பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர் அவர்களது எதிர்காலம் உறுதியானதா என்று கவலைப் படவில்லை. இப்போதைய பிரச்சினையில் இருந்து அவர்களை மீட்டால் போதும் என்றே நினைக்கிறார்கள். நாளைவருவது என்ன என்று சிந்திக்கும் சூழ்நிலையில் அவர்கள் இல்லை.

மற்றுமொரு 15 வயது பெண்ணின் தந்தை ஒருவர் 9000 ஜோர்தான் தினார்களை, சுமார் 13 ஆயிரம் டாலர் ரொக்கமாகப் பெற்று தனது மகளை ஒரு சவூதி செல்வந்தருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அவர் அவளோடு நகரில் உள்ள ஒரு வீட்டில் சில காலம் தங்குவார். பின்பு அவர் தனியே சவூதி சென்று விடுவார். மீண்டும் அவர் வரலாம் அல்லது வராமலும் விடலாம். அப்படியே திருமணமான பெண்ணை அவர் சவூதி அழைத்து சென்றாலும் அங்கு மனைவி அந்தஸ்து கிடைப்பது கடினம். காரணம் முன் அனுமதியின்றி சவூதி அரேபியர் வெளிநாட்டு பெண்களைத் திருமணம் செய்ய முடியாது.

அகதிப் பெண்களுக்குத் தொல்லை அகதி முகாமில் மட்டும் என்றில்லை. வெளியிலும் உண்டு. ஒரு பெண்ணுக்கு 13 குழந்தைகள். மூத்த இரு பெண்களும் பருவ வயதுக்கு வந்து விட்டவர்கள். அவர்களைத் தனியே விட்டுச் செல்ல அவள் பயந்ததால் தனது சிறு குழந்தைக்கு தடுப்பு ஊசி கூட அவளால் போடுவதற்கு போக முடியாமல் ஆயிற்று. இதுதான் இம் மகளிரின் நிலை.



ஜோர்தானில் உள்ள சிரிய பெண்களுக்கான மகளிர் அமைப்பு இத்தகைய திருமணங்களை பகிரங்கமாக எதிர்ப்பதோடு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அரசு இயந்திரம் தடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

அரசோ எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்கிறது. வேலியற்ற வெள்ளாடுகளாக இப்பெண்கள் இருப்பது ஓநாய்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. "சிரிய அகதிப் பெண்கள் அடிமைகள் அல்ல. உங்கள் காமப் பசியைத் தீர்க்கும் இயந்திரங்களும் அல்ல. எங்களை சீரழிக்காதீர்கள்” என்று அவ்வியக்கம் கணைகளைத் தொடுக்கிறது.

“நாங்கள் சாவிற்குப் பயந்து சிரியாவைவிட்டு ஓடிவந்தோம். ஆனால் இங்கு சாவை விட பயங்கரமான ஒரு சூழலை நாங்கள் எதிர் கொள்கிறோம். நாங்கள் சிரியாவில் இருந்திருந்தால் சாவு எங்களை விரைவாக அணைத்துக் கொள்ளும். அது கெளரவமானது. ஆனால் இங்கு சாவு மெல்ல மெல்ல வந்து எங்களைக் கொல்லுகிறது” என்று கூறி தனது இளம் மகளை இறுக அணைத்தவாறு கூறினாள் மரியம்.

இம் மக்களின் நிலை சட்டியில் இருந்த மீன் விடுதலை தேடி அடுப்பில் விழுந்த கதைபோலவே உள்ளது. என்று மாறும் இம்மக்களின் அவலம்?

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வரம்பு மீறியர்வர்கள் வாழந்த சரித்திரமே இல்லை...!
posted by: M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) on 15 September 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30121

பொதுவாக அகதிகள் முகாம் என்றாலே அங்கு உயிருக்கும் உடலுக்கும் கற்புக்கும் பாதுகாப்பற்ற நிலைதான். இலங்கையில் தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் அகதிகள் முகாம்களில் இதைவிடக் கொடுமையும் கேவலங்களும் நடக்கும் அநியாயக் கூடாரமாக இருந்து வருவதை நாம் உதாரணமாகக் கூறலாம்.

சிரியாவின் நிலை மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. கொடுங்கோலன் பஷ்ஸாரின் அடக்கு முறை அமிலகுண்டுகள் வீசி அந்நாட்டு மக்களை அழித்தொழிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது. அப்பாவிகளான அந்நாட்டு மக்கள் பழைய நிலைக்கு திரும்ப நாம் அல்லாஹ்விடத்தில் கையேந்துவோமாக...!

“மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்”. அல்-குர்ஆன்(14:42).

வரம்பு மீறுவோரை தண்டிக்க அல்லாஹ் ஒருபோதும் தவறியதில்லை. ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்கள் அநியாயமாக நிகழ்த்தும் இத்தகைய கொடுமைக்கெல்லாம் ஓர் நாள், அல்லாஹ்வின் மகத்தான தீர்ப்பு மூலம் இவர்கள் எடுத்தெறியப்பட்டு இருந்த சுவடே தெரியாமல் அழிந்து போவார்கள். சரித்திர சான்றுகளும் இதைத்தான் பகன்று நிற்கின்றன.

சத்தியத்தின் பாதை தன்னில் சோதனைகள் பலதும் வரும். ஈமானில் உறுதி கொண்டோருக்கு எப்போதும் சோதனைதான். இறுதியில் அந்த ஈமான் தான் அவர்களை ஈடேற்றம் பெறச் செய்யும். உலகில் அகதிகளாக வாழும் அனைத்து தரப்பு மக்களையும் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக ஆமீன். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. போரின் வலிகளும், அபலைகளின் சோதனைகளும்
posted by: கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா ) on 15 September 2013
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 30124

வேலியற்ற வெள்ளாடுகளாக இப்பெண்கள் இருப்பது ஓநாய்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. இம் மக்களின் நிலை சட்டியில் இருந்த மீன் விடுதலை தேடி அடுப்பில் விழுந்த கதைபோலவே உள்ளது. என்று மாறும் இம்மக்களின் அவலம்?

-- சரியாகச் சொன்னீர்கள். பிபிஸியிலும் இதுபற்றிய ஒரு டாக்குமெண்டரி வந்தது. எம் இனச் சகோதரிகளுக்கு ஏற்பட்ட இந்நிலை கண்டு மனம் கசிகிறது. எரிகிற வீட்டில் கிடைப்பதைப் பறிக்கும் கயவர்கள் உலகம்! போரின் எச்சமாக, மிச்சமாக, சொச்சமாக என்னென்னவெல்லாம் நடைபெறப் போகிறதோ? அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: S.M.I.Zakariya (chennai) on 15 September 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30128

ஷாஜஹான் காக்கா அவர்களின் இந்த கட்டுரையை படிக்கும் போது நாம் முஸ்லிமாக இருந்தும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு உதவ முடியவில்லையே என்று நினைக்கும் போது குற்ற உணர்வு என்னை சாவடிக்கிறது. கொடுங்கோலன் பசர் அல் ஆசாத்திற்கு எதிரான இந்த போராட்டத்தில் உயிரை விட்டவர்கள் ஏராளம் என்றால் தினம் தினம் இதுபோல் மனதால் வெம்பி சாவும் மக்கள் லட்சோப லட்சம்.

இவர்களின் துயர் துடைக்க வல்ல அல்லாஹ்வின் துணையை நாடுவதை தவிர வேறு வலி தெரிய வில்லை காரணம் நம்முடைய ஈமான் அந்த அளவு பலவீனமாக இருக்கிறது

அயோக்கிய அமெரிக்கர்கள் இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் படையெடுத்து அந்த நாட்டில் ஆட்சி செய்த செய்த அரசுகளை கவிழ்த்து தனக்கு காவடி தூக்கும் ஆட்சியாளர்கள் நியமித்த போது பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களது சுகபோக வாழ்க்கையை தூக்கி எரிந்து விட்டு அந்த மண்ணில் சென்று போராடி மடிந்தவர்கள் பலர். இன்னும் பலர் போராடிகொன்றும் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் இவர் ஆப்கானிஸ்தானியர் இவர் இராக்கியர் என பார்ப்பதில்லை இவர்கள் முஸ்லிம்கள் இந்த மண்ணில் அநியாயம் நடக்கிறது. நாளை மறுமையில் நம்முடைய இறைவன் ஒன்னுடைய சகோதரனுக்கு அநியாயம் நடந்ததே அப்போது நீ என்ன செய்து கொண்டு இருந்தாய் என கேட்டால் நாம் என்ன சொல்வது என்பது அவர்களின் உயர்வான எண்ணம்.

ஆனால் நாம் தொளுவும்போது விரலை ஆட்டலமா ஆட்டகூடதா தரவிஹ் எட்டா இருபதா என நாம் காலம் முழுக்க பேசிக்கொன்று இருப்போம். ஆனால் இந்த மாதிரி தைரியமும் துணிச்சலும் நமக்கு ஜென்மத்திலும் வராது.ஏனென்றால் நாம் அனைவரும் கோழைகள்.

ஆனால் தினம் தினம் செத்து மடியும் இம்மக்களுக்காக அமெரிக்கா போரில் இறங்கி விடக்கூடாது என நாம் அனைவரும் கூக்குரல் இடுகிறோம். மொத்தத்தில் இந்த போர் முடிவுக்கு வந்தால் ஒரு கொடுங்கோலழலின் ஆட்சி முடிவுக்கு வரும் இந்த மக்களின் துயர் நீங்கும் இதற்கு யார் உதவி செய்தாலும் தப்பு இல்லை என்ற எண்ணம் நமக்கு இல்லை.

இந்த மாதிரி நமக்கு நடக்கணும் அப்போ தெரியும் நம்முடைய நிலை. லிபியாவில் கதாபிக்கு நடந்த போரில் கூட nato படையினர் தங்களுடைய தாக்குதலை வானத்தில் இருந்து தொடுத்த போது இவ்வாறுதான் குறை கூறினார்கள். ஆனால் அவ்வாறு தாக்குதல் நடந்ததால் தான் கதாபியை தூக்கி எரிய முடிந்தது இன்று அந்த மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள். இதை நம்மவர்கள் உணர மறுக்கிறார்கள்.எவ்வாறோ இந்த மக்களின் துயர் வெகு விரைவில் நீங்கி அங்கு ஜனநாயக ஆட்சி அமைய வல்ல இறைவனை வேண்டுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 15 September 2013
IP: 113.*.*.* China | Comment Reference Number: 30129

'''''''''''''நாங்கள் சிரியாவில் இருந்திருந்தால் சாவு எங்களை விரைவாக அணைத்துக் கொள்ளும். அது கெளரவமானது""""""""""""""""

அப்படியானால் இந்த அகதிகள் முகாம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது, எந்த நாட்டு பாதுகாப்பில் உள்ளது, முகாமை நடத்துவது யார் போன்ற விவரங்கள் கட்டுரையில் இல்லையே!

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் இவ்வளவு மோசமான நிகழ்வுகளை கேள்விப்பட்டதில்லையே! இந்தியாவில் நடைபெற்ற பங்களாதேஷ் அகதிகள் முகாம்களிலும் இவ்வளவு மோசமான நிலையை கேள்வியுறவில்லை. ஒரு அரபுநாடு கூட இவர்களுக்கு உதவ முன்வரவில்லையா ? அரபு நாடுகளிடம் செல்வம் மிக அதிகமாக இருந்தும், அறிவும் ஒற்றுமையும் இல்லை. அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நிலைமை எவ்வளவோ மேல்.

அல்லாஹ் இந்த அகதிகளுக்கு நல் வாழ்வையும் , விரைவில் தங்கள் சொந்த வீடு திரும்பும் வாய்ப்பையும் கொடுத்தருவானாகவும். ஆமீன்.

Administrator: கட்டுரை தலைப்பில் - இம்முகாம் ஜோர்டான் நாட்டில் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...புலி வால்...
posted by: சாளை பஷீர் (மண்ணடி , சென்னை) on 15 September 2013
IP: 116.*.*.* India | Comment Reference Number: 30130

ஷாஜஹான் துரையின் கட்டுரையை வாசிக்கும்போது மனதிற்கு அழுத்தமாக இருந்தது.

போரும் , இனக்கலவரமும் , உள் நாட்டுக் கலகமும் , ஆயுத எழுச்சியும் மனித சமூகத்திற்கு பெரும்பாலும் பேழிவையும் மீளாத் துயரையுமே பரிசாக அளிக்கின்றன.

இந்த குருதி சிந்தும் மோதல்களில் பறி போவது அப்பாவி மனிதர்களின் உயிர் , மானம் ,பொருள் ,உடைமை , வாழ்விடம் , சொந்த மண் போன்றவைதான்.

அகதிகளாக இடப்பெயர்வு , பட்டினி , தொற்று நோய்கள் பரவல் என போரின் பக்க விளைவுகள் மனிதர்களை வருடக்கணக்கில் துரத்திக் கொண்டே இருக்கும்.

யுத்தம் என்று வந்து விட்டால் மனிதர்களுக்கு மதம் , இனம் , மொழி , குலம் என எதுவும் தெரிவதில்லை. சக மனிதனை வேட்டையாடும் மிகவும் கீழ் பிறவியாக மாறி விடுகின்றான்.

பெரும்பான்மையினர் x சிறுபான்மையினர் , உயர் சாதி x தாழ்சாதி , உள் நாட்டினன் x வெளி நாட்டினன் , கறுப்பன் x வெள்ளையன் , நாட்டு வாசிகள் x பழங்குடியினர் , கார்ப்பரேட் உலகு x மாவோவாதிகள் , ஆளுங்கட்சி x எதிர்க் கட்சி , அரச பயங்கர வாதம் x குடிமக்கள் பயங்கரவாதம் என்ற எதிர்க்கூறுகளை முன்னிறுத்தி மனிதன் சக மனிதனைக் கொல்ல வாளை உருவுகின்றான்.

இந்த பிரிவினைகளும் எதிரிகளும் எதுவும் இல்லாமல் ஒரே குழுவாக ஒற்றை அடையாளமாக வாழும் மக்கள் திரளிலும் சக மனிதனை தீர்த்துக் கட்டும் வன்மம் வெடித்துக் கிளம்புவதற்கு ஜோர்தான் , பாக்கிஸ்தான் ,ஆஃப்கானிஸ்தான் , இராக் , இலங்கை போன்ற நாடுகள் பெரும் எடுத்துக்காட்டுக்களாக திகழ்கின்றன.

மனதை சரியான தருணத்தில் மூக்கணாங்கயிறு போட்டுக்கட்டுப்படுத்தவும் , மனதின் அக குரலுக்கு கட்டுப்படவும் தெரிந்தவர்களால் மட்டுமே மருந்தின் அளவிற்கு வன்முறையை கையாளத் தெரியும். ( எ.கா ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடத்திய போர்கள் , நேர்வழி நின்ற ஆட்சியாளர்கள் , முஜாஹிதுகள் , உண்மையான ஸூஃபிகள்.

மற்றவர்கள் வன்முறையைக் கையில் எடுத்தால் மதம் பிடித்த யானை மது குடித்த கதைதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved